சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருளுகிறார். சிவனின் கருவறைக்கு அடியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் சுனைஒன்று உள்ளதாகச் சொல்கிறார்கள். அம்பாள் சன்னதியில் தரப்படும் வெள்ளைக்கயிறைக் கட்டிக்கொள்ள நோய்கள் வராது என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் சனீஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜர் ஆகியோர் அருளுகின்றனர்.
தலவிநாயகரின் திருநாமம் பாலகணபதி. இத்தலத்தில் துர்வாசமுனிவர் யாகம் செய்து அம்பாளை குழந்தை வடிவில் பெற்றார். அவள் கன்னிப்பருவம் எய்தியதும் ஆதீஸ்வரருக்கு மணம் முடித்து வைத்தார். இந்த தேவியை துர்வாசரே இக்கோயிலில் பிரதிஷ்டை செய்தார். புகுந்த வீட்டுக்கு வந்ததும் நந்தி தலை திரும்பியிருப்பதைப் பார்த்தாள்.
தன் கணவரைக் ஒரு பக்தனுக்காக காட்டிக் கொடுத்ததால் இப்படி இருப்பதாகத் தெரிய வந்ததும், அவரைத் தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த அவள், அதன் மீது அமர்ந்தாள். நந்திதேவருக்கும் மகிழ்ச்சி. சிவனை மட்டுமே சுமந்த தனக்கு அம்பிகையையும் சுமக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து மேலும் மேலும் சந்தோஷப்பட்டார். |