இலங்கையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள, காமன்வெல்த் மாநாட்டில் நான் கலந்துகொள்வேன் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடையே கூறும்போது, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டால்தான் தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து பேச முடியும். தமிழக மீனவர்கள் இலங்கை படையினரால் தாக்கபடுவதும், சிறை பிடிக்கப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதற்கு, முற்றுபுள்ளி வைக்க இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொண்டால் தான் தமிழக மீனவர்கள் நலன் காக்கப்படும். எனவே, நான் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வேன். பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து அவர் தான் முடிவு செய்வார் என சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார்.
|