ஸ்டெம் செல் மூலம் மனித மூளையை ஆய்வகத்தில் உருவாக்கி, ஆஸ்திரிய நாட்டு விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இது பற்றி ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் கூறியிருப்பதாவது, இந்த ஆராய்ச்சியில் சிறிய அளவிலான மூளை வளர்ச்சி சிறப்பாக இருந்தது. முதல் 15-20 நாட்களில் செரிபரல் ஆர்கனாஸ்டு பகுதி நன்றாக வளர்ச்சி அடைந்திருந்தது. அதனைச்சுற்றி "செரிபரல் வென்ட்ரிகல்' திசு வளர்ச்சியும் சிறப்பாக இருந்தது. 20-30 நாட்களில் செரிபரல் கார்டெக்ஸ், ரெட்டினா, மெனின்க்ஸ் மற்றும் குரோய்டு பிளக்சிஸ் ஆகியவையும் வளர்ந்திருந்தன. இரண்டு மாதங்களில் மூளையின் வளர்ச்சி ஓரளவு முழுமையடையும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் செயல்பாட்டை 10-12 மாதங்கள் கண்காணித்த பிறகு தான் ஆராய்ச்சி முடிவுகள் தெரிய வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சி வெற்றி பெரும் பட்டசத்தில், மனித மூலையில் ஏற்படும் நரம்பு கோளாறுகளை எளிதில் சரி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
|