LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

சாதியொழி; சண்டை மற; சொந்தம் நாமென்று முழங்கு.. (கவிதை) வித்யாசாகர்!

போதும் நிறுத்துங்கள்!!
போருக்குத் துணிந்தோரே; பதைபதைக்க
பெண்ணென்றும் பாராமல்’ பெற்றப்
பிள்ளையென்றும் காணமல்; கண்டயிடமெல்லாம்
வெட்டியது போதும் நிறுத்துங்கள்;

 

வீழ்ந்தது யார் ?
வீழ்ந்தது உன் ரத்தம்; அதில்
எங்கே இருக்கிறது நீ சொல்லும் சாதி?

 

நீ வெட்டினாலும் சரி, நாளை
உன்னை யாரும் வெட்டி –
துண்டுத் துண்டாக்கினாலும் சரி; எல்லாம் ஒரே
ரத்தம், அங்கே எங்கிருக்கிறது நீ கொன்ற சாதி?

 

நீ கொன்றது உன்னை
நான் கொல்வது என்னை
நாம் தான் நம்மைக் கொன்று குவிக்கிறோம்,
சாதி இன்னும் அப்படியே
பச்சையாக ஒட்டிக் கொண்டிருக்கிறது, மனதிற்குள்;
அதை அறுத்து எறி!!!!!!

 

சாதி வேண்டாமென்றுச் சொல்லிப்பார்
உனக்கு உன் பிள்ளை
அத்தனை அழகாகத் தெரிவான்,

 

சாதி வேண்டமேன்றுச் சொல்லிப்பார்’ உன் எதிரி
உன் பக்கத்தில் அமர்ந்து சோறூட்டி மகிழ்வான்,
சாதி வேண்டாமென்றுச் சொல்லிப்பார்’
மிச்சமிருக்கும் நீ நான் இருவருமே மிக
நல்ல மனிதர்களென்று புரியும்..

 

சாதி ஒரு அடையாளம், அது தானாக
மாறக் கூடியது, அதை நீ மாற்றாமல்
வைத்திருந்ததால்தான் இன்று
நீ மாறிப் போனாய்..

 

தூக்கி எறி சாதி ஒழியட்டும்..
கையுதறி விட்டு
கட்டியணைத்துப் பார் எல்லோரையும்..
நாம் மகிழ்வோடு வாழவே இவ்வுலகம் – நமக்காகக்
காத்திருக்கிறது..

 

இந்த வானம் இந்த பூமி மழை காற்று
இரத்தம் சதை எங்குமேயில்லை சாதி; மனதில்
ஒட்டிக் கொண்டிருப்பின் அதை அழித்துவிடு,

 

நாம் நண்பர்கள்!
நாம் சாதியற்றவர்கள்!! முழங்கு..

 

முழங்கு..

 

நம் முழக்கத்தில் புரண்டு எழட்டும் ஒரு
நட்பிற்கினிய சமுதாயம்..
—————————————————–
வித்யாசாகர்

by Swathi   on 14 Apr 2016  0 Comments
Tags: Sontham   Sathi Sandai   Sathi Sandai Kavithai   சாதி சண்டை   சொந்தம்   சாதியொழி     
 தொடர்புடையவை-Related Articles
பற்று - கணேஷ் பற்று - கணேஷ்
சாதி மறு; சண்டையொழி.. வித்யாசாகர்! சாதி மறு; சண்டையொழி.. வித்யாசாகர்!
சாதியொழி; சண்டை மற; சொந்தம் நாமென்று முழங்கு.. (கவிதை) வித்யாசாகர்! சாதியொழி; சண்டை மற; சொந்தம் நாமென்று முழங்கு.. (கவிதை) வித்யாசாகர்!
சொந்தமா? - விஜயலக்ஷ்மி சுஷில்குமார் சொந்தமா? - விஜயலக்ஷ்மி சுஷில்குமார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.