|
|||||
ஊழலை ஒழிக்கவும், மதுவிற்கு எதிராகவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சற்று முன் தொடங்கப்பட்டது. |
|||||
ஊழலை ஒழிக்கவும், மதுவிற்கு எதிராகவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சற்று முன் தொடங்கப்பட்டது. www.SattaPanchayt.org சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் திரு.சிவ இளங்கோ அவர்கள் இயக்கத்தின் நோக்கம் மற்றும் அவருடைய கடந்தகால அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். இயக்கத்தின் பொதுச்செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம் அவர்கள் இயக்கத்தின் குறுகியகால நீண்டகால செயல்பாடுகள் குறித்து விவரித்தார். அங்குசம் திரைப்பட உண்மையான நாயகன் திரு.சீனிவாசன் அவர்கள் தகவல் பெரும் உரிமைச் சட்டம் குறித்த கைபேசி மென்பொருளை வெளியிட அதை சகாயம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். திரு. சகாயம் அவர்கள் பொதுமக்க, பிரச்சினைகளுக்கு தொடர்புகொள்ள இயக்கத்தின் கால் சென்டர் எண் (766 – 100 – 100) ஐ அறிமுகம் செய்து வெளியிட்டார்கள். காவிரி டெல்டா விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு.ஆருபாதி கல்யாணம் அவர்கள் இயக்கத்தின் நோக்கம் வெற்றிபெற வாழ்த்திப் பேசினார்கள். அதில் டாக்டர் உதயமூர்த்தியின் மேற்கோளைக் காட்டி, இன்று மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டும், தேசப் பற்றுள்ள மனிதர்கள் அதிகரிக்கவேண்டும் என்று பேசினார். பின்பு பேசிய திரு.சகாயம் அவர்கள் இன்றைய ஊழல் மற்றும் மதுப் பிரச்சினைகளால் சமூகம் அடைந்துவரும் சீர்கேட்டினையும், அதற்கு மக்கள் மனம் மாற வேண்டும் என்பதையும் வலியுறித்தி அவரின் பல்வேறு அரசாங்க அனுபவங்களை குறிப்பிட்டுப் பேசினார். அவரின் பேச்சில் அரசாங்க ஊழியர்கள் மத்தியில் இது குறித்த மாற்றம் வரவேண்டும் அதுவே சிறந்தது என்று பேசினார். மேலும் தான் சந்தித்துவரும் சவால்களை குறிப்பிட்டு பேசுகையில், தற்போது ஒரு அரசு அதிகாரியாக சில செய்திகளை வெளிப்படையாக பேசமுடியாது எனவும் பின்பு தான் எழுதும் நூலில் விரிவாக ஊழல் பேர்வழிகளின் விபரங்கள் தரப்படும் என்றும் சூசகமாகக் குறிப்பிட்டார். அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் நேர்மையாக நடக்கப் போகிறார்களா? அல்லது ஊழல் படிந்து தன் பெயரை பதிவுசெய்துகொள்ளப்போகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த நிகழ்ச்சியை இணையத்தில் நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இயக்க நிர்வாகிகள்: சிவ இளங்கோ(36), தலைவர், M.A (இதழியல்), M.A (அரசியல் அறிவியல்)
செந்தில் ஆறுமுகம்(36), பொதுச்செயலாளர். M.C.A
ஜாகீர் உசேன் (47), செயலாளர்
சாம் பொன்ராஜ் (37), செயலாளர்
பாலாஜி பிரேம்குமார் (27), செயலாளர்
சம்சு கனி (50), செயலாளர்
சட்ட பஞ்சாயத்து இயக்க பின்புலத்தில்… இயக்க குழுவினர்
சட்ட பஞ்சாயத்து இயக்க பின்புலத்தில்… நிபுணர்கள் & ஆலோசகர்கள்
2. செ.மா.அரசு, ஊழல் எதிர்ப்பு இயக்கம் & பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் (ஓய்வு) 3. சிவராஜ், தாசில்தார்(ஓய்வு) 4. சீனிவாசன், இலஞ்ச ஒழிப்புப் போராளி 5. திரு .மோகன் ராம், குடிமைப் பொருள் துறை(ஓய்வு) 6. திரு.ஆறுபாதி கல்யாணம், காவிரி டெல்டா விவசாய சங்கம் 7. திரு. நல்லோர் வட்டம் பாலசுப்ரமணியம், சமூக ஆர்வலர் 8. திரு. எண்ணங்களின் சங்கமம் J.பிரபாகர், சமூக ஆர்வலர் 9. திரு.ச. பார்த்தசாரதி, கல்வியாளர் 10. பொறியாளர்.திரு.வீரப்பன், பொதுப்பணித்துறை(ஓய்வு) 11. திரு.கோவிந்தசாமி, மின்சாரத்துறை(ஓய்வு)
12. திரு.பாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர்(ஓய்வு)
13. திரு.தேவராஜன்,மின்சாரத்துறை(ஓய்வு)
14. திரு.ராஜேந்திரன், இந்திய ரிசர்வ் வங்கி
15. திரு.குருசாமி, கூட்டுறவுத் துறை(ஓய்வு)
16. திரு. ரங்கநாதன், குடிசை மாற்று வாரியம்
17. திரு. வில்வம், சார்புச் செயலாளர்(ஓய்வு), தலைமைச் செயலகம்
18. திரு. நாராயணசாமி, ஊராட்சி உதவி இயக்குனர்(ஓய்வு)
19. திரு. செல்வராஜ், மின்சாரத்துறை(ஓய்வு)
|
|||||
சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடக்க விழா | |||||
by Swathi on 14 Dec 2013 2 Comments | |||||
Tags: சட்ட பஞ்சாயத்து Satta Panchayat Iyakkam ஊழலை ஒழிக்க சட்ட பஞ்சாயத்து இயக்கம் சிவஇளங்கோ | |||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|