உலகில் உள்ள பணக்கார கோவில்களில் ஒன்றான, ஷீரடி சாய்பாபா கோவிலில், இலவச லட்டு பிரசாத வினியோகம் நேற்று முதல் துவக்கப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் சீரடியில் புகழ்பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு மூன்று லட்டுக்கள் கொண்ட பாக்கெட், 10 ரூபாய்க்கு வழங்கப்பட்டது.இது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. அதன்படி, நேற்று முதல், இலவச லட்டு பாக்கெட் விநியோகம் நடைபெற்றது. இதுதவிர, கூடுதலாக லட்டு பாக்கெட் தேவைப்படுவோர், 20 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு லட்டும் 50 கிராம் எடை கொண்டதாக இருக்கும். இந்த திட்டத்துக்காக ரூ.13 கோடியே 29 லட்சத்து 39 ஆயிரத்து 586 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
|