LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

சிறப்பசை

 

ஓரசை யாய்வரும் குறிலசை, ஓரசை
ஈரசை யாய்வரும் நெடிலசை சிறப்பசை
கருத்து : சிந்துப் பாடல்களில் வரும் அசைகளில், ஓரசையாக வருகின்ற குறிலசைகளும், ஓரசையாகவும், ஈரசையாகவும் வருகின்ற நெடிலசைகளும் சிறப்பசைகளாகும். 
விளக்கம் : சிந்துப்பாடல்களில் உள்ள ஒவ்வோர் உயிரும் அல்லது உயிர்மெய்யும் ஓரசையாகக் கொள்ளப்படும். ‘எழுத்தை அசைத்து இசை கொள்வதே அசை’ என்பது இலக்கண வழக்கு.
“அவ்வெழுத்து
அசைத்து இசை கோடலின் அசையே”
(யா. கலம் நூ. 1. உரை மேற்கோள்)
சிந்துப் பாடல்களில் குறிலாய் உள்ள அசையைக் குறிலசை எனலாம். நெடிலாய் உள்ள அசையை நெடிலசை எனலாம்.
குறிலசை என்பன : உயிர்க்குறிலும் (அ), உயிர்மெய்க் குறிலும் (க)
நெடிலசை என்பன
: உயிர்நெடிலும் (ஆ), உயிர்மெய் நெடிலும் (கா)
: உயிர்நெடில் ஒற்று (ஆல்), உயிர்மெய் நெடிலொற்று (கால்)
: உயிர்க்குறில் ஒற்று (அல்), உயிர்மெய்க் குறிலொற்று (கல்)
தனிச்சொல்லுக்கு முன்பும், அரையடியின் இறுதிகளிலும், அடியின் இறுதிகளிலும், அமைந்திருக்கின்ற அசைகள் இரண்டு அசைக்கு மேலும் இசைக்கும் என்று முன்பு விளக்கப்பட்டதால் (நூற்பா.10) மற்ற இடங்களில் உள்ள அசைகள் ஓரசை, ஈரசைக்கு மேல் நீள்வதில்லை என்பது தெளிவாகிறது. 
குறிலசையின் இயல்பு ஓரசையாய் ஒலிப்பது. நெடிலசையின் இயல்பு ஓர் அசையாகவோ, ஈரசையாகவோ ஒலிப்பது. இத்தன்மைகளிலிருந்து மாறாமல் வரும் குறிலசையும், நெடிலசையும் சிறப்பசைகள் என்று கொள்ளப்படும். 

 

ஓரசை யாய்வரும் குறிலசை, ஓரசை

ஈரசை யாய்வரும் நெடிலசை சிறப்பசை

கருத்து : சிந்துப் பாடல்களில் வரும் அசைகளில், ஓரசையாக வருகின்ற குறிலசைகளும், ஓரசையாகவும், ஈரசையாகவும் வருகின்ற நெடிலசைகளும் சிறப்பசைகளாகும். 

விளக்கம் : சிந்துப்பாடல்களில் உள்ள ஒவ்வோர் உயிரும் அல்லது உயிர்மெய்யும் ஓரசையாகக் கொள்ளப்படும். ‘எழுத்தை அசைத்து இசை கொள்வதே அசை’ என்பது இலக்கண வழக்கு.

“அவ்வெழுத்து

அசைத்து இசை கோடலின் அசையே”

(யா. கலம் நூ. 1. உரை மேற்கோள்)

சிந்துப் பாடல்களில் குறிலாய் உள்ள அசையைக் குறிலசை எனலாம். நெடிலாய் உள்ள அசையை நெடிலசை எனலாம்.

 

குறிலசை என்பன : உயிர்க்குறிலும் (அ), உயிர்மெய்க் குறிலும் (க)

நெடிலசை என்பன

: உயிர்நெடிலும் (ஆ), உயிர்மெய் நெடிலும் (கா)

: உயிர்நெடில் ஒற்று (ஆல்), உயிர்மெய் நெடிலொற்று (கால்)

: உயிர்க்குறில் ஒற்று (அல்), உயிர்மெய்க் குறிலொற்று (கல்)

 

தனிச்சொல்லுக்கு முன்பும், அரையடியின் இறுதிகளிலும், அடியின் இறுதிகளிலும், அமைந்திருக்கின்ற அசைகள் இரண்டு அசைக்கு மேலும் இசைக்கும் என்று முன்பு விளக்கப்பட்டதால் (நூற்பா.10) மற்ற இடங்களில் உள்ள அசைகள் ஓரசை, ஈரசைக்கு மேல் நீள்வதில்லை என்பது தெளிவாகிறது. 

 

குறிலசையின் இயல்பு ஓரசையாய் ஒலிப்பது. நெடிலசையின் இயல்பு ஓர் அசையாகவோ, ஈரசையாகவோ ஒலிப்பது. இத்தன்மைகளிலிருந்து மாறாமல் வரும் குறிலசையும், நெடிலசையும் சிறப்பசைகள் என்று கொள்ளப்படும். 

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.