LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

அறிஞர்களின் வழிமுறைகள்

எண்ணத்தையும் உடலியக்கத்தையும் ஒழுங்குபடுத்த அறிஞர்கள் பல வழி முறைகளைக் கண்டு அதை மக்களிடம் பழக்கத்தில் கொண்டு வந்தார்கள். பிற்காலத்தில் அவ்வப்போது தோன்றிய அறிஞர்கள் மேலும் மேலும் இந்த ஒழுங்கு முறைகளைத் திருத்தி வந்தார்கள். உலகில் மக்கள் வாழும் தேசங்களின் வெப்ப, தட்ப நிலை, விளை பொருட்கள், அவ்வப்போது அவர்கள் பெற்று வந்த அறிவின் வளர்ச்சி இவைகளுக்கு ஏற்ப அறிஞர்கள் மக்களைப் பண்படுத்த வகுத்த நெறிமுறைகள் காலத்திற்கு காலம், இடத்திற்கு இடம் சிறிது வித்தியாசப்படலாம். எனினும் மனிதர்களின் உடல் இயக்கத் தேவைகள், அறிவின் இயல்பு, இயற்கை அமைப்பு, இன்ப துன்ப உணர்ச்சிகள் அனைத்தையும் அறிந்தே அவர்கள் வாழ்க்கை நெறிகளைப் போதித்து உள்ளார்கள்.

... 

பெரும்பாலான மனிதர்கள் உலகில் மனோதத்துவக் கலையிலும் விஞ்ஞான கலையிலும் தேர்ச்சி பெற்றபின் மனிதர்கள் அறியாமையால் கொண்டிருக்கும் கற்பனைகள் அனைத்தும் நீங்கி அனைவரும் அன்போடும், பண்போடும், அறத்தோடும் வாழ்வார்கள். அக்காலம் சமீபத்தே வருகின்றது. அதுவரையில் வணக்க முறைகள் மனிதனை பண்படுத்துவதற்கு மிகவும் அவசியமாகும்.


ஆறாம் நிலையாக இயங்கும் அறிவுக்கு இயற்கைத் தத்துவத்தை அறிந்து கொண்டே போகும் விஞ்ஞான ஆராய்ச்சியும், தெய்வ வணக்கம் என்ற முறைகளும் தான் அமைதி கொடுப்பவை, பக்தி மார்க்கத்திலே அறிவை மயக்கும், வாழ்வில் துன்பங்களைக் கொடுக்கும் சில பழக்க வழக்கங்கள் உலகெங்கும் மக்களிடையே பரவி இருக்கின்றன. விஞ்ஞான அறிவின் வளர்ச்சி வேகம் அதிகரித்து வரும் இந்நாளில் கல்வியறிவை அனைவரும் பெறும் அளவுக்கு வசதி கிட்டும்போது அத்தகைய தீய பழக்க வழக்கங்கள் படிப்படியாகக் குறைந்து பின் அடியோடு ஒழிந்து போகும்.

by Swathi   on 20 Jan 2014  0 Comments
Tags: Scholars Methods   Scholars   Arignar   அறிஞர்   அறிஞர்கள்   வழிமுறைகள்     
 தொடர்புடையவை-Related Articles
கல்வியியல் அறிஞர் மண்டூர் கோணேச பிள்ளை மறைவு கல்வியியல் அறிஞர் மண்டூர் கோணேச பிள்ளை மறைவு
அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்... அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்...
அரசியல்வாதிகள் படிக்கவேண்டிய அண்ணா பாடம்! - மஞ்சை.வசந்தன் அரசியல்வாதிகள் படிக்கவேண்டிய அண்ணா பாடம்! - மஞ்சை.வசந்தன்
அமெரிக்கத் தமிழறிஞர்க்கு பத்மஸ்ரீ விருது..! அமெரிக்கத் தமிழறிஞர்க்கு பத்மஸ்ரீ விருது..!
தமிழ் அறிஞர் ராபர்ட் கால்டுவெல்லின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு உத்தரவு !! தமிழ் அறிஞர் ராபர்ட் கால்டுவெல்லின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு உத்தரவு !!
அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது !! அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது !!
பழிக்குப் பழி!  - அண்ணா பழிக்குப் பழி! - அண்ணா
அண்ணா நினைவுநாள் அண்ணா நினைவுநாள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.