LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பத்துப்பாட்டு

சிறுபாணாற்றுப்படை

 

நூல்
வேனிற்காலம்
மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை 
யணிமுலைத் துயல்வரூஉ மாரம் போலச்
செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்றுக்
கொல்கரை நறும்பொழிற் குயில்குடைந் துதிர்த்த 
புதுப்பூஞ் செம்மல் சூடிப் புடைநெறித்துக் 5
கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கற 
லயிலுருப் பனைய வாகி யைதுநடந்து
வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப
வேனி னின்ற வெம்பத வழிநாட்
காலைஞா யிற்றுக் கதிர்கடா வுறுப்பப் 10
பாலை நின்ற பாலை நெடுவழிச்
சுரன்முதன் மராஅத்த வரிநிழ லசைஇ  
அழகு மிக்க விறலியருடன் இளைப்பாறும் இரவலன்
யைதுவீ ழிகுபெய லழகுகொண் டருளி
நெய்கனிந் திருளிய கதுப்பிற் கதுப்பென 
மணிவயின் கலாபம் பரப்பிப் பலவுடன் 15
மயின்மயிற் குளிக்குஞ் சாயற் சாஅ 
யுயங்குநாய் நாவி னல்லெழி லசைஇ 
வயங்கிழை யுலறிய அடியி னடிதொடர்ந்
தீர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கையிற்
சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென 20
மால்வரை யொழுகிய வாழை வாழைப் 
பூவெனப் பொலிந்த ஓதி ஓதி
நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக்
களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கிற் சுணங்குபிதிர்ந்
தியாணர்க் கோங்கி னவிர்முகை யெள்ளிப் 25
பூணகத் தொடுங்கிய வெம்முலை முலையென 
வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கி 
னின்சே றிகுதரு மெயிற்றி னெயிறெனக் 
குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின் மெல்லியல் 30
மடமா னோக்கின் வாணுதல் விறலியர்
நடைமெலிந் தசைஇய நன்மென் சீறடி
கல்லா விளையர் மெல்லத் தைவரப்
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பி 
னின்குரற் சீறியா ழிடவயிற் றழீஇ 35
நைவளம் பழுநிய நயந்தெரி பாலை
கைவல் பாண்மகன் கடனறிந் தியக்க 
வியங்கா வையத்து வள்ளியோர் நசைஇத் 
துனிகூ ரெவ்வமொடு துயராற்றுப் படுப்ப
முனிவிகந் திருந்த முதுவா யிரவல! 40
வஞ்சி மாநகரின் சிறப்பு
கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க்
கழுநீர் மேய்ந்த கயவா யெருமை
பைங்கறி நிவந்த பலவி னீழல்
மஞ்சண் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர 
விளையா விளங்க ணாற மெல்குபு பெயராக் 45
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளுங் 
குடபுலங் காவலர் மருமா னொன்னார் 
வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த
எழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவண்
வருபுனல்வாயில் வஞ்சியும் வறிதே யதாஅன்று 50
தமிழ் நிலை பெற்ற மதுரையின் மாண்பு
நறவுவா யுறைக்கும் நாகுமுதிர் நுணவத்
தறைவாய்த் குறுந்துணி யயிலுளி பொருத
கைபுனை செப்பங் கடைந்த மார்பிற்
செய்பூங் கண்ணி செவிமுத றிருத்தி
நோன்பகட் டுமண ரொழுகையொடு வந்த 55
மகாஅ ரன்ன மந்தி மடவோர்
நகாஅ ரன்ன நளிநீர் முத்தம்
வாள்வா யெருந்தின் வயிற்றகத் தடக்கித்
தோள்புற மறைக்கும் நல்கூர் நுசுப்பி
னுளரிய லைம்பா லுமட்டிய ரீன்ற 60
கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடுந்
தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் கோமான்
தென்புலங் காவலர் மருமா னொன்னார் 
மண்மாறு கொண்ட மாலை வெண்குடைக்
கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன் 65
தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனைமறுகின் மதுரையும் வறிதே யுதாஅன்று  
உறந்தையின் சிறப்பு
நறுநீர்ப் பொய்கை யடைகரை நிவந்த 
துறுநீர்க் கடம்பின் றுணையார் கோதை
ஓவத் தன்ன வுண்டுறை மருங்கிற் 70
கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின்
வருமுலை யன்ன வண்முகை யுடைந்து
திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை 
யாசி லங்கை யரக்குத்தோய்ந் தன்ன
சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை 75
யேம வின்றுணை தழீஇ யிறகுளர்ந்து
காமரு தும்பி காமரஞ் செப்புந்
தண்பணை தழீஇய தளரா இருக்கைக்
குணபுலங் காவலர் மருமா னொன்னா
ரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியுந். 80
தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பிய
னோடாப் பூட்கை யுறந்தையும் வறிதே யதாஅன்று  
ஏழு வள்ளல்களின் சிறப்பு
வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்
கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய 85
அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
பெருங்க னாடன் பேகனுஞ் சுரும்புண
நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரல். 90
பறம்பிற் கோமான் பாரியுங் கறங்குமணி 
வாலுளைப் புரவியொடு வையக மருள 
வீர நன்மொழி யிரவலர்க் கீந்த
வழறிகழ்ந் திமைக்கு மஞ்சுவரு நெடுவேற்
கழறொடித் தடக்கைக் காரியு நிழறிகழ் 95
நீல நாக நல்கிய கலிங்க
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோ 
ளார்வ நன்மொழி யாயு மால்வரைக்
கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்ல 100
யமிழ்துவிளை தீங்கனி யெளவைக் கீந்த
வுரவுச்சினங் கனலுமொளிதிகழ் நெடுவே 
லரவக்கடற் றானை யதிகனுங் கரவாது
நட்டோ ருவப்ப நடைப்பரி கார
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத் 105
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாட னள்ளியு நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகக்துக்
குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த 110
வோரிக் குதிரை யோரியு மெனவாங்
கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோ
ளெழுவர் பூண்ட வீகைச் செந்நுகம்  
நல்லியக்கோடனின் தலைமைச் சிறப்பு
விரிகடல் வேலி வியலகம் விளங்க
வொருதான் றாங்கிய வுரனுடைய நோன்றா 115
ணறுவீ நாககு மகிலு மாரமுந்
துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகிய
பொருபுன றரூஉம் போக்கரு மரபிற்
றொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய
நன்மா விலங்கை மன்ன ருள்ளும் 120
மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா 
ளுறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்
களிற்றுத்தழும் பிருந்த கழறயங்கு திருந்தடிப் 
பிடிக்கணஞ் சிதறும் பெயல்மழைத் தடக்கைப் 
பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை 125
நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு  
புரவலனிடம் பரிசுபெறச் சென்ற விதம்
தாங்கரு மரபிற் றன்னுந் தந்தை 
வான்பொரு நெடுவரை வளனும் பாடி 
முன்நாள் சென்றன மாக  
வருத்தம் போக்கிய வண்மைச் சிறப்பு
விந்நா 
டிறவாக் கண்ண சாய்செவிக் குருளை 130
கறவாக் பால்முலை கவர்த னோனாது 
புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ னட்டில்
காழ்சோர் முதுசுவர்க் கணச்சித லரித்த
பூழி பூத்த புழற்கா ளாம்பி
யொல்குபசி யுழந்த வொடுங்குநுண் மருங்குல் 135
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த 
குப்பை வேளை யுப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்
திருக்பே ரொக்கலொ டொருங்குடன் மிசையு
மழிபசி வருத்தம் வீடப் பொழிகவுட் 140
டறுகட் பூட்கைத் தயங்குமணி மருங்கிற்
சிறுகண் யானையொடு பெருந்தே ரெய்தி 
யாமவ ணின்றும் வருதும்  
எயிற்பட்டினத்தில் கிடைக்கும் பொருள்கள்
நீயிரு
மிவணயந் திருந்த விரும்பே ரொக்கற்
செம்ம லூள்ளமொடு செல்குவி ராயி 145
னலைநீர்த் தாழை யன்னம் பூப்பவுந்
தலைநாட் செருந்தி தமனியம் மருட்டவுங்
கடுஞ்சூன் முண்டகங் கதிர்மணி கழாஅலவும்
நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவும்
கானல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தரப் 150
பாடல் சான்ற நெய்த னெடுவழி 
மணிநீர்ப் வைப்பு மதிலொடு பெயரிய 
பனிநீர்ப் படுவின் பட்டினம் படரி
னோங்குநிலை யொட்டகந் துயுன்மடிந் தன்ன 
வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகிற் 155
கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோண்
மதியேக் கறூஉம் மாசறு திருமுகத்து
நுதிவே னோக்கி னுளைமக ளரித்த 
பழம்படு தேறல் பரதவர் மடுப்பக்
கிளைமலர்ப் படப்பைக் கிடங்கிற் கோமான். 160
தளையவிழ் தெரியற் றகையோற் பாடி 
யறற்குழற் பாணி தூங்கி யவரொடு 
வறற்குழற் சூட்டின் வயின்வயிற் பெறுகுவிர்  
வேலூர் வளமும் எயினர் விருந்தும்
பைந்நனை யவரை பவழங் கோப்பவுங்
கருநனைக் காயாக் கணமயி லவிழவுங் 165
கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவுஞ்
செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவுங்
கொல்லை நெடுவழிக் கோப மூரவு 
முல்லை சான்ற முல்லையம் புறவின்
விடர்கா லருவி வியன்மலை மூழ்கிச் 170
சுடர்கான் மாறிய செவ்வி நோக்கித்
திறல்வே னுதியிற் பூத்த கேணி 
விறல்வேல் வென்றி வேலூ ரெய்தி
னுறுவெயிற் குலைஇய வுருப்பவிர் குரம்பை
யெயிற்றிய ரட்ட இன்புளி வெஞ்சோறு 175
தேமா மேனிச் சில்வளை யாயமொ
டாமான் சூட்டி னமைவரப் பெறுகுவிர்  
ஆமூர் வளமும் உழவர் விருந்தும்
நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக்
குறுங்காற் காஞ்சிக் கொம்ப ரேறி
நிலையருங் குட்ட நோக்கி நெடிதிருந்து 180
புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல் 
வள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசடை 
முள்ளரைத் தாமரை முகிழ்விரி நாட்போது
கொங்குகவர் நீலச் செங்கட் சேவல் 
மதிசே ரரவின் மானத் தோன்று 185
மருதஞ் சான்ற மருதத் தண்பணை 
யந்தண ரருகா வருங்கடி வியனக 
ரந்தண் கிடங்கினவ னாமூ ரெய்தின் 
வலம்பட நடக்கும் வலிபுண ரெருத்தி
னுரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை 190
பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்
தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப 
விருங்கா ழுலக்கை யிரும்புமுகந் தேய்த்த
அவைப்புமா ணரிசி யமலைவெண் சோறு
கவைத்தா ளலவன் கலவையொடு பெறுகுவி 195
நல்லியக் கோடனின் மூதூர் அண்மையது என்று அறிவித்தல்
ரெரிமறிந் தன்ன நாவி னிலங்கெயிற்றுக்
கருமறிக் காதிற் கவையடிப் பேய்மக
ணிணனுண்டு சிரித்த தோற்றம் போலப்
பிணனுகைத்துச் சிவந்த பேருகிர்ப் பணைத்தா
ளண்ணல் யானை யருவிதுக ளவிப்ப 200
நீறடங்கு தெருவினவன் சாறயர் மூதூர்
சேய்த்து மன்று சிறிதுநணி யதுவே  
வாயிலின் சிறப்பு
பொருநர்க் காயினும் புலவர்க் காயினு 
மருமறை நாவி னந்தணர்க் காயினுங்
கடவுண் மால்வரை கண்விடுத் தன்ன 205
அடையா வாயிலவ னருங்கடை குறுகிச்
 
நல்லியக்கோடன் அவையில் வீற்றிருக்கும் காட்சி 
அவன் குணங்களும் அவற்றை ஏத்துவோரும
செய்ந்நன்றி யறிதலுஞ் சிற்றின மின்மையு 
மின்முக முடையையு மினிய னாதலுஞ்
செறிந்துவிளங்கு சிறப்பி னறிந்தோ ரேத்த
அஞ்சினர்க் களித்தலும் வெஞ்சின மின்மையு 210
மாணணி புகுதலு மழிபடை தாங்கலும்
வாண்மீக் கூற்றத்த்து வயவ ரேத்தக்
கருதியது முடித்தலுங் காமுறப் படுதலு
மொருவழிப் படாமையு மோடிய துணர்தலு 
மரியே ருண்க ணரிவைய ரேத்த 215
அறிவுமடம் படுதலு மறிவுநன் குடைமையும் 
வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும் 
பரிசில் வாழ்க்கைப் பரிசில ரேத்தப்
பன்மீ னடுவட் பான்மதி போல
இன்னகை யாயமோ டிருந்தோற் குறுகிப் 220
யாழ் வாசித்து, அரசனைப் புகழ்ந்து பாடுதல்
பைங்க ணூகம் பாம்புபிடித் தன்ன
வங்கோட்டுச் செறிந்த வவிழ்ந்துவீங்கு திவவின் 
மணிநிரைத் தன்ன வனப்பின் வாயமைத்து 
வயிறுசேர் பொழுகிய வகையமை யகளத்துக்
கானக் குமிழின் கனிநிறங் கடுப்பப் 225
புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய்
தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பிற் 
பாடுதுறை முற்றிய பயன்றெரி கேள்விக் 
கூடுகொ ளின்னியங் குரல்குர லாக
நூனெறி மரபிற் பண்ணி யானாது 230
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை யெனவு 
மிளையோர்க்கு மலர்ந்த மார்பினை யெனவு
மேரோர்க்கு நிழன்ற கோலினை யெனவுந்
தேரோர்க் கழன்ற வேலினை யெனவு
நீசில மொழியா வளவை 235
பாணர் முதலியோர்க்கு அவன் உண்டி முதலியன கொடுத்தல்
மாசில்
காம்புசொலித் தன்ன வறுவை யுடீஇப்
பாம்புவெகுண் டன்ன தேற னல்கிக்
காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப் 
பூவிரி கச்சைப் புகழோன் றன்முன்
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட் 240
பனுவலின் வழாஅப் பல்வே றடிசில் 
வாணிற விசும்பிற் கோண்மீன் சூழ்த்த 
விளங்கதிர் ஞாயி றெள்ளூந் தோற்றத்து
விளங்குபொற் கலத்தில் விரும்புவன பேணி 
யானா விருப்பிற் றனின் றூட்டித் 245
நல்லியக்கோடன் அளிக்கும் பரிசில்
திறல்சால் வென்றியொடு தெவ்வுப்புல மகற்றி 
விறல்வேன் மன்னர் மன்னெயின் முருக்கி
நயவர் பாணர் புன்கண் டீர்த்தபின்
வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு
பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி 250
யுருவ வான்மதி யூர்கொண் டாங்குக்
கூருளி பொருத வடுவாழ் நோன்குறட்
டாரஞ் சூழ்ந்த வயில்வாய் நேமியொடு
சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத்
ததர்பிணி யவிழ்ந்த தோற்றம் போல 255
வுள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வைக்
கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி 
யூர்ந்துபெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு 
மாசெல வொழிக்கு மதனுடை நோன்றாள்
வாண்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ 260
யன்றே விடுக்குமவன் பரிசின்  
நல்லியக்கோடனது புகழும் பண்பும்
மென்றேட் 
டுகிலணி யல்குற் றுளங்கியன் மகளி 
ரகிலுண விரித்த வம்மென் கூந்தலின் 
மணிமயிற் கலாப மஞ்சிடைப் பரப்பித்
துணிமழை தவழுந் துயல்கழை நெடுங்கோட் 265
டெறிந்துரு மிறந்த வேற்றருஞ் சென்னிக் 
குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச்
செல்லிசை நிலைஇய பண்பி
நல்லியக் கோடனை நயந்தனிர் செலினே.  
சிறுபாணாற்றுப்படை முற்றும்.
தனிப் பாடல்கள்
அணி இழையார்க்கு ஆர் அணங்கு ஆகி, மற்று அந் நோய் 
தணி மருந்தும் தாமே ஆம் என்ப-மணி மிடை பூண் 
இம்மென் முழவின் எயிற்பட்டின நாடன் 
செம்மல் சிலை பொருத தோள். 1
நெடு வரைச் சந்தனம் நெஞ்சம் குளிர்ப்பப் 
படும், அடும் பாம்பு ஏர் மருங்குல்-இடு கொடி 
ஓடிய மார்பன் உயர் நல்லியக்கோடன் 
சூடிய கண்ணி சுடும். 
2

நூல்

வேனிற்காலம்

மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை யணிமுலைத் துயல்வரூஉ மாரம் போலச்செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்றுக்கொல்கரை நறும்பொழிற் குயில்குடைந் துதிர்த்த புதுப்பூஞ் செம்மல் சூடிப் புடைநெறித்துக் 5கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கற லயிலுருப் பனைய வாகி யைதுநடந்துவெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்பவேனி னின்ற வெம்பத வழிநாட்காலைஞா யிற்றுக் கதிர்கடா வுறுப்பப் 10பாலை நின்ற பாலை நெடுவழிச்சுரன்முதன் மராஅத்த வரிநிழ லசைஇ  

அழகு மிக்க விறலியருடன் இளைப்பாறும் இரவலன்

யைதுவீ ழிகுபெய லழகுகொண் டருளிநெய்கனிந் திருளிய கதுப்பிற் கதுப்பென மணிவயின் கலாபம் பரப்பிப் பலவுடன் 15மயின்மயிற் குளிக்குஞ் சாயற் சாஅ யுயங்குநாய் நாவி னல்லெழி லசைஇ வயங்கிழை யுலறிய அடியி னடிதொடர்ந்தீர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கையிற்சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென 20மால்வரை யொழுகிய வாழை வாழைப் பூவெனப் பொலிந்த ஓதி ஓதிநளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக்களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கிற் சுணங்குபிதிர்ந்தியாணர்க் கோங்கி னவிர்முகை யெள்ளிப் 25பூணகத் தொடுங்கிய வெம்முலை முலையென வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கி னின்சே றிகுதரு மெயிற்றி னெயிறெனக் குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்தமுல்லை சான்ற கற்பின் மெல்லியல் 30மடமா னோக்கின் வாணுதல் விறலியர்நடைமெலிந் தசைஇய நன்மென் சீறடிகல்லா விளையர் மெல்லத் தைவரப்பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பி னின்குரற் சீறியா ழிடவயிற் றழீஇ 35நைவளம் பழுநிய நயந்தெரி பாலைகைவல் பாண்மகன் கடனறிந் தியக்க வியங்கா வையத்து வள்ளியோர் நசைஇத் துனிகூ ரெவ்வமொடு துயராற்றுப் படுப்பமுனிவிகந் திருந்த முதுவா யிரவல! 40

வஞ்சி மாநகரின் சிறப்பு

கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க்கழுநீர் மேய்ந்த கயவா யெருமைபைங்கறி நிவந்த பலவி னீழல்மஞ்சண் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர விளையா விளங்க ணாற மெல்குபு பெயராக் 45குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளுங் குடபுலங் காவலர் மருமா னொன்னார் வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்தஎழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவண்வருபுனல்வாயில் வஞ்சியும் வறிதே யதாஅன்று 50

தமிழ் நிலை பெற்ற மதுரையின் மாண்பு

நறவுவா யுறைக்கும் நாகுமுதிர் நுணவத்தறைவாய்த் குறுந்துணி யயிலுளி பொருதகைபுனை செப்பங் கடைந்த மார்பிற்செய்பூங் கண்ணி செவிமுத றிருத்திநோன்பகட் டுமண ரொழுகையொடு வந்த 55மகாஅ ரன்ன மந்தி மடவோர்நகாஅ ரன்ன நளிநீர் முத்தம்வாள்வா யெருந்தின் வயிற்றகத் தடக்கித்தோள்புற மறைக்கும் நல்கூர் நுசுப்பினுளரிய லைம்பா லுமட்டிய ரீன்ற 60கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடுந்தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் கோமான்தென்புலங் காவலர் மருமா னொன்னார் மண்மாறு கொண்ட மாலை வெண்குடைக்கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன் 65தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்மகிழ்நனைமறுகின் மதுரையும் வறிதே யுதாஅன்று  

உறந்தையின் சிறப்பு

நறுநீர்ப் பொய்கை யடைகரை நிவந்த துறுநீர்க் கடம்பின் றுணையார் கோதைஓவத் தன்ன வுண்டுறை மருங்கிற் 70கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின்வருமுலை யன்ன வண்முகை யுடைந்துதிருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை யாசி லங்கை யரக்குத்தோய்ந் தன்னசேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை 75யேம வின்றுணை தழீஇ யிறகுளர்ந்துகாமரு தும்பி காமரஞ் செப்புந்தண்பணை தழீஇய தளரா இருக்கைக்குணபுலங் காவலர் மருமா னொன்னாரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியுந். 80தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கைநாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியனோடாப் பூட்கை யுறந்தையும் வறிதே யதாஅன்று  

ஏழு வள்ளல்களின் சிறப்பு

வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய 85அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்பெருங்க னாடன் பேகனுஞ் சுரும்புணநறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கியபிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரல். 90பறம்பிற் கோமான் பாரியுங் கறங்குமணி வாலுளைப் புரவியொடு வையக மருள வீர நன்மொழி யிரவலர்க் கீந்தவழறிகழ்ந் திமைக்கு மஞ்சுவரு நெடுவேற்கழறொடித் தடக்கைக் காரியு நிழறிகழ் 95நீல நாக நல்கிய கலிங்கஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்தசாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோ ளார்வ நன்மொழி யாயு மால்வரைக்கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்ல 100யமிழ்துவிளை தீங்கனி யெளவைக் கீந்தவுரவுச்சினங் கனலுமொளிதிகழ் நெடுவே லரவக்கடற் றானை யதிகனுங் கரவாதுநட்டோ ருவப்ப நடைப்பரி காரமுட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத் 105துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டுநளிமலை நாட னள்ளியு நளிசினைநறும்போது கஞலிய நாகுமுதிர் நாகக்துக்குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்தகாரிக் குதிரைக் காரியொடு மலைந்த 110வோரிக் குதிரை யோரியு மெனவாங்கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோளெழுவர் பூண்ட வீகைச் செந்நுகம்  

நல்லியக்கோடனின் தலைமைச் சிறப்பு

விரிகடல் வேலி வியலகம் விளங்கவொருதான் றாங்கிய வுரனுடைய நோன்றா 115ணறுவீ நாககு மகிலு மாரமுந்துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகியபொருபுன றரூஉம் போக்கரு மரபிற்றொன்மா விலங்கைக் கருவொடு பெயரியநன்மா விலங்கை மன்ன ருள்ளும் 120மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா ளுறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்களிற்றுத்தழும் பிருந்த கழறயங்கு திருந்தடிப் பிடிக்கணஞ் சிதறும் பெயல்மழைத் தடக்கைப் பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை 125நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு  

புரவலனிடம் பரிசுபெறச் சென்ற விதம்

தாங்கரு மரபிற் றன்னுந் தந்தை வான்பொரு நெடுவரை வளனும் பாடி முன்நாள் சென்றன மாக  

வருத்தம் போக்கிய வண்மைச் சிறப்பு

விந்நா டிறவாக் கண்ண சாய்செவிக் குருளை 130கறவாக் பால்முலை கவர்த னோனாது 
புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ னட்டில்காழ்சோர் முதுசுவர்க் கணச்சித லரித்தபூழி பூத்த புழற்கா ளாம்பியொல்குபசி யுழந்த வொடுங்குநுண் மருங்குல் 135வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த குப்பை வேளை யுப்பிலி வெந்ததைமடவோர் காட்சி நாணிக் கடையடைத்திருக்பே ரொக்கலொ டொருங்குடன் மிசையுமழிபசி வருத்தம் வீடப் பொழிகவுட் 140டறுகட் பூட்கைத் தயங்குமணி மருங்கிற்சிறுகண் யானையொடு பெருந்தே ரெய்தி யாமவ ணின்றும் வருதும்  

எயிற்பட்டினத்தில் கிடைக்கும் பொருள்கள்

நீயிருமிவணயந் திருந்த விரும்பே ரொக்கற்செம்ம லூள்ளமொடு செல்குவி ராயி 145னலைநீர்த் தாழை யன்னம் பூப்பவுந்தலைநாட் செருந்தி தமனியம் மருட்டவுங்கடுஞ்சூன் முண்டகங் கதிர்மணி கழாஅலவும்நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவும்கானல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தரப் 150பாடல் சான்ற நெய்த னெடுவழி மணிநீர்ப் வைப்பு மதிலொடு பெயரிய பனிநீர்ப் படுவின் பட்டினம் படரினோங்குநிலை யொட்டகந் துயுன்மடிந் தன்ன வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகிற் 155கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோண்மதியேக் கறூஉம் மாசறு திருமுகத்துநுதிவே னோக்கி னுளைமக ளரித்த பழம்படு தேறல் பரதவர் மடுப்பக்கிளைமலர்ப் படப்பைக் கிடங்கிற் கோமான். 160தளையவிழ் தெரியற் றகையோற் பாடி யறற்குழற் பாணி தூங்கி யவரொடு வறற்குழற் சூட்டின் வயின்வயிற் பெறுகுவிர்  

வேலூர் வளமும் எயினர் விருந்தும்

பைந்நனை யவரை பவழங் கோப்பவுங்கருநனைக் காயாக் கணமயி லவிழவுங் 165கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவுஞ்செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவுங்கொல்லை நெடுவழிக் கோப மூரவு முல்லை சான்ற முல்லையம் புறவின்விடர்கா லருவி வியன்மலை மூழ்கிச் 170சுடர்கான் மாறிய செவ்வி நோக்கித்திறல்வே னுதியிற் பூத்த கேணி விறல்வேல் வென்றி வேலூ ரெய்தினுறுவெயிற் குலைஇய வுருப்பவிர் குரம்பையெயிற்றிய ரட்ட இன்புளி வெஞ்சோறு 175தேமா மேனிச் சில்வளை யாயமொடாமான் சூட்டி னமைவரப் பெறுகுவிர்  

ஆமூர் வளமும் உழவர் விருந்தும்

நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக்குறுங்காற் காஞ்சிக் கொம்ப ரேறிநிலையருங் குட்ட நோக்கி நெடிதிருந்து 180புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல் வள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசடை முள்ளரைத் தாமரை முகிழ்விரி நாட்போதுகொங்குகவர் நீலச் செங்கட் சேவல் மதிசே ரரவின் மானத் தோன்று 185மருதஞ் சான்ற மருதத் தண்பணை யந்தண ரருகா வருங்கடி வியனக ரந்தண் கிடங்கினவ னாமூ ரெய்தின் வலம்பட நடக்கும் வலிபுண ரெருத்தினுரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை 190பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப விருங்கா ழுலக்கை யிரும்புமுகந் தேய்த்தஅவைப்புமா ணரிசி யமலைவெண் சோறுகவைத்தா ளலவன் கலவையொடு பெறுகுவி 195

நல்லியக் கோடனின் மூதூர் அண்மையது என்று அறிவித்தல்

ரெரிமறிந் தன்ன நாவி னிலங்கெயிற்றுக்கருமறிக் காதிற் கவையடிப் பேய்மகணிணனுண்டு சிரித்த தோற்றம் போலப்பிணனுகைத்துச் சிவந்த பேருகிர்ப் பணைத்தாளண்ணல் யானை யருவிதுக ளவிப்ப 200நீறடங்கு தெருவினவன் சாறயர் மூதூர்சேய்த்து மன்று சிறிதுநணி யதுவே  

வாயிலின் சிறப்பு

பொருநர்க் காயினும் புலவர்க் காயினு மருமறை நாவி னந்தணர்க் காயினுங்கடவுண் மால்வரை கண்விடுத் தன்ன 205அடையா வாயிலவ னருங்கடை குறுகிச் 

நல்லியக்கோடன் அவையில் வீற்றிருக்கும் காட்சி அவன் குணங்களும் அவற்றை ஏத்துவோரும

செய்ந்நன்றி யறிதலுஞ் சிற்றின மின்மையு மின்முக முடையையு மினிய னாதலுஞ்செறிந்துவிளங்கு சிறப்பி னறிந்தோ ரேத்தஅஞ்சினர்க் களித்தலும் வெஞ்சின மின்மையு 210மாணணி புகுதலு மழிபடை தாங்கலும்வாண்மீக் கூற்றத்த்து வயவ ரேத்தக்கருதியது முடித்தலுங் காமுறப் படுதலுமொருவழிப் படாமையு மோடிய துணர்தலு மரியே ருண்க ணரிவைய ரேத்த 215அறிவுமடம் படுதலு மறிவுநன் குடைமையும் வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும் பரிசில் வாழ்க்கைப் பரிசில ரேத்தப்பன்மீ னடுவட் பான்மதி போலஇன்னகை யாயமோ டிருந்தோற் குறுகிப் 220

யாழ் வாசித்து, அரசனைப் புகழ்ந்து பாடுதல்

பைங்க ணூகம் பாம்புபிடித் தன்னவங்கோட்டுச் செறிந்த வவிழ்ந்துவீங்கு திவவின் மணிநிரைத் தன்ன வனப்பின் வாயமைத்து வயிறுசேர் பொழுகிய வகையமை யகளத்துக்கானக் குமிழின் கனிநிறங் கடுப்பப் 225புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய்தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பிற் பாடுதுறை முற்றிய பயன்றெரி கேள்விக் கூடுகொ ளின்னியங் குரல்குர லாகநூனெறி மரபிற் பண்ணி யானாது 230முதுவோர்க்கு முகிழ்த்த கையினை யெனவு மிளையோர்க்கு மலர்ந்த மார்பினை யெனவுமேரோர்க்கு நிழன்ற கோலினை யெனவுந்தேரோர்க் கழன்ற வேலினை யெனவுநீசில மொழியா வளவை 235

பாணர் முதலியோர்க்கு அவன் உண்டி முதலியன கொடுத்தல்

மாசில்காம்புசொலித் தன்ன வறுவை யுடீஇப்பாம்புவெகுண் டன்ன தேற னல்கிக்காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப் பூவிரி கச்சைப் புகழோன் றன்முன்பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட் 240பனுவலின் வழாஅப் பல்வே றடிசில் வாணிற விசும்பிற் கோண்மீன் சூழ்த்த விளங்கதிர் ஞாயி றெள்ளூந் தோற்றத்துவிளங்குபொற் கலத்தில் விரும்புவன பேணி யானா விருப்பிற் றனின் றூட்டித் 245

நல்லியக்கோடன் அளிக்கும் பரிசில்

திறல்சால் வென்றியொடு தெவ்வுப்புல மகற்றி விறல்வேன் மன்னர் மன்னெயின் முருக்கிநயவர் பாணர் புன்கண் டீர்த்தபின்வயவர் தந்த வான்கேழ் நிதியமொடுபருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி 250யுருவ வான்மதி யூர்கொண் டாங்குக்கூருளி பொருத வடுவாழ் நோன்குறட்டாரஞ் சூழ்ந்த வயில்வாய் நேமியொடுசிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத்ததர்பிணி யவிழ்ந்த தோற்றம் போல 255வுள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வைக்கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி யூர்ந்துபெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு மாசெல வொழிக்கு மதனுடை நோன்றாள்வாண்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ 260யன்றே விடுக்குமவன் பரிசின்  

நல்லியக்கோடனது புகழும் பண்பும்

மென்றேட் டுகிலணி யல்குற் றுளங்கியன் மகளி ரகிலுண விரித்த வம்மென் கூந்தலின் மணிமயிற் கலாப மஞ்சிடைப் பரப்பித்துணிமழை தவழுந் துயல்கழை நெடுங்கோட் 265டெறிந்துரு மிறந்த வேற்றருஞ் சென்னிக் குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச்செல்லிசை நிலைஇய பண்பிநல்லியக் கோடனை நயந்தனிர் செலினே.  

சிறுபாணாற்றுப்படை முற்றும்.

தனிப் பாடல்கள்

அணி இழையார்க்கு ஆர் அணங்கு ஆகி, மற்று அந் நோய் தணி மருந்தும் தாமே ஆம் என்ப-மணி மிடை பூண் இம்மென் முழவின் எயிற்பட்டின நாடன் செம்மல் சிலை பொருத தோள். 1
நெடு வரைச் சந்தனம் நெஞ்சம் குளிர்ப்பப் படும், அடும் பாம்பு ஏர் மருங்குல்-இடு கொடி ஓடிய மார்பன் உயர் நல்லியக்கோடன் சூடிய கண்ணி சுடும். 2

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.