வாஷிங்டனில் உள்ள,தேசிய நூலகத்தின், ஜான் க்ளூஜ் மையம், 2000ம் ஆண்டு, துவக்கப்பட்டது. முனைவர் பட்ட ஆய்வு உள்ளிட்ட பல ஆய்வுகளில், மாணவர்கள் ஈடுபட, இம்மையம் வாய்ப்பளிக்கிறது.
ஜான் க்ளூஜ் என்பவர் கொடுத்த 300 கோடி ரூபாய் நன்கொடையில், இம்மையம் இயங்குகிறது. இந்த மையத்தின் சமீபத்திய தலைவராக, தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஒரு இந்தியர், டில்லி பல்கலைக்கழகத்தில், பொருளாதார துறையில் பட்டம் பெற்றவர்; லாஸ் ஏஞ்சல்சில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர்; இந்தியா மற்றும் தெற்காசிய மையத்தின் இயக்குனர்; இந்திய பொருளாதாரம் மற்றும் சமூக வரலாறு பற்றிய பத்திரிக்கையின் மேலாண்மை ஆசிரியர்; கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உறுப்பினர்; ஆகிய பொறுப்புகளை வகிக்கின்ற சஞ்சய் சுப்பிரமணியம், தற்போது ஜான் க்ளூஜ்ஜின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
|