ஐ படத்தை தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், ஆந்திராவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு பிரவேசித்த சிரஞ்சீவிக்கு, அங்கே எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்க வில்லையாம். இதனால், அவருக்கு அவருக்கு மீண்டும் சினிமா ஆசை துளிர்விட்டது.
இது தவிர 149 படங்களில் நடித்துவிட்ட சிரஞ்சீவிக்கு 15௦வது படத்தில் நடித்துவிட்டால் தனது திரையுலக பயணம் திருப்தியாக முற்றுப்பெற்றது போல இருக்கும் என நினைக்கிறார். அதனால் தனது 15௦வது படத்திற்கான சிறந்த கதையை சொல்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்றெல்லாம் கூட அறிவித்தார்.
அவர் எதிர்பார்த்த கதை கிடைக்காமல் போகவே, அவரது கவனம் ஷங்கர் மீது திரும்பியுள்ளது. ஷங்கர் ஒரு அவுட் லைன் சொல்லி அது சிரஞ்சீவிக்கு பிடித்துப்போனதாகவும் தெரிகிறது.
ஷங்கர் - சிரஞ்சீவி இயக்கத்தில் ஒரு புதிய படம் உருவானால், தமிழ், இந்தியில் வெற்றி கொடி நாட்டிய ஷங்கருக்கு, தெலுங்கிலும் மெகா ஹிட் வெற்றி கிடைக்கும் என்பது உறுதி..
|