LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வளைகுடா நாடுகள்

மஸ்கட்டில் சிகரம் தொடுவோம் புத்தக வெளியீடு

ஓமான் தலைநகர் மஸ்கட்டில்' சிகரம் தொடுவோம்' புத்தக வெளியீடு, ஓமனுக்கான இந்திய தூதர் மேதகு இந்திரமணி பாண்டே அவர்களால் கடந்த 20-11-2017 திங்கள் கிழமை மாலை 7 மணி அளவில் சிறப்பாக நடை பெற்றது.மேதகு இந்திரமணி பாண்டே அவர்கள் நிகழ்ச்சியைக்  குத்துவிளக்கு ஏற்றி, நம் மரபுப் படித் தொடக்கி வைத்தார்.   மஸ்கட் தமிழ்ச் சங்கத் தமிழாசிரியைகள் தமிழ்த்தாய் வாழ்த்துப்  பாடினர்.

திருமதி. ரேவதி சுந்தர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.  இந்நிகழ்ச்சிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார்.மேதகு இந்தியத் தூதர் அவர்கள் நூலை வெளியிட, திருமதி. சித்ரா நாராயண் அவர்கள் (Director, Middle East Nursery) , திரு. குமார் மஹாதேவன் (Director & Advisor - Oman Sharpooji Co ), திரு. P .R .ராமகிருஷ்ணன் (CEO, Vision Insurance), திரு. T .கணேஷ் (CFO, Bank Muscat ), திரு. சங்கர் சர்மா (CFO, Bank  Dhofar), திரு. P .S .லக்ஷ்மணன் (CFO, National Drilling & Services Co), திரு. ஸ்ரீதர் நாரணசாமி (Ex - Chariman, ICAI-Muscat Chapter), திரு. J. ராஜேந்திரன் (GM, National Steel Fabricators) மற்றும் முனைவர். T . தங்கமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் மேதகு. இந்திரமணி பாண்டே அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.  திருமதி. சித்ரா நாராயண் அவர்கள் சிறப்புரை கவித்துவமாக இருந்தது.ஏனைய சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துரை வழங்க, நூலாசிரியர் சுரேஜமீ அவர்கள் ஏற்புரை வழங்கினார். மஸ்கட் தமிழ்ச் சங்கப்  பொருளாளர் திருமதி. விஜயலக்ஷ்மி சந்திர சேகர் நன்றி கூற, விழா இனிதே முடிந்தது.
நிகழ்சசியை மஸ்கட் தமிழ்ச் சங்கப்  பொருளாளர் திருமதி. விஜயலக்ஷ்மி சந்திர சேகர் தொகுத்து வழங்கினார்.இவ்விழாவில் மஸ்கட் வாழ்த் தமிழர்கள் மட்டுமல்லாது, பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.​

by Swathi   on 25 Nov 2017  0 Comments
Tags: மஸ்கட்   Muscat   Sigaram Thoduvom   Sigaram Thoduvom Book   சிகரம் தொடுவோம்        
 தொடர்புடையவை-Related Articles
மஸ்கட்டில் சிகரம் தொடுவோம் புத்தக வெளியீடு மஸ்கட்டில் சிகரம் தொடுவோம் புத்தக வெளியீடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.