சிவனுக்கும், அம்பிகைக்கும் இடையே முருகன் வீற்றிருப்பதும், மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி அமைந்துள்ளதும் தலத்தின் சிறப்பு. இங்கு கால சுப்ரமணியர், கருணாகரவல்லி அம்மன் சன்னதிகள் உள்ளன. சிவனுக்கும், அம்பிகைக்கும் இடையே முருகன் வீற்று இருப்பதால் இது சோமஸ்கந்த அமைப்பு கோயிலாக திகழ்கிறது. இக்கோயில் 1,300 ஆண்டு பழமை வாய்ந்தது. ஆலங்குடியிலுள்ள தட்சிணாமூர்த்திக்கு இணையாக, ஆசியாவிலேயே மிகப் பெரிய தட்சிணாமூர்த்தி இங்கு இருக்கிறார்.
தட்சிணாமூர்த்தி சிலைக்கு மேல் லிங்கம் இருப்பது சிறப்பு. மூலவர் மணல், நுரையால் செய்யப்பட்டதால் தயிர், நெய், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதில்லை. இங்கு ஆயுள் விருத்திக்கு ஹோமம் நடக்கிறது. 60 வயது பூர்த்தியானவுடன் சஷ்டியப்தபூர்த்தி, 70 பூர்த்தியானவுடன் பீமரதசாந்தி, 80 பூர்த்தியான வுடன் சதாபிஷேகம், 90 வயது பூர்த்தியானவுடன் கனகாபிஷேகம் செய்யப்படுகிறது. அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் இதைச் செய்வது சிறப்பு. |