LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- சட்ட பஞ்சாயத்து இயக்கம்

சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய டாஸ்மாக்கிற்கு அஞ்சலி செலுத்தும் ஆர்ப்பாட்டம் !!

லஞ்ச - ஊழல் ஒழிப்பு, மது ஒழிப்பிற்காகச் செயல்பட்டு வரும் சட்ட பஞ்சாயத்து இயக்கம், விருதுநகர், மதுரை, கோவை, அரியலூர், நாகை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மதுக்கடை முற்றுகைப் போராட்டங்களை நேற்று வெற்றிகரமாக நடத்தியது. 


இது குறித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 


நாகை மாவட்டம் அரங்கக்குடி கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மதுக்கடையை மூட போராட்டம் நடத்தி, கடையை மூடி கடை முன்பு பொங்கல் வைத்தோம். "குடியிருக்கும் வீட்டருகே மதுக்கடை நடத்துவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என மதுரை உயர்நீதி மன்றக்கிளை தீர்ப்பளித்த முக்கிய வழக்கை (13312 / 07-08-2014) ஒருங்கிணைத்தோம்.


கடந்த மார்ச் 16, 2014 நீதியரசர் சந்துரு அவர்கள் நடத்திய "சட்டப்படி மதுக்கடைகளை ஒழிப்பது எப்படி என்ற பயிற்சி அரங்கத்தை நடத்தினோம். இதன் தொடர்ச்சியாக ஜூன் 22, 2014 அன்று தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட மது ஒழிப்பு ஆர்வலர்கள் கலந்து கொண்ட கூட்டத்தை ஒருங்கிணைத்தோம். அடுத்தகட்டமாக, மதுக்கடைகள் மூடப்படவேண்டும் என்பதே பெரும்பான்மையான தமிழக மக்களின் விருப்பம், எதிர்பார்ப்பு என்பதை அரசுக்கு உணர்த்தும் விதமாக தமிழகத்தின் அனைத்து மண்டலங்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு அஞ்சலை செலுத்தும் ஆர்ப்பாட்டத்தை நேற்று  நடத்துகிறோம்.


2016 மதுவிலக்கு ஆண்டு என்ற லட்சியத்தை நோக்கிய சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மது ஒழிப்புப் போராட்டங்கள் வீரியமாய் தமிழகமெங்கும் தொடர உள்ளது என சட்ட பஞ்சாயத்து இயக்கம் தெரிவித்துள்ளது.

அஞ்சலி செலுத்த அழைக்கிறோம்
by Swathi   on 26 Aug 2014  0 Comments
Tags: TASMAC   Satta Panchayat Iyakkam   சட்ட பஞ்சாயத்து இயக்கம்              
 தொடர்புடையவை-Related Articles
நாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்… நாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்…
தமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள் தமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள்
சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய டாஸ்மாக்கிற்கு அஞ்சலி செலுத்தும் ஆர்ப்பாட்டம் !! சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய டாஸ்மாக்கிற்கு அஞ்சலி செலுத்தும் ஆர்ப்பாட்டம் !!
சமூக ஆர்வலர் ஜாகீர் உசேன் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின்போது தாக்கப்பட்டார் சமூக ஆர்வலர் ஜாகீர் உசேன் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின்போது தாக்கப்பட்டார்
தூங்கிக் கொண்டிருக்கும் தகவல் ஆணையத்தை தட்டி எழுப்பக் கோரி நடைபெற்ற சங்கு ஊதும் போராட்டம் !! தூங்கிக் கொண்டிருக்கும் தகவல் ஆணையத்தை தட்டி எழுப்பக் கோரி நடைபெற்ற சங்கு ஊதும் போராட்டம் !!
சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மதுவிலக்கு செயல்திட்டம்  -2016 – மதுவிலக்கு ஆண்டு சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மதுவிலக்கு செயல்திட்டம் -2016 – மதுவிலக்கு ஆண்டு
ஊழலை ஒழிக்கவும், மதுவிற்கு எதிராகவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சற்று முன் தொடங்கப்பட்டது. ஊழலை ஒழிக்கவும், மதுவிற்கு எதிராகவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சற்று முன் தொடங்கப்பட்டது.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.