LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

சி(பாரிச) நோய்

ஒரு முறை கலைவாணர் என் . எஸ் . கே . யை சந்திக்க ஒருவர் வந்தார் . “ ஐயா மூன்று வேளை சாப்பாடு போட்டு மாதம் 5 ரூபாய் கொடுங்க நீங்கள் விரும்பும் போதெல்லாம் நாதஸ்வரம் வாசிப்பேன் ” என்றார் . “ அப்படியா சரி ” இப்போதே வாசி என்றார் கலைவாணர் . வந்தவர் நாதஸ்வரம் வாசித்தார் . வாசிப்பில் சுருதி , தாளம் , ராகம் எதுவும் அமையவில்லை .

இசையைக் கேட்டுக்கொண்டிருந்த கலைவாணர் அதை நிறுத்தச் சொல்லிவிட்டு நூறு ரூபாய் பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்து “ நீர் நாதஸ்வரம் வாசிக்கவில்லை . உமது வறுமையை வாசித்தீர் . நன்றாகக் கற்றுக் கொண்டு வந்து பிறகு வாசியுங்கள் . இப்போது சாப்பிட்டுவிட்டு போங்கள் ” என்றார் கலைவாணர் .

தங்கள் தகுதிகளை உயர்த்திக் கொள்ளாமல் சிபாரிசின் மூலமே முன்னேற வேண்டும் என்று பலபேர் நினைக்கிறார்கள் . அதற்கு சில அரசியல்வாதிகளும் ஏஜண்டாக இருக்கிறார்கள் . இந்தத் தவறான போக்கிற்கு பெருந்தலைவர் சவுக்கடி கொடுத்த சந்தர்ப்பம் ஒன்று உண்டு .

பெருந்தலைவர் முதல்வராக இருந்த போது அவருக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தன்னுடைய புதல்விக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வேண்டும் என்று சிபாரிசிற்காகச் சென்றார் .

“ஒவ்வொரு மந்திரிக்கும் பத்து பதினைந்து கோட்டா உண்டாம். உங்களுக்குச் சற்று அதிகமாக உண்டாம்”என்று கேட்டார் வந்தவர். உடனே பெருந்தலைவர் “நீங்கள் படித்தவராக இருக்கிறீர்கள். நான் வெளியூரிலிருந்து வந்ததும் என்னைப் பார்க்க வந்து இருக்கிறீர்கள். விபரம் தெரிந்தவர்களே இப்படி என்றால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? அட்மிஷனுக்கு என்று ஒரு முறை உண்டு. ஒரு கமிட்டி உண்டு. நடுநிலை மனிதர்கள் கமிட்டியில் இருக்கிறார்கள். அவர்கள் தான் அட்மிஷன் குறித்து முடிவு செய்வார்கள். இப்படி ஒரு பக்கம் கமிட்டி அமைத்துவிட்டு இன்னொரு புறம் சிபாரிசு செய்தால் எப்படி? அது நியாயமில்லையே. இப்போது நீங்கள் வெளியே போய், முதல்வரைப் பார்த்தேன். அட்மிஷன் கிடைத்து விட்டது என்று கூறினால் அது பரவி ஒரு தப்பான எண்ணம் ஏற்பட்டுவிடும். மனசாட்சிப்படி முறையோடு நடந்து கொள்ள வேண்டும். அதுதான் நல்லது. முறைப்படி முயற்சி செய்யுங்கள்”என்றார்.

by Swathi   on 02 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.