அமெரிக்காவில் இந்திய சீக்கிய லாரி டிரைவரை இனவெறி காரணமாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாகணத்தில் வசித்து வருபவர் கன்வல்ஜித்சிங். சீக்கியரான இவர் தனது மகனுடன் அங்குள்ள கடற்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாரி டிரைவர்கள் சிலர் திடீரென்று கன்வல்ஜித்சிங்கை தாக்கினர். மேலும் துப்பாக்கியாலும் சுட்டனர். இதில் அவருடைய கால் தொடை மற்றும் உடலில் குண்டு காயம் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் கன்வல்ஜித்சிங்கின் மகன் காயமின்றி உயிர் தப்பினார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பற்றியும், தாக்குதலுக்கான கரணம் பற்றியும் அமெரிக்க காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.இந்த தாக்குதல் சம்பவத்துக்கு சீக்கிய அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் துரித நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்க காவல்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது.
|