தொடக்க விரராக களமிறங்கி ரன் சேர்க்காமல் தடுமாறி வரும் சேவக்கை நடு வரிசையில் களமிறக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திராவிட் யோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறும் போது, சேவக் போன்ற அனுபவ வீரர் இந்திய அணிக்கு கிடைத்திருப்பது பெரிய வரபிரசாதம். இவர் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை முன்பு வெளிப்படுத்தினார். ஆனால், சமீபகாலமாக தொடர்ந்து சொதப்பிவருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அன்னிய மண்ணில் பலமுறை அணியை கைவிட்டுள்ளார். சமீப காலமாக துவக்க ஆட்டக்காராக களமிறங்கும் சேவாக் ரன் சேர்க்க தடுமாறுவதால் அவர் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகிறார். ஆஸ்திரேலிய தொடருக்குப் பின், இந்திய அணி இந்த வருட இறுதியில் தான் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா செல்கிறது. இத்தொடரில் சேவக்கை துவக்க வீரராக களமிறக்கப் போகின்றார்களா என இந்திய கிரிகெட் வாரியம் முடிவு செய்ய வேண்டும். அப்படியெனில், மீதமுள்ள போட்டிக்கு சேவக்கை துவக்க வீரராக தொடர்ந்து விளையாடச் செய்து அவரது நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில், சேவக்கை "மிடில் ஆர்டரில்' களமிறக்கலாம் என திராவிட் தெரிவித்தார்.
|