LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தமிழச்சியின் கத்தி

செங்கான் உண்ண அழைத்தான்

தென்பாங்கு -- கண்ணிகள்

ஆனைத் தலைப் பாறையாம் - அத னண்டையில்
    அல்லி மலர்ப் பொய்கையாம்
    மேனி முழுக் காட்டியே - வரு வாயம்மா
    வெம்பசி தீர்ப்பா யம்மா.
    கூனல் அவரைப் பிஞ்சு - பொறித் தோம்;சுரைக்
    கூட்டு முடித்தோம் அம்மா;
    ஏனம் நிறை வாகவே - கருணைக் கிழங்
    கிட்டுக் குழம்பும் வைத்தோம்.

    சென்று வருவா யம்மா - புன லாடியே
    தின்று துயில்வா யம்மா.
    என்றுசெங் கான் சொல்லவே - அந்த ஏந்திழை
    ஏகினள் நீரா டினாள்.
    அன்னவள் சோறுண் டனள் - அவள் நெஞ்செலாம்
    அன்னவன் மேல் வைத்தனள்.
    தின்பன தின்றா னதும் - அந்தச் சேயிழை
    செங்கா னிடம் கூறுவாள்:

    'உண்டு களைப்பா றினோம் - மற வேனையா
    உரைப்பது கேட்பீ ரையா.
    அண்டி இருந்தேன் உமை - ஒரு நாளுமே
    அன்பு மறவே னையா;
    சண்டிச் சுதரி சன்சிங்க் - இன்றி ராவிலும்
    தையல் எனைத் தேடியே
    கொண்டதன் எண்ணத் தையே - நிறை வேற்றிடக்
    கூசிட மாட்டா னையா.

    அம்மையும் அப்பாவும் நீர் - என எண்ணினேன்
    ஆன துணை செய்குவீர்'
    இம்மொழி கள்கூறி னாள் - அந்த ஏந்திழை!
    இயம்பிடு கின்றான் செங்கான்:
    'எம்மைத் துரும் பாகவே - நினைக் கின்றனர்
    இங்கே அதிகா ரிகள்
    வெம்மைக் கொடும் பாம்புபோல் - அவர் சீறுவார்
    வெள்ளையை வெள்ளை என்றால்!

    தீய வடநாட் டினர்! - இவர் ஏதுக்கோ
    செஞ்சியில் வந்தா ரம்மா.
    நாயும் பிழைக்கா தம்மா - இவர் ஆட்சியில்
    நல்லவர் ஒப்பா ரம்மா.
    தீயும் புயற் காற்றுமே - இவர் நெஞ்சிலே
    செங்கோல் செலுத்து மம்மா.
    ஓயாது மக்கட் கெல்லாம் - இடை யூறுதான்
    உண்டாயிற் றம்மா' என்றான்.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.