LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

சிந்துப்பா

 

ஈரடி அளவொத் தியலும் பாக்கள் 
சிந்தெனும் வகையைச் சேரும் என்ப 
கருத்து : அளவொத்த இரண்டடிகளால் நடைபெறும் பாடல்கள் சிந்துப்பா என்று கூறப்படும் வகையைச் சேருமென்று சொல்வார்கள். 
விளக்கம் : இசைப்பா, இசையளவு பா என்ற இருவகையுள், சிந்துப்பா இசையளவு பா என்று முன்பு காட்டப்பட்டது (நூ.2.உரை). யாப்பிலக்கணங்களில் சீர்கள் என்று கொள்ளப்பட்டவை மா, விளம், காய், கனி முதலிய வாய்பாடுகளின் அடிப்படையில் அமைந்தவை. ஆனால் இசையளவு பாக்களின் பாற்பட்ட சிந்துப்பாக்கள் தாள நடையை அடிப்படையாகக் கொண்டவையாகலின் அப்பாக்கள் ஒவ்வொர் அடியிலும் நான்கு சீர்களுக்குக் குறையாமல் கொண்டிருக்கும். யாப்பிலக்கண முறையில் அமைந்த மிகச் சிறிய அடியும் சிந்து இலக்கண முறையில் நாற்சீராக அலகிடப்படும். 
காட்டு : நெஞ்சி லுரமுமின்றி 
நேர்மைத் திறமுமின்றி (யாப்பிலக்கண முறை) 
நெஞ் - சிலு - ரமு - மின்றி 
நேர் - மைதி - றமு - மின்றி (சிந்திலக்கண முறை - 8 சீர்) (பா.கவி. ப. 196)
இவ்விரு வரிகளும் சேர்ந்து ஓரடியாகும். யாப்பிலக்கண முறையில் இவ்விரண்டு வரிகளும் 4 சீர் அடியாகும். சிந்திலக்கண முறையில் 8 சீர் கொண்ட அடியாகும். ஆகவே இரண்டடிகள் அளவொத்தும், ஓரெதுகை பெற்றும் நடக்கும் பாடல்கள் சிந்துப்பா என்று கூறப்படும். 

 

ஈரடி அளவொத் தியலும் பாக்கள் 

சிந்தெனும் வகையைச் சேரும் என்ப 

கருத்து : அளவொத்த இரண்டடிகளால் நடைபெறும் பாடல்கள் சிந்துப்பா என்று கூறப்படும் வகையைச் சேருமென்று சொல்வார்கள். 

 

விளக்கம் : இசைப்பா, இசையளவு பா என்ற இருவகையுள், சிந்துப்பா இசையளவு பா என்று முன்பு காட்டப்பட்டது (நூ.2.உரை). யாப்பிலக்கணங்களில் சீர்கள் என்று கொள்ளப்பட்டவை மா, விளம், காய், கனி முதலிய வாய்பாடுகளின் அடிப்படையில் அமைந்தவை. ஆனால் இசையளவு பாக்களின் பாற்பட்ட சிந்துப்பாக்கள் தாள நடையை அடிப்படையாகக் கொண்டவையாகலின் அப்பாக்கள் ஒவ்வொர் அடியிலும் நான்கு சீர்களுக்குக் குறையாமல் கொண்டிருக்கும். யாப்பிலக்கண முறையில் அமைந்த மிகச் சிறிய அடியும் சிந்து இலக்கண முறையில் நாற்சீராக அலகிடப்படும். 

 

காட்டு : நெஞ்சி லுரமுமின்றி 

நேர்மைத் திறமுமின்றி (யாப்பிலக்கண முறை) 

நெஞ் - சிலு - ரமு - மின்றி 

நேர் - மைதி - றமு - மின்றி (சிந்திலக்கண முறை - 8 சீர்) (பா.கவி. ப. 196)

இவ்விரு வரிகளும் சேர்ந்து ஓரடியாகும். யாப்பிலக்கண முறையில் இவ்விரண்டு வரிகளும் 4 சீர் அடியாகும். சிந்திலக்கண முறையில் 8 சீர் கொண்ட அடியாகும். ஆகவே இரண்டடிகள் அளவொத்தும், ஓரெதுகை பெற்றும் நடக்கும் பாடல்கள் சிந்துப்பா என்று கூறப்படும். 

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.