|
|||||
சாய்பாபாவின் 100 வது சமாதி தினம்: ஷீரடியில் பிரதமர் வழிபாடு! |
|||||
சாய்பாபாவின் 100வது சமாதி தினத்தை முன்னிட்டு ஷீரடியில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். உலகப் புகழ் பெற்ற ஷீரடி சாய்பாபா கோயிலில் விஜயதசமி தினத்தன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மிக எளிமையாக வாழ்ந்து முக்தி பெற்ற சாய்பாபா 1918ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று ஜீவ சமாதி நிலையை அடைந்தார். இந்நிலையில் அவர் சமாதி அடைந்து நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து நாடு முழுவதும் உள்ள சாய்பாபா கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குறிப்பாக லட்சக்கணக்கான பக்தர்கள் ஷீரடியில் குவிந்து வருகின்றனர். இதற்காக அக்டோபர் 1ம் தேதியில் இருந்தே சிறப்பு பூஜைகள், தரிசன ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த பூஜைகளில் கலந்துகொள்ள நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஷீரடியில் குவிந்து வருகின்றனர். எனவே சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் சுமார் 500 சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சாய்பாபா கோவில் நிர்வாகத்தை கவனிக்கும் வகையில் 1922ம் ஆண்டு 3200 ரூபாயில் ஷீரடி டிரஸ்ட் தொடங்கப்பட்டது. தற்போது இந்த டிரஸ்டின் வருமானம் ரூ.371 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. சாய்பாபாவின் 100வது ஆண்டு சமாதி தினத்தை முன்னிட்டு, ஷீரடி - விஜயவாடா, ஷீரடி - ராஜமுந்திரி இடையே சிறிய ரக விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஷீரடிக்கு வருகை தந்த பிரதமர் மோடி அங்கு தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்குவதற்காக புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் |
|||||
by Mani Bharathi on 19 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|