LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

சிறைப்பறவை

சிறைச்சாலையில் கைதிகள் இருவர் பேசிக் கொண்டிருந்தனர் . “ என்ன குற்றம் செய்ததற்காக நீ இங்கு வந்தாய் ? ” என்று ஒருவன் மற்றவனைக்கேட்டான் .

“தும்மினேன், அதனால் இங்கு கொண்டு வந்து விட்டார்கள்”

“அதற்காகவா இங்கு கொண்டுவந்து விட்டார்கள்”

“ஆமாம். ஒரு வீட்டின் பீரோவிலிருந்து நகைகளைத் திருடும்போது தும்மிவிட்டேன். அதனால் கைதியாகி விட்டேன். அது சரி நீ எப்படி இங்கு வந்தாய்?”

“ரெயிலில் போகும் போது தேவைப்பட்டால் சங்கிலியை இழு என்று என் அப்பா சொல்லி இருந்தார். அப்படியே செய்தேன். மாட்டிக்கொண்டேன்”

“அதற்கு அபராதம் தானே போடுவார்கள்.”

“நான் இழுத்தது ரெயிலின் அபாயச் சங்கிலியை அல்ல. ஒரு பெண்ணின் கழுத்துச் சங்கிலியை.”

இப்படிப் பலபேர் குற்றவாளிகளாகச் சிறைபுகுவோர் உண்டு . நாட்டின் நன்மைக்காக தன்னை அர்ப்பணித்துச் சிறை சென்றவர்கள் சிலரே .

நாட்டுக்காகப் போராடுவதையும் அதற்காக சிறை செல்வதையுமே தமது வாழ்நாளாகக் கொண்டிருந்தவர் காமராசர் . 1930- ல் உப்பு சத்தியாக்கிரகம் தமிழ் நாட்டில் வேதாரண்யத்தில் நடந்தது . அப்பச்சி அதிலும் தீவிரம் காட்டினார் . இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது .

1932- ல் சட்டமறுப்பு இயக்கம் . ஓராண்டு சிறை . அரிசனங்களின் உரிமைக்கென்றும் போராடினார் . 1925- ல் அரிசனங்களுக்கு வழிபாட்டு உரிமை கேட்டு வைக்கம் போராட்டத்திலும் சுசீந்திரம் போராட்டத்திலும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது . 1934- ல் விருதுநகர் அஞ்சல் நிலையத்தின் மீதும் திருவில்லிபுத்தூர் காவல் நிலையத்தின் மீதும் வெடிகுண்டு வைத்ததாக பொய்க்குற்றம்சாட்டப்பட்டார் . 1941- ல் தனியார் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொள்வோர் பட்டியலை காந்தியடிகளிடம் கொடுக்கப்போகும் வழியில் கைது செய்யப்பட்டு வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டார் . 1942- ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டதற்காகக் கைதாகி ஓராண்டு கடுங்காவல் தண்டனை அனுபவித்தார் . அம்ரோட்டி சிறைக்கொடுமைகள் பற்றி அவரே குறிப்பிட்டுள்ளார் . வெப்பத்தின் கொடுமை தாங்காமல் , நாளெல்லாம் தண்ணீர் தொட்டியில் இருந்தே கழித்ததை அவர் குறிப்பிடும் போது நமது கண்கள் கலங்குகின்றன . வாழ்நாளில் மொத்தம் 3000 ( மூவாயிரம் ) நாட்கள் அவர் சிறைக்காற்றை சுவாசித்தார் என்று புள்ளி விவரம் கூறுகிறது .

வாழ்க்கை என்பது நீண்ட நாட்கள் வாழ்வது அல்ல . ஒவ்வொரு வினாடியும் நாம் வாழுகிறோம் என்று உணர்ந்து வாழ்வதே வாழ்க்கை . அப்படிப்பட்ட வாழ்க்கை நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்தவர்களுக்கே அமையும் .

by Swathi   on 20 Aug 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.