பாகிஸ்தான் கோட்லாக்பட் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடி வந்த இந்திய தூக்கு தண்டனை கைதி சரப்ஜித் சிங் இன்று அதிகாலை 12.30 மணியளவில் மரணமடைந்தார் என ஜின்னா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர் இந்த சம்பவத்தை பாகிஸ்தான் பத்திரிக்கைகளும் உறுதி படுத்தியுள்ளன. சரப்ஜித் சிங்கின் மறைவிற்கு பிரதமர் மன்மோகன் சிங், குடியரசு தலைவர் ஆகியோர் தங்களது இரங்கலை தெரவித்துள்ளனர். இந்நிலையில் சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியா கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
|