இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அவரது தலையில் பசுவின் குளம்படிகள் உள்ளது. சைவ சமயக் குரவர்கள் நால்வரில் திருவாசகம்
அருளிய மாணிக்கவாசகர் அவதரித்த திருத்தலம். மாணிக்கவாசகருக்குச் சிவபெருமான் சிலம்பொலி கேட்பிக்கச் செய்த தலம். திருவாசகத்து
உருகாதவர் ஒருவாசகத்துக்கும் உருகார் என்ற சிறப்பு வாய்ந்த பழமொழியே திருவாசகத்தின் சிறப்புக்குப் போதிய சான்று. இத்தகைய ஒப்பற்றதோர்
அருள்நூலை உலகினுக்கு ஈந்த மாணிக்கவாசகப் பெருமான் அவதரித்தது இவ்வூரில்தான். நாயன்மார்களில் முக்கியமானவரும் நால்வருள் ஒருவருமான
மாணிக்கவாசகர் அவதரித்த இடம் கோயிலாக்கப்பட்டு இன்றும் உள்ளது. வாதவூரார் என்று அழைக்கப்பட்ட இவர் பாண்டிய மன்னன் அமைச்சரவையில்
அமைச்சராக இருந்தவர். பின்பு சிவபெருமானே குருவாக வந்து அவரிடம் உபதேசம் கேட்டு அடியார் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.பிருகு
முனிவரின் சாபத்தால் தனது தன்மை குன்றிய அக்கினி தனது முந்தைய நிலையைத் திரும்பப் பெற்ற தலம். கௌதம முனிவர் வழிபட்டுப் பேறுபெற்ற
தலம். பிரம்மனின் ஆரணகேத வேள்வியில் தோன்றிய அம்பாள் இங்கு இருக்கிறாள்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அவரது தலையில் பசுவின் குளம்படிகள் உள்ளது. சைவ சமயக் குரவர்கள் நால்வரில் திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் அவதரித்த திருத்தலம். மாணிக்கவாசகருக்குச் சிவபெருமான் சிலம்பொலி கேட்பிக்கச் செய்த தலம். திருவாசகத்து உருகாதவர் ஒருவாசகத்துக்கும் உருகார் என்ற சிறப்பு வாய்ந்த பழமொழியே திருவாசகத்தின் சிறப்புக்குப் போதிய சான்று. இத்தகைய ஒப்பற்றதோர் அருள்நூலை உலகினுக்கு ஈந்த மாணிக்கவாசகப் பெருமான் அவதரித்தது இவ்வூரில்தான்.
நாயன்மார்களில் முக்கியமானவரும் நால்வருள் ஒருவருமான மாணிக்கவாசகர் அவதரித்த இடம் கோயிலாக்கப்பட்டு இன்றும் உள்ளது. வாதவூரார் என்று அழைக்கப்பட்ட இவர் பாண்டிய மன்னன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். பின்பு சிவபெருமானே குருவாக வந்து அவரிடம் உபதேசம் கேட்டு அடியார் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிருகு முனிவரின் சாபத்தால் தனது தன்மை குன்றிய அக்கினி தனது முந்தைய நிலையைத் திரும்பப் பெற்ற தலம். கௌதம முனிவர் வழிபட்டுப் பேறுபெற்ற தலம். பிரம்மனின் ஆரணகேத வேள்வியில் தோன்றிய அம்பாள் இங்கு இருக்கிறாள். |