LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

தமிழ்மொழியைக் கவுரவிக்கும் சிங்கப்பூர் அரசு...

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று மகாகவி பாரதி பாடினான்.

"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு" என்றும், " தமிழுக்கும் அமுதென்று பேர்" என்றும் பாரதி தாசன் போற்றிய மொழி தமிழ் ஆகும்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் என்றும், மூத்த குடிமக்கள் தமிழ் மக்கள் என்றும் கூறினால் அதில் மிகையில்லை. தமிழில் இருந்து பிறந்தவைகளே பிற மொழிகள்!

ஆனால் இன்றைக்கு நிலை என்ன? 2 கன்னடர்கள் சந்தித்தால் கன்னடத்தில் பேசிக் கொள்வார்கள். 2 தெலுங்கர்கள் சந்தித்தால் தெலுங்கில் பேசிக் கொள்வார்கள். 2 இந்திக்காரர்கள் சந்தித்தால் இந்தியில் தான் பேசிக் கொள்வார்கள். ஆனால் 2 தமிழர்கள் சந்தித்தால் மட்டும் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள் என்பது புகழ் பெற்ற நகைச்சுவை மட்டுமல்ல, நாம் சந்திக்கும் கசப்பான உண்மையும் கூட. 

தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் நிலை தேய்பிறையாகிக் கொண்டிருக்க, சிங்கப்பூர் அரசோ தமிழ் மொழியைக் கவுரவித்துப் போற்றி வருகிறது. இதனை அவசியம் ஒவ்வொரு தமிழனும் பாராட்டியே ஆக வேண்டும்.

ஏழு கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டில், கடைகள் போன்ற வியாபார நிறுவனங்களின் பெயர்ப் பலகை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வந்தது. இதைத் தமிழில் எழுத அரசு சட்டம் இயற்றிய பின்னரே தமிழில் எழுதும் நிலை வந்தது.

இதேபோல் தமிழ்நாட்டில், தமிழ் மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்து என அறிவித்துத் தான் தமிழைக் காக்க வேண்டிய நிலை உள்ளது.

ஆனால், சிங்கப்பூரில் 4 ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று. அங்குள்ள கல்விக்கூடங்களிலும் தாய்மொழியாக தமிழ் சொல்லித் தரப்படுகிறது. சிங்கப்பூர் நாட்டின் பணத்தாள்களில் தமிழ் மொழியும் இடம்பெற்று உள்ளது.

இந்த நிலையில் "சிங்கப்பூரை நவீனமயமாக்கிய தமிழ் சமூகத்தினர்" என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியீட்டு விழா,  சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்தது.

இந்த நூலை சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வெளியிட்டார். வெளியீட்டு விழாவில் சிங்கப்பூர் நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஈஸ்வரன் பேசியதாவது:

சிங்கப்பூரில் தமிழ் என்றும் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என அரசு தீர்மானமாக உள்ளது. அதனால் தான் பாராளுமன்றத்தில் தமிழ், அதிகாரப்பூர்வ பேச்சு மொழியாகவும், பயிற்று மொழியாக கல்விக் கூடங்களிலும் உள்ளது.

இங்குள்ள இளைஞர்களிடம் தமிழைக் கொண்டு சேர்த்து அதை என்றும் துடிப்புடன் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசிய போது, கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும்  கைதட்டி ஆரவாரம் செய்தது அங்கே தமிழுக்குக் கிடைத்த மரியாதை ஆகும்.

by Mani Bharathi   on 03 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள்  -முனைவர்.சுபாஷினி இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள் -முனைவர்.சுபாஷினி
அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்!  கூட்ட அறிக்கை(Minutes Of Meeting) அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்! கூட்ட அறிக்கை(Minutes Of Meeting)
இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது -  ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது - ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர்
ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ் வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ்
ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம் ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்
இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம்
2025 இறுதிக்குள் ஒரு  மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம் 2025 இறுதிக்குள் ஒரு மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.