LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

சிரிப்பு.. - வித்யாசாகர்

பாவம்
புண்ணியம்
ச்ச ச்ச ஒரு மண்ணுமில்லை,

இந்த நொடி கிடைக்குமா
கொஞ்சம் சிரித்துக்கொள்ளலாமென்று
ஏங்கும் பொழுதுகளைத் தேடிவையுங்கள்..

யாருக்கும் 
வலிக்காமல் சிரிக்க முடியுமா 
சிரித்துக்கொள்ளுங்கள்..

மரணத்தை மிட்டாயாக்கிக் கொள்ளும் 
சிரிப்பு தான்
வாழ்வின் பரிசு

சிரிப்பை பரிசளியுங்கள்
சிரிப்பு புரிவதற்கே 
வயது நூறைக் கேட்கும் பணநோய் வேண்டாம் 

அந்த நோய் 
மிக கொடிது 
பணம் பெரிய விசம்..

பணமென்பது காலணியைப் போல 
வாசலில் கிடக்கட்டும் 
அவசியமெனில் அணிந்துக் கொள்வோம்

அதை யாரும் எடுத்துவைத்துக்கொள்ள 
மாட்டார்கள்
முட்டாள்கள் பதுக்கிவைக்கலாம் 
பதுக்கிக் கொள்ளட்டும் 
அவர்களை விட்டுவிடுங்கள் 
அவர்கள் சிரிப்பால் சபிக்கப் பட்டவர்களாக 
இருக்கலாம்

நீங்கள் சிரித்துக்கொண்டேயிருங்கள் 
இருப்போரை சிரிக்கவையுங்கள்..

சிரிப்புதான் 
பிறப்பின் பரிசு..

 

- வித்யாசாகர்

by Swathi   on 27 Feb 2016  0 Comments
Tags: Sirippu   Sirippu Kavithai   Comedy Kavithai   Nagaichuvai Kathaigal   சிரிப்பு        
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம்
குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம் குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.