கைலாசநாதர் மீது சித்திரை முதல் வாரத்தில் சூரிய ஒளி விழுவது தலத்தின் சிறப்பு. பொதுவாக கல்தூண்களை பயன்படுத்தியே கோயில்களை கட்டியுள்ளனர்.
ஆனால், திருமூலஸ்தானத்தில் சற்று வித்தியாசமான முறையில், ஆஸ்தான மண்டபம் சிறிய அளவிலான செங்கற்களால் குகை வடிவில் கட்டப்பட்டுள்ளது.
ஆர்ச் வடிவில் அமைக்கப்பட்ட கோயிலின் மேற்பகுதியிலுள்ள செங்கற்களில் காரை பெயர்ந்து கிடக்கிறது. சிற்பக் கலைக்கும், கட்டடக்கலைக்கும்
எடுத்துக்காட்டான இந்த வித்தியாசமான கோயில் சிதிலம்அடைந்துள்ளதால் வழிபாடுகள் சரிவர நடக்கவில்லை.கோயில் கருவறையின் வெளிப்புறச் சுவர்களை
சுற்றி கிரந்த எழுத்துக்களால் ஆன கல்வெட்டுகள் உள்ளன. கோயில் பராமரிப்புக்காக பலராலும் பலகாலங்களில் நன்கொடையாக அளிக்கப் பட்டுள்ள விபரம்
இதில் காணப்படுகிறது.
கைலாசநாதர் மீது சித்திரை முதல் வாரத்தில் சூரிய ஒளி விழுவது தலத்தின் சிறப்பு. பொதுவாக கல்தூண்களை பயன்படுத்தியே கோயில்களை கட்டியுள்ளனர். ஆனால், திருமூலஸ்தானத்தில் சற்று வித்தியாசமான முறையில், ஆஸ்தான மண்டபம் சிறிய அளவிலான செங்கற்களால் குகை வடிவில் கட்டப்பட்டுள்ளது. ஆர்ச் வடிவில் அமைக்கப்பட்ட கோயிலின் மேற்பகுதியிலுள்ள செங்கற்களில் காரை பெயர்ந்து கிடக்கிறது.
சிற்பக் கலைக்கும், கட்டடக்கலைக்கும் எடுத்துக்காட்டான இந்த வித்தியாசமான கோயில் சிதிலம்அடைந்துள்ளதால் வழிபாடுகள் சரிவர நடக்கவில்லை. கோயில் கருவறையின் வெளிப்புறச் சுவர்களை சுற்றி கிரந்த எழுத்துக்களால் ஆன கல்வெட்டுகள் உள்ளன. கோயில் பராமரிப்புக்காக பலராலும் பலகாலங்களில் நன்கொடையாக அளிக்கப் பட்டுள்ள விபரம் இதில் காணப்படுகிறது. |