LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

சாதிகளைத் தாண்டிய மனித நேயம்

1920 ஆம் ஆண்டு வாக்கில் வைத்தியநாதய்யர் அவர்களுக்குக் கக்கன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் . கக்கன் கல்வியில் கொண்டிருந்த ஆர்வமும் அவர் பொதுத்தொண்டில் காட்டும் நேர்மையும் ஐயரை மிகவும் கவர்ந்தது . அதனால் , தமது வீட்டிலேயே தங்க இடம் கொடுத்தார் . கக்கனின் பழக்க வழக்கங்களைக் கண்டு வியந்து போன ஐயர் தமது வீட்டிலேயே உணவு கொடுத்தார் . தொடர்ந்து தம் மக்களோடும் தம் மனைவியோடும் கக்கன் காட்டும் பாச உணர்வு ஐயரைப் பெரிதும் கவர்ந்தது . கக்கனைத் தம் மக்களில் ஒருவனாகவே கருதினார் . இரவு எத்தனை மணிக்கு வீடு திரும்பினாலும் “கக்கன் வீட்டிற்கு வந்தாகிவிட்டதா ? சாப்பிட்டு விட்டானா ?” என்று கேட்காமல் அவர் சாப்பிட்டதேயில்லை என்ற செய்தியை ஐயரின் மக்கள் இன்றும் சொல்லி வியந்து போகிறார்கள் .

தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகத் தம்மை அர்ப்பணம் செய்து கொண்ட ஐயர் கக்கனுடன் நெருங்கிப் பழகும்போது தான் பல உள்ளுணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்ததாம் .

1939 ஆம் ஆண்டு திருக்கோவில் நுழைவு ( ஆலயப் பிரவேசம் ) செய்த போது அவ்வுணர்வுகளை மனதில் தாங்கியே ஆலயப் பிரவேசக் குழுவில் கக்கனையும் இணைத்துக் கொண்டார் . அதற்குப் பின்னால் கக்கன் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தேர்தலில் நின்ற போது தாமே தேர்தலில் போட்டியிட்டது போல் செயல்பட்டதை அவர் பலமுறை சொல்லி மகிழ்ந்திருக்கிறார் . அவ்வாறு படிப்படியாக உயர்த்தி இந்த நாட்டின் அரசியல் சட்டசபை உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உயர்த்தி அழகு பார்த்தவர் ஐயர் .

1955 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராகவும் இருந்தார் கக்கன் . உடல்நலக் குறைவாக இருந்த ஐயர் 1955 ஆம் அண்டு பிப்பரவரி 23 ஆம் நாள் காலமானார் . இச்செய்தி கேட்டு மதுரைக்கு விரைந்தார் கக்கன் . ஐயரின் குடும்ப உறுப்பினர்கள் கக்கனுடன் கலந்து துக்கத்தைப் பகிர்ந்து கொண்ட முறைகளைக் கண்ட ஐயரின் உறவினர்கள் வியப்பில் மூழ்கினர் .

இறுதிச்சடங்கு செய்யும் நேரம் நெருங்கியது . ஐயரின் மக்கள் மரபுப்படி மொட்டையடித்துக் கொள்ளி வைக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கினர் . கக்கனும் மொட்டையடித்துக் கொண்டு பிள்ளைகளுடன் பிள்ளையாக நின்றார் . இதைக் கண்ட ஐயரின் உறவினர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் எதிர்த்தனர் . ‘ இது என்ன அநியாயம் ?’. பெற்ற பிள்ளைகள் மட்டுமே செய்ய வேண்டிய ஓர் இறுதிக் கடனை வேறொருவன் செய்வதா ? அதுவும் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த ஒருவன் செய்வதா ?’ என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி நிகழ்ச்சியைத் தடை செய்தனர் .

‘வைத்தியநாதய்யரின் மனைவியும் அவரது பிள்ளைகளும் எப்படி இதை அனுமதிக்கலாம் ? அவர்கள் முறையான பதிலை நமக்குச் சொல்லியே ஆக வேண்டும் . இந்த ஐயர் சமுதாயத்தில் இவர்கள் மட்டுமா வாழ்கிறார்கள் ? நாமும் தானே வாழ்கிறோம் ? இப்படி முறையற்ற செயலை இவர்கள் செய்தால் நாளை நமக்கு என்ன மரியதை கிடைக்கும்’ என்று ஐயர் சமுதாயத் தலைவர்கள் பொங்கி எழுந்தனர் .

வருத்தத்தில் ஆழ்ந்திருந்த வீடு விவாதமேடையாக மாறியது . எப்படி இருந்தாலும் ஐயரின் பிள்ளைகளை அழைத்துப் பேசி முடிவு செய்யலாம் என்றனர் சிலர் . அதுபோலவே அவர்களை அழைத்துத் தனியே பேசினார்கள் .

‘நாங்கள் பிறப்பால் மகன்களானோம் . ஆனால் , கக்கன் வளர்ப்பால் மகனாவார் . ஆகவே எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை கக்கனுக்கும் இருக்கிறது’ என்று வைத்தியநாதய்யரின் மனைவியும் அவரது மக்களும் சொன்னதைக் கேட்டு ஐயர் இன சமுதாயத் தலைவர்கள் வாயடைத்துப் போயினர் .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.