|
|||||
சீர்காழி அருகே வெளிநாட்டினர் ஆடிய சிவ தாண்டவம்! |
|||||
சீர்காழி அருகே காரைமேடு ஒளி லாயத்தில் வெளிநாட்டினர் சிவதாண்டவம் ஆடினர். நாகை மாவட்டம், சீர்காழி அருகே காரை மேட்டில் 18 சித்தர்கள் சத்குரு ஒளி லாயம் பீடம் அமைந்து உள்ளது. இங்கு 18 சித்தர்களுக்கும் தனித் தனியாக கோயில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் பவுர்ணமி தோறும் உலக நன்மைக்காக, மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. 27 நட்சத்திரத்திற்கு உரிய மரங்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன. பசு மாடுகளை பாதுகாக்க கோசாலை அமைக்கப்பட்டுள்ளது. நாடி ராஜேந்திர சுவாமிகள் ஒளி லாயத்தில் ஜீவசமாதி அடைந்து அருள்பாலித்து வருகிறார். இத்தகைய சிறப்புமிக்க ஒளிலாயத்திற்கு வெளிநாட்டினர் உள்நாட்டினர் என தினந்தோறும் ஏராளமானவர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பேட்ரிக், பிரேசிலைச் சேர்ந்த லூயிஸா, நிக்கோலசை சேர்ந்த லியோ, ஹாலந்தைச் சேர்ந்த டிமோ, பிலிப்பைன்சை சேர்ந்த லுலு, சீனாவைச் சேர்ந்த லிரென் ஆகியோர் ஒளிலாயம் வந்தனர். பின்பு அவர்கள் சித்தர்கள் விநாயகர், சிவன், ராஜேந்திர சுவாமி சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அனைவரும் சிவன் சன்னதி முன்பு சிவதாண்டவ நடனம் ஆடி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தினர். இதனை அங்கு கூடியிருந்த பக்தர்கள் பார்த்து ரசித்து வெளிநாட்டினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை ஒளிலாய நிர்வாகிகள் செய்து இருந்தனர். |
|||||
by Mani Bharathi on 22 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|