செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், எட்டாவது ஆட்சிக்குழு கூட்டம்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழ்மொழி வளர்ச்சிக்காக இந்திய அரசினால் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் கீழ் அமைக்கப்பட்டதாகும். இந்நிறுவனம் தற்போது சென்னையில் இயங்கி வருகிறது. இதன் மூலமாகவே தமிழ்மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பண்டைய தமிழ் சமூகத்தின் கூறுகள் அனைத்தையும் வெளிப்படுத்துதல், ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல் என்பதனை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.
இந்நிறுவனத்தின் மூலம் தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது, இளம் ஆய்வாளர் விருது போன்றவை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகின்றன.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்,எட்டாவது ஆட்சிக் குழு கூட்டத்தின் போது 5 மொழிபெயர்ப்பு நூல்கள்,5 செம்மொழி செய்தி மடல்கள்,மற்றும் 5 ஒலி,ஒளிப் படங்கள் ஆகியவை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டு சிறப்பு செய்யப்பட்டுள்ளன.
|