LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

சிங்கம் 2 திரை விமர்சனம்

நடிகர் : சூர்யா, 

 

நடிகைகள் : அனுஷ்கா, ஹன்சிகா, 

 

இயக்கம் : ஹரி

 

காமெடி : விவேக், சந்தானம், 

 

வில்லன் : டேனி 

 

ஒளிப்பதிவு : ப்ரியன் 

 

இசை: தேவி ஸ்ரீபிரசாத் 

 

தயாரிப்பு: பிரின்ஸ் பிக்சர்ஸ்

 

விமர்சனம் :

 

தமிழ் சினிமாவை பொறுத்தவரை வெற்றிபெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகம் வெற்றிபெறுவது என்பது ஒரு மிக பெரிய சவாலான விஷயம். அப்படி ஒரு சவாலான விஷயத்தை தான் ஹரி - சூர்யா கூட்டணி சாதனையாக மாற்றியுள்ளது. போலீஸ் வேலையை ராஜினாமா செய்வது போல் நடித்துவிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் என்சிசி மாஸ்டர் வேடத்தில் சமூக விரோதிகளின் ஆயுதக் கடத்தலைக் கண்காணித்து வருகிறார் சூர்யா. அப்போது கடத்தப்படுவது, ஆயுதமல்ல, போதை பொருட்கள் தான் என கண்டுபிடிக்கிறார் சூர்யா. அப்போது தான் இந்த போதை பொருள் கடத்தலுக்கு உள்ளூரில் உள்ள மூன்று தாதாக்களுக்கும், வெளிநாட்டில் உள்ள  டோனிக்கும் தொடர்பிருப்பது தெரியவருகிறது. மேலும் தூத்துக்குடி காவல் துறையிலேயே சில தவறான அதிகாரிகள் இருப்பதை அறியும் சூர்யா, பிறகு தூத்துக்குடி டிஎஸ்பியாக பொறுபேற்று கடத்தல் காரர்களை நாடு விட்டு நாடு தாண்டி எப்படி பிடிக்கிறார் எனபது தான் படத்தின் மீதி கதை. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் பரவாயில்லை.

 

பலம் :

 

1.படத்தின் கதை சுமாராக இருந்தாலும், சூரியாவின் நடிப்பால் படத்தை வெற்றி படமாக மாற்றியிருக்கிறார்.

 

2.வில்லன்கள் போடும் திட்டத்தை எல்லாம் புத்திசாலி தனமாக முறியடிப்பது தான் படத்தின் விறுவிறுப்புக்கு காரணம்.

 

3.வசனங்களும், பஞ்ச் டயலாக்குகளும் காட்சிகளுக்கு தகுந்தாற்போல் நச்சுனு பொருந்தியுள்ளது.

 

4.காமெடிக்கு சந்தானம், விவேக் என இரண்டு பேர் இருந்தாலும், சந்தானம் தான் படத்தின் கலகலப்புக்கு ஆதாரம். தவறு செய்துவிட்டு மன்னிப்புக் கேட்கும் ஒவ்வொரு முறையும் பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே என மண்டியிட்டு பேண்டை கழட்டுவது திரை அரங்கை  சிரிப்பலையில் அதிர வைக்கிறது. மேலும் படத்தின் பாதியில் வரும் விவேக் ரசிகர்களை ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார்.

 

5.படம் இரண்டரை மணி நேரம் என்றாலும், ஒரு நிமிடம் கூட சலிப்படையாமல் ரசிகர்களை பார்க்க வைத்திருப்பது, இயக்குனர் ஹரியுடைய மேஜிக் என்றே சொல்லலாம்.

 

6.சர்வதேச போதை மருந்து கடத்தல்காரனாக வரும் டேனி தனது கதா பத்திரத்தை வைத்து ரசிகர்களை மிரட்டியுள்ளார்.

 

7.சிங்கம் டான்ஸ் பாட்டிற்கு அனுஷ்கா ஆடியிருப்பது ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளுகிறது.

 

பலவீனம் :

 

1.ஹன்சிகாவை ப்ளஸ்டூ மாணவியாகக் காட்டுவது கதைக்கு எடுபடவில்லை, (இவர்கள் ஜெனிலியாவை ட்ரை பண்ணியிருக்கலாம்)

 

2.படத்தில் இரண்டு ஹீரோயின்கள் வந்தாலும் அனுஷ்காதான் சூர்யாவுக்கு ஜோடி. ஆனால் இதிலும் இருவருக்கும் திருமணம் ஆகாமலே படம் முடிக்கப்பட்டுள்ளது. 

 

3.தென்னாப்பிரிக்காவிற்கு வில்லனை தேடி போகும் சூர்யா, அந்த நாட்டுப் போலீசுக்கே தெரியாத ரூட்டிலெல்லாம் சர்சர்ரென்று பாய்ந்து வில்லனை வீழ்த்துவதை தவிர்த்திருக்கலாம். (இடையில் இதான் இந்தியன் போலீஸ் மாஜிக் என்ற வசனம் வேறு) 

 

மொத்தத்தில் சிங்கம் 2 காமெடியுடன் சேர்ந்த விறுவிறுப்பு !

 

by Swathi   on 06 Jul 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
வங்கிகளின் பின் இருக்கும் இருள் பக்கத்தை வெளிச்சமாக்கிய 'லக்கி பாஸ்கர்' வங்கிகளின் பின் இருக்கும் இருள் பக்கத்தை வெளிச்சமாக்கிய 'லக்கி பாஸ்கர்'
சினிமா விமர்சனம் - J பேபி சினிமா விமர்சனம் - J பேபி
சினிமா விமர்சனம் - 12th ஃபெயில். சினிமா விமர்சனம் - 12th ஃபெயில்.
திருமணமான ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் -இறுகப்பற்று திருமணமான ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் -இறுகப்பற்று
சினிமா விமர்சனம் - லைசென்ஸ் சினிமா விமர்சனம் - லைசென்ஸ்
நவரசா ஆந்தாலஜி திரைப்பட விமர்சனம் நவரசா ஆந்தாலஜி திரைப்பட விமர்சனம்
சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம் சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம்
குழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம் குழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம்
கருத்துகள்
06-Jul-2013 07:21:58 லிங்கம் spk said : Report Abuse
சூர்யா ஆக்டிங் வெரி சூப்பர் .அண்ட் அனுஷ்கா ஆக்டிங் சூப்பர் ......
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.