LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்

செங்கீரைப்பருவம்

 

848 நீர்பூத்த தாமரை சமழ்ப்புறப் பொலியும்விழி நெடியமா லுபமன்னியர் -
      நின்னா கமத்தின்வழி புரிதீக்கை பெற்றநா ணீக்கின னெனப்புழுங்குந்,
தார்பூத்த கூந்தற் புவிக்கோதை யதுபெறத் தண்ணீரி லசைவிலாது -
      தானின் றருந்தவஞ் செய்வள்களை யாவுடைத் தன்மையளு மாதலாலப்,
பார்பூத்த நாற்றமுட் குறியாம லுட்கொண்ட பருவமொன்றே குறித்துப் -
      பங்கயச் செங்கைதலை மேல்வைத் தெடுத்தொரு பதஞ்சூட்டி முகமலர்ந்து,
சீர்பூத்த பேரருட் டிருமேனி கொண்டவன் செங்கீரை யாடியருளே -
      சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (1)
(1)
849 முந்தைமறை யாவையு முணர்ந்தநான் முகமுனிவன் முன்னின்று தாளமொத்த -
      முருகுவிரி பைந்துழாய் மாலைதுயல் வருபுய முகுந்தனெடு முழவதிர்க்க,
வந்தைதவி ராகாவு மூகூவு மேழிசை யமைத்தமிர்த தாரைவாக்க-
      வரகர வெனக்கணங் களிகொண்டு துளிகொண்ட வங்கணர்க ளாகியேத்த,
நிந்தைதவி ரிருமுனிவர் புடைநிற்க வேண்டுமென நினையாதி நினைவையாயி -
      னின்பழைய வுருவமொடு நேர்நிற்றி யாலென நிகழ்த்துதற் கஞ்சமாட்டேஞ் ,
சிந்தைகளி கூரவருள் வடிவாகி நின்றவன் செங்கீரை யாடியருளே -
      சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (2) 
(2)
850 மும்மையுல கும்புகழும் வேதா கமம்பகர் முழுக்குறி குணங் கடந்து - 
      மொழிகின்ற பரநாத பரவிந்து வுங்கழன் முழுத்தபே ரொளியாகிய,
நம்மையொரு மழவிளங் குழவியென வுட்கொடு நயந்துபா ராட்டுமறிவு - 
      நன்றா யிருந்த· தெனக்கருதி யையநீ நகையற்க நகைசெய்வையே, 
வெம்மையறி யாமையுடை யாரிவர்க ளென்றுநீ யின்றுதான் கண்டனைகொலா - 
      மென்றுநினை மென்றுநினையாங்களு நகைத்திடுவ மன்பினர்த மெய்ப்பில்வைப் பாயமுதல்வா, 
செம்மை நெறி யாரையு நிறுத்தவெழு கருணையோய் செங்கீரை யாடியருளே -
      சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (3)
(3)
851 ஐயசற் றிதுதிரு வுளஞ்செய்து கேட்கவய னரியையெண் ணாதயாங்க - 
      ளமைதர நினக்குவழி வழியடிமை யுண்மையென் றாவணம் வரைந்துதவுவோம்,
பொய்யமை தராதுபக லிரவுநின் குற்றேவல் போற்றுவ மதாஅன்று துதியும் -
      புதிதுபுதி தாகப் புரிந்திடுவ மிவைகளும் போதா வெனத்தெரிந்து,
வெய்யவுட லும்பொருளு மாவியு மடங்கா விருப்பிற் கொடுத்துவிடுவே - 
      மேலுமினியென் செய்து மிதனின்மேற் செய்பவர்கள் விண்ணுமிலையிது மொழிதலுஞ்,
செய்யதன் றினிநீ செயற்பால தென்கொலோ செங்கீரை யாடியருளே -
      சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (4)
(4)
852 காமரு மதிப்பிறையு மறிதிரைக் கங்கையுங் கங்காள மும்பிரமன்மால் - 
      கழிதலைத் தொடையலுங் காகோ தரங்களுங் காடுபடு பொற்கொன்றையு, 
மாமரு விருஞ்சடையு மாகிய பெருஞ்சுமை யகன்றுயிர்ப் புற்றதிலனா -
      லையநின் றிருமுடி யசைத்திட வருத்தமின் றடன்மிருக மோடுபரசுந் - 
தாமரு விலாமையாற் செங்கைநில மூன்றத் தடுக்குமிடை யூறுமின்று, 
      தாங்குகுஞ் சிதமின்மை யாலடி பதித்திடத் தடையெவன் புடைவிராலித்,
தேமரு வுறுங்காவி சூடிய புயாசலன் செங்கீரை யாடியருளே - 
      சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (5) 
(5)
வேறு.
853 பிறைபடு பற்குற ளுடனெளி யப்பிணர் பெறுவெரிந் மிசையொருதாள்
      பெயர்வற வூன்றுபு மற்றொரு பொற்றாள் பேண வெடுத்தொளியே
நிறைதரு குஞ்சித மாக்குத லன்று நெடுங்க னடந்தவ
      நிலவொரு பாத மெடுத்து நிமிர்ந்து நிகழ்த்தலு மன்றுபெருங்
கறையடி யானை யுரித்துரி மேனி கலப்புற மூடியொரு
      காலை முடக்கி மடக்குத லன்று கரும்பிர சம்பொழிறோ
றறைதரு மாவடு தண்டுறை நாத னாடுக செங்கீரை 
      யறிவுரு வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை. (6)
(6)
854 துங்கப் பெருமறை யந்தண ராதியர் சூழ்ந்தனர் கொண்டாடத்
      தோலா வாகம முற்றுஞ் சென்னி துளக்கி யெழுந்தாடச்
சங்கத் தமிழெனு மொருதே வுவகை தழைத்துல கத்தாடத்
      தளர்வுறு பரசம யப்பே யஞ்சுபு தலைசுற் றினவாடச்
சிங்கக் குருளை யெதிர்ப்படும் யானைத் திரளென வெங்கண்மலத்
      திரள்குடி வாங்கி நினைக்கரு தாருட் சென்று பதிந்தாட 
வங்கத் துறைகெழு மாவடு துறையிறை யாடுக செங்கீரை 
      யறிவுரு வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை. (7) 
(7)
855 ஒள்ளிய கந்தர மேவிய கருமை யொழிந்தனை யப்பொழுதே 
      யுற்ற மலத்தின் கருமையும் யாங்க ளொழிந்தனம் வெங்கொலைசால் 
வெள்ளிய கோட்டுக் கரியுரி போர்த்தல் விலங்கினை யப்பொழுதே 
      மேவிய மாயை போர்த்தலும் யாங்கள் விலங்கின மேவுபணப் 
புள்ளிய வாளர வத்தொகை பூணுதல் போக்கினை யப்பொழுதே 
      பொங்கு வினைத்தொகை பூணுதல் யாமும் போக்கின மலர்நடுவில் 
அள்ளிய வாவிய வம்பல வாண னாடுக செங்கீரை யறிவுரு வாகிய 
      வம்பல வாண னாடுக செங்கீரை. 
(8)
856 பரசம யத்தவர் வாயு ணுழைந்து பயின்றிடு பிருதிவியே 
      பற்றிய தொண்டின் வழிப்படு சைவப் பைங்கூழ் பாய்புனலே 
விரச வழுத்துநர் வெவ்வினை யடவி வெதுப்பி யெழுங்கனலே 
      மெய்யுற நோக்கினர் பாவ மெனுந்துய் விலக்க வுலாம்வளியே 
வரசர ணத்தின் மனத்தை நிறுத்தி வயக்கி முயக்குறுவான் 
      மாதவ மாற்றுந ருள்ளந் தோறும் வளைந்து விராம்வெளியே 
யரச வனத்தம ருங்குரு நாத னாடுக செங்கீரை யறிவுரு 
      வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை. 
(9)
வேறு.
857 நாவடுவொன்றநி னாமநவின்றிடு மொண்சீல நாடியவெங்களை 
      நீயயலென்றுநி னைந்தாய்கொல் 
லோவடுவொன்றிய காளிதமென்பது விண்டேநின் 
      னோடுறலென்றுதச் யாநிதியென்றெவ ரும்பேச 
மாவடுவென்றகண் மாதரொடுந்திகழ் பைந்தூவி 
      வாலெகினம்பல வாவிதொறுங்களி கொண்டாடு 
மாவடுதண்டுறை மேவுமிளங்கதிர் செங்கீரை 
      யாரருளம்பல வாணசவுந்தர செங்கீரை. 
(10)

 

848 நீர்பூத்த தாமரை சமழ்ப்புறப் பொலியும்விழி நெடியமா லுபமன்னியர் -

      நின்னா கமத்தின்வழி புரிதீக்கை பெற்றநா ணீக்கின னெனப்புழுங்குந்,

தார்பூத்த கூந்தற் புவிக்கோதை யதுபெறத் தண்ணீரி லசைவிலாது -

      தானின் றருந்தவஞ் செய்வள்களை யாவுடைத் தன்மையளு மாதலாலப்,

பார்பூத்த நாற்றமுட் குறியாம லுட்கொண்ட பருவமொன்றே குறித்துப் -

      பங்கயச் செங்கைதலை மேல்வைத் தெடுத்தொரு பதஞ்சூட்டி முகமலர்ந்து,

சீர்பூத்த பேரருட் டிருமேனி கொண்டவன் செங்கீரை யாடியருளே -

      சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (1)

(1)

849 முந்தைமறை யாவையு முணர்ந்தநான் முகமுனிவன் முன்னின்று தாளமொத்த -

      முருகுவிரி பைந்துழாய் மாலைதுயல் வருபுய முகுந்தனெடு முழவதிர்க்க,

வந்தைதவி ராகாவு மூகூவு மேழிசை யமைத்தமிர்த தாரைவாக்க-

      வரகர வெனக்கணங் களிகொண்டு துளிகொண்ட வங்கணர்க ளாகியேத்த,

நிந்தைதவி ரிருமுனிவர் புடைநிற்க வேண்டுமென நினையாதி நினைவையாயி -

      னின்பழைய வுருவமொடு நேர்நிற்றி யாலென நிகழ்த்துதற் கஞ்சமாட்டேஞ் ,

சிந்தைகளி கூரவருள் வடிவாகி நின்றவன் செங்கீரை யாடியருளே -

      சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (2) 

(2)

850 மும்மையுல கும்புகழும் வேதா கமம்பகர் முழுக்குறி குணங் கடந்து - 

      மொழிகின்ற பரநாத பரவிந்து வுங்கழன் முழுத்தபே ரொளியாகிய,

நம்மையொரு மழவிளங் குழவியென வுட்கொடு நயந்துபா ராட்டுமறிவு - 

      நன்றா யிருந்த· தெனக்கருதி யையநீ நகையற்க நகைசெய்வையே, 

வெம்மையறி யாமையுடை யாரிவர்க ளென்றுநீ யின்றுதான் கண்டனைகொலா - 

      மென்றுநினை மென்றுநினையாங்களு நகைத்திடுவ மன்பினர்த மெய்ப்பில்வைப் பாயமுதல்வா, 

செம்மை நெறி யாரையு நிறுத்தவெழு கருணையோய் செங்கீரை யாடியருளே -

      சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (3)

(3)

851 ஐயசற் றிதுதிரு வுளஞ்செய்து கேட்கவய னரியையெண் ணாதயாங்க - 

      ளமைதர நினக்குவழி வழியடிமை யுண்மையென் றாவணம் வரைந்துதவுவோம்,

பொய்யமை தராதுபக லிரவுநின் குற்றேவல் போற்றுவ மதாஅன்று துதியும் -

      புதிதுபுதி தாகப் புரிந்திடுவ மிவைகளும் போதா வெனத்தெரிந்து,

வெய்யவுட லும்பொருளு மாவியு மடங்கா விருப்பிற் கொடுத்துவிடுவே - 

      மேலுமினியென் செய்து மிதனின்மேற் செய்பவர்கள் விண்ணுமிலையிது மொழிதலுஞ்,

செய்யதன் றினிநீ செயற்பால தென்கொலோ செங்கீரை யாடியருளே -

      சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (4)

(4)

852 காமரு மதிப்பிறையு மறிதிரைக் கங்கையுங் கங்காள மும்பிரமன்மால் - 

      கழிதலைத் தொடையலுங் காகோ தரங்களுங் காடுபடு பொற்கொன்றையு, 

மாமரு விருஞ்சடையு மாகிய பெருஞ்சுமை யகன்றுயிர்ப் புற்றதிலனா -

      லையநின் றிருமுடி யசைத்திட வருத்தமின் றடன்மிருக மோடுபரசுந் - 

தாமரு விலாமையாற் செங்கைநில மூன்றத் தடுக்குமிடை யூறுமின்று, 

      தாங்குகுஞ் சிதமின்மை யாலடி பதித்திடத் தடையெவன் புடைவிராலித்,

தேமரு வுறுங்காவி சூடிய புயாசலன் செங்கீரை யாடியருளே - 

      சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (5) 

(5)

 

வேறு.

853 பிறைபடு பற்குற ளுடனெளி யப்பிணர் பெறுவெரிந் மிசையொருதாள்

      பெயர்வற வூன்றுபு மற்றொரு பொற்றாள் பேண வெடுத்தொளியே

நிறைதரு குஞ்சித மாக்குத லன்று நெடுங்க னடந்தவ

      நிலவொரு பாத மெடுத்து நிமிர்ந்து நிகழ்த்தலு மன்றுபெருங்

கறையடி யானை யுரித்துரி மேனி கலப்புற மூடியொரு

      காலை முடக்கி மடக்குத லன்று கரும்பிர சம்பொழிறோ

றறைதரு மாவடு தண்டுறை நாத னாடுக செங்கீரை 

      யறிவுரு வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை. (6)

(6)

854 துங்கப் பெருமறை யந்தண ராதியர் சூழ்ந்தனர் கொண்டாடத்

      தோலா வாகம முற்றுஞ் சென்னி துளக்கி யெழுந்தாடச்

சங்கத் தமிழெனு மொருதே வுவகை தழைத்துல கத்தாடத்

      தளர்வுறு பரசம யப்பே யஞ்சுபு தலைசுற் றினவாடச்

சிங்கக் குருளை யெதிர்ப்படும் யானைத் திரளென வெங்கண்மலத்

      திரள்குடி வாங்கி நினைக்கரு தாருட் சென்று பதிந்தாட 

வங்கத் துறைகெழு மாவடு துறையிறை யாடுக செங்கீரை 

      யறிவுரு வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை. (7) 

(7)

855 ஒள்ளிய கந்தர மேவிய கருமை யொழிந்தனை யப்பொழுதே 

      யுற்ற மலத்தின் கருமையும் யாங்க ளொழிந்தனம் வெங்கொலைசால் 

வெள்ளிய கோட்டுக் கரியுரி போர்த்தல் விலங்கினை யப்பொழுதே 

      மேவிய மாயை போர்த்தலும் யாங்கள் விலங்கின மேவுபணப் 

புள்ளிய வாளர வத்தொகை பூணுதல் போக்கினை யப்பொழுதே 

      பொங்கு வினைத்தொகை பூணுதல் யாமும் போக்கின மலர்நடுவில் 

அள்ளிய வாவிய வம்பல வாண னாடுக செங்கீரை யறிவுரு வாகிய 

      வம்பல வாண னாடுக செங்கீரை. 

(8)

856 பரசம யத்தவர் வாயு ணுழைந்து பயின்றிடு பிருதிவியே 

      பற்றிய தொண்டின் வழிப்படு சைவப் பைங்கூழ் பாய்புனலே 

விரச வழுத்துநர் வெவ்வினை யடவி வெதுப்பி யெழுங்கனலே 

      மெய்யுற நோக்கினர் பாவ மெனுந்துய் விலக்க வுலாம்வளியே 

வரசர ணத்தின் மனத்தை நிறுத்தி வயக்கி முயக்குறுவான் 

      மாதவ மாற்றுந ருள்ளந் தோறும் வளைந்து விராம்வெளியே 

யரச வனத்தம ருங்குரு நாத னாடுக செங்கீரை யறிவுரு 

      வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை. 

(9)

 

வேறு.

857 நாவடுவொன்றநி னாமநவின்றிடு மொண்சீல நாடியவெங்களை 

      நீயயலென்றுநி னைந்தாய்கொல் 

லோவடுவொன்றிய காளிதமென்பது விண்டேநின் 

      னோடுறலென்றுதச் யாநிதியென்றெவ ரும்பேச 

மாவடுவென்றகண் மாதரொடுந்திகழ் பைந்தூவி 

      வாலெகினம்பல வாவிதொறுங்களி கொண்டாடு 

மாவடுதண்டுறை மேவுமிளங்கதிர் செங்கீரை 

      யாரருளம்பல வாணசவுந்தர செங்கீரை. 

(10)

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.