|
||||||||
செங்கீரைப்பருவம் |
||||||||
848 நீர்பூத்த தாமரை சமழ்ப்புறப் பொலியும்விழி நெடியமா லுபமன்னியர் -
நின்னா கமத்தின்வழி புரிதீக்கை பெற்றநா ணீக்கின னெனப்புழுங்குந்,
தார்பூத்த கூந்தற் புவிக்கோதை யதுபெறத் தண்ணீரி லசைவிலாது -
தானின் றருந்தவஞ் செய்வள்களை யாவுடைத் தன்மையளு மாதலாலப்,
பார்பூத்த நாற்றமுட் குறியாம லுட்கொண்ட பருவமொன்றே குறித்துப் -
பங்கயச் செங்கைதலை மேல்வைத் தெடுத்தொரு பதஞ்சூட்டி முகமலர்ந்து,
சீர்பூத்த பேரருட் டிருமேனி கொண்டவன் செங்கீரை யாடியருளே -
சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (1)
(1)
849 முந்தைமறை யாவையு முணர்ந்தநான் முகமுனிவன் முன்னின்று தாளமொத்த -
முருகுவிரி பைந்துழாய் மாலைதுயல் வருபுய முகுந்தனெடு முழவதிர்க்க,
வந்தைதவி ராகாவு மூகூவு மேழிசை யமைத்தமிர்த தாரைவாக்க-
வரகர வெனக்கணங் களிகொண்டு துளிகொண்ட வங்கணர்க ளாகியேத்த,
நிந்தைதவி ரிருமுனிவர் புடைநிற்க வேண்டுமென நினையாதி நினைவையாயி -
னின்பழைய வுருவமொடு நேர்நிற்றி யாலென நிகழ்த்துதற் கஞ்சமாட்டேஞ் ,
சிந்தைகளி கூரவருள் வடிவாகி நின்றவன் செங்கீரை யாடியருளே -
சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (2)
(2)
850 மும்மையுல கும்புகழும் வேதா கமம்பகர் முழுக்குறி குணங் கடந்து -
மொழிகின்ற பரநாத பரவிந்து வுங்கழன் முழுத்தபே ரொளியாகிய,
நம்மையொரு மழவிளங் குழவியென வுட்கொடு நயந்துபா ராட்டுமறிவு -
நன்றா யிருந்த· தெனக்கருதி யையநீ நகையற்க நகைசெய்வையே,
வெம்மையறி யாமையுடை யாரிவர்க ளென்றுநீ யின்றுதான் கண்டனைகொலா -
மென்றுநினை மென்றுநினையாங்களு நகைத்திடுவ மன்பினர்த மெய்ப்பில்வைப் பாயமுதல்வா,
செம்மை நெறி யாரையு நிறுத்தவெழு கருணையோய் செங்கீரை யாடியருளே -
சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (3)
(3)
851 ஐயசற் றிதுதிரு வுளஞ்செய்து கேட்கவய னரியையெண் ணாதயாங்க -
ளமைதர நினக்குவழி வழியடிமை யுண்மையென் றாவணம் வரைந்துதவுவோம்,
பொய்யமை தராதுபக லிரவுநின் குற்றேவல் போற்றுவ மதாஅன்று துதியும் -
புதிதுபுதி தாகப் புரிந்திடுவ மிவைகளும் போதா வெனத்தெரிந்து,
வெய்யவுட லும்பொருளு மாவியு மடங்கா விருப்பிற் கொடுத்துவிடுவே -
மேலுமினியென் செய்து மிதனின்மேற் செய்பவர்கள் விண்ணுமிலையிது மொழிதலுஞ்,
செய்யதன் றினிநீ செயற்பால தென்கொலோ செங்கீரை யாடியருளே -
சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (4)
(4)
852 காமரு மதிப்பிறையு மறிதிரைக் கங்கையுங் கங்காள மும்பிரமன்மால் -
கழிதலைத் தொடையலுங் காகோ தரங்களுங் காடுபடு பொற்கொன்றையு,
மாமரு விருஞ்சடையு மாகிய பெருஞ்சுமை யகன்றுயிர்ப் புற்றதிலனா -
லையநின் றிருமுடி யசைத்திட வருத்தமின் றடன்மிருக மோடுபரசுந் -
தாமரு விலாமையாற் செங்கைநில மூன்றத் தடுக்குமிடை யூறுமின்று,
தாங்குகுஞ் சிதமின்மை யாலடி பதித்திடத் தடையெவன் புடைவிராலித்,
தேமரு வுறுங்காவி சூடிய புயாசலன் செங்கீரை யாடியருளே -
சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (5)
(5)
வேறு.
853 பிறைபடு பற்குற ளுடனெளி யப்பிணர் பெறுவெரிந் மிசையொருதாள்
பெயர்வற வூன்றுபு மற்றொரு பொற்றாள் பேண வெடுத்தொளியே
நிறைதரு குஞ்சித மாக்குத லன்று நெடுங்க னடந்தவ
நிலவொரு பாத மெடுத்து நிமிர்ந்து நிகழ்த்தலு மன்றுபெருங்
கறையடி யானை யுரித்துரி மேனி கலப்புற மூடியொரு
காலை முடக்கி மடக்குத லன்று கரும்பிர சம்பொழிறோ
றறைதரு மாவடு தண்டுறை நாத னாடுக செங்கீரை
யறிவுரு வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை. (6)
(6)
854 துங்கப் பெருமறை யந்தண ராதியர் சூழ்ந்தனர் கொண்டாடத்
தோலா வாகம முற்றுஞ் சென்னி துளக்கி யெழுந்தாடச்
சங்கத் தமிழெனு மொருதே வுவகை தழைத்துல கத்தாடத்
தளர்வுறு பரசம யப்பே யஞ்சுபு தலைசுற் றினவாடச்
சிங்கக் குருளை யெதிர்ப்படும் யானைத் திரளென வெங்கண்மலத்
திரள்குடி வாங்கி நினைக்கரு தாருட் சென்று பதிந்தாட
வங்கத் துறைகெழு மாவடு துறையிறை யாடுக செங்கீரை
யறிவுரு வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை. (7)
(7)
855 ஒள்ளிய கந்தர மேவிய கருமை யொழிந்தனை யப்பொழுதே
யுற்ற மலத்தின் கருமையும் யாங்க ளொழிந்தனம் வெங்கொலைசால்
வெள்ளிய கோட்டுக் கரியுரி போர்த்தல் விலங்கினை யப்பொழுதே
மேவிய மாயை போர்த்தலும் யாங்கள் விலங்கின மேவுபணப்
புள்ளிய வாளர வத்தொகை பூணுதல் போக்கினை யப்பொழுதே
பொங்கு வினைத்தொகை பூணுதல் யாமும் போக்கின மலர்நடுவில்
அள்ளிய வாவிய வம்பல வாண னாடுக செங்கீரை யறிவுரு வாகிய
வம்பல வாண னாடுக செங்கீரை.
(8)
856 பரசம யத்தவர் வாயு ணுழைந்து பயின்றிடு பிருதிவியே
பற்றிய தொண்டின் வழிப்படு சைவப் பைங்கூழ் பாய்புனலே
விரச வழுத்துநர் வெவ்வினை யடவி வெதுப்பி யெழுங்கனலே
மெய்யுற நோக்கினர் பாவ மெனுந்துய் விலக்க வுலாம்வளியே
வரசர ணத்தின் மனத்தை நிறுத்தி வயக்கி முயக்குறுவான்
மாதவ மாற்றுந ருள்ளந் தோறும் வளைந்து விராம்வெளியே
யரச வனத்தம ருங்குரு நாத னாடுக செங்கீரை யறிவுரு
வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை.
(9)
வேறு.
857 நாவடுவொன்றநி னாமநவின்றிடு மொண்சீல நாடியவெங்களை
நீயயலென்றுநி னைந்தாய்கொல்
லோவடுவொன்றிய காளிதமென்பது விண்டேநின்
னோடுறலென்றுதச் யாநிதியென்றெவ ரும்பேச
மாவடுவென்றகண் மாதரொடுந்திகழ் பைந்தூவி
வாலெகினம்பல வாவிதொறுங்களி கொண்டாடு
மாவடுதண்டுறை மேவுமிளங்கதிர் செங்கீரை
யாரருளம்பல வாணசவுந்தர செங்கீரை.
(10)
848 நீர்பூத்த தாமரை சமழ்ப்புறப் பொலியும்விழி நெடியமா லுபமன்னியர் - நின்னா கமத்தின்வழி புரிதீக்கை பெற்றநா ணீக்கின னெனப்புழுங்குந், தார்பூத்த கூந்தற் புவிக்கோதை யதுபெறத் தண்ணீரி லசைவிலாது - தானின் றருந்தவஞ் செய்வள்களை யாவுடைத் தன்மையளு மாதலாலப், பார்பூத்த நாற்றமுட் குறியாம லுட்கொண்ட பருவமொன்றே குறித்துப் - பங்கயச் செங்கைதலை மேல்வைத் தெடுத்தொரு பதஞ்சூட்டி முகமலர்ந்து, சீர்பூத்த பேரருட் டிருமேனி கொண்டவன் செங்கீரை யாடியருளே - சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (1) (1) 849 முந்தைமறை யாவையு முணர்ந்தநான் முகமுனிவன் முன்னின்று தாளமொத்த - முருகுவிரி பைந்துழாய் மாலைதுயல் வருபுய முகுந்தனெடு முழவதிர்க்க, வந்தைதவி ராகாவு மூகூவு மேழிசை யமைத்தமிர்த தாரைவாக்க- வரகர வெனக்கணங் களிகொண்டு துளிகொண்ட வங்கணர்க ளாகியேத்த, நிந்தைதவி ரிருமுனிவர் புடைநிற்க வேண்டுமென நினையாதி நினைவையாயி - னின்பழைய வுருவமொடு நேர்நிற்றி யாலென நிகழ்த்துதற் கஞ்சமாட்டேஞ் , சிந்தைகளி கூரவருள் வடிவாகி நின்றவன் செங்கீரை யாடியருளே - சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (2) (2) 850 மும்மையுல கும்புகழும் வேதா கமம்பகர் முழுக்குறி குணங் கடந்து - மொழிகின்ற பரநாத பரவிந்து வுங்கழன் முழுத்தபே ரொளியாகிய, நம்மையொரு மழவிளங் குழவியென வுட்கொடு நயந்துபா ராட்டுமறிவு - நன்றா யிருந்த· தெனக்கருதி யையநீ நகையற்க நகைசெய்வையே, வெம்மையறி யாமையுடை யாரிவர்க ளென்றுநீ யின்றுதான் கண்டனைகொலா - மென்றுநினை மென்றுநினையாங்களு நகைத்திடுவ மன்பினர்த மெய்ப்பில்வைப் பாயமுதல்வா, செம்மை நெறி யாரையு நிறுத்தவெழு கருணையோய் செங்கீரை யாடியருளே - சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (3) (3) 851 ஐயசற் றிதுதிரு வுளஞ்செய்து கேட்கவய னரியையெண் ணாதயாங்க - ளமைதர நினக்குவழி வழியடிமை யுண்மையென் றாவணம் வரைந்துதவுவோம், பொய்யமை தராதுபக லிரவுநின் குற்றேவல் போற்றுவ மதாஅன்று துதியும் - புதிதுபுதி தாகப் புரிந்திடுவ மிவைகளும் போதா வெனத்தெரிந்து, வெய்யவுட லும்பொருளு மாவியு மடங்கா விருப்பிற் கொடுத்துவிடுவே - மேலுமினியென் செய்து மிதனின்மேற் செய்பவர்கள் விண்ணுமிலையிது மொழிதலுஞ், செய்யதன் றினிநீ செயற்பால தென்கொலோ செங்கீரை யாடியருளே - சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (4) (4) 852 காமரு மதிப்பிறையு மறிதிரைக் கங்கையுங் கங்காள மும்பிரமன்மால் - கழிதலைத் தொடையலுங் காகோ தரங்களுங் காடுபடு பொற்கொன்றையு, மாமரு விருஞ்சடையு மாகிய பெருஞ்சுமை யகன்றுயிர்ப் புற்றதிலனா - லையநின் றிருமுடி யசைத்திட வருத்தமின் றடன்மிருக மோடுபரசுந் - தாமரு விலாமையாற் செங்கைநில மூன்றத் தடுக்குமிடை யூறுமின்று, தாங்குகுஞ் சிதமின்மை யாலடி பதித்திடத் தடையெவன் புடைவிராலித், தேமரு வுறுங்காவி சூடிய புயாசலன் செங்கீரை யாடியருளே - சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (5) (5)
வேறு. 853 பிறைபடு பற்குற ளுடனெளி யப்பிணர் பெறுவெரிந் மிசையொருதாள் பெயர்வற வூன்றுபு மற்றொரு பொற்றாள் பேண வெடுத்தொளியே நிறைதரு குஞ்சித மாக்குத லன்று நெடுங்க னடந்தவ நிலவொரு பாத மெடுத்து நிமிர்ந்து நிகழ்த்தலு மன்றுபெருங் கறையடி யானை யுரித்துரி மேனி கலப்புற மூடியொரு காலை முடக்கி மடக்குத லன்று கரும்பிர சம்பொழிறோ றறைதரு மாவடு தண்டுறை நாத னாடுக செங்கீரை யறிவுரு வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை. (6) (6) 854 துங்கப் பெருமறை யந்தண ராதியர் சூழ்ந்தனர் கொண்டாடத் தோலா வாகம முற்றுஞ் சென்னி துளக்கி யெழுந்தாடச் சங்கத் தமிழெனு மொருதே வுவகை தழைத்துல கத்தாடத் தளர்வுறு பரசம யப்பே யஞ்சுபு தலைசுற் றினவாடச் சிங்கக் குருளை யெதிர்ப்படும் யானைத் திரளென வெங்கண்மலத் திரள்குடி வாங்கி நினைக்கரு தாருட் சென்று பதிந்தாட வங்கத் துறைகெழு மாவடு துறையிறை யாடுக செங்கீரை யறிவுரு வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை. (7) (7) 855 ஒள்ளிய கந்தர மேவிய கருமை யொழிந்தனை யப்பொழுதே யுற்ற மலத்தின் கருமையும் யாங்க ளொழிந்தனம் வெங்கொலைசால் வெள்ளிய கோட்டுக் கரியுரி போர்த்தல் விலங்கினை யப்பொழுதே மேவிய மாயை போர்த்தலும் யாங்கள் விலங்கின மேவுபணப் புள்ளிய வாளர வத்தொகை பூணுதல் போக்கினை யப்பொழுதே பொங்கு வினைத்தொகை பூணுதல் யாமும் போக்கின மலர்நடுவில் அள்ளிய வாவிய வம்பல வாண னாடுக செங்கீரை யறிவுரு வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை. (8) 856 பரசம யத்தவர் வாயு ணுழைந்து பயின்றிடு பிருதிவியே பற்றிய தொண்டின் வழிப்படு சைவப் பைங்கூழ் பாய்புனலே விரச வழுத்துநர் வெவ்வினை யடவி வெதுப்பி யெழுங்கனலே மெய்யுற நோக்கினர் பாவ மெனுந்துய் விலக்க வுலாம்வளியே வரசர ணத்தின் மனத்தை நிறுத்தி வயக்கி முயக்குறுவான் மாதவ மாற்றுந ருள்ளந் தோறும் வளைந்து விராம்வெளியே யரச வனத்தம ருங்குரு நாத னாடுக செங்கீரை யறிவுரு வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை. (9)
வேறு. 857 நாவடுவொன்றநி னாமநவின்றிடு மொண்சீல நாடியவெங்களை நீயயலென்றுநி னைந்தாய்கொல் லோவடுவொன்றிய காளிதமென்பது விண்டேநின் னோடுறலென்றுதச் யாநிதியென்றெவ ரும்பேச மாவடுவென்றகண் மாதரொடுந்திகழ் பைந்தூவி வாலெகினம்பல வாவிதொறுங்களி கொண்டாடு மாவடுதண்டுறை மேவுமிளங்கதிர் செங்கீரை யாரருளம்பல வாணசவுந்தர செங்கீரை. (10)
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|