|
||||||||
சிறப்பசை |
||||||||
ஓரசை யாய்வரும் குறிலசை, ஓரசை
ஈரசை யாய்வரும் நெடிலசை சிறப்பசை
கருத்து : சிந்துப் பாடல்களில் வரும் அசைகளில், ஓரசையாக வருகின்ற குறிலசைகளும், ஓரசையாகவும், ஈரசையாகவும் வருகின்ற நெடிலசைகளும் சிறப்பசைகளாகும்.
விளக்கம் : சிந்துப்பாடல்களில் உள்ள ஒவ்வோர் உயிரும் அல்லது உயிர்மெய்யும் ஓரசையாகக் கொள்ளப்படும். ‘எழுத்தை அசைத்து இசை கொள்வதே அசை’ என்பது இலக்கண வழக்கு.
“அவ்வெழுத்து
அசைத்து இசை கோடலின் அசையே”
(யா. கலம் நூ. 1. உரை மேற்கோள்)
சிந்துப் பாடல்களில் குறிலாய் உள்ள அசையைக் குறிலசை எனலாம். நெடிலாய் உள்ள அசையை நெடிலசை எனலாம்.
குறிலசை என்பன : உயிர்க்குறிலும் (அ), உயிர்மெய்க் குறிலும் (க)
நெடிலசை என்பன
: உயிர்நெடிலும் (ஆ), உயிர்மெய் நெடிலும் (கா)
: உயிர்நெடில் ஒற்று (ஆல்), உயிர்மெய் நெடிலொற்று (கால்)
: உயிர்க்குறில் ஒற்று (அல்), உயிர்மெய்க் குறிலொற்று (கல்)
தனிச்சொல்லுக்கு முன்பும், அரையடியின் இறுதிகளிலும், அடியின் இறுதிகளிலும், அமைந்திருக்கின்ற அசைகள் இரண்டு அசைக்கு மேலும் இசைக்கும் என்று முன்பு விளக்கப்பட்டதால் (நூற்பா.10) மற்ற இடங்களில் உள்ள அசைகள் ஓரசை, ஈரசைக்கு மேல் நீள்வதில்லை என்பது தெளிவாகிறது.
குறிலசையின் இயல்பு ஓரசையாய் ஒலிப்பது. நெடிலசையின் இயல்பு ஓர் அசையாகவோ, ஈரசையாகவோ ஒலிப்பது. இத்தன்மைகளிலிருந்து மாறாமல் வரும் குறிலசையும், நெடிலசையும் சிறப்பசைகள் என்று கொள்ளப்படும்.
ஓரசை யாய்வரும் குறிலசை, ஓரசை ஈரசை யாய்வரும் நெடிலசை சிறப்பசை கருத்து : சிந்துப் பாடல்களில் வரும் அசைகளில், ஓரசையாக வருகின்ற குறிலசைகளும், ஓரசையாகவும், ஈரசையாகவும் வருகின்ற நெடிலசைகளும் சிறப்பசைகளாகும். விளக்கம் : சிந்துப்பாடல்களில் உள்ள ஒவ்வோர் உயிரும் அல்லது உயிர்மெய்யும் ஓரசையாகக் கொள்ளப்படும். ‘எழுத்தை அசைத்து இசை கொள்வதே அசை’ என்பது இலக்கண வழக்கு. “அவ்வெழுத்து அசைத்து இசை கோடலின் அசையே” (யா. கலம் நூ. 1. உரை மேற்கோள்) சிந்துப் பாடல்களில் குறிலாய் உள்ள அசையைக் குறிலசை எனலாம். நெடிலாய் உள்ள அசையை நெடிலசை எனலாம்.
குறிலசை என்பன : உயிர்க்குறிலும் (அ), உயிர்மெய்க் குறிலும் (க) நெடிலசை என்பன : உயிர்நெடிலும் (ஆ), உயிர்மெய் நெடிலும் (கா) : உயிர்நெடில் ஒற்று (ஆல்), உயிர்மெய் நெடிலொற்று (கால்) : உயிர்க்குறில் ஒற்று (அல்), உயிர்மெய்க் குறிலொற்று (கல்)
தனிச்சொல்லுக்கு முன்பும், அரையடியின் இறுதிகளிலும், அடியின் இறுதிகளிலும், அமைந்திருக்கின்ற அசைகள் இரண்டு அசைக்கு மேலும் இசைக்கும் என்று முன்பு விளக்கப்பட்டதால் (நூற்பா.10) மற்ற இடங்களில் உள்ள அசைகள் ஓரசை, ஈரசைக்கு மேல் நீள்வதில்லை என்பது தெளிவாகிறது.
குறிலசையின் இயல்பு ஓரசையாய் ஒலிப்பது. நெடிலசையின் இயல்பு ஓர் அசையாகவோ, ஈரசையாகவோ ஒலிப்பது. இத்தன்மைகளிலிருந்து மாறாமல் வரும் குறிலசையும், நெடிலசையும் சிறப்பசைகள் என்று கொள்ளப்படும்.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|