LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஐம்பெருங் காப்பியங்கள்

சீவக சிந்தாமணி பகுதி -1

 

  சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக சிந்தாமணி காலத்தால் முதன்மையானதாகும். வடமொழியில் உள்ள சீவகன் கதைகள் பலவற்றைப் பின்பற்றித் தமிழில் பாடப்பட்டது இந்நூல். இதற்கு முதல் நூல் "க்ஷத்திர சூடாமணி" என்பர். இக்காப்பியத் தலைவன் பெயர் சீவகன் ஆகும். சிந்தாமணி என்பது தேவலோகத்தில் உள்ள ஒரு மணியாகும். அது கற்பகத்தரு மற்றும் காமதேனு போன்று கேட்டதைத் தரும் இயல்புடையதாகும். அதனால்தான் 'சீவகனுடைய கதையைக் கூறும் சிந்தாமணி போன்ற காப்பியம்' என்ற பொருளில் இதற்குச் சீவக சிந்தாமணி எனப் பெயரிட்டார் இக்காப்பியத்தின் ஆசிரியர் திருத்தக்கதேவர். சீவக சிந்தாமணி மொத்தம் 3145 பாடல்களைக் கொண்டது. பதின்மூன்று இலம்பகங்களையுடையது. இலம்பகம் என்பதற்கு மாலை என்பது பொருளாகும். அத்தியாயம் என்றும் சொல்லலாம். அதாவது உட்பிரிவுக்குத் திருத்தக்கத்தேவர் வைத்த பெயர் இலம்பகம் ஆகும். முத்தி இலம்பகம் தவிர ஏனையவை மகளிர் பெயரையே பெற்றுள்ளன. பெரும்பாலான இலம்பகங்களில் மணநிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. சீவகன் எட்டு பெண்களை மணக்கின்ற நிகழ்ச்சி எட்டு இலம்பகங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே தான் இக்காப்பியத்திற்கு 'மணநூல்' என்ற பெயரும் உண்டு. பதிகத்தில் காப்பியத்தின் கதைச் சுருக்கம் கூறப்பட்டுள்ளது. 
    இக்காப்பியத்தை இயற்றிய திருத்தக்கதேவர் சமண முனிவராவார். இவர் திருத்தகு முனிவர் என்றும், திருத்தகு மகா முனிவர் என்று அழைக்கப் பெறுவார். இவர் சைன ஆசாரியர் சங்கங்களில் ஒன்றாகிய திரமிள சங்கத்து அருங்கலான்வயத்தைச் சேர்ந்தவர் என்பர். இவர் வாழ்ந்த காலமும் இடமும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்கும் 7ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திருத்தக்கதேவர் சோழர் குடியில் பிறந்தவர். இளமையிலேயே கல்வி கேள்விகளில் சிறந்த விளங்கியவர். வடமொழிப் பயிற்சி மிக்கவர். காமம், பொய், கொலை, கள், சூதாடல் என்ற ஐவகைத் தீமையும் அகற்றியவர். சமணத் துறவியாக வாழ்ந்தவர். விருத்தமெனும் பாடல்களைக் கொண்டு பெருங்காப்பியம் பாடியவர்களில் இவர் முதன்மையானவர். 
    ஒரு சமயம் திருத்தக்கதேவர் மதுரை சென்றிருந்தபோது, அங்கிருந்த புலவர்கள், சமண சமயத்தவர் துறவறம் பற்றிப் பாட இயலுமே ஒழிய அகப்பொருட் சுவை மிக்க இன்பத்துறைப் பாடல்களைப் பாட இயலாது என்று இகழ்ந்துரைத்தனர். இதனால் மனவருத்தமுற்றை இவர் தம் ஆசிரியரிடம் இதுபற்றி கூறினார். இவரின் திறமையை உலகுக்கு உணர்த்த விரும்பிய ஆசிரியர், அப்பொழுது குறுக்கே ஓடிய நரி ஒன்றைப் பற்றி ஒரு நூல் இயற்றுமாறு கூறினார். அப்போதே ஆசிரியர் போற்றும் வண்ணம், செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை பற்றிக் கூறும் 'நரி விருத்தம்' என்னும் அற்புதமான ஒரு சிறு நூலை இயற்றினார். திருத்தக்கதேவரின் கற்பனைத் திறனைக் கண்டு வியந்த ஆசிரியர் சீவகன் வரலாற்றை அகப்பொருள் சுவை மிளிர பெருங்காப்பியமாக பாடுமாறு கட்டளையிட்டார். அதோடு 'செம்பொன்வரைமேல்' என்ற ஒரு பாடலை எழுதி அவரிடம் கொடுத்து, அதனையே கடவுள் வாழ்த்தாகக் கொண்டு நூலைத் தொடங்குமாறு கூறினார். ஆசிரியர் பாடிய அப்பாடலோடு திருத்தக்கதேவரும், 'மூவா முதலா' எனத் தொடங்கும் சித்தரைத் துதிக்கும் பாடல் ஒன்றைப் பாடினார். ஆசிரியர் தாம் பாடிய பாடலைவிட தம் மாணவர் பாடிய பாடல் சிறப்பாக இருப்பது கண்டு, திருத்தக்கதேவரின் பாடலை முதலாகவும், தம் பாடலை இரண்டாவதாகவும் வைக்கும்படி கூறினார். அதனால் தான் இக்காப்பியத்தில் சித்தர் வணக்கம் முதலாவதாகவும், அருகர் வணக்கம் இரண்டாவதாகவும் உள்ளது. திருத்தக்க தேவர் இக்காப்பியத்தை எட்டே நாட்களில் பாடி அருளியதாகக் கூறுவர். 
    பாண்டியன் அவையிலே திருத்தக்கதேவர் தமது நூலை அரங்கேற்றினார். காப்பியத்தின் நடை, அழகு, அமைப்பு, ஒன்பது சுவைகள் ஆகியவற்றைக் கண்டு புலவர்கள் பலர் வியந்து பாராட்டினர். ஆனால் சில அழுக்காறு கொண்ட புலவர்கள், இன்ப சுவை கொண்ட பாடல்களைப் பாட வேண்டுமாயின் இவருக்கு நல்ல முன் அனுபவம் இருந்திருக்க வேண்டும் என்று கூறினார்கள். இது கேட்ட திருத்தக்கதேவர் கையிலே நெருப்பை ஏந்தி தமது அகத் தூய்மையை அனைவரும் அறியச் செய்தார். 
    பின்வந்த கம்பர் போன்ற பெரும் புலவர்களுக்குச் சீவக சிந்தாமணி கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது என்றால் மிகையாகாது. 
கடவுள் வாழ்த்து
சித்தர் வணக்கம்
மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத் 
தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி 
ஓவாது நின்ற குணத்து ஒள் நிதிச் செல்வன் என்ப 
தேவாதி தேவன் அவன் சேவடி சேர்தும் அன்றே. 1
அருகர் வணக்கம்
செம்பொன் வரை மேல் பசும் பொன் எழுத்து இட்டதே போல் 
அம் பொன் பிதிர்வின் மறு ஆயிரத்து எட்டு அணிந்து 
வெம்பும் சுடரின் சுடரும் திருமூர்த்தி விண்ணோர் 
அம் பொன் முடி மேல் அடித்தாமரை சென்னி வைப்பாம். 2
மாண்பமைந்த குழுவினருக்கு வணக்கம்
பல் மாண் குணங்கட்கு இடனாய்ப் பகை நண்பொடு இல்லான் 
தொல் மாண்பு அமைந்த புனை நல்லறம் துன்னி நின்ற 
சொல் மாண்பு அமைந்த குழுவின் சரண் சென்று தொக்க 
நல் மாண்பு பெற்றேன் இது நாட்டுதல் மாண்பு பெற்றேன். 3
அவை அடக்கம்
கற்பால் உமிழ்ந்த மணியும் கழுவாது விட்டால் 
நற்பால் அழியும் நகை வெண்மதி போல் நிறைந்த 
சொற்பால் உமிழ்ந்த மறுவும் மதியால் கழூஉவிப் 
பொற்பா இழைத்துக் கொளல்பாலர் புலமை மிக்கார். 4
முந்நீர்ப் பிறந்த பவழத்தொடு சங்கும் முத்தும் 
அந் நீர் உவர்க்கும் எனின் யார் அவை நீக்குகிற்பார் 
இந் நீர என் சொல் பழுது ஆயினும் கொள்ப அன்றே 
பொய்ந் நீர அல்லாப் பொருளால் விண் புகுதும் என்பார். 5
பதிகம்
மீன் ஏறு உயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பில் 
ஆனேறு அனையான் உளன் சீவகசாமி என்பான் 
வான் ஏற நீண்ட புகழான் சரிதம் தன்னைத் 
தேன் ஊற நின்று தெருண்டார் அவை செப்பல் உற்றேன். 6
கோடாத செங்கோல் குளிர் வெண்குடைக் கோதை வெள்வேல் 
ஓடாத தானை உருமுக் குரல் ஓடை யானை 
வாடாத வென்றி மிகு சச்சந்தன் என்ப மன்னன் 
வீடாத கற்பின் அவன் தேவி விசயை என்பாள். 7
சேந்து ஒத்து அலர்ந்த செழுந்தாமரை அன்ன வாள் கண் 
பூந்தொத்து அலர்ந்த பசும் பொன் கொடி அன்ன பொற்பின் 
ஏந்து ஒத்து அலர்ந்த முலையின் அமிர்து அன்ன சாயல் 
வேந்தற்கு அமுதாய் விளையாடுதற்கு ஏது வாமே. 8
கல்லார் மணிப் பூண் அவன் காமம் கனைந்து கன்றிச் 
சொல்லாறு கேளான் நனி சூழ்ச்சியில் தோற்ற வாறும் 
புல்லார் புகலப் பொறி மஞ்ஞையில் தேவி போகிச் 
செல் ஆறு இழுக்கிச் சுடுகாடு அவள் சேர்ந்த வாறும், 9
நாள் உற்று நம்பி பிறந்தான் திசை பத்தும் நந்தத் 
தோள் உற்று ஓர் தெய்வம் துணையாய்த் துயர் தீர்த்த வாறும் 
கோள் உற்ற கோன் போல் அவன் கொண்டு வளர்த்த வாறும் 
வாள் உற்ற கண்ணாள் மகன் வாழ்க என நோற்ற வாறும், 10
நெஞ்சம் புணையாக் கலை மாக் கடல் நீந்தி ஆங்கே 
வஞ்சம் மறவர் நிரை வள்ளல் விடுத்த வாறும் 
விஞ்சைக்கு இறைவன் மகள் வீணையில் தோற்ற வாறும் 
நஞ்சு உற்ற காம நனி நாகரில் துய்த்த வாறும், 11
முந்நீர்ப் படு சங்கு அலற முரசு ஆர்ப்ப மூதூர்ச் 
செந்நீர்க் கடியின் விழவாட்டினுள் தேங்கொள் சுண்ணம் 
மைந்நீர் நெடுங்கண் இரு மங்கையர் தம்முள் மாறாய் 
இந்நீர்ப் படியேம் இவை தோற்றனம் என்ற வாறும், 12
சுண்ணம் உடைந்து சுரமஞ்சரி சோர்ந்து தோழி 
வண்ணம் நெடுங் கண் குண மாலையை வைது மாறிப் 
புண் மேல் புடையில் புகைந்து ஆண் உரு யாதும் நோக்காள்
கண் நோக்கு உடைந்து கடிமாடம் அடைந்த வாறும், 13
பொன் துஞ்சு மார்பன் புனல் ஆட்டிடைப் புன்கண் எய்தி 
நின்று எஞ்சுகின்ற ஞமலிக்கு அமிர்து ஈந்த வாறும் 
அன்றைப் பகலே குண மாலையை அச்சுறுத்த 
வென்றிக் களிற்றை விரிதார் அவன் வென்ற வாறும், 14
தேன் ஊறு தீம் சொல் குண மாலையைச் சேர்ந்த வாறும் 
கோன் ஊறு செய்வான் கருதிச் சிறை கொண்ட வாறும் 
வான் ஆறு இழிந்து மழை மின் என வந்த ஓர் தேவன் 
ஊன் நாறு ஔத வேல் உரவோன் கொண்டு எழுந்த வாறும், 15
தேங்காத மள்ளர் திரள் தோள் இணை சிக்க யாத்த 
பூங் கச்சு நீக்கிப் பொறி மாண்கலம் நல்ல சேர்த்தி 
நீங்காத காதல் உடையாய் நினைக்க என்று பின்னும் 
பாங்கு ஆய விஞ்சை பணித்து ஆங்கு விடுத்த வாறும், 16
பைந் நாகப் பள்ளி மணி வண்ணனின் பாயல் கொண்டு 
கைந் நாகம் துஞ்சும் கமழ் காந்தள் அம் சாரல் போகி 
மைந் நாக வேலி மணி பல்லவ தேயம் நண்ணிக் 
கொய்ந் நாகச் சோலைக் கொடி அந் நகர் புக்க வாறும், 17
அத்தம் அனைய களிற்று அந் நகர் மன்னன் மங்கை 
முத்தம் உரிஞ்சும் முகிழ் மென் முலை மின் அனாளைப் 
பைத்து அங்கு ஓர் நாகம் பனி மா மதி என்று தீண்டச் 
சித்தம் குழையற்க எனத் தீர்த்து அவள் சேர்ந்த வாறும், 18
பொன் பூண் சுமந்த புணர் மெல் முலைக் கோடு போழ 
நல் பூங் கழலான் இரு திங்கள் நயந்த வாறும் 
கல் பாடு அழித்த கன மா மணித் தூண் செய் தோளான் 
வெற்பு ஊடு அறுத்து விரைவின் நெறிக் கொண்ட வாறும். 19
தள்ளாத சும்மை மிகு தக்க நல் நாடு நண்ணி 
விள்ளா விழுச்சீர் வணிகன் மகள் வேல் கண் நோக்கம் 
உள் ஆவி வாட்ட உயிர் ஒன்று ஒத்து உறைந்த வாறும் 
கள் ஆவி நாறும் கமழ் கோதையின் போய வாறும், 20
இன்னீர் அமிர்து அன்னவள் கண் இணை மாரி கற்பப் 
பொன் ஊர் கழலான் பொழி மா மழைக் காடு போகி 
மின்னீர் வெள் வேலவன் மத்திம தேய மன்னன் 
கொன்னூர் கொடு வெம் சிலை கண்டு எதிர் கொண்ட வாறும், 21
திண் தேர் அரசர் திறல் சிங்கங்கள் வில்லும் வாளும் 
கண்டு ஆங்கு உவந்து கடி பெய்து இவண் காத்தும் என்று 
கொண்டார் குடங்கை அளவே உள கண்ணினாளைப் 
புண் தாங்கு எரிவேல் இளையோற்குப் புணர்த்த வாறும், 22
மதியம் கெடுத்த வய மீன் எனத் தம்பி மாழாந்து 
உதிதற்கு உரியாள் பணியால் உடன் ஆய வாறும் 
நிதியின் நெறியின் அவன் தோழர் நிரந்த வாறும் 
பதியின் அகன்று பயந்தாளைப் பணிந்த வாறும், 23
கண் வாள் அறுக்கும் கமழ்தார் அவன் தாயொடு எண்ணி 
விண் வாள் அறுக்கும் நகர் வீதி புகுந்த வாறும் 
மண் மேல் விளக்காய் வரத்தில் பிறந்தாள் ஒர் கன்னிப் 
பெண் ஆர் அமிர்தின் பெரு வாரியுள் பட்ட வாறும், 24
துஞ்சா மணிப் பூண் சுரமஞ்சரி என்னும் நாமத்து 
அம் சாயல் பூத்த அகிலார் துகிலாய் பொன் அல்குல் 
எஞ்சாத இன்பக் கொடி தாழ்த்ததும் பன்றி எய்து 
நஞ்சு ஊறும் வேலான் பகை நாம் அறக் கொன்ற வாறும், 25
புண் தோய்த்து எடுத்த பொரு வேல் எனச் சேந்து நீண்ட 
கண் போன்ற மாமன் மகள் கண் மணிப் பாவை அன்ன 
பெண் பால் அமிர்தின் நலம் பெற்றதும், பொற்பச் செங்கோல் 
தண் பால் மதி தோய் குடை தண் நிழல் பாய வாறும், 26
திறை மன்னர் உய்ப்பத் திரு நிற்பச் செங்கோல் நடப்பக் 
குறைவு இன்றிக் கொற்றம் உயரத் தெவ்வர் தேர் பணிய 
உறைகின்ற காலத்து அறம் கேட்டு உரும் உற்ற பாம்பின் 
அறிவன் அடிக் கீழ் அரசு அஞ்சித் துறந்த வாறும், 27
கோணைக் களிற்றுக் கொடித் தேர் இவுளிக் கடல் சூழ் 
வாள் மொய்த்த தானை அவன் தம்பியும் தோழன் மாரும் 
பூண் மொய்த்த பொம்மல் முலையாரும் புலம் துறப்ப 
வீணைக் கிழவன் விருந்து ஆர் கதிச் சென்ற வாறும், 28
தேன் வாய் உமிழ்ந்த அமிர்து உண்டவன் போன்று செல்வன் 
வான் வாய் வணக்கும் நலத்தார் முலை போகம் வேண்டான் 
ஏனோரும் ஏத்த அவன் எய்திய இன்ப வெள்ளம் 
ஈனோர்க்கு உரைப்பாம் பதிகத்துள் இயன்ற வாறே, 29
நாமகள் இலம்பகம் - நாட்டு வளம்
நா வீற்று இருந்த புல மா மகளோடு நன் பொன் 
பூ வீற்று இருந்த திருமாமகள் புல்ல நாளும் 
பா வீற்று இருந்த கலை பார் அறச் சென்ற கேள்விக் 
கோ வீற்று இருந்த குடி நாட்டு அணி கூறல் உற்றேன். 30
காய் மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் நெற்றிப் 
பூ மாண்ட தீம் தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து 
தேமாங் கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும் 
ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டே 31
இலங்கல் ஆழியினான் களிற்று ஈட்டம் போல் 
கலங்கு தெண் திரை மேய்ந்து கண மழை 
பொலம் கொள் கொன்றையினான் சடை போல் மின்னி 
விலங்கல் சேர்ந்து விண் ஏறி விட்டு ஆர்த்தவே 32
தேன் நிரைத்து உயர் மொய்வரைச் சென்னியின் 
மேல் நிரைத்து விசும்பு உற வெள்ளி வெண் 
கோல் நிரைத்தன போல் கொழுந் தாரைகள் 
வான் நிரைத்து மணந்து சொரிந்தவே 33
குழவி வெண் மதிக் கோடு உழக் கீண்டு தேன் 
முழவின் நின்று அதிர் மொய் வரைச் சென்னியின் 
இழியும் வெள் அருவித் திரள் யாவையும் 
குழுவின் மாடத் துகில் கொடி போன்றவே. 34
இலங்கு நீள் முடி இந்திரன் மார்பின் மேல் 
விலங்கி வீழ்ந்த முத்தாரமும் போன்றவை 
நலம் கொள் பொன்னொடு நல் மணி சிந்தலால்
கலன் பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே. 35
வள்ளல் கைத்தல மாந்தரின் மால்வரைக் 
கொள்ளை கொண்ட கொழு நிதிக் குப்பையை 
உள்ளம் இல்லவர்க்கு ஊர் தொறும் உய்த்து உராய் 
வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே. 36
மையல் யானையின் மும் மதம் ஆர்ந்து தேன் 
ஐய பொன் அசும்பு ஆடி அளைந்து உராய்ச் 
செய்ய சந்தனம் தீம் பழம் ஆதியா 
நைய வாரி நடந்தது நன்று அரோ. 37
வீடு இல் பட்டினம் வௌவிய வேந்து எனக் 
காடு கையரிக் கொண்டு கவர்ந்து போய் 
மோடு கொள் புனல் மூரி நெடுங் கடல் 
நாடு முற்றியதோ என நண்ணிற்றே. 38
திரை பொரு கனை கடல் செல்வன் சென்னி மேல் 
நுரை எனும் மாலையை நுகரச் சூட்டுவான் 
சரை எனும் பெயர் உடைத் தடம் கொள் வெம் முலைக் 
குரை புனல் கன்னி கொண்டு இழிந்தது என்பவே. 39
பழம் கொள் தெங்கு இலை எனப் பரந்து பாய் புனல் 
வழங்க முன் இயற்றிய சுதை செய் வாய்த் தலை 
தழம் குரல் பம்பையில் சாற்றி நாடு எலாம் 
முழங்கு தீம் புனல் அகம் முரிய மொய்த்தவே. 40
வெலற்கு அரும் குஞ்சரம் வேட்டம் பட்டு எனத் 
தலைத் தலை அவர் கதம் தவிர்ப்பத் தாழ்ந்து போய்க் 
குலத் தலை மகளிர் தம் கற்பின் கோட்டகம் 
நிலைப் படா நிறைந்தன பிறவும் என்பவே. 41
கவ்வையும் கடும் புனல் ஒலியும் காப்பவர் 
செவ்வன் நூறு ஆயிரம் சிலைக்கும் பம்பையும் 
எவ் எலாத் திசைகளும் ஈண்டிக் காரொடு 
பவ்வம் நின்று இயம்புவது ஒத்த என்பவே. 42
மாமனும் மருகனும் போலும் அன்பின 
காமனும் சாமனும் கலந்த காட்சிய;
பூமனும் அரிசிப் புல் ஆர்ந்த மோட்டின 
தாம் இனம் அமைந்து தம் தொழிலின் மிக்கவே. 43
நெறி மருப்பு எருமையின் ஒருத்தல் நீள் இனம் 
செறி மருப்பு ஏற்று இனம் சிலம்பப் பண்உறீஇப் 
பொறி வரி வராலினம் இரியப் புக்கு உடன் 
வெறி கமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே. 44
சேறு அமை செறுவினுள் செந்நெல் வால் முளை 
'வீறொடு விளைக' எனத் தொழுது வித்துவார்'; 
நாறு இது பதம் எனப் பறித்து நாள் செய்வார்; 
கூறிய கடைசியர் குழாம் கொண்டு ஏகுவார். 45
முலைத் தடம் சேதகம் பொறிப்ப மற்று அவர் 
குலைத்து உடன் பதித்தலின் குதித்த வாள் கயல் 
புலத்து இடைக் கவரி கன்று ஊட்டப் போந்த பால் 
நிலத்து இடைப் பாய்ந்து அவை பிறழும் நீரவே. 46
பால் சுவை அறிந்து அவை பழனத் தாமரை 
மேல் செலப் பாய்தலின் வெரீஇய வண்டு இனம் 
கோல் தொடி நுளைச்சியர் முத்தம் கோப்பவர் 
ஏற்றிய மாலைத் தேன் இரியப் பாய்ந்தவே. 47
இரிந்த தேன் குவளையின் நெற்றி தைவர 
முரிந்து போது அவிழ்ந்து கொங்கு உயிர்க்கும் முல்லையின் 
அரும்பு சேர்ந்து அணி ஞிமிறு ஆர்ப்ப வாய் பதம் 
விருந்து எதிர் கொண்ம் எனத் தழுவி வீழ்ந்தவே. 48
வள முடி நடுபவர் வரம்பு இல் கம்பலை 
இள மழை முழக்கு என மஞ்ஞை ஏங்கலின் 
அளமரு குயிலினம் அழுங்கிப் பூம் பொழில் 
உளம் மெலி மகளிரின் ஒடுங்கும் என்பவே. 49
வளைக் கையால் கடைசியர் மட்டு வாக்கலின் 
திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழிக் 
களிப்ப உண்டு இள அனம் கன்னி நாரையைத் 
திளைத்தலின் பெடை மயில் தெருட்டும் செம்மற்றே. 50
கண் எனக் குவளையும் கட்டல் ஓம்பினார் 
வண்ண வாள் முகம் என மரையின் உள் புகார் 
பண் எழுத்து இயல் படப் பரப்பி இட்டனர் 
தண் வயல் உழவர் தம் தன்மை இன்னதே. 51
நித்திலப் பந்துடன் ஈன்று பாதிரி 
ஒத்த பூ உடற்றிய நாவின் நாகினால் 
தத்து நீர் நாரை மேல் எறியத் தண் கடல் 
பைத்து எழு திரை எனப் பறவை ஆலுமே. 52
சொல் அரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் போல் 
மெல்லவே கரு இருந்து ஈன்று மேல் அலார் 
செல்வமே போல் தலை நிறுவித் தேர்ந்த நூல் 
கல்வி சேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே. 53
மீன் கணின் அளவும் வெற்று இடங்கள் இன்மையால் 
தேன் கணக் கரும்பு இயல் காடும் செந் நெலின் 
வான் புகழ் களிறு மாய் கழனி ஆக்கமும் 
ஊன் கணார்க்கு உரைப்ப அரிது ஒல் என் சும்மைத்தே. 54
ஆய் பிழி விருத்து வண்டு அயிற்றி உண்டு தேன் 
வாய் பொழி குவளைகள் சூடி மள்ளர்கள் 
தேய் பிறை இரும்பு தம் வலக்கை சேர்த்தினர் 
ஆய் செந் நெல் அகன்ற காடு அரிகுற்றார்களே. 55
வலியுடைக் கைகளால் மலர்ந்த தாமரை 
மெலிவு எய்தக் குவளைகள் வாடக்கம் பலம் 
பொலிவு எய்தப் பூம் பொய்கை சிலம்பிப் பார்ப்பு எழ 
மலை பட அரிந்து கூன் குயம் கை மாற்றினார். 56
வாளையின் இனம் தலை இரிய வண்டு அலர் 
தாள் உடைத் தாமரை கிழிய வண் சுமை 
கோள் உடை இளையவர் குழாம் கொண்டு ஏகலில் 
பாளை வாய் கமுகு இனம் பழங்கள் சிந்துமே. 57
சோர் புயல் முகில் தலை விலங்கித் தூ நிலம் 
மார்பு கொண்டு ஆர்ந்து அது நரல வண் சுளை 
ஆர்புறு பலாப் பழம் அழிந்த நீள் களம் 
போர்பினால் மலிந்து உடன் பொலிந்த நீரவே. 58
ஈடு சால் போர் பழித்து எருமைப் போத்தினால் 
மாடு உறத் தெளித்து வை களைந்து கால் உறீஇச் 
சேடு உறக் கூப்பிய செந்நெல் குப்பைகள் 
கோடு உயர் கொழும் பொனின் குன்றம் ஒத்தவே. 59
கரும்பு கண் உடைப்பவர் ஆலை தோறெலாம் 
விரும்பி வந்து அடைந்தவர் பருகி விஞ்சிய 
திருந்து சாறு அடுவுழிப் பிறந்த தீம் புகை 
பரந்து விண் புகுதலின் பருதி சேந்ததே. 60
கிணை நிலைப் பொருநர் தம் செல்லல் கீழ்ப் படப் 
பணை நிலையாய் செந்நெல் பகரும் பண்டியும் 
கணை நிலைக் கரும்பினில் கவரும் பண்டியும் 
மண நிலை மலர் பெய்து மறுகும் பண்டியும். 61
மல்லல் அம் தெங்கு இள நீர் பெய் பண்டியும் 
மெல் இலைப் பண்டியும் கமுகின் மேதகு 
பல் பழுக்காய்க் குலை பெய்த பண்டியும் 
ஒல்கு தீம் பண்டம் பெய்து ஒழுகும் பண்டியும். 62
கருங் கடல் வளம் தரக் கரையும் பண்டியும் 
நெருங்குபு முதிரையின் நிறைந்த பண்டியும் 
பெருங் கலிப் பண்டிகள் பிறவும் செற்றுபு 
திருந்தி எத் திசைகளும் செறிந்த என்பவே. 63
கிளி வளர் பூ மருது அணிந்து கேடு இலா 
வள வயல் வைகலும் இன்னது என்ப தேன் 
துளியொடு மதுத் துளி அறாத சோலை சூழ் 
ஒளி அமை இருக்கை ஊர் உரைக்க நின்றவே. 64
சேவல் அன்னம் தாமரையின் தோடு அவிழ்ந்த செவ்விப் பூக் 
காவில் கூடு எடுக்கிய கவ்விக் கொண்டு இருந்தன 
தாவில் பொன் விளக்கமாத் தண் குயில் முழவமாத் 
தூவி மஞ்ஞை நன் மணம் புகுத்தும் தும்பிக் கொம்பரோ. 65
கூடினார் கண் அம்மலர்க் குவளை அம் குழி இடை 
வாடு வள்ளை மேல் எலாம் வாளை ஏறப் பாய்வன 
பாடு சால் கயிற்றில் பாய்ந்து பல் கலன் ஒலிப்பப் போந்து 
ஆடு கூத்தி ஆடல் போன்ற நாரை காண்ப ஒத்தவே. 66
காவி அன்ன கண்ணினார் கயம் தலைக் குடைதலின் 
ஆவி அன்ன பூந்துகில் அணிந்த அல்குல் பல் கலை 
கோவை அற்று உதிர்ந்தன கொள்ளும் நீரர் இன்மையின் 
வாவி யாவும் பொன் அணிந்து வானம் பூத்தது ஒத்தவே. 67
பாசவல் இடிப்பவர் உலக்கை வாழைப் பல் பழம் 
ஆசினி வருக்கை மா தடிந்து தேம் கனி உதிர்த்து 
ஊசல் ஆடும் பைங் கமுகு தெங்கின் ஒண் பழம் பரீஇ 
வாசத் தாழை சண்பகத்தின் வான் மலர்கள் நக்குமே. 68
மன்றல் நாறு இலஞ்சி மேய்ந்து மா முலை சுரந்த பால் 
நின்ற தாரையால் நிலம் நனைப்ப ஏகி நீள் மனைக் 
கன்று அருத்தி மங்கையர் கலம் நிறை பொழிதர 
நின்ற மேதியால் பொலிந்த நீர மாட மாலையே. 69
வெள்ளிப் போழ் விலங்க வைத்து அனைய வாய் மணித் தலை 
கொள் பவளம் கோத்த அனைய கால குன்றிச் செங்கண 
ஒள் அகில் புகை திரண்டது ஒக்கும் மா மணிப் புறாக் 
கிள்ளையோடு பால் உணும் கேடு இல் பூவை பாடவே. 70
காடி உண்ட பூந் துகில் கழும ஊட்டும் பூம் புகை 
மாட மாலை மேல் நலார் மணிக் குழலின் மூழ்கலின் 
கோடு உயர்ந்த குன்றின் மேல் குழீஇய மஞ்ஞைதம் சிறகு 
ஆடும் மஞ்சினுள் விரித்து இருந்த வண்ணம் அன்னரே. 71
கண் உளார் நும் காதலர் ஒழிக காமம் ஈங்கு என 
உள் நிலாய வேட்கையால் ஊடினாரை ஆடவர் 
வண்ண மேகலைகளைப் பற்ற அற்று உதிர்ந்தன 
எண் இல் பொன் சுடு நெருப்பு உக்க முற்றம் ஒத்தவே. 72
கோட்டு இளந் தகர்களும் கொய் மலர தோன்றி போல் 
சூட்டு உடைய சேவலும் தோணிக் கோழி ஆதியா
வேட்டவற்றின் ஊறு உளார் வெருளி மாந்தர் போர்க் கொளீஇக் 
காட்டி ஆர்க்கும் கௌவையும் கடியும் கௌவை கௌவையே. 73
இறு நுசுப்பின் அம் நலார் ஏந்து வள்ளத்து ஏந்திய 
நறவம் கொப்புளித்தலின் நாகு புன்னை பூத்தன 
சிறகர் வண்டு செவ்வழி பாட மாடத்து ஊடு எலாம் 
இறை கொள் வானின் மீன் என அரம்பை முலையின் இருந்தவே. 74
விலக்கு இல் சாலை யாவர்க்கும் வெப்பின் முப் பழச் சுனைத் 
தலைத் தணீர் மலர் அணிந்து சந்தனம் செய் பந்தரும் 
கொலைத் தலைய வேல் கணார் கூத்தும் அன்றி ஐம் பொறி 
நிலத் தலைய துப்பு எலாம் நிறை துளும்பும் ஊர்களே. 75
அடிசில் வைகல் ஆயிரம் அறப் புறமும் ஆயிரம் 
கொடி அனார் செய் கோலமும் வைகல் தோறும் ஆயிரம் 
மடிவு இல் கம்மியர்களோடு மங்கலமும் ஆயிரம் 
ஒடிவு இலை வேறு ஆயிரம் ஓம்புவாரின் ஓம்பவே. 76
நல்தவம் செய்வார்க்கு இடம் தவம் செய்வார்க்கும் அஃது இடம் 
நல் பொருள் செய்வார்க்கு இடம் பொருள் செய்வார்க்கும் அஃது இடம் 
பெற்ற இன்பம் விழைவிப்பான் விண் உவந்து வீழ்ந்து என 
மற்ற நாடு வட்டம் ஆக வைகும் மற்ற நாடு அரோ. 77
நகர் வளம் - புடை நகர்
கண் வலைக் காமுகர் என்னும் மாபடுத்து 
ஒள் நிதித் தசை தழீஇ உடலம் விட்டிடும் 
பெண் வலைப் படாதவர் பீடின் ஓங்கிய 
அண்ணல் அம் கடிநகர் அமைதி செப்புவாம். 78
விண்புகு வியன் சினை மெலியப் பூத்தன 
சண்பகத்து அணிமலர் குடைந்து தாது உக 
வண் சிறைக் குயிலொடு மயில்கண் மாறு கூஉய்க் 
கண் சிறைப் படுநிழல் காவு சூழ்ந்தவே. 79
கை புனை சாந்தமும் கடி செய் மாலையும் 
மெய் புனை சுண்ணமும் புகையும் மேவிய 
நெய்யொடு குங்குமம் நிறைந்த நாணினால் 
பொய்கைகள் பூம் படாம் போர்த்த போன்றவே. 80
கடி நலக் கரும்பொடு காய் நெல் கற்றையின் 
பிடி நலம் தழீஇ வரும் பெருங் கைக் குஞ்சரம் 
அடி நிலை இருப்பு எழு அமைந்த கல் மதில் 
புடை நிலை வாரிகள் பொலிந்த சூழ்ந்தவே. 81
சல சல மும் மதம் சொரியத் தம் தம்முள் 
கொலை மருப்பு இரட்டைகள் குளிப்பப் பாய்ந்து இரு 
மலை திளைப்பன என நாகம் ஆன்ற போர் 
குலவிய நிலைக்களம் கோலம் ஆர்ந்தவே. 82
முத்து உடை வெண் மருப்பு ஈர்ந்து மொய் கொளப் 
பத்தியில் குயிற்றிய மருங்கில் பல்வினைச் 
சித்திரக் கிம்புரி வைரம் சேர்த்துநர் 
ஒத்துஇயல் இடங்களும் ஒழுங்கு நீண்டவே. 83
ஓடு தேர்ச் சாரிகை உகு பொன் பூமியும் 
ஆடகம் ஆற்றும் தார்ப் புரவி வட்டமும் 
கேடக வாள் தொழில் இடமும் கேடு இலாக் 
கோடு வெம் சிலைத் தொழில் இடமும் கூடின்றே. 84
புடை நகர்த் தொழில் இடம் கடந்து புக்க பின் 
இடை நகர்ப் புறம் பணை இயம்பும் ஓசை ஓர் 
கடல் உடைந்தது எனக் கலந்தது அக் கடல் 
மடை அடைத்து அனையது அம் மாக்கள் ஈட்டமே. 85
சிந்துரப் பொடிகளும் செம் பொன் சுண்ணமும் 
சந்தன நீரோடு கலந்து தையலார் 
பந்தொடு சிவிறியில் சிதறப் பார் மிசை 
இந்திர வில் எனக் கிடந்த வீதியே 86
பாத்தரும் பசும் பொன்னின் மாடத்து உச்சி மேல் 
தூத் திரள் மணிக் குடம் நிரைத்துத் தோன்றுவ 
பூத்தன வேங்கை மேல் பொலிந்து கார் நினைந்து 
ஏத்தரும் மயில் குழாம் இருந்த போன்றவே. 87
நெடுங் கொடி நிழல் மதி நெற்றி தைவர 
உடம்பு வேர்த்து இன மழை உரறி நோக்கலின் 
நடுங்குபு நல் வரை மாடத்து உச்சியில் 
அடங்கி வீழ்ந்து அருவியின் அழுவ போன்றவே. 88
பொன் சிறு தேர் மிசைப் பைம் பொன் போதகம் 
நல் சிறார் ஊர்தலின் நங்கைமார் விரீஇ 
உற்றவர் கோழி மேல் எறிந்த ஒண் குழை 
மற்று அத் தேர் உருள் கொடா வளமை சான்றவே. 89
மாலையும் பசும் பொ(ன்)னும் மயங்கி வார் கணைக் 
கோல் எயும் குனி சிலை நுதலினாரொடு 
வேல் இயல் ஆடவர் விரவி விண்ணவர் 
ஆலயம் இது என ஐயம் செய்யுமே. 90
கல் சுணம் செய்த தோள் மைந்தர் காதலால் 
நல் சுணப் பட்டு உடை பற்ற நாணினால் 
பொன் சுணத்தால் விளக்கு அவிப்பப் பொங்கிய 
பொன் சுணம் புறம்பணை தவழும் பொற்பிற்றே. 91
நலத்தகு நானம் நின்று இடிக்கும் நல்லவர் 
உலக்கையால் உதிர்ந்தன தெங்கின் ஒண் பழம் 
நிலத்து அவை சொரிதலின் வெரீஇய மஞ்ஞை போய்க் 
கலத்து உயர் கூம்பின் மேல் ஆடும் கௌவைத்தே. 92
இட்ட எள் நிலம்படா வகையில் ஈண்டிய 
முட்டு இலா மூவறு பாடை மாக்களால் 
புள் பயில் பழு மரம் பொலிவிற்று ஆகிய 
மட்டு இலா வள நகர் வண்ணம் இன்னதே. 93
அகழியின் தோற்றம்
தங்கு ஒளி நித்திலத் தாமம் சூடிய 
வெம் களி இள முலை வேல் கண் மாதரார் 
பைங்கிளி முன்கை மேல் கொண்டு பார்ப்பு எனும் 
கொங்கு அலர் தாமரைக் கிடங்கு கூறுவாம். 94
கோள் சுறா இனத்தொடு முதலைக் குப்பைகள் 
ஆள் பெறா திரிதர அஞ்சிப் பாய்வன 
மோட்டு இறா பனிக் கிடங்கு உழக்க மொய்த்து எழுந்து 
ஈட்டறாப் புள் இனம் இரற்றும் என்பவே. 95
சிறை அனப் பெடையினோடு ஊடிச் சேவல் போய் 
அறு பத வண்டு இனம் ஆர்ப்பத் தாமரை 
உறைவது குழுவின் நீங்கி யோகொடு 
கறை அற முயல்வது ஓர் கடவுள் ஒத்ததே. 96
அரும் பொனும் வெள்ளியும் மணியும் அல்லது 
கருங் கலம் தோய்விலாக் காமர் பூந் துறை 
குரும்பை மென் முலையின் மேல் குலாய குங்குமம் 
விருந்து செய்திட வெறி மேனி சேந்ததே. 97
பட்டவர்த் தப்பலின் பரவை ஏந்து அல்குல் 
அட்டு ஒளி அரத்தம்வாய்க் கணிகை அல்லது 
மட்டு உடை மண மகள் மலர்ந்த போதினால் 
கட்டு உடைக் காவலின் காமர் கன்னியே. 98
நிரை கதிர் நித்திலம் கோத்து வைத்த போல் 
விரை கமழ் கமுகின் மேல் விரிந்த பாளையும் 
குரை மதுக் குவளைகள் கிடங்கில் பூத்தவும் 
உரையின் ஓர் ஓசனை உலாவி நாறுமே. 99
மதிலின் தோற்றம்
தாய் முலை தழுவிய குழவி போலவும் 
மா மலை தழுவிய மஞ்சு போலவும் 
ஆய் முகில் தழீஇ அசும்பு அறாத நெற்றிய 
சேய் உயர் மதில் வகை செப்புகின்றதே. 100
மாற்றவர் மறப் படை மலைந்து மதில் பற்றின் 
நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கி எறி பொறியும் 
தோற்றம் உறு பேய் களிறு துற்று பெரும் பாம்பும் 
கூற்றம் அன கழுகு தொடர் குந்தமொடு கோண்மா 101
வில் பொறிகள் வெய்ய விடு குதிரை தொடர் அயில் வாள் 
கல் பொறிகள் பாவை அனம் மாடம் அடு செந் தீக் 
கொல் புனை செய் கொள்ளி பெருங் கொக்கு எழில் செய் கூகை 
நல் தலைகள் திருக்கும் வலி நெருக்கும் மர நிலையே 102
செம்பு உருகு வெம் களிகள் உமிழ்வ திரிந்து எங்கும் 
வெம்பு உருகு வட்டு உமிழ்வ வெந் நெய் முகத்து உமிழ்வ 
அம்பு உமிழ்வ வேல் உமிழ்வ கல் உமிழ்வ ஆகித் 
தம் புலங்களால் யவனர் தாள் படுத்த பொறியே. 103
கரும் பொன் இயல் பன்றி கத நாகம் விடு சகடம் 
குரங்கு பொரு தகரினொடு கூர்ந்து அரிவ நுண்நூல் 
பரந்த பசும் பொன் கொடி பதாகையொடு கொழிக்கும் 
திருந்து மதி தெவ்வர் தலை பனிப்பத் திருந்தின்றே 104
வயிர வரை கண் விழிப்ப போன்று மழை உகளும் 
வயிர மணித் தாழ்க் கதவு வாயில் முகம் ஆக 
வயிரம் அணி ஞாயில் முலை வான் பொன் கொடிக் கூந்தல் 
வயிரக் கிடங்கு ஆடை மதில் கன்னியது கவினே 105
அகநகர்த் தோற்றம்
செம் பொன் மழை போன்று அடிதொறு ஆயிரங்கள் சிந்திப் 
பைம் பொன் விளை தீவில் நிதி தடிந்து பலர்க்கு ஆர்த்தி 
அம் பொன் நிலத்து ஏகு குடி அக நகரம் அது தான் 
உம்பர் உலகு ஒப்பது அதன் தன்மை சிறிது உரைப்பாம் 106
பரத்தையர் சேரியின் தோற்றம்
துப்பு உறழ் தொண்டைச் செவ்வாய்த் தோழியர் காமத் தூதின் 
ஒப்ப ஒன்று ஆதி ஆக ஆயிரத்தோர் எட்டு ஈறாச் 
செப்பித் தம் செம்பொன் அல்குல் நலம் வரைவின்றி விற்கும் 
உப்பு அமை காமத் துப்பின் அவர் இடம் உரைத்தும் அன்றே 107
குங்குமம் மெழுகிச் சார்பும் திண்ணையும் குயிற்றி உள்ளால் 
தங்கும் மென் சாந்தத்தோடு தாமமும் தாழ நாற்றி 
எங்கும் நல் சுவர்கள் தோறும் நாடகம் எழுதி ஏற்பப் 
பொங்கு மென் மலர் பெய் சேக்கை பொலிந்து விண் புகற்சி உண்டே 108
தூசு சூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன வீழ்த்த 
காசு சூழ் கோவை முத்தம் கதிர் முலை திமிர்ந்த சாந்தம் 
வாச நல் பொடிகள் மாலை வண்டு உண வீழ்ந்த முற்றம் 
ஆசைப் பட்டு அரசு வைக அருங் கடி கமழும் அன்றே 109
அம் சிலம்பு ஒலியோடு அல்குல் கலை ஒலி அணிந்த முன்கைப் 
பஞ்சி மெல் விரலில் பாணி பண் ஒலி பவழச் செவ்வாய் 
அஞ்சி நேர்ந்து உயிர்க்கும் தேன் சேர் குழல் ஒலி முழவின் ஓசை 
துஞ்சல் இல் ஓசை தம்மால் துறக்கமும் நிகர்க்க லாதே 110
தேன் உலாம் மதுச் செய் கோதை தேம் புகை கமழ ஊட்ட 
வான் உலாம் சுடர்கண் மூடி மா நகர் இரவு செய்யப் 
பால் நிலாச் சொரிந்து நல்லார் அணிகலம் பகலைச் செய்ய 
வேனிலான் விழைந்த சேரி மேல் உலகு அனையது ஒன்றே 111
கடை வீதிகள்
இட்ட நூல் வழாமை ஓடி யோசனை எல்லை நீண்டு 
மட்டுவார் மாலை வேய்ந்து சதுக்கங்கள் மலிந்த சும்மைப் 
பட்டமும் பசும் பொன் பூணும் பரந்து ஒளி நிழற்றும் தீம் தேன் 
அட்டும் தார் அணிந்த மார்பர் ஆவணம் விளக்கல் உற்றேன். 112
மணி புனை செம் பொன் கொட்டை வம்பு அணி முத்த மாலைக் 
கணி புனை பவழத் திண் காழ் கம்பலக் கிடுகின் ஊன்றி 
அணி நிலம் மெழுகிச் சாந்தின் அகில் புகைத்து அம் பொன் போதில்
திணி நிலம் அணிந்து தேம் கொள் ஐயவி சிதறினாரே. 113
பொன் சொரி கதவு தாழில் திறந்து பொன் யவனப் பேழை 
மின் சொரி மணியும் முத்தும் வயிரமும் குவித்துப் பின்னும் 
மன் பெரும் பவழக் குப்பை வால் அணிகலம் செய் குப்பை 
நண் பகல் இரவு செய்யும் நன் கலம் கூப்பினாரே. 114
விழுக் கலம் சொரியச் சிந்தி வீழ்ந்தவை எடுத்துக் கொள்ளா 
ஒழுக்கினர் அவர்கள் செல்வம் உரைப்பரிது ஒழிக வேண்டா 
பழக் குலைக் கமுகும் தெங்கும் வாழையும் பசும் பொன்னாலும் 
எழில் பொலி மணியினாலும் கடை தொறும் இயற்றினாரே. 115
மூசு தேன் இறாலின் மூச மொய் திரை இயம்பி யாங்கும் 
ஓசை என்று உணரின் அல்லால் எழுத்து மெய் உணர்த்தல் ஆகாப் 
பூசு சாந்து ஒருவர் பூசிற்று எழுவர் தம் அகலம் பூசி 
மா சனம் இடம் பெறாது வண் கடை மலிந்தது அன்றே. 116
மெய்யணி பசும் பொன் சுண்ணம் மேதகு நான நீரின் 
ஐது பட்டு ஒழுகி யானை அழிமதம் கலந்து சேறாய்ச் 
செய் அணி கலன்கள் சிந்தி மாலையும் மதுவும் மல்கி 
வெய்து அடி இடுதற்கு ஆகா வீதிகள் விளம்பல் உற்றேன். 117
தெருக்களின் தோற்றம்
முழவு அணி முது நகர் முரசொடு வளை விம 
விழவு அணி மகளிர் தம் விரை கமழ் இள முலை 
இழை அணி ஒளி இள வெயில் செய விடு புகை 
மழை என மறையின பொலிவினது ஒருபால். 118
குடையொடு குடை பல களிறொடு நெரி தர 
உடை கடல் ஒலியினொடு உறுவார் பலி செல 
முடியொடு முடியுற மிடைதலின் விடு சுடர் 
கொடியுடை மழை மினின் குலவியது ஒரு பால். 119
பூத்தலை வாரணப் போர்த் தொழில் இளையவர் 
நாத் தலை மடி விளிக் கூத்தொடு குயில் தரக் 
காய்த்துறு தமனியத் துகளொடு கடிகமழ் 
பூத்துகள் கழுமிய பொலிவினது ஒரு பால். 120
மைந்தரோடு ஊடிய மகளிரை இளையவர் 
அம் துகில் பற்றலின் காசரிந்து அணி கிளர் 
சுந்தர நிலமிசைச் சொரிதலின் மின் அணிந்து 
இந்திர திருவிலின் எழிலினது ஒருபால். 121
வளை அறுத்து அனையன வால் அரி அமை பதம் 
அளவு அறு நறு நெய்யொடு கறி அமை துவை 
விளைவு அமை தயிரொடு மிசை குவிர் விரையுமின் 
உள அணி கலம் எனும் உரையினது ஒருபால். 122
வரை நிரை அருவியின் மதம் மிசை சொரிவன 
புரை நிரை களிறொடு புனை மணி இயல் தேர் 
விரை நிரை இவுளியொடு இளையவர் விரவுபு 
குரை நிரை குளிர் புனல் ஆற்றினது ஒருபால். 123
வரி வளை அரவமும் மணி முழவு அரவமும் 
அரி வளர் கண்ணியர் அணிகல அரவமும் 
புரி வளர் குழலொடு பொலி மலி கவினிய 
திரு விழை கடி மனை திறவிதின் மொழிவாம். 124
தெருக்களிலுள்ள மனைகளைப் பற்றிக் கூறுதல்
பாவை அன்னவர் பந்து புடைத்தலில் 
தூவி அன்னம் வெரீஇத் துணை என்று போய்க் 
கோவை நித்தில மாடக் குழாம் மிசை 
மேவி வெண் மதி தன்னொடு இருக்குமே. 125
திருவ நீள் நகர்ச் செம் பொனின் நீடிய 
உருவ ஒண்கொடி ஊழின் நுடங்குவ 
பரவை வெம் கதிர்ச் செல்வன பன்மயிர்ப் 
புரவி பொங்கு அழல் ஆற்றுவ போன்றவே. 126
இழை கொள் வெம் முலை ஈரம் உலர்த்துவார் 
விழைய ஊட்டிய மேதகு தீம் புகை 
குழை கொள் வாண் முகம் சூழ் குளிர் அம் கதிர் 
மழையுள் மா மதி போன்ம் எனத் தோன்றுமே. 127
செம் பொன் கண்ணி சிறார் களைந்திட்டவும் 
அம் பொன் மாலை அவிழ்ந்து உடன் வீழ்ந்தவும் 
தம் பொன் மேனி திமிர்ந்த தண் சாந்தமும் 
வம்பு உண் கோதையர் மாற்றும் அயல் அரோ 128
வேரிஇன் மெழுக்கு ஆர்ந்த மென் பூ நிலத்து 
ஆரி ஆக அம் சாந்தம் தளித்தபின் 
வாரி நித்திலம் வைப்ப பொன் பூவொடு 
சேரி தோறு இது செல்வத்து இயற்கையே. 129
கருனை வாசமும் கார் இருள் கூந்தலார் 
அருமை சான்ற அகில் புகை வாசமும் 
செருமிச் சேர்ந்து கண்ணீர் வரத் தேம் பொழில் 
உரிமை கொண்டன ஒண்புறவு என்பவே. 130
நறையும் நானமும் நாறும் நறும் புகை 
விறகின் வெள்ளி அடுப்பின் அம் பொன் கலம் 
நிறைய ஆக்கிய நெய் பயில் இன் அமுது 
உறையும் மாந்தர் விருந்தொடும் உண்பவே. 131
பாளை மென் கமுகின் பழம் மெல் இலை 
நீள் வெண் மாடத்து நின்று கொண்டு அம்நலார் 
ஆளிய மொய்ம்பர்க்கு அளித்து அணி சண்பகம் 
நாள் செய் மாலை நகை முடிப் பெய்பவே. 132
எழுது வாள் நெடும் கண் இணை அம் நலார் 
மெழுகு குங்கும மார்பு இடை வெம் முலை 
உழுது கோதையும் சாந்தும் உவந்து அவை 
முழுதும் வித்தி விளைப்பர் திளைப்பவே. 133
குஞ்சி மேல் அனிச்ச மலர் கூட்டு உணும் 
அஞ்சில் ஓதியர் அம் மலர்ச் சீறடி 
மஞ்சு தோய் மணி மாடத்து மல்கு பூம் 
பஞ்சி மேலும் பனிக்கும் பனிக்குமே. 134
தூமமே கமழும் துகில் சேக்கை மேல் 
காமமே நுகர்வார் தம் காதலால் 
யாமமும் பகலும் அறியாமையால் 
பூமி மா நகர் பொன் உலகு ஒத்ததே. 135
அரவு கான்றிட்ட அம்கதிர் மா மணி 
உரவு நீர் முத்தும் உள் உறுத்து உள்ளன 
இரவல் மாந்தர்க்கும் இன்னவை ஈவது ஓர் 
புரவு பூண்டனர் பொன் நகர் மாந்தரே. 136
முல்லை அம் குழலார் முலைச் செல்வமும் 
மல்லல் மா நகர்ச் செல்வமும் வார் கழல் 
செல்வர் செல்வமும் காணிய என்பர் போல் 
எல்லியும் இமையார் இமையாததே. 137
முழவும் சங்கமும் முன்றில் முழங்குவ 
விழவும் வேள்வும் விடுத்தல் ஒன்று இன்மையால் 
புகழலாம் படித்து அன்று இது பொன்னகர் 
அகழ்தல் மாக் கடல் அன்னது ஓர் சும்மைத்தே. 138
திங்கள் முக்குடையான் திரு மாநகர் 
எங்கும் எங்கும் இடம் தொறும் உண்மையால் 
அம் கண் மா நகர்க்கு ஆக்கம் அறாதது ஓர் 
சங்க நீள் நிதியால் தழைக்கின்றதே. 139
தேன்தலைத் துவலை மாலை பைந்துகில் செம் பொன் பூத்து 
ஞான்றன வயிர மாலை நகு கதிர் முத்த மாலை 
கான்று அமிர்து ஏந்தி நின்ற கற்பகச் சோலை யார்க்கும் 
ஈன்று அருள் சுரந்த செல்வத்து இராசமா புரம் அதாமே. 140
அரண்மனையின் சிறப்பு
வேக யானை மீளி வேல் வெய்ய தானை ஐய கோல் 
மாகம் நீள் மணிமுடி மாரி வண்கை மாசு இல் சீர் 
ஏக ஆணை வெண் குடை இந் நகர்க்கு மன்னவன் 
நாக நீர நல் நகர் நன்மை தன்னம் செப்புவாம். 141
நீள் நிலம் வகுத்து நீர் நிரந்து வந்து இழிதரச் 
சேண் நிலத்து இயற்றிய சித்திரச் சுருங்கை சேர் 
கோள் நிலத்து வெய்யவாம் கொடும் சுறத் தடம் கிடங்கு 
பூண் நிலத்து வைத்தது ஓர் பொற்பினில் பொலிந்ததே. 142
இஞ்சி மாகம் நெஞ்சு போழ்ந்து எல்லை காண ஏகலின் 
மஞ்சு சூழ்ந்து கொண்டு அணிந்து மாக நீண்ட நாகமும் 
அஞ்சு நின்னை என்றலின் ஆண்டு நின்று நீண்ட தன் 
குஞ்சி மாண் கொடிக் கையால் கூவி விட்டது ஒத்ததே. 143
முத்து மாலை முப்புரி மூரி மா மணிக் கதவு 
ஒத்த நான்கு கோபுரம் ஓங்கி நின்று ஒளிர்வன 
சத்தி நெற்றி சூட்டிய தாம நீள் மணிவணன் 
தத்து ஒளி மணிமுடி தாமம் நால்வ போலுமே. 144
சங்கு விம்மு நித்திலம் சாந்தொடு ஏந்து பூண் முலைக் 
கொங்கு விம்மு கோதை தாழ் கூந்தல் ஏந்து சாயலார் 
இங்கிதக் களிப்பினால் எய்தி ஆடும் பூம் பொழில் 
செங் கண் இந்திரன் நகர்ச் செல்வம் என்னது அன்னதே. 145
வெள்ளி யானை மென் பிடி மின் இலங்கு பைம் பொனால் 
துள்ளும் மான் ஒருத்தலும் செம் பொன் அம் பொன் மான்பிணை 
உள்ளு காமம் உள் சுட வேந்தன் ஆங்கு உறைவது ஓர் 
பள்ளி மாட மண்டபம் பசுங்கதிர்ப்ப வண்ணமே. 146
கோழ் அரை மணி மடல் கூந்தல் நெற்றி ஏந்திய 
மாழையம் திரள் கனி மா மணி மரகதம் 
சூழ் குலைப் பசுங்கமுகு சூலு பாளை வெண் பொனால் 
ஊழ் திரள் மணிக் கயிறு ஊசல் ஆட விட்டதே. 147
மென் தினைப் பிறங்கலும் மிளிர்ந்து வீழ் அருவியும் 
குன்று அயல் மணிச் சுனைக் குவளை கண் விழிப்பவும் 
நின்று நோக்கு மான் பிணை நீல யானை மன்னவன் 
கன்று காமம் வெஃகிய காமர் காம பூமியே. 148
தீம் குயில் மணந்து தேன் துஞ்ச வண்டு பாண் செய 
வேங்கை நின்று பொன் உகுக்கும் வெற்பு உடுத்த சந்தனம் 
ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும் 
நீங்க நீங்கும் இன் உயிர் நினைப்பின் நின்று இளஃகுமே. 149
முத்தம் வாய் புரித்தன மொய் கதிர்ப் பசும் பொனால் 
சித்திரத்து இயற்றிய செல்வம் மல்கு பன் மணி 
பத்தியில் குயிற்றி வான் பதித்து வைத்த போல்வன 
இத்திறத்த பந்து எறிந்து இளையர் ஆடு பூமியே. 150
வைத்த பந்து எடுத்தலும் மாலையுள் கரத்தலும் 
கைத்தலத்தின் ஓட்டலும் கண்ணி நெற்றி தீட்டலும் 
பத்தியில் புடைத்தலும் பை அரவின் ஆடலும் 
இத்திறத்த பந்தினோடு இன்பம் எல்லை இல்லையே. 151
கூற்றம் அன்ன கூர் நுதிக் குருதி வான் மருப்பு இடைச் 
சீற்றம் உற்ற மன்னர் தம் சென்னி பந்து அடிப்பன 
ஊற்று இருந்த மும் மதத்து ஓடை யானை பீடுசால் 
காற்று இயல் புரவி தேர் கலந்து கௌவை மல்கின்றே. 152
கவ்வை அம் கருவி சூழ்ந்து கண் படுக்கும் மாடமும் 
தெவ்வர் தந்த நீள் நிதி செம் பொன் மாடமும் 
மவ்வல் அம் குழலினார் மணிக்கலம் பெய் மாடமும் 
இவ் வலந்த அல்லவும் இடங்கள் எல்லை இல்லையே. 153
பூத்த கோங்கும் வேங்கையும் பொன் இணர் செய் கொன்றையும் 
காய்த்து நின்று கண் தெறூஉம் காமர் வல்லி மாதரார் 
கூத்து அறாத பள்ளியும் கொற்றம் அன்ன மங்கையர் 
ஏத்தல் சான்ற கோயிலும் இடைப் படுத்து இயன்றவே. 154
கந்து மா மணித்திரள் கடைந்து செம் பொன் நீள் சுவர்ச் 
சந்து போழ்ந்து இயற்றிய தட்டு வேய்ந்து வெண் பொனால் 
இந்திரன் திரு நகர் உரிமையோடு இவ்வழி 
வந்து இருந்த வண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே. 155
ஆடலின் அரவமும் அங்கை கொட்டி நெஞ்சு உணப் 
பாடலின் அரவமும் பணை முழவு அரவமும் 
கூடு கோலத் தீம் சுவைக் கோல யாழ் அரவமும் 
வாடல் இல்ல ஓசையால் வைகல் நாளும் வைகிற்றே. 156
சச்சந்தன் வரலாறு
நச்சு நாகத்தின் ஆர் அழல் சீற்றத்தன் 
அச்சம் உற்று அடைந்தார்க்கு அமிர்து அன்னவன் 
கச்சு உலாம் முலையார்க்கு அணங்கு ஆகிய 
சச்சந்தன் எனும் தாமரைச் செங் கணான். 157
வண் கையால் கலி மாற்றி வை வேலினால் 
திண் திறல் தெவ்வர் தேர்த் தொகை மாற்றினான் 
நுண் கலைக்கு இடனாய்த் திரு மா மகள் 
கண்களுக்கு இடன் ஆம் கடி மார்பனே. 158
கோதை நித்திலம் சூழ் குளிர் வெண் குடை 
ஓத நீர் உலகு ஒப்ப நிழற்றலால் 
தாதையே அவன் தாள் நிழல் தங்கிய 
காதலால் களிக்கின்றது இவ் வையமே. 159
தருமன் தண் அளியால் தனது ஈகையால் 
வருணன் கூற்று உயிர் மாற்றலின் வாமனே 
அருமையால் அழகின் கணை ஐந்து உடைத் 
திருமகன் திரு மா நில மன்னனே. 160
ஏனை மன்னர் தம் இன் உயிர் செற்ற வேல் 
தானை மன்னரில் தான் இமில் ஏறு அனான் 
தேனை மாரி அன்னான் திசை காவலன் 
வானம் தோய் புகழான் மலிவு எய்தினான். 161
விசயையின் தோற்றம்
செல்வற்கு இன்னணம் சேறலில் தீம் புனல் 
மல்கு நீர் விதையத்து அரசன் மகள் 
அல்லி சேர் அணங்கிற்கு அணங்கு அன்னவள் 
வில்லின் நீள் புருவத்து எறி வேல் கணாள். 162
உருவும் சாயலும் ஒப்ப உரைப்பதற்கு 
அரிய ஆயினும் அவ் வளைத் தோளிகண் 
பெருகு காரிகை பேசுவல் பெண் அணங்கு 
அரிய தேவரும் ஏத்து அரு நீரளே. 163
எண்ணெயும் நானமும் இவை மூழ்கி இருள் திருக்கிட்டு 
ஒண்ணறும் துகில் கிழி பொதிந்து உறை கழித்தன போல் 
கண் இருண்டு நெறி மல்கிக் கடைகுழன்ற கருங் குழல்கள் 
வண்ணப் போது அருச்சித்து மகிழ்வு ஆனாத் தகையவே. 164
குழவிக் கோட்டு இளம் பிறையும் குளிர் மதியும் கூடின போல் 
அழகுகொள் சிறுநுதலும் அணி வட்ட மதி முகமும் 
தொழுதற்கு வரம் கொடுக்கும் தொண்டை வாய்த் தூமுறுவல் 
ஒழுகு பொன் கொடி மூக்கும் உருப்பசியை உருக்குமே. 165
வண் சிலையை வனப்பு அழித்து வார்ந்து ஒழுகி நிலம் பெறா 
நுண் கருமை கொண்டு ஒசிந்து நுதல் இவர்ந்து போந்து உலாய்க் 
கண் கூடா கடை புடைத்துக் கைவல்லான் எழுதிய போல் 
பண்பு ஆர்ந்த கொடும் புருவம் பழிச்சு ஆனாப் படியவே. 166
சேல் அனைய சில்லரிய கடை சிவந்து கரு மணி அம் 
பால் அகத்துப் பதித்து அன்ன படியவாய் முனிவரையும் 
மால் உறுப்ப மகிழ் செய்வ மாண்பில் நஞ்சும் அமிர்தமுமே 
போல் குணத்த பொரு கயல் கண் செவி உறப் போந்து அகன்றனவே. 167
மயிர் எறி கத்தரிகை அனையவாய் வள்ளை வாடு 
உயிர் செகுத்து முன் ஒன்றிப் பின் பேராது உரு அமைந்த 
செயிர் மகர குண்டலமும் திளைப்பு ஆனா வார் காதும் 
வயிரவில் முகம் சூடி வண்ணம் வீற்று இருந்தனவே. 168
ஈனாத இளங் கமுகின் மரகத மணிக் கண்ணும் 
ஆனாதே இருள் பருகும் அருமணி கடைந்ததூஉம் 
தான் ஆகி இருளொடு ஓர் தாமரைப் பூச் சுமந்து அன்ன 
கான் ஆர்ந்த திரள் கழுத்துக் கவின் சிறை கொண்டு இருந்ததே. 169
மணி மகரம் வாய் போழ்ந்து வாழ் முத்த வடம் சூழ்ந்து ஆங்கு 
அணி அரக்கு ஆர் செம் பஞ்சி அணை அனைய ஆடு அமைத் தோள் 
துணிகதிர் வளை முன் கைத் தொகுவிரல் செங் காந்தள் 
மணி அரும்பு மலர் அங்கை குலிகம் ஆர் வனப்பினவே. 170
தாமச் செப்பு இணை முகட்டுத் தண் கதிர் விடு நீல 
மா மணி தாபித்தன போல் மனம் பருகு கருங் கண்ண 
ஏம் உற அடி பரந்து இளம் பிறை வடம் சூடி 
ஆம் அணங்கு குடி இருந்து அஞ் சுணங்கு பரந்தனவே. 171
அங் கை போல் வயிறு அணிந்த வலம் சுழி அமை கொப்பூழ் 
கங்கையின் சுழி அலைக்கும் கண் கொளா நுடங்கு இடையை 
உண்டு எனத் தமர் மதிப்பர் நோக்கினார் பிறர் எல்லாம் 
உண்டு இல்லை என ஐயம் அல்லது ஒன்று உணர்வு அரிதே. 172
மன்நாக இணைப் படமும் தேர்த் தட்டு மதி மயக்கிப் 
பொன் ஆல வட்டமும் போல் கலை இமைக்கும் அகல் அல்குல் 
கொன் இளம் பருதியும் குறு முயலின் குருதியும் போன்று 
இன் அரத்தப் பட்டசைத்து இந்திரற்கும் புகழ்வு அரிதே. 173
வேழ வெண் திரள் தடக்கை வெருட்டி மற்று இளங் கன்னி 
வாழைத் தண்டு எனத் திரண்டு வால் அரக்கு உண் செம்பஞ்சி 
தோழமை கொண்டு என மென்மை உடையவாய் ஒளி திகழ்ந்து 
மாழை கொள் மணி மகரம் கௌவி வீற்று இருந்தனவே. 174
பக்கத்தால் கவிழிய வாய் மேல் பிறங்காப் பாண்டிலா 
ஒக்க நன்கு உணராமை பொருந்திய சந்தினவாய் 
நெக்குப் பின் கூடாது நிகர் அமைந்த முழந் தாளும் 
மக்களுக்கு இல்லாத மாட்சியின் மலிந்தனவே. 175
ஆடு தசை பிறங்காது வற்றாது மயிர் அகன்று 
நீடாது குறுகாது நிகர் அமைந்த அளவினவாய்ச் 
சேடு ஆவ நாழிகையின் புடை திரண்டு தேன் நெய் பெய் 
வாடாத காம்பே போல் கணைக் காலின் வனப்பினவே. 176
பசும் பொன் செய் கிண்கிணியும் பாடகமும் பாடு அலைப்ப 
நயந்து எரி பொன் சிலம்பு முத்தரி பெய்து அகம் நக 
இயைந்து எழிலார் மணி ஆமை இளம் பார்ப்பின் கூன் புறம் போல் 
அசைந்து உணர்வு மடிந்து ஒழியும் அடி இணை புகழ்வார்க்கே. 177
அரக்கு இயல் செங் கழுநீர் அக இதழ் போல் உகிர் சூடிப் 
பரப்பு இன்றி நுதி உயர்ந்து பழிப்பு அறத் திரண்டு நீண்டு 
ஒருக்கு உற நெருங்கிப் பொன் ஒளி ஆழி அகம் கௌவித் 
திருக் கவின் கொள் மெல் விரல்கள் தேன் ஆர்க்கும் தகையவே. 178
என்பொடு நரம்பு இன்றி இலவம் பூ அடர் அனுக்கி 
இன்புற வரம்பு உயர்ந்து இரு நிலம் உறப் புல்லி 
ஒன்பதின் சாண் நடப்பினும் ஒரு காதம் என்று அஞ்சும் 
மென் பஞ்சிச் சீறடியும் மேதக்க விழைவினவே. 179
சச்சந்தன் விசயையை மணத்தல்
இவ் உருவு நெஞ்சு என்னும் கிழியின் மேல் இருந்து இலக்கித்து 
அவ் உருவு நினைப்பு என்னும் துகிலிகையால் வருத்தித்துக் 
கவ்விய தன் நோக்கினால் கண் விடுத்துக் காதல் நீர் 
செவ்விதில் தெளித்து ஆனாக் காமப் பூச் சிதறினான். 180
மெய் பெறா எழுத்து உயிர்க்கும் மழலை வாய் இன் முறுவல் 
தையலாள் நெடுந் தடங்கண் வலைப்பட்டுச் சச்சந்தன் 
ஐயுறான் அணங்கு எனவே அகத்து அடக்கிச் செல்கின்றான் 
மொய் அறாக் களியானை முழங்கித் தேன் இமிர் தாரான். 181
வண்டு இனம் முகபடாம் அணிந்து வார் மதம் 
உண்டு உகுத்திடு களிற்று உழவன் தன் மகள் 
பெண்டிர் தம் பெரு நலம் கடந்து பெற்ற பேர் 
விண்டலர் கோதைக்கு விசயை என்பவே. 182
அரு மணி மரகதத்து அங் கண் நாறிய 
எரி நிறப் பொன் இதழ் ஏந்து தாமரைத் 
திருமகள் இவள் எனத் திலக வெண் குடைப் 
பெருமகன் கோயிலுள் பேதை வைகுமே. 183
கலம் புரி அகல் அல்குல் தாயர் தவ்வையர் 
சிலம்புரி திருந்து அடி பரவச் செல்பவள் 
வலம்புரி சலஞ்சலம் வளை இயது ஒத்தனள் 
குலம் புரிந்து அனையது ஓர் கொடியின் நீர்மையள். 184
இன் அகில் கொழும் புகை உயிர்க்கும் ஈர்ங் குழல் 
மென் மலர்க் கோதை தன் முலைகள் வீங்கலின் 
மின் உருக்குறும் இடை மெலிய மெல்லவே 
கன்னி தன் திரு நலம் கனிந்தது என்பவே. 185
முந்து நாம் கூறிய மூரித் தானை அக் 
கந்து கொல் கடாக் களி யானை மன்னவன் 
பைந்தொடிப் பாசிழைப் பரவை ஏந்து அல்குல் 
தந்தை மாட்டு இசைத்தனன் தனது மாற்றமே. 186
மருமகன் வலந்தது மங்கை ஆக்கமும் 
அருமதிச் சூழ்ச்சியின் அமைச்சர் எண்ணிய 
கருமமும் கண்டவர் கலத்தல் பான்மையில் 
பெருமகன் சேர்த்தினார் பிணை அனாளையே. 187
சச்சந்தனும் விசயையும் இன்பந்துய்த்தல்
பொன் அம் கொடி அமிர்து அனாளும் பொன் நெடுங் குன்று அனானும் 
அனங்கனுக்கு இலக்கம் ஆகி அம்பு கொண்டு அழுத்த விள்ளார் 
இனம் தமக்கு எங்கும் இல்லார் இயைந்தனர் என்ப முக்கண் 
சினம் திகழ் விடையினானும் செல்வியும் சேர்ந்தது ஒத்தே. 188
காதலால் காம பூமிக் கதிர் ஒளி அவரும் ஒத்தார் 
மாதரும் களிறு அனானும் மாசுண மகிழ்ச்சி மன்றல் 
ஆதரம் பெருகுகின்ற அன்பினால் அன்னம் ஒத்தும் 
தீது இலார் திளைப்பின் ஆமான் செல்வமே பெரிதும் ஒத்தார். 189
தன் அமர் காதலானும் தையலும் மணந்த போழ்தில் 
பொன் அனாள் அமிர்தம் ஆகப் புகழ் வெய்யோன் பருகியிட்டான் 
மின் அவிர் பூணினானை வேல் கணார்க்கு இயற்றப் பட்ட 
மன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகியிட்டாள். 190
பவழவாய் பரவை அல்குல் என்று இவை பருகும் வேலான் 
கவழம் ஆர் களிறு போன்றான் காதலி கரும்பை ஒத்தாள் 
தவழ் மதுக் கோதை மாதர் தாமரைப் பூ அது ஆக 
உமிழ் நகை வேலினானும் ஒண் சிறை மணி வண்டு ஒத்தான். 191
பளிக்கு அறைப் பவழப் பாவை பரிசு எனத் திகழும் சாயல் 
களிக் கயல் பொருவ போன்று கடை சிவந்து அகன்ற கண்ணாள் 
ஒளிக் கவின் கொண்ட காமத்து ஊழுறு கனியை ஒத்தாள் 
அளித்து அயில்கின்ற வேந்தன் அம் சிறைப் பறவை ஒத்தான். 192
துறு மலர்ப் பிணையலும் சூட்டும் சுண்ணமும் 
நறுமலர்க் கண்ணியும் நாறு சாந்தமும் 
அறு நிலத்து அமிர்தமும் அகிலும் நாவியும் 
பெறு நிலம் பிணித்திடப் பெரியர் வைகினார். 193
துடித்தலைக் கருங் குழல் சுரும்பு உண் கோதை தன் 
அடித்தலைச் சிலம்பினோடு அரவ மேகலை 
வடித்தலைக் கண் மலர் வளர்த்த நோக்கமோடு 
அடுத்து உலப்பு அரிது அவர் ஊறில் இன்பமே. 194
இழை கிளர் இள முலை எழுது நுண் இடைத் 
தழை வளர் மது மலர் தயங்கு பூஞ்சிகைக் 
குழை முகக் கொடியொடு குருதி வேலினான் 
மழை முகில் மாரியின் வைகும் என்பவே. 195
படுதிரைப் பவழவாய் அமுதம் மாந்தியும் 
கொடிவளர் குவி முலைத் தடத்துள் வைகியும் 
இடியினும் கொடியினும் மயங்கி யாவதும் 
கடி மணக் கிழமை ஓர் கடலின் மிக்கதே. 196
கப்புரப் பசுந்திரை கதிர் செய் மா மணிச் 
செப்பொடு சிலதியர் ஏந்தத் தீவிய 
துப்பு உமிழ்ந்து அலமரும் காமவல்லியும் 
ஒப்பரும் பாவை போன்று உறையும் என்பவே. 197
மண் அகம் காவலின் வழுக்கி மன்னவன் 
பெண் அரும் கலத்தொடு பிணைந்த பேர் அருள் 
விண்ணகம் இருள் கொள விளங்கு வெண் மதி
ஔ஢ நிற உரோணியோடு ஒளித்தது ஒத்ததே. 198
குங்குமத் தோளினானும் கொழும் கயல் கண்ணி னாளும் 
தங்கிய காதல் வெள்ளம் தணப்பு அறப் பருகும் நாளுள் 
திங்கள் வெண் குடையினாற்குத் திரு இழுக்குற்ற வண்ணம் 
பைங் கதிர் மதியில் தெள்ளிப் பகர்ந்து எடுத்து உரைத்தும் அன்றே. 199
சச்சந்தன், கட்டியங்காரனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு விசயையோடு இன்புறல்
களிறு அனான் அமைச்சர் தம்முள் கட்டியங் காரன் என்பான் 
ஒளிறு வாள் தடக்கையானுக்கு உயிர் என ஒழுகும் நாளுள் 
பிளிறு வார் முரசின் சாற்றிப் பெரும் சிறப்பு இயற்றி வேந்தன் 
வெளிறு இலாக் கேள்வியானை வேறு கொண்டு இருந்து சொன்னான். 200
அசைவு இலாப் புரவி வெள்ளத்து அரிஞ்சயன் குலத்துள் தோன்றி 
வசை இலாள் வரத்தின் வந்தாள் வான் சுவை அமிர்தம் அன்னாள் 
விசையையைப் பிரிதல் ஆற்றேன் வேந்தன் நீ ஆகி வையம் 
இசை படக் காத்தல் வேண்டும் இலங்கு பூண் மார்ப என்றான். 201
அண்ணல் தான் உரைப்பக் கேட்டே அடுகளிற்று எருத்தின் இட்ட 
வண்ணப் பூந் தவிசு தன்னை ஞமலி மேல் இட்டது ஒக்கும் 
கண் அகல் ஞாலம் காத்தல் எனக்கு எனக் கமழும் கண்ணி 
மண் அகம் வளரும் தோளான் மறுத்து நீ மொழியல் என்றான். 202
எழுதரு பருதி மார்பன் இற்றென இசைத்த லோடும் 
தொழுது அடி பணிந்து சொல்லும் துன்னலர்த் தொலைத்த வேலோய் 
கழி பெரும் காதலாள்கண் கழி நலம் பெறுக வையம் 
பழி படா வகையில் காக்கும் படு நுகம் பூண்பல் என்றான். 203
வலம் புரி பொறித்த வண்கை மதவலி விடுப்ப ஏகிக் 
கலந்தனன் சேனை காவல் கட்டியங் காரன் என்ன 
உலந்தரு தோளினாய் நீ ஒருவன் மேல் கொற்றம் வைப்பின் 
நிலம் திரு நீங்கும் என்று ஓர் நிமித்திகன் நெறியில் சொன்னான். 204
எனக்கு உயிர் என்னப் பட்டான் என் அலால் பிறரை இல்லான் 
முனைத் திறம் உருக்கி முன்னே மொய் அமர் பலவும் வென்றான் 
தனக்கு யான் செய்வ செய்தேன் தான் செய்வ செய்க ஒன்றும் 
மனக்கு இனா மொழிய வேண்டா வாழியர் ஒழிக என்றான். 205
காவல குறிப்பு அன்றேனும் கருமம் ஈது அருளிக் கேண்மோ 
நாவலர் சொல் கொண்டார்க்கு நன்கு அலால் தீங்கு வாரா 
பூ அலர் கொடியனார் கண் போகமே கழுமி மேலும் 
பாவமும் பழியும் உற்றார் பற்பலர் கேள் இது என்றான். 206
பெரும் பெயர்ப் பிரமன் என்னும் பீடினால் பெரிய நீரான் 
அரும்பிய முலையினாளுக்கு அணி முகம் நான்கு தோன்ற 
விரும்பி ஆங்கு அவளை எய்தான் விண்ணகம் இழந்தது அன்றித் 
திருந்தினாற்கு இன்று காறும் சிறு சொல்லாய் நின்றது அன்றே. 207
கைம் மலர்க் காந்தள் வேலிக் கண மலை அரையன் மங்கை 
மைம் மலர்க் கோதை பாகம் கொண்டதே மறுவது ஆகக் 
கொய்ம் மலர்க் கொன்றை மாலைக் குளிர்மதிக் கண்ணியாற்குப் 
பெய்ம் மலர் அலங்கல் மார்ப பெரும் பழி ஆயிற்று அன்றே. 208
நீல் நிற வண்ணன் அன்று நெடுந் துகில் கவர்ந்து தம் முன் 
பால் நிற வண்ணன் நோக்கில் பழி உடைத்து என்று கண்டாய் 
வேல் நிறத் தானை வேந்தே விரிபுனல் தொழுனை ஆற்றுள் 
கோல் நிற வளையினார்க்குக் குருந்து அவன் ஒசித்தது என்றான். 209
காமமே கன்றி நின்ற கழுதை கண்டு அருளினாலே 
வாமனார் சென்று கூடி வருந்தினீர் என்று வையத்து 
ஈமம் சேர் மாலை போல இழித்திடப் பட்டது அன்றே 
நாம வேல் தடக்கை வேந்தே நாம் இது தெரியின் என்றான். 210
படு பழி மறைக்கல் ஆமோ பஞ்சவர் அன்று பெற்ற 
வடுவுரை யாவர் பேர்ப்பார் வாய்ப் பறை அறைந்து தூற்றி 
இடுவதே அன்றிப் பின்னும் இழுக்கு உடைத்து அம்ம காமம் 
நடுவு நின்று உலகம் ஓம்பல் நல்லதே போலும் என்றான். 211
ஆர் அறிவு இகழ்தல் செல்லா ஆயிரம் செங் கணனானும் 
கூர் அறிவு உடைய நீரார் சொல் பொருள் கொண்டு செல்லும் 
பேர் அறிவு உடையை நீயும் பிணை அனாட்கு அவலம் செய்யும் 
ஓர் அறிவு உடையை என்றான் உருத்திர தத்தன் என்பான். 212
அளந்து தாம் கொண்டு காத்த அருந் தவம் உடைய நீரார்க்கு 
அளந்தன போகம் எல்லாம் அவர் அவர்க்கு அற்றை நாளே 
அளந்தன வாழும் நாளும் அது எனக்கு உரையல் என்றான் 
விளங்கு ஒளி மணிகள் வேய்ந்து விடு சுடர் இமைக்கும் பூணான். 213
மூரித் தேம் தாரினாய் நீ முனியினும் உறுதி நோக்கிப் 
பாரித்தேன் தரும நுண்நூல் வழக்கு அது ஆதல் கண்டே 
வேரித் தேம் கோதை மாதர் விருந்து உனக்காக இன்பம் 
பூரித்து ஏந்து இளைய கொங்கை புணர்க யான் போவல் என்றான். 214
இனமாம் என்று உரைப்பினும் ஏதம் எணான் 
முனம் ஆகிய பான்மை முளைத்து எழலால் 
புனமா மலர் வேய் நறும் பூங் குழலாள் 
மனமாம் நெறி ஓடிய மன்னவனே. 215
கலையார் துகில் ஏந்து அல்குலும் கதிர் சூழ் 
முலையார் தடமும் முனியாது படிந்து 
உலையாத் திருவின் அமிர்து உண்டு ஒளிசேர் 
மலையார் மணி மார்பன் மகிழ்ந்தனனே. 216
விரி மா மணி மாலை விளங்கு முடித் 
திரு மா மணி சிந்து திளைப்பினர் ஆய் 
எரி மா மணி மார்பனும் ஏந்திழையும் 
அரு மா மணி நாகரின் ஆயினரே. 217
கருவுறுதலும், கனவு காணுதலும்
நறவு ஆர்ந்தது ஓர் நாகு இளம் தாமரை வாய் 
உற வீழ்ந்தது ஓர் ஒண் மணி போன்று உரவோன் 
அறவு ஆக்கிய இன்பம் அமர்ந்த இருள் 
கறை வேல் கணினாள் கனவு உற்றனளே. 218
பஞ்சி அடிப் பவளத் துவர் வாய் அவள் 
துஞ்சும் இடைக் கனவு மூன்று அவை தோன்றலின் 
அஞ்சி நடுங்கினள் ஆய் இழை ஆயிடை 
வெம் சுடர் தோன்றி விடிந்ததை அன்றே. 219
விசயை, அருகப் பெருமானை வணங்குதல்
பண் கெழு மெல் விரலால் பணைத் தோளி தன் 
கண் கழூஉச் செய்து கலை நலந் தாங்கி 
விண் பொழி பூ மழை வெல் கதிர் நேமிய 
வண் புகழ் மால் அடி வந்தனை செய்தாள். 220

  சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக சிந்தாமணி காலத்தால் முதன்மையானதாகும். வடமொழியில் உள்ள சீவகன் கதைகள் பலவற்றைப் பின்பற்றித் தமிழில் பாடப்பட்டது இந்நூல். இதற்கு முதல் நூல் "க்ஷத்திர சூடாமணி" என்பர். இக்காப்பியத் தலைவன் பெயர் சீவகன் ஆகும். சிந்தாமணி என்பது தேவலோகத்தில் உள்ள ஒரு மணியாகும். அது கற்பகத்தரு மற்றும் காமதேனு போன்று கேட்டதைத் தரும் இயல்புடையதாகும். அதனால்தான் 'சீவகனுடைய கதையைக் கூறும் சிந்தாமணி போன்ற காப்பியம்' என்ற பொருளில் இதற்குச் சீவக சிந்தாமணி எனப் பெயரிட்டார் இக்காப்பியத்தின் ஆசிரியர் திருத்தக்கதேவர். சீவக சிந்தாமணி மொத்தம் 3145 பாடல்களைக் கொண்டது. பதின்மூன்று இலம்பகங்களையுடையது. இலம்பகம் என்பதற்கு மாலை என்பது பொருளாகும். அத்தியாயம் என்றும் சொல்லலாம். அதாவது உட்பிரிவுக்குத் திருத்தக்கத்தேவர் வைத்த பெயர் இலம்பகம் ஆகும். முத்தி இலம்பகம் தவிர ஏனையவை மகளிர் பெயரையே பெற்றுள்ளன. பெரும்பாலான இலம்பகங்களில் மணநிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. சீவகன் எட்டு பெண்களை மணக்கின்ற நிகழ்ச்சி எட்டு இலம்பகங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே தான் இக்காப்பியத்திற்கு 'மணநூல்' என்ற பெயரும் உண்டு. பதிகத்தில் காப்பியத்தின் கதைச் சுருக்கம் கூறப்பட்டுள்ளது. 
    இக்காப்பியத்தை இயற்றிய திருத்தக்கதேவர் சமண முனிவராவார். இவர் திருத்தகு முனிவர் என்றும், திருத்தகு மகா முனிவர் என்று அழைக்கப் பெறுவார். இவர் சைன ஆசாரியர் சங்கங்களில் ஒன்றாகிய திரமிள சங்கத்து அருங்கலான்வயத்தைச் சேர்ந்தவர் என்பர். இவர் வாழ்ந்த காலமும் இடமும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்கும் 7ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திருத்தக்கதேவர் சோழர் குடியில் பிறந்தவர். இளமையிலேயே கல்வி கேள்விகளில் சிறந்த விளங்கியவர். வடமொழிப் பயிற்சி மிக்கவர். காமம், பொய், கொலை, கள், சூதாடல் என்ற ஐவகைத் தீமையும் அகற்றியவர். சமணத் துறவியாக வாழ்ந்தவர். விருத்தமெனும் பாடல்களைக் கொண்டு பெருங்காப்பியம் பாடியவர்களில் இவர் முதன்மையானவர். 
    ஒரு சமயம் திருத்தக்கதேவர் மதுரை சென்றிருந்தபோது, அங்கிருந்த புலவர்கள், சமண சமயத்தவர் துறவறம் பற்றிப் பாட இயலுமே ஒழிய அகப்பொருட் சுவை மிக்க இன்பத்துறைப் பாடல்களைப் பாட இயலாது என்று இகழ்ந்துரைத்தனர். இதனால் மனவருத்தமுற்றை இவர் தம் ஆசிரியரிடம் இதுபற்றி கூறினார். இவரின் திறமையை உலகுக்கு உணர்த்த விரும்பிய ஆசிரியர், அப்பொழுது குறுக்கே ஓடிய நரி ஒன்றைப் பற்றி ஒரு நூல் இயற்றுமாறு கூறினார். அப்போதே ஆசிரியர் போற்றும் வண்ணம், செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை பற்றிக் கூறும் 'நரி விருத்தம்' என்னும் அற்புதமான ஒரு சிறு நூலை இயற்றினார். திருத்தக்கதேவரின் கற்பனைத் திறனைக் கண்டு வியந்த ஆசிரியர் சீவகன் வரலாற்றை அகப்பொருள் சுவை மிளிர பெருங்காப்பியமாக பாடுமாறு கட்டளையிட்டார். அதோடு 'செம்பொன்வரைமேல்' என்ற ஒரு பாடலை எழுதி அவரிடம் கொடுத்து, அதனையே கடவுள் வாழ்த்தாகக் கொண்டு நூலைத் தொடங்குமாறு கூறினார். ஆசிரியர் பாடிய அப்பாடலோடு திருத்தக்கதேவரும், 'மூவா முதலா' எனத் தொடங்கும் சித்தரைத் துதிக்கும் பாடல் ஒன்றைப் பாடினார். ஆசிரியர் தாம் பாடிய பாடலைவிட தம் மாணவர் பாடிய பாடல் சிறப்பாக இருப்பது கண்டு, திருத்தக்கதேவரின் பாடலை முதலாகவும், தம் பாடலை இரண்டாவதாகவும் வைக்கும்படி கூறினார். அதனால் தான் இக்காப்பியத்தில் சித்தர் வணக்கம் முதலாவதாகவும், அருகர் வணக்கம் இரண்டாவதாகவும் உள்ளது. திருத்தக்க தேவர் இக்காப்பியத்தை எட்டே நாட்களில் பாடி அருளியதாகக் கூறுவர். 
    பாண்டியன் அவையிலே திருத்தக்கதேவர் தமது நூலை அரங்கேற்றினார். காப்பியத்தின் நடை, அழகு, அமைப்பு, ஒன்பது சுவைகள் ஆகியவற்றைக் கண்டு புலவர்கள் பலர் வியந்து பாராட்டினர். ஆனால் சில அழுக்காறு கொண்ட புலவர்கள், இன்ப சுவை கொண்ட பாடல்களைப் பாட வேண்டுமாயின் இவருக்கு நல்ல முன் அனுபவம் இருந்திருக்க வேண்டும் என்று கூறினார்கள். இது கேட்ட திருத்தக்கதேவர் கையிலே நெருப்பை ஏந்தி தமது அகத் தூய்மையை அனைவரும் அறியச் செய்தார். 
    பின்வந்த கம்பர் போன்ற பெரும் புலவர்களுக்குச் சீவக சிந்தாமணி கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது என்றால் மிகையாகாது. 


கடவுள் வாழ்த்து
சித்தர் வணக்கம்
மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத் தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி ஓவாது நின்ற குணத்து ஒள் நிதிச் செல்வன் என்ப தேவாதி தேவன் அவன் சேவடி சேர்தும் அன்றே. 1
அருகர் வணக்கம்
செம்பொன் வரை மேல் பசும் பொன் எழுத்து இட்டதே போல் அம் பொன் பிதிர்வின் மறு ஆயிரத்து எட்டு அணிந்து வெம்பும் சுடரின் சுடரும் திருமூர்த்தி விண்ணோர் அம் பொன் முடி மேல் அடித்தாமரை சென்னி வைப்பாம். 2
மாண்பமைந்த குழுவினருக்கு வணக்கம்
பல் மாண் குணங்கட்கு இடனாய்ப் பகை நண்பொடு இல்லான் தொல் மாண்பு அமைந்த புனை நல்லறம் துன்னி நின்ற சொல் மாண்பு அமைந்த குழுவின் சரண் சென்று தொக்க நல் மாண்பு பெற்றேன் இது நாட்டுதல் மாண்பு பெற்றேன். 3
அவை அடக்கம்
கற்பால் உமிழ்ந்த மணியும் கழுவாது விட்டால் நற்பால் அழியும் நகை வெண்மதி போல் நிறைந்த சொற்பால் உமிழ்ந்த மறுவும் மதியால் கழூஉவிப் பொற்பா இழைத்துக் கொளல்பாலர் புலமை மிக்கார். 4
முந்நீர்ப் பிறந்த பவழத்தொடு சங்கும் முத்தும் அந் நீர் உவர்க்கும் எனின் யார் அவை நீக்குகிற்பார் இந் நீர என் சொல் பழுது ஆயினும் கொள்ப அன்றே பொய்ந் நீர அல்லாப் பொருளால் விண் புகுதும் என்பார். 5
பதிகம்
மீன் ஏறு உயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பில் ஆனேறு அனையான் உளன் சீவகசாமி என்பான் வான் ஏற நீண்ட புகழான் சரிதம் தன்னைத் தேன் ஊற நின்று தெருண்டார் அவை செப்பல் உற்றேன். 6
கோடாத செங்கோல் குளிர் வெண்குடைக் கோதை வெள்வேல் ஓடாத தானை உருமுக் குரல் ஓடை யானை வாடாத வென்றி மிகு சச்சந்தன் என்ப மன்னன் வீடாத கற்பின் அவன் தேவி விசயை என்பாள். 7
சேந்து ஒத்து அலர்ந்த செழுந்தாமரை அன்ன வாள் கண் பூந்தொத்து அலர்ந்த பசும் பொன் கொடி அன்ன பொற்பின் ஏந்து ஒத்து அலர்ந்த முலையின் அமிர்து அன்ன சாயல் வேந்தற்கு அமுதாய் விளையாடுதற்கு ஏது வாமே. 8
கல்லார் மணிப் பூண் அவன் காமம் கனைந்து கன்றிச் சொல்லாறு கேளான் நனி சூழ்ச்சியில் தோற்ற வாறும் புல்லார் புகலப் பொறி மஞ்ஞையில் தேவி போகிச் செல் ஆறு இழுக்கிச் சுடுகாடு அவள் சேர்ந்த வாறும், 9
நாள் உற்று நம்பி பிறந்தான் திசை பத்தும் நந்தத் தோள் உற்று ஓர் தெய்வம் துணையாய்த் துயர் தீர்த்த வாறும் கோள் உற்ற கோன் போல் அவன் கொண்டு வளர்த்த வாறும் வாள் உற்ற கண்ணாள் மகன் வாழ்க என நோற்ற வாறும், 10
நெஞ்சம் புணையாக் கலை மாக் கடல் நீந்தி ஆங்கே வஞ்சம் மறவர் நிரை வள்ளல் விடுத்த வாறும் விஞ்சைக்கு இறைவன் மகள் வீணையில் தோற்ற வாறும் நஞ்சு உற்ற காம நனி நாகரில் துய்த்த வாறும், 11
முந்நீர்ப் படு சங்கு அலற முரசு ஆர்ப்ப மூதூர்ச் செந்நீர்க் கடியின் விழவாட்டினுள் தேங்கொள் சுண்ணம் மைந்நீர் நெடுங்கண் இரு மங்கையர் தம்முள் மாறாய் இந்நீர்ப் படியேம் இவை தோற்றனம் என்ற வாறும், 12
சுண்ணம் உடைந்து சுரமஞ்சரி சோர்ந்து தோழி வண்ணம் நெடுங் கண் குண மாலையை வைது மாறிப் புண் மேல் புடையில் புகைந்து ஆண் உரு யாதும் நோக்காள்கண் நோக்கு உடைந்து கடிமாடம் அடைந்த வாறும், 13
பொன் துஞ்சு மார்பன் புனல் ஆட்டிடைப் புன்கண் எய்தி நின்று எஞ்சுகின்ற ஞமலிக்கு அமிர்து ஈந்த வாறும் அன்றைப் பகலே குண மாலையை அச்சுறுத்த வென்றிக் களிற்றை விரிதார் அவன் வென்ற வாறும், 14
தேன் ஊறு தீம் சொல் குண மாலையைச் சேர்ந்த வாறும் கோன் ஊறு செய்வான் கருதிச் சிறை கொண்ட வாறும் வான் ஆறு இழிந்து மழை மின் என வந்த ஓர் தேவன் ஊன் நாறு ஔத வேல் உரவோன் கொண்டு எழுந்த வாறும், 15
தேங்காத மள்ளர் திரள் தோள் இணை சிக்க யாத்த பூங் கச்சு நீக்கிப் பொறி மாண்கலம் நல்ல சேர்த்தி நீங்காத காதல் உடையாய் நினைக்க என்று பின்னும் பாங்கு ஆய விஞ்சை பணித்து ஆங்கு விடுத்த வாறும், 16
பைந் நாகப் பள்ளி மணி வண்ணனின் பாயல் கொண்டு கைந் நாகம் துஞ்சும் கமழ் காந்தள் அம் சாரல் போகி மைந் நாக வேலி மணி பல்லவ தேயம் நண்ணிக் கொய்ந் நாகச் சோலைக் கொடி அந் நகர் புக்க வாறும், 17
அத்தம் அனைய களிற்று அந் நகர் மன்னன் மங்கை முத்தம் உரிஞ்சும் முகிழ் மென் முலை மின் அனாளைப் பைத்து அங்கு ஓர் நாகம் பனி மா மதி என்று தீண்டச் சித்தம் குழையற்க எனத் தீர்த்து அவள் சேர்ந்த வாறும், 18
பொன் பூண் சுமந்த புணர் மெல் முலைக் கோடு போழ நல் பூங் கழலான் இரு திங்கள் நயந்த வாறும் கல் பாடு அழித்த கன மா மணித் தூண் செய் தோளான் வெற்பு ஊடு அறுத்து விரைவின் நெறிக் கொண்ட வாறும். 19
தள்ளாத சும்மை மிகு தக்க நல் நாடு நண்ணி விள்ளா விழுச்சீர் வணிகன் மகள் வேல் கண் நோக்கம் உள் ஆவி வாட்ட உயிர் ஒன்று ஒத்து உறைந்த வாறும் கள் ஆவி நாறும் கமழ் கோதையின் போய வாறும், 20
இன்னீர் அமிர்து அன்னவள் கண் இணை மாரி கற்பப் பொன் ஊர் கழலான் பொழி மா மழைக் காடு போகி மின்னீர் வெள் வேலவன் மத்திம தேய மன்னன் கொன்னூர் கொடு வெம் சிலை கண்டு எதிர் கொண்ட வாறும், 21
திண் தேர் அரசர் திறல் சிங்கங்கள் வில்லும் வாளும் கண்டு ஆங்கு உவந்து கடி பெய்து இவண் காத்தும் என்று கொண்டார் குடங்கை அளவே உள கண்ணினாளைப் புண் தாங்கு எரிவேல் இளையோற்குப் புணர்த்த வாறும், 22
மதியம் கெடுத்த வய மீன் எனத் தம்பி மாழாந்து உதிதற்கு உரியாள் பணியால் உடன் ஆய வாறும் நிதியின் நெறியின் அவன் தோழர் நிரந்த வாறும் பதியின் அகன்று பயந்தாளைப் பணிந்த வாறும், 23
கண் வாள் அறுக்கும் கமழ்தார் அவன் தாயொடு எண்ணி விண் வாள் அறுக்கும் நகர் வீதி புகுந்த வாறும் மண் மேல் விளக்காய் வரத்தில் பிறந்தாள் ஒர் கன்னிப் பெண் ஆர் அமிர்தின் பெரு வாரியுள் பட்ட வாறும், 24
துஞ்சா மணிப் பூண் சுரமஞ்சரி என்னும் நாமத்து அம் சாயல் பூத்த அகிலார் துகிலாய் பொன் அல்குல் எஞ்சாத இன்பக் கொடி தாழ்த்ததும் பன்றி எய்து நஞ்சு ஊறும் வேலான் பகை நாம் அறக் கொன்ற வாறும், 25
புண் தோய்த்து எடுத்த பொரு வேல் எனச் சேந்து நீண்ட கண் போன்ற மாமன் மகள் கண் மணிப் பாவை அன்ன பெண் பால் அமிர்தின் நலம் பெற்றதும், பொற்பச் செங்கோல் தண் பால் மதி தோய் குடை தண் நிழல் பாய வாறும், 26
திறை மன்னர் உய்ப்பத் திரு நிற்பச் செங்கோல் நடப்பக் குறைவு இன்றிக் கொற்றம் உயரத் தெவ்வர் தேர் பணிய உறைகின்ற காலத்து அறம் கேட்டு உரும் உற்ற பாம்பின் அறிவன் அடிக் கீழ் அரசு அஞ்சித் துறந்த வாறும், 27
கோணைக் களிற்றுக் கொடித் தேர் இவுளிக் கடல் சூழ் வாள் மொய்த்த தானை அவன் தம்பியும் தோழன் மாரும் பூண் மொய்த்த பொம்மல் முலையாரும் புலம் துறப்ப வீணைக் கிழவன் விருந்து ஆர் கதிச் சென்ற வாறும், 28
தேன் வாய் உமிழ்ந்த அமிர்து உண்டவன் போன்று செல்வன் வான் வாய் வணக்கும் நலத்தார் முலை போகம் வேண்டான் ஏனோரும் ஏத்த அவன் எய்திய இன்ப வெள்ளம் ஈனோர்க்கு உரைப்பாம் பதிகத்துள் இயன்ற வாறே, 29
நாமகள் இலம்பகம் - நாட்டு வளம்
நா வீற்று இருந்த புல மா மகளோடு நன் பொன் பூ வீற்று இருந்த திருமாமகள் புல்ல நாளும் பா வீற்று இருந்த கலை பார் அறச் சென்ற கேள்விக் கோ வீற்று இருந்த குடி நாட்டு அணி கூறல் உற்றேன். 30
காய் மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் நெற்றிப் பூ மாண்ட தீம் தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து தேமாங் கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டே 31
இலங்கல் ஆழியினான் களிற்று ஈட்டம் போல் கலங்கு தெண் திரை மேய்ந்து கண மழை பொலம் கொள் கொன்றையினான் சடை போல் மின்னி விலங்கல் சேர்ந்து விண் ஏறி விட்டு ஆர்த்தவே 32
தேன் நிரைத்து உயர் மொய்வரைச் சென்னியின் மேல் நிரைத்து விசும்பு உற வெள்ளி வெண் கோல் நிரைத்தன போல் கொழுந் தாரைகள் வான் நிரைத்து மணந்து சொரிந்தவே 33
குழவி வெண் மதிக் கோடு உழக் கீண்டு தேன் முழவின் நின்று அதிர் மொய் வரைச் சென்னியின் இழியும் வெள் அருவித் திரள் யாவையும் குழுவின் மாடத் துகில் கொடி போன்றவே. 34
இலங்கு நீள் முடி இந்திரன் மார்பின் மேல் விலங்கி வீழ்ந்த முத்தாரமும் போன்றவை நலம் கொள் பொன்னொடு நல் மணி சிந்தலால்கலன் பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே. 35
வள்ளல் கைத்தல மாந்தரின் மால்வரைக் கொள்ளை கொண்ட கொழு நிதிக் குப்பையை உள்ளம் இல்லவர்க்கு ஊர் தொறும் உய்த்து உராய் வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே. 36
மையல் யானையின் மும் மதம் ஆர்ந்து தேன் ஐய பொன் அசும்பு ஆடி அளைந்து உராய்ச் செய்ய சந்தனம் தீம் பழம் ஆதியா நைய வாரி நடந்தது நன்று அரோ. 37
வீடு இல் பட்டினம் வௌவிய வேந்து எனக் காடு கையரிக் கொண்டு கவர்ந்து போய் மோடு கொள் புனல் மூரி நெடுங் கடல் நாடு முற்றியதோ என நண்ணிற்றே. 38
திரை பொரு கனை கடல் செல்வன் சென்னி மேல் நுரை எனும் மாலையை நுகரச் சூட்டுவான் சரை எனும் பெயர் உடைத் தடம் கொள் வெம் முலைக் குரை புனல் கன்னி கொண்டு இழிந்தது என்பவே. 39
பழம் கொள் தெங்கு இலை எனப் பரந்து பாய் புனல் வழங்க முன் இயற்றிய சுதை செய் வாய்த் தலை தழம் குரல் பம்பையில் சாற்றி நாடு எலாம் முழங்கு தீம் புனல் அகம் முரிய மொய்த்தவே. 40
வெலற்கு அரும் குஞ்சரம் வேட்டம் பட்டு எனத் தலைத் தலை அவர் கதம் தவிர்ப்பத் தாழ்ந்து போய்க் குலத் தலை மகளிர் தம் கற்பின் கோட்டகம் நிலைப் படா நிறைந்தன பிறவும் என்பவே. 41
கவ்வையும் கடும் புனல் ஒலியும் காப்பவர் செவ்வன் நூறு ஆயிரம் சிலைக்கும் பம்பையும் எவ் எலாத் திசைகளும் ஈண்டிக் காரொடு பவ்வம் நின்று இயம்புவது ஒத்த என்பவே. 42
மாமனும் மருகனும் போலும் அன்பின காமனும் சாமனும் கலந்த காட்சிய;பூமனும் அரிசிப் புல் ஆர்ந்த மோட்டின தாம் இனம் அமைந்து தம் தொழிலின் மிக்கவே. 43
நெறி மருப்பு எருமையின் ஒருத்தல் நீள் இனம் செறி மருப்பு ஏற்று இனம் சிலம்பப் பண்உறீஇப் பொறி வரி வராலினம் இரியப் புக்கு உடன் வெறி கமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே. 44
சேறு அமை செறுவினுள் செந்நெல் வால் முளை 'வீறொடு விளைக' எனத் தொழுது வித்துவார்'; நாறு இது பதம் எனப் பறித்து நாள் செய்வார்; கூறிய கடைசியர் குழாம் கொண்டு ஏகுவார். 45
முலைத் தடம் சேதகம் பொறிப்ப மற்று அவர் குலைத்து உடன் பதித்தலின் குதித்த வாள் கயல் புலத்து இடைக் கவரி கன்று ஊட்டப் போந்த பால் நிலத்து இடைப் பாய்ந்து அவை பிறழும் நீரவே. 46
பால் சுவை அறிந்து அவை பழனத் தாமரை மேல் செலப் பாய்தலின் வெரீஇய வண்டு இனம் கோல் தொடி நுளைச்சியர் முத்தம் கோப்பவர் ஏற்றிய மாலைத் தேன் இரியப் பாய்ந்தவே. 47
இரிந்த தேன் குவளையின் நெற்றி தைவர முரிந்து போது அவிழ்ந்து கொங்கு உயிர்க்கும் முல்லையின் அரும்பு சேர்ந்து அணி ஞிமிறு ஆர்ப்ப வாய் பதம் விருந்து எதிர் கொண்ம் எனத் தழுவி வீழ்ந்தவே. 48
வள முடி நடுபவர் வரம்பு இல் கம்பலை இள மழை முழக்கு என மஞ்ஞை ஏங்கலின் அளமரு குயிலினம் அழுங்கிப் பூம் பொழில் உளம் மெலி மகளிரின் ஒடுங்கும் என்பவே. 49
வளைக் கையால் கடைசியர் மட்டு வாக்கலின் திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழிக் களிப்ப உண்டு இள அனம் கன்னி நாரையைத் திளைத்தலின் பெடை மயில் தெருட்டும் செம்மற்றே. 50
கண் எனக் குவளையும் கட்டல் ஓம்பினார் வண்ண வாள் முகம் என மரையின் உள் புகார் பண் எழுத்து இயல் படப் பரப்பி இட்டனர் தண் வயல் உழவர் தம் தன்மை இன்னதே. 51
நித்திலப் பந்துடன் ஈன்று பாதிரி ஒத்த பூ உடற்றிய நாவின் நாகினால் தத்து நீர் நாரை மேல் எறியத் தண் கடல் பைத்து எழு திரை எனப் பறவை ஆலுமே. 52
சொல் அரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் போல் மெல்லவே கரு இருந்து ஈன்று மேல் அலார் செல்வமே போல் தலை நிறுவித் தேர்ந்த நூல் கல்வி சேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே. 53
மீன் கணின் அளவும் வெற்று இடங்கள் இன்மையால் தேன் கணக் கரும்பு இயல் காடும் செந் நெலின் வான் புகழ் களிறு மாய் கழனி ஆக்கமும் ஊன் கணார்க்கு உரைப்ப அரிது ஒல் என் சும்மைத்தே. 54
ஆய் பிழி விருத்து வண்டு அயிற்றி உண்டு தேன் வாய் பொழி குவளைகள் சூடி மள்ளர்கள் தேய் பிறை இரும்பு தம் வலக்கை சேர்த்தினர் ஆய் செந் நெல் அகன்ற காடு அரிகுற்றார்களே. 55
வலியுடைக் கைகளால் மலர்ந்த தாமரை மெலிவு எய்தக் குவளைகள் வாடக்கம் பலம் பொலிவு எய்தப் பூம் பொய்கை சிலம்பிப் பார்ப்பு எழ மலை பட அரிந்து கூன் குயம் கை மாற்றினார். 56
வாளையின் இனம் தலை இரிய வண்டு அலர் தாள் உடைத் தாமரை கிழிய வண் சுமை கோள் உடை இளையவர் குழாம் கொண்டு ஏகலில் பாளை வாய் கமுகு இனம் பழங்கள் சிந்துமே. 57
சோர் புயல் முகில் தலை விலங்கித் தூ நிலம் மார்பு கொண்டு ஆர்ந்து அது நரல வண் சுளை ஆர்புறு பலாப் பழம் அழிந்த நீள் களம் போர்பினால் மலிந்து உடன் பொலிந்த நீரவே. 58
ஈடு சால் போர் பழித்து எருமைப் போத்தினால் மாடு உறத் தெளித்து வை களைந்து கால் உறீஇச் சேடு உறக் கூப்பிய செந்நெல் குப்பைகள் கோடு உயர் கொழும் பொனின் குன்றம் ஒத்தவே. 59
கரும்பு கண் உடைப்பவர் ஆலை தோறெலாம் விரும்பி வந்து அடைந்தவர் பருகி விஞ்சிய திருந்து சாறு அடுவுழிப் பிறந்த தீம் புகை பரந்து விண் புகுதலின் பருதி சேந்ததே. 60
கிணை நிலைப் பொருநர் தம் செல்லல் கீழ்ப் படப் பணை நிலையாய் செந்நெல் பகரும் பண்டியும் கணை நிலைக் கரும்பினில் கவரும் பண்டியும் மண நிலை மலர் பெய்து மறுகும் பண்டியும். 61
மல்லல் அம் தெங்கு இள நீர் பெய் பண்டியும் மெல் இலைப் பண்டியும் கமுகின் மேதகு பல் பழுக்காய்க் குலை பெய்த பண்டியும் ஒல்கு தீம் பண்டம் பெய்து ஒழுகும் பண்டியும். 62
கருங் கடல் வளம் தரக் கரையும் பண்டியும் நெருங்குபு முதிரையின் நிறைந்த பண்டியும் பெருங் கலிப் பண்டிகள் பிறவும் செற்றுபு திருந்தி எத் திசைகளும் செறிந்த என்பவே. 63
கிளி வளர் பூ மருது அணிந்து கேடு இலா வள வயல் வைகலும் இன்னது என்ப தேன் துளியொடு மதுத் துளி அறாத சோலை சூழ் ஒளி அமை இருக்கை ஊர் உரைக்க நின்றவே. 64
சேவல் அன்னம் தாமரையின் தோடு அவிழ்ந்த செவ்விப் பூக் காவில் கூடு எடுக்கிய கவ்விக் கொண்டு இருந்தன தாவில் பொன் விளக்கமாத் தண் குயில் முழவமாத் தூவி மஞ்ஞை நன் மணம் புகுத்தும் தும்பிக் கொம்பரோ. 65
கூடினார் கண் அம்மலர்க் குவளை அம் குழி இடை வாடு வள்ளை மேல் எலாம் வாளை ஏறப் பாய்வன பாடு சால் கயிற்றில் பாய்ந்து பல் கலன் ஒலிப்பப் போந்து ஆடு கூத்தி ஆடல் போன்ற நாரை காண்ப ஒத்தவே. 66
காவி அன்ன கண்ணினார் கயம் தலைக் குடைதலின் ஆவி அன்ன பூந்துகில் அணிந்த அல்குல் பல் கலை கோவை அற்று உதிர்ந்தன கொள்ளும் நீரர் இன்மையின் வாவி யாவும் பொன் அணிந்து வானம் பூத்தது ஒத்தவே. 67
பாசவல் இடிப்பவர் உலக்கை வாழைப் பல் பழம் ஆசினி வருக்கை மா தடிந்து தேம் கனி உதிர்த்து ஊசல் ஆடும் பைங் கமுகு தெங்கின் ஒண் பழம் பரீஇ வாசத் தாழை சண்பகத்தின் வான் மலர்கள் நக்குமே. 68
மன்றல் நாறு இலஞ்சி மேய்ந்து மா முலை சுரந்த பால் நின்ற தாரையால் நிலம் நனைப்ப ஏகி நீள் மனைக் கன்று அருத்தி மங்கையர் கலம் நிறை பொழிதர நின்ற மேதியால் பொலிந்த நீர மாட மாலையே. 69
வெள்ளிப் போழ் விலங்க வைத்து அனைய வாய் மணித் தலை கொள் பவளம் கோத்த அனைய கால குன்றிச் செங்கண ஒள் அகில் புகை திரண்டது ஒக்கும் மா மணிப் புறாக் கிள்ளையோடு பால் உணும் கேடு இல் பூவை பாடவே. 70
காடி உண்ட பூந் துகில் கழும ஊட்டும் பூம் புகை மாட மாலை மேல் நலார் மணிக் குழலின் மூழ்கலின் கோடு உயர்ந்த குன்றின் மேல் குழீஇய மஞ்ஞைதம் சிறகு ஆடும் மஞ்சினுள் விரித்து இருந்த வண்ணம் அன்னரே. 71
கண் உளார் நும் காதலர் ஒழிக காமம் ஈங்கு என உள் நிலாய வேட்கையால் ஊடினாரை ஆடவர் வண்ண மேகலைகளைப் பற்ற அற்று உதிர்ந்தன எண் இல் பொன் சுடு நெருப்பு உக்க முற்றம் ஒத்தவே. 72
கோட்டு இளந் தகர்களும் கொய் மலர தோன்றி போல் சூட்டு உடைய சேவலும் தோணிக் கோழி ஆதியாவேட்டவற்றின் ஊறு உளார் வெருளி மாந்தர் போர்க் கொளீஇக் காட்டி ஆர்க்கும் கௌவையும் கடியும் கௌவை கௌவையே. 73
இறு நுசுப்பின் அம் நலார் ஏந்து வள்ளத்து ஏந்திய நறவம் கொப்புளித்தலின் நாகு புன்னை பூத்தன சிறகர் வண்டு செவ்வழி பாட மாடத்து ஊடு எலாம் இறை கொள் வானின் மீன் என அரம்பை முலையின் இருந்தவே. 74
விலக்கு இல் சாலை யாவர்க்கும் வெப்பின் முப் பழச் சுனைத் தலைத் தணீர் மலர் அணிந்து சந்தனம் செய் பந்தரும் கொலைத் தலைய வேல் கணார் கூத்தும் அன்றி ஐம் பொறி நிலத் தலைய துப்பு எலாம் நிறை துளும்பும் ஊர்களே. 75
அடிசில் வைகல் ஆயிரம் அறப் புறமும் ஆயிரம் கொடி அனார் செய் கோலமும் வைகல் தோறும் ஆயிரம் மடிவு இல் கம்மியர்களோடு மங்கலமும் ஆயிரம் ஒடிவு இலை வேறு ஆயிரம் ஓம்புவாரின் ஓம்பவே. 76
நல்தவம் செய்வார்க்கு இடம் தவம் செய்வார்க்கும் அஃது இடம் நல் பொருள் செய்வார்க்கு இடம் பொருள் செய்வார்க்கும் அஃது இடம் பெற்ற இன்பம் விழைவிப்பான் விண் உவந்து வீழ்ந்து என மற்ற நாடு வட்டம் ஆக வைகும் மற்ற நாடு அரோ. 77
நகர் வளம் - புடை நகர்
கண் வலைக் காமுகர் என்னும் மாபடுத்து ஒள் நிதித் தசை தழீஇ உடலம் விட்டிடும் பெண் வலைப் படாதவர் பீடின் ஓங்கிய அண்ணல் அம் கடிநகர் அமைதி செப்புவாம். 78
விண்புகு வியன் சினை மெலியப் பூத்தன சண்பகத்து அணிமலர் குடைந்து தாது உக வண் சிறைக் குயிலொடு மயில்கண் மாறு கூஉய்க் கண் சிறைப் படுநிழல் காவு சூழ்ந்தவே. 79
கை புனை சாந்தமும் கடி செய் மாலையும் மெய் புனை சுண்ணமும் புகையும் மேவிய நெய்யொடு குங்குமம் நிறைந்த நாணினால் பொய்கைகள் பூம் படாம் போர்த்த போன்றவே. 80
கடி நலக் கரும்பொடு காய் நெல் கற்றையின் பிடி நலம் தழீஇ வரும் பெருங் கைக் குஞ்சரம் அடி நிலை இருப்பு எழு அமைந்த கல் மதில் புடை நிலை வாரிகள் பொலிந்த சூழ்ந்தவே. 81
சல சல மும் மதம் சொரியத் தம் தம்முள் கொலை மருப்பு இரட்டைகள் குளிப்பப் பாய்ந்து இரு மலை திளைப்பன என நாகம் ஆன்ற போர் குலவிய நிலைக்களம் கோலம் ஆர்ந்தவே. 82
முத்து உடை வெண் மருப்பு ஈர்ந்து மொய் கொளப் பத்தியில் குயிற்றிய மருங்கில் பல்வினைச் சித்திரக் கிம்புரி வைரம் சேர்த்துநர் ஒத்துஇயல் இடங்களும் ஒழுங்கு நீண்டவே. 83
ஓடு தேர்ச் சாரிகை உகு பொன் பூமியும் ஆடகம் ஆற்றும் தார்ப் புரவி வட்டமும் கேடக வாள் தொழில் இடமும் கேடு இலாக் கோடு வெம் சிலைத் தொழில் இடமும் கூடின்றே. 84
புடை நகர்த் தொழில் இடம் கடந்து புக்க பின் இடை நகர்ப் புறம் பணை இயம்பும் ஓசை ஓர் கடல் உடைந்தது எனக் கலந்தது அக் கடல் மடை அடைத்து அனையது அம் மாக்கள் ஈட்டமே. 85
சிந்துரப் பொடிகளும் செம் பொன் சுண்ணமும் சந்தன நீரோடு கலந்து தையலார் பந்தொடு சிவிறியில் சிதறப் பார் மிசை இந்திர வில் எனக் கிடந்த வீதியே 86
பாத்தரும் பசும் பொன்னின் மாடத்து உச்சி மேல் தூத் திரள் மணிக் குடம் நிரைத்துத் தோன்றுவ பூத்தன வேங்கை மேல் பொலிந்து கார் நினைந்து ஏத்தரும் மயில் குழாம் இருந்த போன்றவே. 87
நெடுங் கொடி நிழல் மதி நெற்றி தைவர உடம்பு வேர்த்து இன மழை உரறி நோக்கலின் நடுங்குபு நல் வரை மாடத்து உச்சியில் அடங்கி வீழ்ந்து அருவியின் அழுவ போன்றவே. 88
பொன் சிறு தேர் மிசைப் பைம் பொன் போதகம் நல் சிறார் ஊர்தலின் நங்கைமார் விரீஇ உற்றவர் கோழி மேல் எறிந்த ஒண் குழை மற்று அத் தேர் உருள் கொடா வளமை சான்றவே. 89
மாலையும் பசும் பொ(ன்)னும் மயங்கி வார் கணைக் கோல் எயும் குனி சிலை நுதலினாரொடு வேல் இயல் ஆடவர் விரவி விண்ணவர் ஆலயம் இது என ஐயம் செய்யுமே. 90
கல் சுணம் செய்த தோள் மைந்தர் காதலால் நல் சுணப் பட்டு உடை பற்ற நாணினால் பொன் சுணத்தால் விளக்கு அவிப்பப் பொங்கிய பொன் சுணம் புறம்பணை தவழும் பொற்பிற்றே. 91
நலத்தகு நானம் நின்று இடிக்கும் நல்லவர் உலக்கையால் உதிர்ந்தன தெங்கின் ஒண் பழம் நிலத்து அவை சொரிதலின் வெரீஇய மஞ்ஞை போய்க் கலத்து உயர் கூம்பின் மேல் ஆடும் கௌவைத்தே. 92
இட்ட எள் நிலம்படா வகையில் ஈண்டிய முட்டு இலா மூவறு பாடை மாக்களால் புள் பயில் பழு மரம் பொலிவிற்று ஆகிய மட்டு இலா வள நகர் வண்ணம் இன்னதே. 93
அகழியின் தோற்றம்
தங்கு ஒளி நித்திலத் தாமம் சூடிய வெம் களி இள முலை வேல் கண் மாதரார் பைங்கிளி முன்கை மேல் கொண்டு பார்ப்பு எனும் கொங்கு அலர் தாமரைக் கிடங்கு கூறுவாம். 94
கோள் சுறா இனத்தொடு முதலைக் குப்பைகள் ஆள் பெறா திரிதர அஞ்சிப் பாய்வன மோட்டு இறா பனிக் கிடங்கு உழக்க மொய்த்து எழுந்து ஈட்டறாப் புள் இனம் இரற்றும் என்பவே. 95
சிறை அனப் பெடையினோடு ஊடிச் சேவல் போய் அறு பத வண்டு இனம் ஆர்ப்பத் தாமரை உறைவது குழுவின் நீங்கி யோகொடு கறை அற முயல்வது ஓர் கடவுள் ஒத்ததே. 96
அரும் பொனும் வெள்ளியும் மணியும் அல்லது கருங் கலம் தோய்விலாக் காமர் பூந் துறை குரும்பை மென் முலையின் மேல் குலாய குங்குமம் விருந்து செய்திட வெறி மேனி சேந்ததே. 97
பட்டவர்த் தப்பலின் பரவை ஏந்து அல்குல் அட்டு ஒளி அரத்தம்வாய்க் கணிகை அல்லது மட்டு உடை மண மகள் மலர்ந்த போதினால் கட்டு உடைக் காவலின் காமர் கன்னியே. 98
நிரை கதிர் நித்திலம் கோத்து வைத்த போல் விரை கமழ் கமுகின் மேல் விரிந்த பாளையும் குரை மதுக் குவளைகள் கிடங்கில் பூத்தவும் உரையின் ஓர் ஓசனை உலாவி நாறுமே. 99
மதிலின் தோற்றம்
தாய் முலை தழுவிய குழவி போலவும் மா மலை தழுவிய மஞ்சு போலவும் ஆய் முகில் தழீஇ அசும்பு அறாத நெற்றிய சேய் உயர் மதில் வகை செப்புகின்றதே. 100
மாற்றவர் மறப் படை மலைந்து மதில் பற்றின் நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கி எறி பொறியும் தோற்றம் உறு பேய் களிறு துற்று பெரும் பாம்பும் கூற்றம் அன கழுகு தொடர் குந்தமொடு கோண்மா 101
வில் பொறிகள் வெய்ய விடு குதிரை தொடர் அயில் வாள் கல் பொறிகள் பாவை அனம் மாடம் அடு செந் தீக் கொல் புனை செய் கொள்ளி பெருங் கொக்கு எழில் செய் கூகை நல் தலைகள் திருக்கும் வலி நெருக்கும் மர நிலையே 102
செம்பு உருகு வெம் களிகள் உமிழ்வ திரிந்து எங்கும் வெம்பு உருகு வட்டு உமிழ்வ வெந் நெய் முகத்து உமிழ்வ அம்பு உமிழ்வ வேல் உமிழ்வ கல் உமிழ்வ ஆகித் தம் புலங்களால் யவனர் தாள் படுத்த பொறியே. 103
கரும் பொன் இயல் பன்றி கத நாகம் விடு சகடம் குரங்கு பொரு தகரினொடு கூர்ந்து அரிவ நுண்நூல் பரந்த பசும் பொன் கொடி பதாகையொடு கொழிக்கும் திருந்து மதி தெவ்வர் தலை பனிப்பத் திருந்தின்றே 104
வயிர வரை கண் விழிப்ப போன்று மழை உகளும் வயிர மணித் தாழ்க் கதவு வாயில் முகம் ஆக வயிரம் அணி ஞாயில் முலை வான் பொன் கொடிக் கூந்தல் வயிரக் கிடங்கு ஆடை மதில் கன்னியது கவினே 105
அகநகர்த் தோற்றம்
செம் பொன் மழை போன்று அடிதொறு ஆயிரங்கள் சிந்திப் பைம் பொன் விளை தீவில் நிதி தடிந்து பலர்க்கு ஆர்த்தி அம் பொன் நிலத்து ஏகு குடி அக நகரம் அது தான் உம்பர் உலகு ஒப்பது அதன் தன்மை சிறிது உரைப்பாம் 106
பரத்தையர் சேரியின் தோற்றம்
துப்பு உறழ் தொண்டைச் செவ்வாய்த் தோழியர் காமத் தூதின் ஒப்ப ஒன்று ஆதி ஆக ஆயிரத்தோர் எட்டு ஈறாச் செப்பித் தம் செம்பொன் அல்குல் நலம் வரைவின்றி விற்கும் உப்பு அமை காமத் துப்பின் அவர் இடம் உரைத்தும் அன்றே 107
குங்குமம் மெழுகிச் சார்பும் திண்ணையும் குயிற்றி உள்ளால் தங்கும் மென் சாந்தத்தோடு தாமமும் தாழ நாற்றி எங்கும் நல் சுவர்கள் தோறும் நாடகம் எழுதி ஏற்பப் பொங்கு மென் மலர் பெய் சேக்கை பொலிந்து விண் புகற்சி உண்டே 108
தூசு சூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன வீழ்த்த காசு சூழ் கோவை முத்தம் கதிர் முலை திமிர்ந்த சாந்தம் வாச நல் பொடிகள் மாலை வண்டு உண வீழ்ந்த முற்றம் ஆசைப் பட்டு அரசு வைக அருங் கடி கமழும் அன்றே 109
அம் சிலம்பு ஒலியோடு அல்குல் கலை ஒலி அணிந்த முன்கைப் பஞ்சி மெல் விரலில் பாணி பண் ஒலி பவழச் செவ்வாய் அஞ்சி நேர்ந்து உயிர்க்கும் தேன் சேர் குழல் ஒலி முழவின் ஓசை துஞ்சல் இல் ஓசை தம்மால் துறக்கமும் நிகர்க்க லாதே 110
தேன் உலாம் மதுச் செய் கோதை தேம் புகை கமழ ஊட்ட வான் உலாம் சுடர்கண் மூடி மா நகர் இரவு செய்யப் பால் நிலாச் சொரிந்து நல்லார் அணிகலம் பகலைச் செய்ய வேனிலான் விழைந்த சேரி மேல் உலகு அனையது ஒன்றே 111
கடை வீதிகள்
இட்ட நூல் வழாமை ஓடி யோசனை எல்லை நீண்டு மட்டுவார் மாலை வேய்ந்து சதுக்கங்கள் மலிந்த சும்மைப் பட்டமும் பசும் பொன் பூணும் பரந்து ஒளி நிழற்றும் தீம் தேன் அட்டும் தார் அணிந்த மார்பர் ஆவணம் விளக்கல் உற்றேன். 112
மணி புனை செம் பொன் கொட்டை வம்பு அணி முத்த மாலைக் கணி புனை பவழத் திண் காழ் கம்பலக் கிடுகின் ஊன்றி அணி நிலம் மெழுகிச் சாந்தின் அகில் புகைத்து அம் பொன் போதில்திணி நிலம் அணிந்து தேம் கொள் ஐயவி சிதறினாரே. 113
பொன் சொரி கதவு தாழில் திறந்து பொன் யவனப் பேழை மின் சொரி மணியும் முத்தும் வயிரமும் குவித்துப் பின்னும் மன் பெரும் பவழக் குப்பை வால் அணிகலம் செய் குப்பை நண் பகல் இரவு செய்யும் நன் கலம் கூப்பினாரே. 114
விழுக் கலம் சொரியச் சிந்தி வீழ்ந்தவை எடுத்துக் கொள்ளா ஒழுக்கினர் அவர்கள் செல்வம் உரைப்பரிது ஒழிக வேண்டா பழக் குலைக் கமுகும் தெங்கும் வாழையும் பசும் பொன்னாலும் எழில் பொலி மணியினாலும் கடை தொறும் இயற்றினாரே. 115
மூசு தேன் இறாலின் மூச மொய் திரை இயம்பி யாங்கும் ஓசை என்று உணரின் அல்லால் எழுத்து மெய் உணர்த்தல் ஆகாப் பூசு சாந்து ஒருவர் பூசிற்று எழுவர் தம் அகலம் பூசி மா சனம் இடம் பெறாது வண் கடை மலிந்தது அன்றே. 116
மெய்யணி பசும் பொன் சுண்ணம் மேதகு நான நீரின் ஐது பட்டு ஒழுகி யானை அழிமதம் கலந்து சேறாய்ச் செய் அணி கலன்கள் சிந்தி மாலையும் மதுவும் மல்கி வெய்து அடி இடுதற்கு ஆகா வீதிகள் விளம்பல் உற்றேன். 117
தெருக்களின் தோற்றம்
முழவு அணி முது நகர் முரசொடு வளை விம விழவு அணி மகளிர் தம் விரை கமழ் இள முலை இழை அணி ஒளி இள வெயில் செய விடு புகை மழை என மறையின பொலிவினது ஒருபால். 118
குடையொடு குடை பல களிறொடு நெரி தர உடை கடல் ஒலியினொடு உறுவார் பலி செல முடியொடு முடியுற மிடைதலின் விடு சுடர் கொடியுடை மழை மினின் குலவியது ஒரு பால். 119
பூத்தலை வாரணப் போர்த் தொழில் இளையவர் நாத் தலை மடி விளிக் கூத்தொடு குயில் தரக் காய்த்துறு தமனியத் துகளொடு கடிகமழ் பூத்துகள் கழுமிய பொலிவினது ஒரு பால். 120
மைந்தரோடு ஊடிய மகளிரை இளையவர் அம் துகில் பற்றலின் காசரிந்து அணி கிளர் சுந்தர நிலமிசைச் சொரிதலின் மின் அணிந்து இந்திர திருவிலின் எழிலினது ஒருபால். 121
வளை அறுத்து அனையன வால் அரி அமை பதம் அளவு அறு நறு நெய்யொடு கறி அமை துவை விளைவு அமை தயிரொடு மிசை குவிர் விரையுமின் உள அணி கலம் எனும் உரையினது ஒருபால். 122
வரை நிரை அருவியின் மதம் மிசை சொரிவன புரை நிரை களிறொடு புனை மணி இயல் தேர் விரை நிரை இவுளியொடு இளையவர் விரவுபு குரை நிரை குளிர் புனல் ஆற்றினது ஒருபால். 123
வரி வளை அரவமும் மணி முழவு அரவமும் அரி வளர் கண்ணியர் அணிகல அரவமும் புரி வளர் குழலொடு பொலி மலி கவினிய திரு விழை கடி மனை திறவிதின் மொழிவாம். 124
தெருக்களிலுள்ள மனைகளைப் பற்றிக் கூறுதல்
பாவை அன்னவர் பந்து புடைத்தலில் தூவி அன்னம் வெரீஇத் துணை என்று போய்க் கோவை நித்தில மாடக் குழாம் மிசை மேவி வெண் மதி தன்னொடு இருக்குமே. 125
திருவ நீள் நகர்ச் செம் பொனின் நீடிய உருவ ஒண்கொடி ஊழின் நுடங்குவ பரவை வெம் கதிர்ச் செல்வன பன்மயிர்ப் புரவி பொங்கு அழல் ஆற்றுவ போன்றவே. 126
இழை கொள் வெம் முலை ஈரம் உலர்த்துவார் விழைய ஊட்டிய மேதகு தீம் புகை குழை கொள் வாண் முகம் சூழ் குளிர் அம் கதிர் மழையுள் மா மதி போன்ம் எனத் தோன்றுமே. 127
செம் பொன் கண்ணி சிறார் களைந்திட்டவும் அம் பொன் மாலை அவிழ்ந்து உடன் வீழ்ந்தவும் தம் பொன் மேனி திமிர்ந்த தண் சாந்தமும் வம்பு உண் கோதையர் மாற்றும் அயல் அரோ 128
வேரிஇன் மெழுக்கு ஆர்ந்த மென் பூ நிலத்து ஆரி ஆக அம் சாந்தம் தளித்தபின் வாரி நித்திலம் வைப்ப பொன் பூவொடு சேரி தோறு இது செல்வத்து இயற்கையே. 129
கருனை வாசமும் கார் இருள் கூந்தலார் அருமை சான்ற அகில் புகை வாசமும் செருமிச் சேர்ந்து கண்ணீர் வரத் தேம் பொழில் உரிமை கொண்டன ஒண்புறவு என்பவே. 130
நறையும் நானமும் நாறும் நறும் புகை விறகின் வெள்ளி அடுப்பின் அம் பொன் கலம் நிறைய ஆக்கிய நெய் பயில் இன் அமுது உறையும் மாந்தர் விருந்தொடும் உண்பவே. 131
பாளை மென் கமுகின் பழம் மெல் இலை நீள் வெண் மாடத்து நின்று கொண்டு அம்நலார் ஆளிய மொய்ம்பர்க்கு அளித்து அணி சண்பகம் நாள் செய் மாலை நகை முடிப் பெய்பவே. 132
எழுது வாள் நெடும் கண் இணை அம் நலார் மெழுகு குங்கும மார்பு இடை வெம் முலை உழுது கோதையும் சாந்தும் உவந்து அவை முழுதும் வித்தி விளைப்பர் திளைப்பவே. 133
குஞ்சி மேல் அனிச்ச மலர் கூட்டு உணும் அஞ்சில் ஓதியர் அம் மலர்ச் சீறடி மஞ்சு தோய் மணி மாடத்து மல்கு பூம் பஞ்சி மேலும் பனிக்கும் பனிக்குமே. 134
தூமமே கமழும் துகில் சேக்கை மேல் காமமே நுகர்வார் தம் காதலால் யாமமும் பகலும் அறியாமையால் பூமி மா நகர் பொன் உலகு ஒத்ததே. 135
அரவு கான்றிட்ட அம்கதிர் மா மணி உரவு நீர் முத்தும் உள் உறுத்து உள்ளன இரவல் மாந்தர்க்கும் இன்னவை ஈவது ஓர் புரவு பூண்டனர் பொன் நகர் மாந்தரே. 136
முல்லை அம் குழலார் முலைச் செல்வமும் மல்லல் மா நகர்ச் செல்வமும் வார் கழல் செல்வர் செல்வமும் காணிய என்பர் போல் எல்லியும் இமையார் இமையாததே. 137
முழவும் சங்கமும் முன்றில் முழங்குவ விழவும் வேள்வும் விடுத்தல் ஒன்று இன்மையால் புகழலாம் படித்து அன்று இது பொன்னகர் அகழ்தல் மாக் கடல் அன்னது ஓர் சும்மைத்தே. 138
திங்கள் முக்குடையான் திரு மாநகர் எங்கும் எங்கும் இடம் தொறும் உண்மையால் அம் கண் மா நகர்க்கு ஆக்கம் அறாதது ஓர் சங்க நீள் நிதியால் தழைக்கின்றதே. 139
தேன்தலைத் துவலை மாலை பைந்துகில் செம் பொன் பூத்து ஞான்றன வயிர மாலை நகு கதிர் முத்த மாலை கான்று அமிர்து ஏந்தி நின்ற கற்பகச் சோலை யார்க்கும் ஈன்று அருள் சுரந்த செல்வத்து இராசமா புரம் அதாமே. 140
அரண்மனையின் சிறப்பு
வேக யானை மீளி வேல் வெய்ய தானை ஐய கோல் மாகம் நீள் மணிமுடி மாரி வண்கை மாசு இல் சீர் ஏக ஆணை வெண் குடை இந் நகர்க்கு மன்னவன் நாக நீர நல் நகர் நன்மை தன்னம் செப்புவாம். 141
நீள் நிலம் வகுத்து நீர் நிரந்து வந்து இழிதரச் சேண் நிலத்து இயற்றிய சித்திரச் சுருங்கை சேர் கோள் நிலத்து வெய்யவாம் கொடும் சுறத் தடம் கிடங்கு பூண் நிலத்து வைத்தது ஓர் பொற்பினில் பொலிந்ததே. 142
இஞ்சி மாகம் நெஞ்சு போழ்ந்து எல்லை காண ஏகலின் மஞ்சு சூழ்ந்து கொண்டு அணிந்து மாக நீண்ட நாகமும் அஞ்சு நின்னை என்றலின் ஆண்டு நின்று நீண்ட தன் குஞ்சி மாண் கொடிக் கையால் கூவி விட்டது ஒத்ததே. 143
முத்து மாலை முப்புரி மூரி மா மணிக் கதவு ஒத்த நான்கு கோபுரம் ஓங்கி நின்று ஒளிர்வன சத்தி நெற்றி சூட்டிய தாம நீள் மணிவணன் தத்து ஒளி மணிமுடி தாமம் நால்வ போலுமே. 144
சங்கு விம்மு நித்திலம் சாந்தொடு ஏந்து பூண் முலைக் கொங்கு விம்மு கோதை தாழ் கூந்தல் ஏந்து சாயலார் இங்கிதக் களிப்பினால் எய்தி ஆடும் பூம் பொழில் செங் கண் இந்திரன் நகர்ச் செல்வம் என்னது அன்னதே. 145
வெள்ளி யானை மென் பிடி மின் இலங்கு பைம் பொனால் துள்ளும் மான் ஒருத்தலும் செம் பொன் அம் பொன் மான்பிணை உள்ளு காமம் உள் சுட வேந்தன் ஆங்கு உறைவது ஓர் பள்ளி மாட மண்டபம் பசுங்கதிர்ப்ப வண்ணமே. 146
கோழ் அரை மணி மடல் கூந்தல் நெற்றி ஏந்திய மாழையம் திரள் கனி மா மணி மரகதம் சூழ் குலைப் பசுங்கமுகு சூலு பாளை வெண் பொனால் ஊழ் திரள் மணிக் கயிறு ஊசல் ஆட விட்டதே. 147
மென் தினைப் பிறங்கலும் மிளிர்ந்து வீழ் அருவியும் குன்று அயல் மணிச் சுனைக் குவளை கண் விழிப்பவும் நின்று நோக்கு மான் பிணை நீல யானை மன்னவன் கன்று காமம் வெஃகிய காமர் காம பூமியே. 148
தீம் குயில் மணந்து தேன் துஞ்ச வண்டு பாண் செய வேங்கை நின்று பொன் உகுக்கும் வெற்பு உடுத்த சந்தனம் ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும் நீங்க நீங்கும் இன் உயிர் நினைப்பின் நின்று இளஃகுமே. 149
முத்தம் வாய் புரித்தன மொய் கதிர்ப் பசும் பொனால் சித்திரத்து இயற்றிய செல்வம் மல்கு பன் மணி பத்தியில் குயிற்றி வான் பதித்து வைத்த போல்வன இத்திறத்த பந்து எறிந்து இளையர் ஆடு பூமியே. 150
வைத்த பந்து எடுத்தலும் மாலையுள் கரத்தலும் கைத்தலத்தின் ஓட்டலும் கண்ணி நெற்றி தீட்டலும் பத்தியில் புடைத்தலும் பை அரவின் ஆடலும் இத்திறத்த பந்தினோடு இன்பம் எல்லை இல்லையே. 151
கூற்றம் அன்ன கூர் நுதிக் குருதி வான் மருப்பு இடைச் சீற்றம் உற்ற மன்னர் தம் சென்னி பந்து அடிப்பன ஊற்று இருந்த மும் மதத்து ஓடை யானை பீடுசால் காற்று இயல் புரவி தேர் கலந்து கௌவை மல்கின்றே. 152
கவ்வை அம் கருவி சூழ்ந்து கண் படுக்கும் மாடமும் தெவ்வர் தந்த நீள் நிதி செம் பொன் மாடமும் மவ்வல் அம் குழலினார் மணிக்கலம் பெய் மாடமும் இவ் வலந்த அல்லவும் இடங்கள் எல்லை இல்லையே. 153
பூத்த கோங்கும் வேங்கையும் பொன் இணர் செய் கொன்றையும் காய்த்து நின்று கண் தெறூஉம் காமர் வல்லி மாதரார் கூத்து அறாத பள்ளியும் கொற்றம் அன்ன மங்கையர் ஏத்தல் சான்ற கோயிலும் இடைப் படுத்து இயன்றவே. 154
கந்து மா மணித்திரள் கடைந்து செம் பொன் நீள் சுவர்ச் சந்து போழ்ந்து இயற்றிய தட்டு வேய்ந்து வெண் பொனால் இந்திரன் திரு நகர் உரிமையோடு இவ்வழி வந்து இருந்த வண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே. 155
ஆடலின் அரவமும் அங்கை கொட்டி நெஞ்சு உணப் பாடலின் அரவமும் பணை முழவு அரவமும் கூடு கோலத் தீம் சுவைக் கோல யாழ் அரவமும் வாடல் இல்ல ஓசையால் வைகல் நாளும் வைகிற்றே. 156
சச்சந்தன் வரலாறு
நச்சு நாகத்தின் ஆர் அழல் சீற்றத்தன் அச்சம் உற்று அடைந்தார்க்கு அமிர்து அன்னவன் கச்சு உலாம் முலையார்க்கு அணங்கு ஆகிய சச்சந்தன் எனும் தாமரைச் செங் கணான். 157
வண் கையால் கலி மாற்றி வை வேலினால் திண் திறல் தெவ்வர் தேர்த் தொகை மாற்றினான் நுண் கலைக்கு இடனாய்த் திரு மா மகள் கண்களுக்கு இடன் ஆம் கடி மார்பனே. 158
கோதை நித்திலம் சூழ் குளிர் வெண் குடை ஓத நீர் உலகு ஒப்ப நிழற்றலால் தாதையே அவன் தாள் நிழல் தங்கிய காதலால் களிக்கின்றது இவ் வையமே. 159
தருமன் தண் அளியால் தனது ஈகையால் வருணன் கூற்று உயிர் மாற்றலின் வாமனே அருமையால் அழகின் கணை ஐந்து உடைத் திருமகன் திரு மா நில மன்னனே. 160
ஏனை மன்னர் தம் இன் உயிர் செற்ற வேல் தானை மன்னரில் தான் இமில் ஏறு அனான் தேனை மாரி அன்னான் திசை காவலன் வானம் தோய் புகழான் மலிவு எய்தினான். 161
விசயையின் தோற்றம்
செல்வற்கு இன்னணம் சேறலில் தீம் புனல் மல்கு நீர் விதையத்து அரசன் மகள் அல்லி சேர் அணங்கிற்கு அணங்கு அன்னவள் வில்லின் நீள் புருவத்து எறி வேல் கணாள். 162
உருவும் சாயலும் ஒப்ப உரைப்பதற்கு அரிய ஆயினும் அவ் வளைத் தோளிகண் பெருகு காரிகை பேசுவல் பெண் அணங்கு அரிய தேவரும் ஏத்து அரு நீரளே. 163
எண்ணெயும் நானமும் இவை மூழ்கி இருள் திருக்கிட்டு ஒண்ணறும் துகில் கிழி பொதிந்து உறை கழித்தன போல் கண் இருண்டு நெறி மல்கிக் கடைகுழன்ற கருங் குழல்கள் வண்ணப் போது அருச்சித்து மகிழ்வு ஆனாத் தகையவே. 164
குழவிக் கோட்டு இளம் பிறையும் குளிர் மதியும் கூடின போல் அழகுகொள் சிறுநுதலும் அணி வட்ட மதி முகமும் தொழுதற்கு வரம் கொடுக்கும் தொண்டை வாய்த் தூமுறுவல் ஒழுகு பொன் கொடி மூக்கும் உருப்பசியை உருக்குமே. 165
வண் சிலையை வனப்பு அழித்து வார்ந்து ஒழுகி நிலம் பெறா நுண் கருமை கொண்டு ஒசிந்து நுதல் இவர்ந்து போந்து உலாய்க் கண் கூடா கடை புடைத்துக் கைவல்லான் எழுதிய போல் பண்பு ஆர்ந்த கொடும் புருவம் பழிச்சு ஆனாப் படியவே. 166
சேல் அனைய சில்லரிய கடை சிவந்து கரு மணி அம் பால் அகத்துப் பதித்து அன்ன படியவாய் முனிவரையும் மால் உறுப்ப மகிழ் செய்வ மாண்பில் நஞ்சும் அமிர்தமுமே போல் குணத்த பொரு கயல் கண் செவி உறப் போந்து அகன்றனவே. 167
மயிர் எறி கத்தரிகை அனையவாய் வள்ளை வாடு உயிர் செகுத்து முன் ஒன்றிப் பின் பேராது உரு அமைந்த செயிர் மகர குண்டலமும் திளைப்பு ஆனா வார் காதும் வயிரவில் முகம் சூடி வண்ணம் வீற்று இருந்தனவே. 168
ஈனாத இளங் கமுகின் மரகத மணிக் கண்ணும் ஆனாதே இருள் பருகும் அருமணி கடைந்ததூஉம் தான் ஆகி இருளொடு ஓர் தாமரைப் பூச் சுமந்து அன்ன கான் ஆர்ந்த திரள் கழுத்துக் கவின் சிறை கொண்டு இருந்ததே. 169
மணி மகரம் வாய் போழ்ந்து வாழ் முத்த வடம் சூழ்ந்து ஆங்கு அணி அரக்கு ஆர் செம் பஞ்சி அணை அனைய ஆடு அமைத் தோள் துணிகதிர் வளை முன் கைத் தொகுவிரல் செங் காந்தள் மணி அரும்பு மலர் அங்கை குலிகம் ஆர் வனப்பினவே. 170
தாமச் செப்பு இணை முகட்டுத் தண் கதிர் விடு நீல மா மணி தாபித்தன போல் மனம் பருகு கருங் கண்ண ஏம் உற அடி பரந்து இளம் பிறை வடம் சூடி ஆம் அணங்கு குடி இருந்து அஞ் சுணங்கு பரந்தனவே. 171
அங் கை போல் வயிறு அணிந்த வலம் சுழி அமை கொப்பூழ் கங்கையின் சுழி அலைக்கும் கண் கொளா நுடங்கு இடையை உண்டு எனத் தமர் மதிப்பர் நோக்கினார் பிறர் எல்லாம் உண்டு இல்லை என ஐயம் அல்லது ஒன்று உணர்வு அரிதே. 172
மன்நாக இணைப் படமும் தேர்த் தட்டு மதி மயக்கிப் பொன் ஆல வட்டமும் போல் கலை இமைக்கும் அகல் அல்குல் கொன் இளம் பருதியும் குறு முயலின் குருதியும் போன்று இன் அரத்தப் பட்டசைத்து இந்திரற்கும் புகழ்வு அரிதே. 173
வேழ வெண் திரள் தடக்கை வெருட்டி மற்று இளங் கன்னி வாழைத் தண்டு எனத் திரண்டு வால் அரக்கு உண் செம்பஞ்சி தோழமை கொண்டு என மென்மை உடையவாய் ஒளி திகழ்ந்து மாழை கொள் மணி மகரம் கௌவி வீற்று இருந்தனவே. 174
பக்கத்தால் கவிழிய வாய் மேல் பிறங்காப் பாண்டிலா ஒக்க நன்கு உணராமை பொருந்திய சந்தினவாய் நெக்குப் பின் கூடாது நிகர் அமைந்த முழந் தாளும் மக்களுக்கு இல்லாத மாட்சியின் மலிந்தனவே. 175
ஆடு தசை பிறங்காது வற்றாது மயிர் அகன்று நீடாது குறுகாது நிகர் அமைந்த அளவினவாய்ச் சேடு ஆவ நாழிகையின் புடை திரண்டு தேன் நெய் பெய் வாடாத காம்பே போல் கணைக் காலின் வனப்பினவே. 176
பசும் பொன் செய் கிண்கிணியும் பாடகமும் பாடு அலைப்ப நயந்து எரி பொன் சிலம்பு முத்தரி பெய்து அகம் நக இயைந்து எழிலார் மணி ஆமை இளம் பார்ப்பின் கூன் புறம் போல் அசைந்து உணர்வு மடிந்து ஒழியும் அடி இணை புகழ்வார்க்கே. 177
அரக்கு இயல் செங் கழுநீர் அக இதழ் போல் உகிர் சூடிப் பரப்பு இன்றி நுதி உயர்ந்து பழிப்பு அறத் திரண்டு நீண்டு ஒருக்கு உற நெருங்கிப் பொன் ஒளி ஆழி அகம் கௌவித் திருக் கவின் கொள் மெல் விரல்கள் தேன் ஆர்க்கும் தகையவே. 178
என்பொடு நரம்பு இன்றி இலவம் பூ அடர் அனுக்கி இன்புற வரம்பு உயர்ந்து இரு நிலம் உறப் புல்லி ஒன்பதின் சாண் நடப்பினும் ஒரு காதம் என்று அஞ்சும் மென் பஞ்சிச் சீறடியும் மேதக்க விழைவினவே. 179
சச்சந்தன் விசயையை மணத்தல்
இவ் உருவு நெஞ்சு என்னும் கிழியின் மேல் இருந்து இலக்கித்து அவ் உருவு நினைப்பு என்னும் துகிலிகையால் வருத்தித்துக் கவ்விய தன் நோக்கினால் கண் விடுத்துக் காதல் நீர் செவ்விதில் தெளித்து ஆனாக் காமப் பூச் சிதறினான். 180
மெய் பெறா எழுத்து உயிர்க்கும் மழலை வாய் இன் முறுவல் தையலாள் நெடுந் தடங்கண் வலைப்பட்டுச் சச்சந்தன் ஐயுறான் அணங்கு எனவே அகத்து அடக்கிச் செல்கின்றான் மொய் அறாக் களியானை முழங்கித் தேன் இமிர் தாரான். 181
வண்டு இனம் முகபடாம் அணிந்து வார் மதம் உண்டு உகுத்திடு களிற்று உழவன் தன் மகள் பெண்டிர் தம் பெரு நலம் கடந்து பெற்ற பேர் விண்டலர் கோதைக்கு விசயை என்பவே. 182
அரு மணி மரகதத்து அங் கண் நாறிய எரி நிறப் பொன் இதழ் ஏந்து தாமரைத் திருமகள் இவள் எனத் திலக வெண் குடைப் பெருமகன் கோயிலுள் பேதை வைகுமே. 183
கலம் புரி அகல் அல்குல் தாயர் தவ்வையர் சிலம்புரி திருந்து அடி பரவச் செல்பவள் வலம்புரி சலஞ்சலம் வளை இயது ஒத்தனள் குலம் புரிந்து அனையது ஓர் கொடியின் நீர்மையள். 184
இன் அகில் கொழும் புகை உயிர்க்கும் ஈர்ங் குழல் மென் மலர்க் கோதை தன் முலைகள் வீங்கலின் மின் உருக்குறும் இடை மெலிய மெல்லவே கன்னி தன் திரு நலம் கனிந்தது என்பவே. 185
முந்து நாம் கூறிய மூரித் தானை அக் கந்து கொல் கடாக் களி யானை மன்னவன் பைந்தொடிப் பாசிழைப் பரவை ஏந்து அல்குல் தந்தை மாட்டு இசைத்தனன் தனது மாற்றமே. 186
மருமகன் வலந்தது மங்கை ஆக்கமும் அருமதிச் சூழ்ச்சியின் அமைச்சர் எண்ணிய கருமமும் கண்டவர் கலத்தல் பான்மையில் பெருமகன் சேர்த்தினார் பிணை அனாளையே. 187
சச்சந்தனும் விசயையும் இன்பந்துய்த்தல்
பொன் அம் கொடி அமிர்து அனாளும் பொன் நெடுங் குன்று அனானும் அனங்கனுக்கு இலக்கம் ஆகி அம்பு கொண்டு அழுத்த விள்ளார் இனம் தமக்கு எங்கும் இல்லார் இயைந்தனர் என்ப முக்கண் சினம் திகழ் விடையினானும் செல்வியும் சேர்ந்தது ஒத்தே. 188
காதலால் காம பூமிக் கதிர் ஒளி அவரும் ஒத்தார் மாதரும் களிறு அனானும் மாசுண மகிழ்ச்சி மன்றல் ஆதரம் பெருகுகின்ற அன்பினால் அன்னம் ஒத்தும் தீது இலார் திளைப்பின் ஆமான் செல்வமே பெரிதும் ஒத்தார். 189
தன் அமர் காதலானும் தையலும் மணந்த போழ்தில் பொன் அனாள் அமிர்தம் ஆகப் புகழ் வெய்யோன் பருகியிட்டான் மின் அவிர் பூணினானை வேல் கணார்க்கு இயற்றப் பட்ட மன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகியிட்டாள். 190
பவழவாய் பரவை அல்குல் என்று இவை பருகும் வேலான் கவழம் ஆர் களிறு போன்றான் காதலி கரும்பை ஒத்தாள் தவழ் மதுக் கோதை மாதர் தாமரைப் பூ அது ஆக உமிழ் நகை வேலினானும் ஒண் சிறை மணி வண்டு ஒத்தான். 191
பளிக்கு அறைப் பவழப் பாவை பரிசு எனத் திகழும் சாயல் களிக் கயல் பொருவ போன்று கடை சிவந்து அகன்ற கண்ணாள் ஒளிக் கவின் கொண்ட காமத்து ஊழுறு கனியை ஒத்தாள் அளித்து அயில்கின்ற வேந்தன் அம் சிறைப் பறவை ஒத்தான். 192
துறு மலர்ப் பிணையலும் சூட்டும் சுண்ணமும் நறுமலர்க் கண்ணியும் நாறு சாந்தமும் அறு நிலத்து அமிர்தமும் அகிலும் நாவியும் பெறு நிலம் பிணித்திடப் பெரியர் வைகினார். 193
துடித்தலைக் கருங் குழல் சுரும்பு உண் கோதை தன் அடித்தலைச் சிலம்பினோடு அரவ மேகலை வடித்தலைக் கண் மலர் வளர்த்த நோக்கமோடு அடுத்து உலப்பு அரிது அவர் ஊறில் இன்பமே. 194
இழை கிளர் இள முலை எழுது நுண் இடைத் தழை வளர் மது மலர் தயங்கு பூஞ்சிகைக் குழை முகக் கொடியொடு குருதி வேலினான் மழை முகில் மாரியின் வைகும் என்பவே. 195
படுதிரைப் பவழவாய் அமுதம் மாந்தியும் கொடிவளர் குவி முலைத் தடத்துள் வைகியும் இடியினும் கொடியினும் மயங்கி யாவதும் கடி மணக் கிழமை ஓர் கடலின் மிக்கதே. 196
கப்புரப் பசுந்திரை கதிர் செய் மா மணிச் செப்பொடு சிலதியர் ஏந்தத் தீவிய துப்பு உமிழ்ந்து அலமரும் காமவல்லியும் ஒப்பரும் பாவை போன்று உறையும் என்பவே. 197
மண் அகம் காவலின் வழுக்கி மன்னவன் பெண் அரும் கலத்தொடு பிணைந்த பேர் அருள் விண்ணகம் இருள் கொள விளங்கு வெண் மதிஔ஢ நிற உரோணியோடு ஒளித்தது ஒத்ததே. 198
குங்குமத் தோளினானும் கொழும் கயல் கண்ணி னாளும் தங்கிய காதல் வெள்ளம் தணப்பு அறப் பருகும் நாளுள் திங்கள் வெண் குடையினாற்குத் திரு இழுக்குற்ற வண்ணம் பைங் கதிர் மதியில் தெள்ளிப் பகர்ந்து எடுத்து உரைத்தும் அன்றே. 199
சச்சந்தன், கட்டியங்காரனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு விசயையோடு இன்புறல்
களிறு அனான் அமைச்சர் தம்முள் கட்டியங் காரன் என்பான் ஒளிறு வாள் தடக்கையானுக்கு உயிர் என ஒழுகும் நாளுள் பிளிறு வார் முரசின் சாற்றிப் பெரும் சிறப்பு இயற்றி வேந்தன் வெளிறு இலாக் கேள்வியானை வேறு கொண்டு இருந்து சொன்னான். 200
அசைவு இலாப் புரவி வெள்ளத்து அரிஞ்சயன் குலத்துள் தோன்றி வசை இலாள் வரத்தின் வந்தாள் வான் சுவை அமிர்தம் அன்னாள் விசையையைப் பிரிதல் ஆற்றேன் வேந்தன் நீ ஆகி வையம் இசை படக் காத்தல் வேண்டும் இலங்கு பூண் மார்ப என்றான். 201
அண்ணல் தான் உரைப்பக் கேட்டே அடுகளிற்று எருத்தின் இட்ட வண்ணப் பூந் தவிசு தன்னை ஞமலி மேல் இட்டது ஒக்கும் கண் அகல் ஞாலம் காத்தல் எனக்கு எனக் கமழும் கண்ணி மண் அகம் வளரும் தோளான் மறுத்து நீ மொழியல் என்றான். 202
எழுதரு பருதி மார்பன் இற்றென இசைத்த லோடும் தொழுது அடி பணிந்து சொல்லும் துன்னலர்த் தொலைத்த வேலோய் கழி பெரும் காதலாள்கண் கழி நலம் பெறுக வையம் பழி படா வகையில் காக்கும் படு நுகம் பூண்பல் என்றான். 203
வலம் புரி பொறித்த வண்கை மதவலி விடுப்ப ஏகிக் கலந்தனன் சேனை காவல் கட்டியங் காரன் என்ன உலந்தரு தோளினாய் நீ ஒருவன் மேல் கொற்றம் வைப்பின் நிலம் திரு நீங்கும் என்று ஓர் நிமித்திகன் நெறியில் சொன்னான். 204
எனக்கு உயிர் என்னப் பட்டான் என் அலால் பிறரை இல்லான் முனைத் திறம் உருக்கி முன்னே மொய் அமர் பலவும் வென்றான் தனக்கு யான் செய்வ செய்தேன் தான் செய்வ செய்க ஒன்றும் மனக்கு இனா மொழிய வேண்டா வாழியர் ஒழிக என்றான். 205
காவல குறிப்பு அன்றேனும் கருமம் ஈது அருளிக் கேண்மோ நாவலர் சொல் கொண்டார்க்கு நன்கு அலால் தீங்கு வாரா பூ அலர் கொடியனார் கண் போகமே கழுமி மேலும் பாவமும் பழியும் உற்றார் பற்பலர் கேள் இது என்றான். 206
பெரும் பெயர்ப் பிரமன் என்னும் பீடினால் பெரிய நீரான் அரும்பிய முலையினாளுக்கு அணி முகம் நான்கு தோன்ற விரும்பி ஆங்கு அவளை எய்தான் விண்ணகம் இழந்தது அன்றித் திருந்தினாற்கு இன்று காறும் சிறு சொல்லாய் நின்றது அன்றே. 207
கைம் மலர்க் காந்தள் வேலிக் கண மலை அரையன் மங்கை மைம் மலர்க் கோதை பாகம் கொண்டதே மறுவது ஆகக் கொய்ம் மலர்க் கொன்றை மாலைக் குளிர்மதிக் கண்ணியாற்குப் பெய்ம் மலர் அலங்கல் மார்ப பெரும் பழி ஆயிற்று அன்றே. 208
நீல் நிற வண்ணன் அன்று நெடுந் துகில் கவர்ந்து தம் முன் பால் நிற வண்ணன் நோக்கில் பழி உடைத்து என்று கண்டாய் வேல் நிறத் தானை வேந்தே விரிபுனல் தொழுனை ஆற்றுள் கோல் நிற வளையினார்க்குக் குருந்து அவன் ஒசித்தது என்றான். 209
காமமே கன்றி நின்ற கழுதை கண்டு அருளினாலே வாமனார் சென்று கூடி வருந்தினீர் என்று வையத்து ஈமம் சேர் மாலை போல இழித்திடப் பட்டது அன்றே நாம வேல் தடக்கை வேந்தே நாம் இது தெரியின் என்றான். 210
படு பழி மறைக்கல் ஆமோ பஞ்சவர் அன்று பெற்ற வடுவுரை யாவர் பேர்ப்பார் வாய்ப் பறை அறைந்து தூற்றி இடுவதே அன்றிப் பின்னும் இழுக்கு உடைத்து அம்ம காமம் நடுவு நின்று உலகம் ஓம்பல் நல்லதே போலும் என்றான். 211
ஆர் அறிவு இகழ்தல் செல்லா ஆயிரம் செங் கணனானும் கூர் அறிவு உடைய நீரார் சொல் பொருள் கொண்டு செல்லும் பேர் அறிவு உடையை நீயும் பிணை அனாட்கு அவலம் செய்யும் ஓர் அறிவு உடையை என்றான் உருத்திர தத்தன் என்பான். 212
அளந்து தாம் கொண்டு காத்த அருந் தவம் உடைய நீரார்க்கு அளந்தன போகம் எல்லாம் அவர் அவர்க்கு அற்றை நாளே அளந்தன வாழும் நாளும் அது எனக்கு உரையல் என்றான் விளங்கு ஒளி மணிகள் வேய்ந்து விடு சுடர் இமைக்கும் பூணான். 213
மூரித் தேம் தாரினாய் நீ முனியினும் உறுதி நோக்கிப் பாரித்தேன் தரும நுண்நூல் வழக்கு அது ஆதல் கண்டே வேரித் தேம் கோதை மாதர் விருந்து உனக்காக இன்பம் பூரித்து ஏந்து இளைய கொங்கை புணர்க யான் போவல் என்றான். 214
இனமாம் என்று உரைப்பினும் ஏதம் எணான் முனம் ஆகிய பான்மை முளைத்து எழலால் புனமா மலர் வேய் நறும் பூங் குழலாள் மனமாம் நெறி ஓடிய மன்னவனே. 215
கலையார் துகில் ஏந்து அல்குலும் கதிர் சூழ் முலையார் தடமும் முனியாது படிந்து உலையாத் திருவின் அமிர்து உண்டு ஒளிசேர் மலையார் மணி மார்பன் மகிழ்ந்தனனே. 216
விரி மா மணி மாலை விளங்கு முடித் திரு மா மணி சிந்து திளைப்பினர் ஆய் எரி மா மணி மார்பனும் ஏந்திழையும் அரு மா மணி நாகரின் ஆயினரே. 217
கருவுறுதலும், கனவு காணுதலும்
நறவு ஆர்ந்தது ஓர் நாகு இளம் தாமரை வாய் உற வீழ்ந்தது ஓர் ஒண் மணி போன்று உரவோன் அறவு ஆக்கிய இன்பம் அமர்ந்த இருள் கறை வேல் கணினாள் கனவு உற்றனளே. 218
பஞ்சி அடிப் பவளத் துவர் வாய் அவள் துஞ்சும் இடைக் கனவு மூன்று அவை தோன்றலின் அஞ்சி நடுங்கினள் ஆய் இழை ஆயிடை வெம் சுடர் தோன்றி விடிந்ததை அன்றே. 219
விசயை, அருகப் பெருமானை வணங்குதல்
பண் கெழு மெல் விரலால் பணைத் தோளி தன் கண் கழூஉச் செய்து கலை நலந் தாங்கி விண் பொழி பூ மழை வெல் கதிர் நேமிய வண் புகழ் மால் அடி வந்தனை செய்தாள். 220

by C.Malarvizhi   on 27 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.