|
|||||
தமிழக கிராமங்களில் இருந்து ஆட்சிப்பணிக்கு செல்ல விரும்பும் இளைஞர்களின் கனவு சங்கர் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர் மறைவிற்கு அஞ்சலி... |
|||||
சங்கர் என்பவர் தனி ஆள் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்றால் இதுவும் அன்றாட செய்திகளில் ஒன்றாக கடந்து போயிருப்போம். சங்கர் தமிழ்நாட்டின் அடையாளமாக இருந்தவர். கிராமத்தில் இருந்து வந்த ஏழை மாணவர்களுக்கு அடைக்கலம் தந்து அவர்களை இந்திய அரசாங்கத்தின் ஆட்சி பணிகளில் உட்கார வைத்தவர். தென்னிந்தியாவில் இருந்து சென்ற ஏராளமான இந்திய அரசு ஆட்சிப் பணியில் கடந்த பத்து வருடங்களில் அமர்ந்த ஏராளமான இளைஞர்கள் இவரிடம் இருந்து சென்றவர்களே. கிராம்பபுறங்களில்இருந்து ஏதாவது ஒரு மாணவன் அரசாங்க பணிக்கு செல்ல விரும்பினால் அவன் முதல் தேர்வு சங்கர் ஐ. ஏ. எஸ் அகாடமியாகத்தான் இருக்கும். பணம் இருக்கு இல்லை அவரிடம் ஏதாவது ஒரு தொடர்பு பிடித்து அனுப்பிவிட்டால் போதும் பார்த்துகிறேன் அனுப்பி விட்ருங்கனு சொல்லிவிடுவார். கிராமத்தில் இருந்து வரும் வசதி இல்லாத எத்தனையோ இளைஞர்கள் இன்று அவரால் உச்சம் தொட்டிருக்கிறார்கள். இந்திய ஆட்சிப் பணிதான் இந்தியாவின் அதிகாரம் வாய்ந்த அரசாங்க பணிகளில் ஒன்று அதை கடைக்கோடி கிராமத்தில் பொட்டல்காட்டில் விவசாயி கூலிகளாக இருக்கும் பெற்றோரின் மகனையோ மகளையோ ஆட்சிப்பணியில் உட்கார வைத்தவர் திரு.சங்கர். இன்று புற்சீற்றல்கள் போல் எத்தனையோ கோச்சிங் சென்டர்கள் வந்துவிட்டது ஆனால் சங்கர் செய்த உதவிகளைப் போலவும் பணம் இல்லையென்றாலும் குறைவான பணம் கட்டினாலும் ஏற்றுக் கொண்டு யார் சொல்லி கொடுப்பார்? அவருடைய இழப்பு தமிழக கிராமங்களில் இருந்து ஆட்சிப்பணிக்கு செல்ல விரும்பும் இளைஞர்களுக்கான இழப்பு அவர்கள் கனவை நனவாக்குவது எப்படி கண்டிப்பாக இன்றைய நாள் தமிழக வரலாற்றில் ஒரு துக்கமான நாள்தான். அவர் இல்லாதது கண்டிப்பாக தமிழக மாணவர்களுக்கு பேரிழப்புதான் அதை யாரும் ஈடுசெய்திட முடியாது. |
|||||
by Swathi on 12 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|