செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர். |
|
|
திருக்குறள் AUDIO |
|
|
|
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition): |
நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியுமோ?. |
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition): |
(இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; யாம் உற்றால் உறாஅதவர் - யாம் தம்மையுறத் தாம் உறாத நம் காதலரை; செற்றாரெனக் கைவிடல் உண்டோ - வெறுத்தார் என்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலி நமக்குண்டோ? இல்லை.(உறுதல் - அன்பு படுதல். 'அவ்வலி யின்மையின் அவர்பால் செல்வதே நமக்குத் தகுவது' என்பதாம்.) |
மணக்குடவர் உரை: |
நெஞ்சே! யாம் உற்றபின்பு உறாது போனவர் செறுத்தாரென்று அவரைக் கைவிடுதல் இயல்போ?. உறுதல்- விரைந்துறுதல். தலைமகள் தலைமகன் கொடுமையை உட்கொண்ட நெஞ்சிற்குச் சொல்லியது. |
தேவநேயப் பாவாணர் உரை: |
(இதுவுமது) (இ-ரை.) நெஞ்சே - என் உள்ளமே ! ; யாம் உற்றால் உறாதவர் - யாம் அவர்பால் அன்புகொண்டாலும் தாம் எம்பால் அன்பு கொள்ளாத நம் காதலரை ; செற்றார் எனக் கைவிடல் உண்டோ - வெறுத்தாரென்று நாம் அவரை விட்டு விலகுதல் நமக்குத் தகுமோ ? தகாதே ! உறுதல் அன்பாற் பொருந்துதல் . அவர்பாற் செல்லுவதே நமக்குத் தகும் என்பதாம். |
கலைஞர் உரை: |
நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?. |
சாலமன் பாப்பையா உரை: |
நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?. |
Translation |
O heart, as a foe, can I abandon utterly
Him who, though I long for him, longs not for me?. |
Explanation |
O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?. |
Transliteration |
Setraar Enakkai Vitalunto Nenjeyaam
Utraal Uraaa Thavar |
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம் |
|