LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1275 - கற்பியல்

Next Kural >

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) செறி தொடி செய்து இறந்த கள்ளம் - நெருங்கிய வளைகளையுடையாள் என்கண் இல்லாததொன்றனை உட்கொண்டு அது காரணமாக என்னை மறைத்துப் போன குறிப்பு; உறுதுயர் தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து - என் மிக்க துயரைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை உடைத்து. (உட்கொண்டது - பிரிவு. கள்ளம் - ஆகுபெயர். மறைத்தற் குறிபபுத் தானும் உடன்போக்கு உட்கொண்டது. உறுதுயர் - நன்று செய்யத் தீங்கு விளைதலானும் அதுதான் தீர்திறம் பெறாமையானும் உளதாயது. மருந்து - அப்பிரிவின்மை தோழியால் தெளிவித்தல். 'நீ அது செய்தல் வேண்டும்' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
செறிந்தவளையினை யுடையாள் செய்து அகன்ற களவு நீ உற்றதொரு துன்பத்தைத் தீர்ப்பதொரு மருந்தாதலை உடைத்து. தோழி மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தவழி, கேளாரைப்போலத் தலைமகள் அகன்ற செவ்வியுள் எதிர்ப்பட்ட தலைமகற்கு நின்குறை முடியும்; நீ இவ்விடைச்செல் லென்று தோழி கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(இதுவுமது) செறிதொடி செய்து இறந்த கள்ளம்-நெருங்கிய வளையல்களை யணிந்த என் காதலி , என்னிடத்தில்லாத தொன்றைக் கருதிக் கொண்டு அது கரணியமாக எனக்குமறைத்து வைத்த குறிப்பு ; உறு துயர் தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து- என் பெருந்துயரைத் தீர்க்கும் மருந்தாவ தொன்றை உடையதாயிருக்கின்றது. இல்லாததொன்று பிரிவு . ' கள்ளம் ' ஆகுபெயர் . மறைத்து வைத்தது உடன்போக் குட்கொண்டது . ' உறுதுயர் ' பெருமகிழ் வுறுத்தற்குச் செய்த பாராட்டு வினைகளை பிரிவுக்குறிப்பாகக் கொண்டு அஞ்சியதால் உண்டான மன வருத்தம் . 'உறு' உரிச்சொல் மருந்தாவது பிரிவின்மை தோழியால் தெரிவித்தல் . அதை உடனே செய்தல் வேண்டு மென்பதாம் . ' செறி தொடி ' அன்மொழித் தொகை .
கலைஞர் உரை:
வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
நெருங்கி வளையல்களை அணிந்த என் மனைவி நான் மட்டுமே அறிய மறைத்துக் காட்டும் ஒரு குறிப்பில் என் பெருங்கவலையைத் தீர்க்கும் மருந்து ஒன்றும் உண்டு.
Translation
The secret wiles of her with thronging armlets decked, Are medicines by which my raising grief is checked.
Explanation
The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow.
Transliteration
Seridhoti Seydhirandha Kallam Urudhuyar Theerkkum Marundhondru Utaiththu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >