LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சித்தர் பாடல்கள்

சட்டைமுனி ஞானம்

 

எண்சீர் விருத்தம்
காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்
கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப்
புகழாகப் பூசை செய்வார் பெண்ணை வைத்தும்
நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்
நம்முடைய பூசையென்ன மேருப் போலே
ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே
உத்தமனே, பூசை செய்வார் சித்தர்தாமே. 1
தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்
சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்
தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும்
சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா
வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்
வாய்திறந்தே உபதேசம் சொன்ன ராகிற்
கோனென்ற வாதசித்தி கவன சித்தி
கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே. 2
கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய்
குறியறிந்து பூசை செய்து பின்பு கேளாய்
மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்
மைந்தனே இவளை நீபூசை பண்ணத்
தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்
திறமாகப் புவனையைநீ பூசை பண்ணு
ஆறியதோர் யாமளையா றெழுத்தை கேளாய்
அவளுடைய பதம் போற்றிப் பூசைபண்ணே. 3
பண்ணியபின் யாமளைஐந் தெழுத்தைக் கேளாய்
பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்த பின்பு
வண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்கு
மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும்
கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருந்தாம்
காயசித்தி விக்கினங்கள் இல்லை யில்லை
உண்ணியதோர் உலகமென்ன சித்தர் சொன்ன
உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே! 4
தியங்கினால் கெர்சித்துத் துரத்துச் சண்ணுஞ்
சீறியர் மிலேச்சரையே சுகத்தி ன்ள்ளே
மயங்கினார் நாலுபா தத்தி னுள்ளும்
மனஞ்செவ்வை யாவதெப்போ தறிவதெப்போ ?
தயங்கினார் உலகத்திற் கோடி பேர்கள்
சாவதும் பிறப்பதுங்கா வடிபோ லாச்சு
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு
சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்தப் பாழே. 5
பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ ?
பரந் தமனஞ் செவ்வையாய் வருவ தெப்போ ?
வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்
மயக்கமற்று நிற்பதெப்போ ? மனமே ஐயோ ? 
காழான உலகமத னாசை யெல்லாங்
கருவறுத்து நிற்பதெப்போ ? கருதி நின்ற
கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்
கூடுவது மேதனென்றால் மூலம்பாரே. 6

 

எண்சீர் விருத்தம்

 

காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்

கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார்

பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப்

புகழாகப் பூசை செய்வார் பெண்ணை வைத்தும்

நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்

நம்முடைய பூசையென்ன மேருப் போலே

ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே

உத்தமனே, பூசை செய்வார் சித்தர்தாமே. 1

 

தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்

சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்

தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும்

சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா

வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்

வாய்திறந்தே உபதேசம் சொன்ன ராகிற்

கோனென்ற வாதசித்தி கவன சித்தி

கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே. 2

 

கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய்

குறியறிந்து பூசை செய்து பின்பு கேளாய்

மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்

மைந்தனே இவளை நீபூசை பண்ணத்

தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்

திறமாகப் புவனையைநீ பூசை பண்ணு

ஆறியதோர் யாமளையா றெழுத்தை கேளாய்

அவளுடைய பதம் போற்றிப் பூசைபண்ணே. 3

 

பண்ணியபின் யாமளைஐந் தெழுத்தைக் கேளாய்

பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்த பின்பு

வண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்கு

மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும்

கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருந்தாம்

காயசித்தி விக்கினங்கள் இல்லை யில்லை

உண்ணியதோர் உலகமென்ன சித்தர் சொன்ன

உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே! 4

 

தியங்கினால் கெர்சித்துத் துரத்துச் சண்ணுஞ்

சீறியர் மிலேச்சரையே சுகத்தி ன்ள்ளே

மயங்கினார் நாலுபா தத்தி னுள்ளும்

மனஞ்செவ்வை யாவதெப்போ தறிவதெப்போ ?

தயங்கினார் உலகத்திற் கோடி பேர்கள்

சாவதும் பிறப்பதுங்கா வடிபோ லாச்சு

துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு

சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்தப் பாழே. 5

 

பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ ?

பரந் தமனஞ் செவ்வையாய் வருவ தெப்போ ?

வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்

மயக்கமற்று நிற்பதெப்போ ? மனமே ஐயோ ? 

காழான உலகமத னாசை யெல்லாங்

கருவறுத்து நிற்பதெப்போ ? கருதி நின்ற

கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்

கூடுவது மேதனென்றால் மூலம்பாரே. 6

 

by Swathi   on 25 Dec 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
11-May-2021 12:30:45 Senthilkumar said : Report Abuse
Super sir who to download
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.