இங்குள்ள இறைவன் வாகீஸ்வரர் லிங்கத் திமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு ஆவுடையார் சதுரவடிவில் அமைந்திருப்பதும், இவர் விமானம்
இந்திர விமானமாய் அமைந்திருப்பதும் சிறப்பாகும். உட்பிராகாரத்தில் சரஸ்வதி தேவி சிவபெருமானை பூஜை செய்யும் சிற்பம் மிக அற்புதமாக அமைந்துள்ளது.
கோயில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைக் கடந்ததும் அகன்ற பிராகாரம். கொடி மரம், நந்தி, பலிபீடம், இவற்றைக் கடந்ததும் மூன்று நிலை
ராஜகோபுரம். அதை அடுத்து சிறப்பு மண்டபம். மண்டபத்தின் வலதுபுறம் அம்மன் சன்னதி. அடுத்துள்ள மகாமண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபமும்,
அதையடுத்து வாகீஸ்வரர் சன்னதியும் உள்ளன. தேவ கோட்டத்தின் தெற்கு திசையில் விநாயகர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தியும், மேற்கில் அண்ணாமலையாரும்,
வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். பிராகாரத்தின் மேற்கில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமியும்; வடக்கில்
சண்டிகேசுவரர் சன்னதியும் உள்ளன. வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். கிழக்கு பிராகாரத்தில் நான்கு பைரவர் திருமேனிகள்
உள்ளன. எண்ணூறு ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்கின்றனர்.
இங்குள்ள இறைவன் வாகீஸ்வரர் லிங்கத் திமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு ஆவுடையார் சதுரவடிவில் அமைந்திருப்பதும், இவர் விமானம் இந்திர விமானமாய் அமைந்திருப்பதும் சிறப்பாகும். உட்பிராகாரத்தில் சரஸ்வதி தேவி சிவபெருமானை பூஜை செய்யும் சிற்பம் மிக அற்புதமாக அமைந்துள்ளது. கோயில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
முகப்பைக் கடந்ததும் அகன்ற பிராகாரம். கொடி மரம், நந்தி, பலிபீடம், இவற்றைக் கடந்ததும் மூன்று நிலை ராஜகோபுரம். அதை அடுத்து சிறப்பு மண்டபம். மண்டபத்தின் வலதுபுறம் அம்மன் சன்னதி. அடுத்துள்ள மகாமண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபமும், அதையடுத்து வாகீஸ்வரர் சன்னதியும் உள்ளன. தேவ கோட்டத்தின் தெற்கு திசையில் விநாயகர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தியும், மேற்கில் அண்ணாமலையாரும், அருள்பாலிக்கின்றனர்.
பிராகாரத்தின் மேற்கில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், வடக்கில் சண்டிகேசுவரர் சன்னதியும் உள்ளன. வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். கிழக்கு பிராகாரத்தில் நான்கு பைரவர் திருமேனிகள் உள்ளன. எண்ணூறு ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்கின்றனர். |