பெரும்பாலான சிவாலயங்களில் வருடத்தில் சில விநாடிகள் மட்டும், சூரியன் தனது ஒளிக்கிரணங் களால் சுவாமியை பூஜை செய்வார். ஆனால், இங்கு மார்ச் 10
முதல் 21 வரை, செப்டம்பர் 19 முதல் 30 வரையில், 24 நாட்கள் தொடர்ச்சியாக சூரியன் பூஜை செய்கிறார். இதனால், இங்கு நவக்கிரக சன்னதி
கிடையாது.இங்குள்ள தலவிநாயகர் சித்தி விநாயகர்.இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக விநாயகர் சன்னதியில் வழிபாடு நடத்தலாம். இதன் மூலம் அவர்கள்
கண்ட கனவை நனவாக்கலாம் என்ற நம்பிக்கை நிறைவேற மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் உள்ள வில்வமரத்தடி விநாயகர் சன்னதியில் வழிபாடு
செய்யலாம்.மாரியம்மன் தெப்பத்தின் மேற்கு கரையில் உள்ள இத்தலத்திற்கு, தெப்பமையத்தில் உள்ள மண்டபத்தின் விமானமே கோபுரமாக அமைந்துள் ளது.
ஒரே இடத்தில் நின்று அம்பாளையும், சிவனையும் தரிசனம் செய்யலாம். முன்புறம் உயரமான நந்தி, நடராஜர், கிருஷ்ணன், ஆஞ்சநேயர், சுப்பிரமணியர், துர்க்கை,
விநாயகர் ஆகியோரும் உள்ளனர். கோயில் தூண்களில் உள்ள சிற்பங்கள், சிறப்பாக உள்ளன. இங்கு தெட்சிணாமூர்த்தி, பிரகார கோஷ்டத்தில் அமைந்ததோடு
மட்டுமின்றி சிவனுக்கு முன்புறமுள்ள தூணில் கையில் வீணை கொண்டு, "வீணை தெட்சிணாமூர்த்தியாக' உள்ளது சிறப்பு. இவரை வணங்கிட கல்வி, கேள்வி
மற்றும் இசைஞானம் பெற்று சிறக்கலாம் என்பது நம்பிக்கை.
பெரும்பாலான சிவாலயங்களில் வருடத்தில் சில விநாடிகள் மட்டும், சூரியன் தனது ஒளிக்கிரணங் களால் சுவாமியை பூஜை செய்வார். ஆனால், இங்கு மார்ச் 10 முதல் 21 வரை, செப்டம்பர் 19 முதல் 30 வரையில், 24 நாட்கள் தொடர்ச்சியாக சூரியன் பூஜை செய்கிறார். இதனால், இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. இங்குள்ள தலவிநாயகர் சித்தி விநாயகர்.
மாரியம்மன் தெப்பத்தின் மேற்கு கரையில் உள்ள இத்தலத்திற்கு, தெப்பமையத்தில் உள்ள மண்டபத்தின் விமானமே கோபுரமாக அமைந்துள்ளது. ஒரே இடத்தில் நின்று அம்பாளையும், சிவனையும் தரிசனம் செய்யலாம். முன்புறம் உயரமான நந்தி, நடராஜர், கிருஷ்ணன், ஆஞ்சநேயர், சுப்பிரமணியர், துர்க்கை, விநாயகர் ஆகியோரும் உள்ளனர்.
கோயில் தூண்களில் உள்ள சிற்பங்கள், சிறப்பாக உள்ளன. இங்கு தெட்சிணாமூர்த்தி, பிரகார கோஷ்டத்தில் அமைந்ததோடு மட்டுமின்றி சிவனுக்கு முன்புறமுள்ள தூணில் கையில் வீணை கொண்டு, "வீணை தெட்சிணாமூர்த்தியாக' உள்ளது சிறப்பு. இவரை வணங்கிட கல்வி, கேள்வி மற்றும் இசைஞானம் பெற்று சிறக்கலாம் என்பது நம்பிக்கை. |