இரண்டாம் உலகம் படத்தை தொடர்ந்து, இயக்குனர் செல்வராகவன், நடிகர் சிம்புவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக தயாராகும் இப்படத்தில் சிம்புவிற்கு இரண்டு கதாநாயகிகளாம். த்ரிஷா மற்றும் டாப்சி இருவருமே முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கலாம் என்று கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.
தற்போது, கெளதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் நடித்துக் கொண்டிருக்கும் சிம்பு, இதனை தொடர்ந்து, செல்வராகவனின் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
|