என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் சிம்புவை வைத்து அச்சம் என்பது மடமையடா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களையும் இறுதி செய்து விட்டாராம் கவுதம் மேனன்.
அதில், விக்ரம், சமந்தா கூட்டணியில் உருவாகும் ஒரு படம் என்பது அனைவரும் அறிந்ததே. அதைத் தொடர்ந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில், விஷாலை வைத்து படம் இயக்கப்போகிறாராம் கவுதம் மேனன்.
தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து ஆக்சன் நாயகனாக உருவெடுத்து வரும் விஷாலும், .மயிலிறகாக வருடும் மான்டேஜ் பாடல் ஸ்பெஷல் கௌதம்மேனனும் இணையும் படத்தில் என்ன ஸ்பெஷல் என்ற எதிர்பாப்பு இப்போது இருந்தே எகிற தொடங்கியிருக்கிறது.
|