LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

சகர ஊகார வருக்கம்

 

சூர னெனும்பெயர் சூரியன் பெயரும்
தீரனு மருகனு நாயையுஞ் செப்புவர். ....743
சூரெனும் பெயரே தெய்வமு நோயும்
வஞ்சமு மஞ்சா மையுமே வழங்கும். ....744
சூழி யெனும்பெயர் கரிமுக படாமும்
வாவியு மெனவே வகுத்துரைத் தனரே. ....745
சூதக மெனும்பெயர் பிறப்பின் பெயரும்
ஆசூ சப்பெயர் தானு மாமே. ....746
சூத்திர மெனும்பெயர் நூற்பா வகவலும்
நூற்கும் வெண்ணூலும் நுவல்பல் பொறியுமாம். ....747
சூத னெனும்பெயர் சூதாடு பவனும்
சூது சேருளத்தனும் தேர்ப்பா கனுமாம். ....748
சூத மெனும்பெயர் பரதா ரத்தொடு
மாமர மெனவும் வழங்குவர் புலவர். ....749
சூழ஦ லனும்பெயர் விசாரமு மிடமுமாம். ....750
சகா ஊகார வருக்கம் முற்றும்.
சகர எகர வருக்கம்
செவ்வி யெனும்பெயர் பொழுதும் பருவமும். ....751
செல்லெனும் பெயரே யிடியு மேகமும்
முன்னிலை யேவலுஞ் சிதலு மொழிந்தனர். ....752
செந்தெனும் பெயரே சீவனுஞ் சிவப்பும்
ஓரியு மணுவும் நரகத்தி லொன்றுமாம். ....753
செப்ப மெனும்பெயர் நடுநிலைப் பெயரும்
தெருவுஞ் செவ்வையு நெஞ்சமுஞ் செப்புவர். ....754
செம்புல மெனும்பெயர் வன்பாலை நிலமும்
பொருக ளமுமெனப் புகன்றனர் புலவர். ....755
செய்ய லெனும்பெயர் சேறு மொழுக்கமும்
காவலு மெனவே கருதப் பெறுமே. ....756
செம்ம லெனும்பெயர் சீவனும் செயினனும்
தலைவனுஞ் சிறுவனும் வீரனும் பெருமையும்
பழம்பூ வுமெனப் பகர்ந்தனர் புலவர். ....757
செவிலி யெனும்பெயர் முன்பிறந் தாளும்
வளர்ந்த கைத்தாயும் வகுத்தனர் புலவர். ....758
செழுமை யெனும்பெயர் வளமையும் கொழுப்பும்
வனப்பு மாட்சிமையும் வழங்குவர் புலவர். ....759
செடியெனும் பெயரே யொளியுஞ் செறிவும்
பாவமுங் குணமின் மைப்பெயரும் பகர்ந்தனர். ....760
செத்தெனும் பெயரே செம்மையு முவமையும்
அசைச்சொலு முறுப்புங் கருத்துஞ் சந்தேகமும். ....761
செட்டி யெனும்பெயர் முருகன் பெயரும்
வணிகனு மெனவே வழங்கப் பெறுமே. ....762
செச்சை யெனும்பெயர் வெள்ளாட் டேறொடு
வெட்சி செஞ்சாத்தும் விளம்புவர் புலவர். ....763
செவியெனும் பெயரே கேள்வியுங் காதுமாம். ....764
செம்மை யெனும்பெயர் சிவப்புஞ் செவ்வையும். ....765
செப்பெணும் பெயர்பணிச் செப்புஞ் செப்பலும். ....766
செய்யெனும் பெயரே செய்தொழிற் பெயரும்
ஒழுக்கமு மெனவே யுரைக்கப் பெறுமே. ....767
செயிரெனும் பெயரே சினமும் குற்றமும். ....768

 

சூர னெனும்பெயர் சூரியன் பெயரும்

தீரனு மருகனு நாயையுஞ் செப்புவர். ....743

 

சூரெனும் பெயரே தெய்வமு நோயும்

வஞ்சமு மஞ்சா மையுமே வழங்கும். ....744

 

சூழி யெனும்பெயர் கரிமுக படாமும்

வாவியு மெனவே வகுத்துரைத் தனரே. ....745

 

சூதக மெனும்பெயர் பிறப்பின் பெயரும்

ஆசூ சப்பெயர் தானு மாமே. ....746

 

சூத்திர மெனும்பெயர் நூற்பா வகவலும்

நூற்கும் வெண்ணூலும் நுவல்பல் பொறியுமாம். ....747

 

சூத னெனும்பெயர் சூதாடு பவனும்

சூது சேருளத்தனும் தேர்ப்பா கனுமாம். ....748

 

சூத மெனும்பெயர் பரதா ரத்தொடு

மாமர மெனவும் வழங்குவர் புலவர். ....749

 

சூழ஦ லனும்பெயர் விசாரமு மிடமுமாம். ....750

 

சகா ஊகார வருக்கம் முற்றும்.

 

சகர எகர வருக்கம்

 

 

செவ்வி யெனும்பெயர் பொழுதும் பருவமும். ....751

 

செல்லெனும் பெயரே யிடியு மேகமும்

முன்னிலை யேவலுஞ் சிதலு மொழிந்தனர். ....752

 

செந்தெனும் பெயரே சீவனுஞ் சிவப்பும்

ஓரியு மணுவும் நரகத்தி லொன்றுமாம். ....753

 

செப்ப மெனும்பெயர் நடுநிலைப் பெயரும்

தெருவுஞ் செவ்வையு நெஞ்சமுஞ் செப்புவர். ....754

 

செம்புல மெனும்பெயர் வன்பாலை நிலமும்

பொருக ளமுமெனப் புகன்றனர் புலவர். ....755

 

செய்ய லெனும்பெயர் சேறு மொழுக்கமும்

காவலு மெனவே கருதப் பெறுமே. ....756

 

செம்ம லெனும்பெயர் சீவனும் செயினனும்

தலைவனுஞ் சிறுவனும் வீரனும் பெருமையும்

பழம்பூ வுமெனப் பகர்ந்தனர் புலவர். ....757

 

செவிலி யெனும்பெயர் முன்பிறந் தாளும்

வளர்ந்த கைத்தாயும் வகுத்தனர் புலவர். ....758

 

செழுமை யெனும்பெயர் வளமையும் கொழுப்பும்

வனப்பு மாட்சிமையும் வழங்குவர் புலவர். ....759

 

செடியெனும் பெயரே யொளியுஞ் செறிவும்

பாவமுங் குணமின் மைப்பெயரும் பகர்ந்தனர். ....760

 

செத்தெனும் பெயரே செம்மையு முவமையும்

அசைச்சொலு முறுப்புங் கருத்துஞ் சந்தேகமும். ....761

 

செட்டி யெனும்பெயர் முருகன் பெயரும்

வணிகனு மெனவே வழங்கப் பெறுமே. ....762

 

செச்சை யெனும்பெயர் வெள்ளாட் டேறொடு

வெட்சி செஞ்சாத்தும் விளம்புவர் புலவர். ....763

 

செவியெனும் பெயரே கேள்வியுங் காதுமாம். ....764

 

செம்மை யெனும்பெயர் சிவப்புஞ் செவ்வையும். ....765

 

செப்பெணும் பெயர்பணிச் செப்புஞ் செப்பலும். ....766

 

செய்யெனும் பெயரே செய்தொழிற் பெயரும்

ஒழுக்கமு மெனவே யுரைக்கப் பெறுமே. ....767

 

செயிரெனும் பெயரே சினமும் குற்றமும். ....768

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.