ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான ஐ திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க, படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறி, திருநங்கைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உண்மையில் இந்தியாவின் மேக்கப் ஆர்டிஸ்டான பிரபல ஓஜாஸ் ரஜனி தன்னுடைய சொந்த பாத்திரத்திலேயே ‘ஐ’ படத்தில் நடித்துள்ளார்.
விக்ரமிற்கு மேக்கப் மற்றும் ஸ்டைலிஸ்டாக ஓஸ்மா என்ற பெயரில் ஒரு கட்டத்தில் விக்ரமின் மீது காதல் கொள்ளும்படியும் அதை விக்ரம் உதாசினப்படுத்துவது போன்றும் காட்சிகள் நகரும். படத்தின் பின் பாதியில் முக்கிய வில்லன்களில் ஒருவராக மாறுவார் ஓஜாஸ். தற்போது கிளம்பியுள்ள போராட்டங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் ஓஜாஸ் தனது கடிதம் வாயிலாக பதில் அனுப்பியுள்ளார்.
அக்கடித்தத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, இந்த படத்தினை பார்த்து யாரும் கொதித்து எழ வேண்டாம். இயக்குநர் ஷங்கர் படத்தில் என்னுடைய கதாப்பாத்திரத்தினை அழகுடனும் நேர்த்தியுடனும் வடிவமைத்திருக்கிறார். என் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற காதல் வயப்படுதல் அதனால் ஏற்படும் விளைவு மட்டுமே படத்தில் காட்டியிருக்கிறார். அது திருநங்கைகளை எந்த விதத்திலும் தவறாக காட்டப்படவில்லை.
‘ஐ’ சிறப்பாகவும், சிறந்த ஸ்டார் நட்சத்திரங்களைக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. நான் வெளிநாட்டில் ஷீட்டிங்கில் இருக்கிறேன். படம் நல்ல முறையில் ஓடிகொண்டிருக்கிறது யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் திருநங்கை ஓஜாஸ்.
|