LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கருமலைத்தமிழாழன்

சிறப்பாக நடிக்கின்ற நடிக ரானோம் !

சாதிகளின்    பெயராலே   சங்கம்   வைத்தோம்

சாதிக்காய்த்   தலைவரினைத்   தேர்ந்தெ   டுத்தோம்

சாதிக்கும்   சக்தியெல்லாம்   ஊர்வ   லத்தில்

சாதனையாய்ப்   பகையுணர்ச்சி   பெருக்கு   வித்தோம்

வாதிக்கும்   கருத்தெல்லாம்   வாயா   லன்றி

வாள்தடிகள்   சங்கிலியால்   மோதிக்   கொண்டோம்

போதிக்கும்   அன்புவிட்டு   மதங்க   ளென்னும்

போதையாலே   மதம்பிடித்தே   அலையு   கின்றோம் !

 

அறிவியலில்   உலகமெல்லாம்   அற்பு   தங்கள்

அரங்கேற்றக்   கலவரங்கள்   அரங்க   மேற்றி

அறிவிலியாய்க்   குறுமனத்தில்   திகழு   கின்றோம்

அணுப்பிளந்து   அடுத்தகோளில்   அவர்க   ளேற

வெறியாலே   உடன்பிறந்தோர்   உடல்பி   ளந்து

வீதியெல்லாம்   குருதியாற்றில்   ஓடம்   விட்டோம்

நெறியெல்லாம்   மனிதத்தைச்   சாய்ப்ப   தென்னும்

நேர்த்திகடன்   கோயில்முன்   செய்யு   கின்றோம் !

 

வானத்தை   நாம்வில்லாய்   வளைக்க   வேண்டா

வாடுவோரின்   குரல்கேட்க   வளைந்தால்   போதும்

தேனெடுத்துப்   பசிக்குணவாய்க்   கொடுக்க   வேண்டா

தேறுதலாய்   நம்கரங்கள்   கொடுத்தால்   போதும்

தானத்தில்   சிறந்ததெனும்   நிதானத்   தில்நாம்

தமரென்றே   அனைவரையும்    அணைத்தால்   போதும்

மானுடந்தான்   இங்குவாழும்   சமத்து   வத்தில்

மணபதையே   அமைதிவீசும்   நேயத்   தாலே !

 

-  பாவலர்  கருமலைத்தமிழாழன்

by Swathi   on 24 Oct 2014  0 Comments
Tags: Nadigar   Karumalai Thamilaalan   நடிகர்   கருமலைத்தமிழாழன்           
 தொடர்புடையவை-Related Articles
காமெடி நடிகர் கவுண்டமணி பற்றிய சில சுவாரசிய தகவல்கள்... காமெடி நடிகர் கவுண்டமணி பற்றிய சில சுவாரசிய தகவல்கள்...
மூளியாக்கி வைத்தோம்!- பாவலர்  கருமலைத்தமிழாழன் மூளியாக்கி வைத்தோம்!- பாவலர் கருமலைத்தமிழாழன்
ஊனமாகி  வீழ்கின்றான் - பாவலர் கருமலைத்தமிழாழன் ஊனமாகி வீழ்கின்றான் - பாவலர் கருமலைத்தமிழாழன்
மகளின்  மாண்பு - பாவலர் கருமலைத்தமிழாழன் மகளின் மாண்பு - பாவலர் கருமலைத்தமிழாழன்
வருமோ  இப்புதிய   உலகு.. வருமோ இப்புதிய உலகு..
உண்மைத் தமிழனாய் உயர்வானோ! உண்மைத் தமிழனாய் உயர்வானோ!
சம்மதம் தா கற்பகத்தருவே சம்மதம் தா கற்பகத்தருவே
தமிழ்   ஒரு   பூக்காடு தமிழ் ஒரு பூக்காடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.