தனது படங்களின் மூலம் சமுதாயத்திற்கு நல்ல கருத்துகளை சொல்லும் இயக்குனர்களில் சமுத்திரகனியும் ஒருவர். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான நிமிர்ந்து நில் படத்தில் நாட்டில் நிலவும் லஞ்சம், ஊழல் ஆகியவற்றை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒருவழியாக நிமிர்ந்து நில் பரபரப்பு ஓய்ந்து விட்டதால், தனது அடுத்த பட வேலைகளில் களம் இறங்கியுள்ளராம் சமுத்திரகனி. தனது அடுத்த படத்தில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், இயற்கைக்காக அரும் பாடுபட்டதைத்தான் படமாக்க உள்ளாராம்.
இன்றைய சூழ்நிலையில் வேளாண்மை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அப்படம் இருக்குமாம். இதற்காக, நம்மாழ்வாரின் வாழ்க்கை மற்றும் அவரது போதனைகளை தற்போது தீவிரமாக சேகரித்து வருகிறாராம் சமுத்திரகனி.
|