|
||||||||
சிந்துப்பா |
||||||||
ஈரடி அளவொத் தியலும் பாக்கள்
சிந்தெனும் வகையைச் சேரும் என்ப
கருத்து : அளவொத்த இரண்டடிகளால் நடைபெறும் பாடல்கள் சிந்துப்பா என்று கூறப்படும் வகையைச் சேருமென்று சொல்வார்கள்.
விளக்கம் : இசைப்பா, இசையளவு பா என்ற இருவகையுள், சிந்துப்பா இசையளவு பா என்று முன்பு காட்டப்பட்டது (நூ.2.உரை). யாப்பிலக்கணங்களில் சீர்கள் என்று கொள்ளப்பட்டவை மா, விளம், காய், கனி முதலிய வாய்பாடுகளின் அடிப்படையில் அமைந்தவை. ஆனால் இசையளவு பாக்களின் பாற்பட்ட சிந்துப்பாக்கள் தாள நடையை அடிப்படையாகக் கொண்டவையாகலின் அப்பாக்கள் ஒவ்வொர் அடியிலும் நான்கு சீர்களுக்குக் குறையாமல் கொண்டிருக்கும். யாப்பிலக்கண முறையில் அமைந்த மிகச் சிறிய அடியும் சிந்து இலக்கண முறையில் நாற்சீராக அலகிடப்படும்.
காட்டு : நெஞ்சி லுரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி (யாப்பிலக்கண முறை)
நெஞ் - சிலு - ரமு - மின்றி
நேர் - மைதி - றமு - மின்றி (சிந்திலக்கண முறை - 8 சீர்) (பா.கவி. ப. 196)
இவ்விரு வரிகளும் சேர்ந்து ஓரடியாகும். யாப்பிலக்கண முறையில் இவ்விரண்டு வரிகளும் 4 சீர் அடியாகும். சிந்திலக்கண முறையில் 8 சீர் கொண்ட அடியாகும். ஆகவே இரண்டடிகள் அளவொத்தும், ஓரெதுகை பெற்றும் நடக்கும் பாடல்கள் சிந்துப்பா என்று கூறப்படும்.
ஈரடி அளவொத் தியலும் பாக்கள் சிந்தெனும் வகையைச் சேரும் என்ப கருத்து : அளவொத்த இரண்டடிகளால் நடைபெறும் பாடல்கள் சிந்துப்பா என்று கூறப்படும் வகையைச் சேருமென்று சொல்வார்கள்.
விளக்கம் : இசைப்பா, இசையளவு பா என்ற இருவகையுள், சிந்துப்பா இசையளவு பா என்று முன்பு காட்டப்பட்டது (நூ.2.உரை). யாப்பிலக்கணங்களில் சீர்கள் என்று கொள்ளப்பட்டவை மா, விளம், காய், கனி முதலிய வாய்பாடுகளின் அடிப்படையில் அமைந்தவை. ஆனால் இசையளவு பாக்களின் பாற்பட்ட சிந்துப்பாக்கள் தாள நடையை அடிப்படையாகக் கொண்டவையாகலின் அப்பாக்கள் ஒவ்வொர் அடியிலும் நான்கு சீர்களுக்குக் குறையாமல் கொண்டிருக்கும். யாப்பிலக்கண முறையில் அமைந்த மிகச் சிறிய அடியும் சிந்து இலக்கண முறையில் நாற்சீராக அலகிடப்படும்.
காட்டு : நெஞ்சி லுரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி (யாப்பிலக்கண முறை) நெஞ் - சிலு - ரமு - மின்றி நேர் - மைதி - றமு - மின்றி (சிந்திலக்கண முறை - 8 சீர்) (பா.கவி. ப. 196) இவ்விரு வரிகளும் சேர்ந்து ஓரடியாகும். யாப்பிலக்கண முறையில் இவ்விரண்டு வரிகளும் 4 சீர் அடியாகும். சிந்திலக்கண முறையில் 8 சீர் கொண்ட அடியாகும். ஆகவே இரண்டடிகள் அளவொத்தும், ஓரெதுகை பெற்றும் நடக்கும் பாடல்கள் சிந்துப்பா என்று கூறப்படும்.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|