|
|||||
திருமணம் செய்யாமல் ஆணுடன் வாழும் பெண்களைப் பாதுகாக்க புதிய நெறிமுறைகளை வகுத்தது உச்ச நீதிமன்றம் !! |
|||||
திருமணம் செய்து கொள்ளாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.
திருமணமாகாமல் ஆணுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை தனியாகத் தவிக்க விட்டு சென்ற கணவனிடம் இருந்து பராமரிப்பு செலவு பெற்றுத் தரக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது..
இந்த வழக்கு நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, தீவிர விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
நிதி திரட்டுவது, வீட்டுக்குரிய ஏற்பாடுகள், பொறுப்பு ஒப்படைத்தல், பாலியல் உறவு, குழந்தை வளர்ப்பு, வெளிப்படையாகப் பழகுதல் போன்றவற்றை வைத்து ஒரு பெண், ஆணுடன் சேர்ந்து வாழ்ந்ததற்கான அம்சங்களாகக் கருதலாம்.
கூட்டு வங்கிக் கணக்கு, இருவரது பெயரிலும் அசையா சொத்துக்களை வாங்குவது அல்லது பெண்ணின் பெயரில் வாங்குவது, வர்த்தகத்தில் நீண்ட நாள் முதலீடு, இருவரின் பெயரிலோ அல்லது ஒருவரது பெயரிலோ பங்குகளை வாங்குவது, வீட்டு பராமரிப்பு, சமையல் செய்வது, பொறுப்புகளை பகிர்ந்து கொள்வது, நீண்டநாள் நட்பு போன்றவற்றையும் ஆண்-பெண் இருவர் சேர்ந்து வாழ்ந்ததற்கான அம்சங்களாகக் கூற முடியும் என்று நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான மற்றொரு வழக்கில், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே, திருமணமாகாமல் ஆண்-பெண் சேர்ந்து வாழ்வது குற்றமும் அல்ல, பாவமும் அல்ல. இதுபோல் சேர்ந்து வாழ்வோருக்கு வெளிநாடுகளில் சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்படுவது போல, இந்தியாவிலும் வழங்க ஏதுவாக, சட்டம் இயற்றப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. |
|||||
by Swathi on 01 Dec 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|