வடக்கு நோக்கிய கோயில் இது. சிவனே வீரபத்திரராக மன்னனுக்கு காட்சி தந்ததால் அவருக்கு சிவனுக்குரிய புலித்தோல் நிற ஆடையை அணிவித்து
அலங்கரிக்கிறார்கள். சிவனைப் போலவே இவரது தலையில் வலப்பக்கம் சூரியனும், இடது பக்கம் சந்திரனும், நெற்றியில் அக்னியும் இருக்கின்றனர்.
சிவனுக்குரிய ஆயுதங்களான சூலம் மற்றும் உடுக்கையும் இருக்கிறது. இடது கையில் தட்சனின் தலையை வைத்திருக்கிறார். பாதத்திற்கு அருகில் தட்சனும்,
அவனது மனைவி பிரசுத்தாதேவியும் வணங்கியபடி இருக்கின் றனர்.வீரபத்திரருக்கு பின்புறம், ஒரு பீடத்தில் சிவலிங்கம் இருக்கிறது. சன்னதிக்கு வெளியில்
இருந்து பார்க்கும்போது, வீரபத்திரரின் தலைக்கு மேலே லிங்கம் இருக்கும்படி உள்ளதான அமைப்பு காண்போரை வியக்க வைக்கிறது. சிவலிங்கத்துடன் காட்சி
தருவதால் இவரை, "லிங்க வீரபத்திரர்' என்றும் அழைக்கிறார்கள். சன்னதி எதிரில் நந்தி இருக்கிறது. உற்சவர் வீரபத்திரரும் நந்தி வாகனத்துடன் இருக்கிறார்.
வீரபத்திரருக்கு ஞாயிற்றுக்கிழமை, அமாவாசைகளில் விசேஷ ஹோமம், ருத்ராபிஷேகம் நடக்கிறது. கார்த்திகை மாதத்தில் கடைசி திங்களன்று இவருக்கு
ஒருநாள் விழா நடக்கிறது. அன்று காலையில் "அக்னி பிரவேசம்' என்றும் பூக்குழி இறங்கும் வைபவம் நடக்கும்.
வடக்கு நோக்கிய கோயில் இது. சிவனே வீரபத்திரராக மன்னனுக்கு காட்சி தந்ததால் அவருக்கு சிவனுக்குரிய புலித்தோல் நிற ஆடையை அணிவித்து அலங்கரிக்கிறார்கள். சிவனைப் போலவே இவரது தலையில் வலப்பக்கம் சூரியனும், இடது பக்கம் சந்திரனும், நெற்றியில் அக்னியும் இருக்கின்றனர். சிவனுக்குரிய ஆயுதங்களான சூலம் மற்றும் உடுக்கையும் இருக்கிறது. இடது கையில் தட்சனின் தலையை வைத்திருக்கிறார்.
பாதத்திற்கு அருகில் தட்சனும், அவனது மனைவி பிரசுத்தாதேவியும் வணங்கியபடி இருக்கின்றனர். வீரபத்திரருக்கு பின்புறம், ஒரு பீடத்தில் சிவலிங்கம் இருக்கிறது. சன்னதிக்கு வெளியில் இருந்து பார்க்கும்போது, வீரபத்திரரின் தலைக்கு மேலே லிங்கம் இருக்கும்படி உள்ளதான அமைப்பு காண்போரை வியக்க வைக்கிறது. சிவலிங்கத்துடன் காட்சி தருவதால் இவரை, "லிங்க வீரபத்திரர்' என்றும் அழைக்கிறார்கள்.
சன்னதி எதிரில் நந்தி இருக்கிறது. உற்சவர் வீரபத்திரரும் நந்தி வாகனத்துடன் இருக்கிறார்.வீரபத்திரருக்கு ஞாயிற்றுக்கிழமை, அமாவாசைகளில் விசேஷ ஹோமம், ருத்ராபிஷேகம் நடக்கிறது. கார்த்திகை மாதத்தில் கடைசி திங்களன்று இவருக்கு ஒருநாள் விழா நடக்கிறது. அன்று காலையில் "அக்னி பிரவேசம்' என்றும் பூக்குழி இறங்கும் வைபவம் நடக்கும். |