LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பதினெண் கீழ்க்கணக்கு

சிறுபஞ்சமூலம்

 

கடவுள் வாழ்த்து
முழுது உணர்ந்து, மூன்று ஒழித்து, மூவாதான் பாதம்,
பழுது இன்றி, ஆற்றப் பணிந்து, முழுது ஏத்தி,
மண் பாய ஞாலத்து மாந்தர்க்கு உறுதியா,
வெண்பா உரைப்பன், சில.
நூல்
பொருள் உடையான் கண்ணதே, போகம்; அறனும்,
அருள் உடையான் கண்ணதே ஆகும்; அருள் உடையான்
செய்யான் பழி; பாவம் சேரான்; புறமொழியும்
உய்யான், பிறன் செவிக்கு உய்த்து. 1
கற்புடைய பெண் அமிர்து; கற்று அடங்கினான் அமிர்து;
நற்பு உடைய நாடு அமிர்து; நாட்டுக்கு நற்பு உடைய
மேகமே சேர் கொடி வேந்து அமிர்து; சேவகனும்
ஆகவே செய்யின், அமிர்து. 2
கல்லாதான் தான் காணும் நுட்பமும், காது இரண்டும்
இல்லாதாள் ஏக்கழுத்தம் செய்தலும், இல்லாதான்
ஒல்லாப் பொருள் இலார்க்கு ஈத்து அறியான் என்றலும்,
நல்லார்கள் கேட்பின் நகை. 3
உடம்பு ஒழிய வேண்டின், உயர் தவம்; மற்று ஈண்டு
இடம் பொழிய வேண்டுமேல், ஈகை; மடம் பொழிய
வேண்டின், அறிமடம்; வேண்டேல், பிறர் மனை;
ஈண்டின், இயையும் திரு. 4
படைதனக்கு யானை வனப்பு ஆகும்; பெண்ணின் 
இடை தனக்கு நுண்மை வனப்பு ஆம்; நடைதனக்குக்
கோடா மொழி வனப்பு; கோற்கு அதுவே; சேவகற்கு
வாடாத வன்கண் வனப்பு. 5
பற்றினான், பற்று அற்றான் நூல், தவசி; எப் பொருளும்
முற்றினான் ஆகும், முதல்வன்; நூல் பற்றினால்
பாத்து உண்பான் பார்ப்பான்; பழி உணர்வான் சான்றவன்
காத்து உண்பான் காணான், பிணி. 6
கண் வனப்புக் கண்ணோட்டம்; கால் வனப்புச் செல்லாமை;
எண் வனப்பு, 'இத் துணை ஆம்' என்று உரைத்தல்; பண் வனப்புக்
கேட்டார், நன்று என்றல்; கிளர் வேந்தன் தன் நாடு
வாட்டான், நன்று என்றல் வனப்பு. 7
கொன்று உண்பான் நாச் சாம்; கொடுங் கரி போவான் நாச் சாம்;
நன்று உணர்வார் முன் கல்லான் நாவும் சாம்; ஒன்றானைக்
கண்டுழி, நாச் சாம்; கடவான் குடிப் பிறந்தான்
உண்டுழி, நாச் சாம், உணர்ந்து. 8
சிலம்பிக்குத் தன் சினை கூற்றம்; நீள் கோடு
விலங்கிற்குக் கூற்றம்; மயிர்தான் வலம் படா
மாவிற்குக் கூற்றம் ஆம்; ஞெண்டிற்குத் தன் பார்ப்பு;
நாவிற்கு நன்று அல் வசை. 9
நாண் இலான் சால்பும், நடை இலான் நல் நோன்பும்,
ஊண் இலான் செய்யும் உதாரமும், ஏண் இலான்
சேவகமும், செந்தமிழ் தேற்றான் கவி செயலும்,-
நாவகம் மேய் நாடின் நகை. 10
கோறலும் நஞ்சு; ஊனைத் துய்த்தல் கொடு நஞ்சு;
வேறலும் நஞ்சு, மாறு அல்லானை; தேறினால்,
நீடு ஆங்குச் செய்தலும் நஞ்சால்; இளங்கிளையை
நாடாதே, தீதுஉரையும் நஞ்சு. 11
இடர் இன்னா, நட்டார்கண்; ஈயாமை இன்னா;
தொடர் இன்னா, கள்ளர்கண்; தூயார்ப் படர்வு இன்னா;-
கண்டல் அவிர் பூங் கதுப்பினாய்! - இன்னாதே,
கொண்ட விரதம் குறைவு. 12
கொண்டான் வழி ஒழுகல் பெண்; மகன் தந்தைக்குத்
தண்டான் வழி ஒழுகல்; தன் கிளை அஃது; அண்டாதே,
வேல் வழி வெம் முனை வீழாது, மண் நாடு;
கோல் வழி வாழ்தல் குணம். 13
பிழைத்த பொறுத்தல் பெருமை; சிறுமை
இழைத்த தீங்கு எண்ணி இருத்தல்; பிழைத்த,
பகை, கெட வாழ்வதும், பல் பொருளால் பல்லார்
நகை கெட வாழ்வதும், நன்று. 14
கதம் நன்று, சான்றாண்மை தீது, கழிய
மதம் நன்று, மாண்பு இலார் முன்னர்; விதம் நன்றால்,
கோய் வாயின் கீழ் உயிர்க்கு ஈ துற்று, குரைத்து எழுந்த
நாய் வாயுள் நல்ல தசை. 15
நட்டாரை ஆக்கி, பகை தணித்து, வை எயிற்றுப்
பட்டு ஆர் அணி அல்குலார்ப் படிந்து ஒட்டி,
துடங்கினார், இல்லகத்து, அன்பின் துறவாது; -
உடம்பினான் ஆய பயன். 16
பொய்யாமை பொன் பெறினும், கள்ளாமை, மெல்லியார்
வையாமை, வார் குழலார் நச்சினும் நையாமை,
ஓர்த்து உடம்பு பேரும் என்று, ஊன் அவாய் உண்ணானேல்,-
பேர்த்து உடம்பு கோடல் அரிது. 17
தேவரே, கற்றவர்; கல்லாதார் தேருங்கால்,
பூதரே; முன் பொருள் செய்யாதார் ஆதரே;
'துன்பம் இலேம், பண்டு, யாமே வனப்பு உடையேம்!'
என்பர், இரு கால் எருது. 18
கள்ளான், சூது என்றும் கழுமான், கரியாரை
நள்ளான், உயிர் அழுங்க நா ஆடான், எள்ளானாய்,
ஊன் மறுத்துக் கொள்ளானேல், ஊன் உடம்பு எஞ் ஞான்றும்
தான் மறுத்துக் கொள்ளான், தளர்ந்து. 19
பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு
உரையாமைச் செல்லும் உணர்வு. 20
பூத்தாலும் காயா மரம் உள; நன்று அறியார்,
மூத்தாலும் மூவார், நூல் தேற்றாதார்; பாத்திப்
புதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு
உரைத்தாலும் செல்லாது, உணர்வு. 21
வடிவு, இளமை, வாய்த்த வனப்பு, வணங்காக்
குடி, குலம், என்ற ஐந்தும் குறித்த முடியத்
துளங்கா நிலை காணார்; தொக்கு ஈர் பசுவால்,
இளங் கால் துறவாதவர். 22
கள் உண்டல், காணின் கணவற் பிரிந்து உறைதல்,
வெள்கிலளாய்ப் பிறர் இல் சேறல், உள்ளிப்
பிறர் கருமம் ஆராய்தல், தீப் பெண் கிளைமை,-
திறவது, தீப் பெண் தொழில். 23
பெருங் குணத்தார்ச் சேர்மின்; பிறன் பொருள் வவ்வன்மின்;
கருங் குணத்தார் கேண்மை கழிமின்; ஒருங்கு உணர்ந்து,
தீச் சொல்லே காமின்; வரும் காலன், திண்ணிதே;-
வாய்ச் சொல்லே அன்று; வழக்கு. 24
வான் குரீஇக் கூடு, அரக்கு, வால் உலண்டு, நூல் புழுக்கோல்,
தேன் புரிந்தது, யார்க்கும் செயல் ஆகா; - தாம் புரீஇ,
வல்லவர் வாய்ப்பன என்னார்; ஓரோ ஒருவர்க்கு
ஒல்காது, ஓரொன்று படும். 25
அறம் நட்டான் நல்-நெறிக்கண் நிற்க, அடங்காப்
புறம் நட்டான் புல்-நெறி போகாது! - புறம் நட்டான்
கண்டு எடுத்து கள், களவு, சூது, கருத்தினால்,
பண்டு எடுத்துக் காட்டும், பயின்று. 26
ஆண் ஆக்கம் வேண்டாதான் ஆசான்; அவற்கு இயைந்த
மாணாக்கன், அன்பான், வழிபடுவான்; மாணாக்கன்
கற்பு அனைத்து மூன்றும் கடிந்தான்; கடியாதான்
நிற்பு அனைத்தும், நெஞ்சிற்கு ஓர் நோய். 27
நெய்தல் முகிழ்த் துணை ஆம், குடுமி; நேர் மயிரும்
உய்தல் ஒரு திங்கள் நாள் ஆகும்; செய்தல்,
நுணங்கு நூல் ஓதுதல், கேட்டல், மாணாக்கர்,
வணங்கல், வலம் கொண்டு வந்து. 28
ஒருவன் அறிவானும் எல்லாம், யாதொன்றும்
ஒருவன் அறியாதவனும், ஒருவன்
குணன் அடங்க, குற்றம் இலானும், ஒருவன்
கணன் அடங்கக் கற்றானும், இல். 29
உயிர் நோய் செய்யாமை, உறு நோய் மறத்தல்,
செயிர் நோய் பிறர்கண் செய்யாமை, செயிர் நோய்
விழைவு, வெகுளி, இவை விடுவான் ஆயின்,-
இழவு அன்று, இனிது தவம். 30
வேட்டவன் பார்ப்பன்; விளங்கிழைக்குக் கற்பு உடைமை;
கேட்பவன் கேடு இல் பெரும் புலவன்; - பாட்டு, அவன்
சிந்தையான் ஆகும், சிறத்தல்; உலகினுள்
தந்தையான் ஆகும், குலம். 31
வைப்பானே வள்ளல்; வழங்குவான் வாணிகன்;
உய்ப்பானே ஆசான், உயர் கதிக்கு; உய்ப்பான்,
உடம்பின் ஆர் வேலி ஒருப்படுத்து, ஊண் ஆரத்
தொடங்கானேல், சேறல் துணிவு. 32
வைததனான் ஆகும் வசை; வணக்கம், நன்று, ஆகச்
செய்ததனான் ஆகும், செழுங் குலம்; முன் செய்த
பொருளினான் ஆகும் ஆம், போகம்; நெகிழ்ந்த
அருளினான் ஆகும் அறம். 33
இல் இயலார் நல் அறமும், ஏனைத் துறவறமும்,
நல் இயலான் நாடி உரைக்குங்கால், நல் இயல்
தானத்தான் போகம்; தவத்தான் சுவர்க்கம் ஆம்;
ஞானத்தான் வீடு ஆகும் நாட்டு! 34
மயிர் வனப்பும், கண் கவரும் மார்பின் வனப்பும்,
உகிர் வனப்பும், காதின் வனப்பும், செயிர் தீர்ந்த
பல்லின் வனப்பும், வனப்பு அல்ல; நூற்கு இயைந்த
சொல்லின் வனப்பே, வனப்பு. 35
தொழீஇ அட, உண்ணார்; தோழர் இல் துஞ்சார்;
வழீஇப் பிறர் பொருளை வவ்வார்; கெழீஇக்
கலந்த பின் கீழ் காணார்; காணாய், மடவாய்!
புலந்தபின், போற்றார், புலை. 36
பொய்யாமை நன்று; பொருள் நன்று; உயிர் நோவக்
கொல்லாமை நன்று; கொழிக்குங்கால், பல்லார் முன்
பேணாமை, பேணும் தகைய; சிறிய எனினும்,
மாணாமை, மாண்டார் மனை. 37
பண்டாரம், பல் கணக்கு, கண்காணி, பாத்து, இல்லார்,
உண்டு ஆர் அடிசிலே, தோழரின் கண்டாரா,
யாக்கைக்குத் தக்க அறிவு இல்லார்க் காப்பு அடுப்பின்,-
காக்கையைக் காப்பு அடுத்த சோறு. 38
உடை இட்டார், புல் மேய்ந்தார், ஓடு நீர்ப் புக்கார்,
படை இட்டார், பற்றேனும் இன்றி நடை விட்டார்,-
இவ் வகை ஐவரையும் என்றும் அணுகாரே,
செவ் வகைச் சேவகர் சென்று. 39
பூவாதாள், பூப்புப் புறக்கொடுத்தாள், இலிங்கி,
ஓவாதாள் கோலம் ஒரு பொழுதும் காவாதாள்,
யார் யார் பிறர் மனையாள் உள்ளிட்டு, - இவ் ஐவரையும்
சாரார், பகை போல் சலித்து. 40
வருவாய்க்குத் தக்க, வழக்கு, அறிந்து, சுற்றம்
வெருவாமை, வீழ் விருந்து ஓம்பி, திரு ஆக்கும்
தெய்வத்தை எஞ் ஞான்றும் தெற்ற வழிபாடு
செய்வதே-பெண்டிர் சிறப்பு. 41
நாள் கூட்டம், மூழ்த்தம், இவற்றொடு நன்று ஆய
கோள் கூட்டம், யோகம், குணன், உணர்ந்து, - தோள் கூட்டல்
உற்றானும் அல்லானும், - ஐந்தும் உணர்வான் நாள்
பெற்றானேல், கொள்க, பெரிது! 42
பேண், அடக்கம், பேணாப் பெருந் தகைமை, பீடு உடைமை,
நாண் ஒடுக்கம், என்று ஐந்தும் நண்ணின்றா, பூண் ஒடுக்கும்
பொன் வரைக் கோங்கு ஏர் முலைப் பூந் திருவே ஆயினும்,
தன் வரைத் தாழ்த்தல் அரிது. 43
வார் சான்ற கூந்தல்! வரம்பு உயர, வைகலும்
நீர் சான்று உயரவே, நெல் உயரும்; சீர் சான்ற
தாவாக் குடி உயர, தாங்கு அருஞ் சீர்க் கோ உயர்தல்
ஓவாது உரைக்கும் உலகு. 44
அழியாமை எத் தவமும், சார்ந்தாரை ஆக்கல்,
பழியாமைப் பாத்தல் யார் மாட்டும் ஒழியாமை,
கன்று சாவப் பால் கறவாமை, செய்யாமை
மன்று சார்வு ஆக மனை. 45
நசை கொல்லார், நச்சியார்க்கு என்றும்; கிளைஞர்
மிசை கொல்லார்; வேளாண்மை கொல்லார்; இசை கொல்லார்;
பொன் பெறும் பூஞ் சுணங்கின் மென் முலையாய்! நன்கு உணர்ந்தார்
என் பெறினும் கொல்லார், இயைந்து. 46
நீண்ட நீர், காடு, களர், நிவந்து விண் தோயும்
மாண்ட மலை, மக்கள், உள்ளிட்டு, மாண்டவர்
ஆய்ந்தன ஐந்தும், அரணா உடையானை
வேந்தனா நாட்டல் விதி. 47
பொச்சாப்புக் கேடு; பொருட் செருக்குத்தான் கேடு;
முற்றாமை கேடு; முரண் கேடு; தெற்றத்
தொழில் மகன்தன்னொடு மாறுஆயின், என்றும்
உழுமகற்குக் கேடு என்ற உரை. 48
கொல்லாமை நன்று; கொலை தீது; எழுத்தினைக்
கல்லாமை தீது; கதம் தீது; நல்லார்
மொழியாமை முன்னே, முழுதும் கிளைஞர்
பழியாமை பல்லார் பதி. 49
உண்ணாமை நன்று, அவா நீக்கி; விருந்து கண்மாறு
எண்ணாமை நன்று; இகழின், தீது, எளியார்; எண்ணின்,
அரியர் ஆவார் பிறர் இல் செல்லாரே; உண்ணார்,
பெரியர் ஆவார், பிறர் கைத்து. 50
மக்கள் பெறுதல், மடன் உடைமை, மாது உடைமை,
ஒக்க உடன் உறைதல், ஊண் அமைவு,-தொக்க
அலவலை அல்லாமை, பெண் மகளிர்க்கு - ஐந்தும்
தலைமகனைத் தாழ்க்கும் மருந்து. 51
கொண்டான் கொழுநன், உடன்பிறந்தான், தன் மாமன்,
வண்டு ஆர் பூந் தொங்கல் மகன், தந்தை,-வண் தாராய்! -
யாப்பு ஆர் பூங் கோதை அணி இழையை, நற்கு இயையக்
காப்பர், கருதும் இடத்து. 52
ஆம்-பல், வாய், கண், மனம், வார் புருவம், என்று ஜந்தும்,
தாம் பல் வாய் ஓடி, நிறை காத்தல் ஓம்பார்,
நெடுங் கழை நீள் மூங்கில் என இகழ்ந்தார், ஆட்டும்
கொடுங் குழை போல, கொளின். 53
பொன் பெறும், கற்றான்; பொருள் பெறும், நற் கவி;
என் பெறும் வாதி, இசை பெறும்; முன் பெறக்
கல்லார், கற்றார் இனத்தர் அல்லார், பெறுபவே,
நல்லார் இனத்து நகை. 54
நல்ல வெளிப்படுத்து, தீய மறந்து ஒழிந்து,
ஒல்லை உயிர்க்கு ஊற்றங்கோல் ஆகி, ஒல்லுமேல்,
மாயம் பிறர் பொருட்கண் மாற்றி, மா மானத்தான்
ஆயின், அழிதல் அறிவு. 55
தன் நிலையும், தாழாத் தொழில் நிலையும், துப்பு எதிர்ந்தார்
இன் நிலையும், ஈடு இல் இயல் நிலையும், துன்னி,
அளந்து அறிந்து செய்வான் அரைசு; அமைச்சன் யாதும்
பிளந்து அறியும் பேர் ஆற்றலான். 56
பொருள், போகம், அஞ்சாமை, பொன்றுங்கால் போர்த்த
அருள், போகா ஆர் அறம், என்று ஐந்தும் இருள் தீரக்
கூறப்படும் குணத்தான், கூர் வேல் வல் வேந்தனால்
தேறப்படும் குணத்தினான். 57
நன் புலத்து வை அடக்கி, நாளும் நாள் ஏர் போற்றி,
புன் புலத்ததைச் செய்து, எருப் போற்றிய பின், நன் புலக்கண்
பண் கலப்பை பாற்படுப்பான் உழவன் என்பவே -
நுண் கலப்பை நூல் ஓதுவார். 58
ஏலாமை நன்று; ஈதல் தீது, பண்பு இல்லார்க்கு;
சாலாமை நன்று, நூல்; சாயினும், 'சாலாமை
நன்று; தவம் நனி செய்தல் தீது' என்பாரை
இன்றுகாறு யாம் கண்டிலம். 59
அரம் போல் கிளை. அடங்காப் பெண், அவியாத் தொண்டு,
மரம் போல் மகன், மாறு ஆய் நின்று கரம் போலக்
கள்ள நோய் காணும் அயல், ஐந்தும் ஆகுமேல்,
உள்ளம் நோய் வேண்டா, உயிர்க்கு. 60
நீர் அறம் நன்று; நிழல் நன்று; தன் இல்லுள்
பார் அறம் நன்று; பாத்து உண்பானேல், பேர் அறம்
நன்று, தளி, சாலை, நாட்டல்; - பெரும் போகம்
ஒன்றுமாம், சால உடன். 61
பிடிப் பிச்சை, பின் இறை, ஐயம், கூழ், கூற்றோடு
எடுத்து இரந்த உப்பு, இத் துணையோடு அடுத்த
சிறு பயம் என்னார், சிதவலிப்பு ஈவார்
பெறு பயன், பின் சாலப் பெரிது. 62
வெந் தீக் காண் வெண்ணெய், மெழுகு, நீர் சேர் மண், உப்பு,
அம் தண் மகன் சார்ந்த தந்தை, என்று ஜந்தினுள்,
ஒன்று போல் உள் நெகிழ்ந்து ஈயின், சிறிது எனினும்,
குன்றுபோல் கூடும், பயன். 63
குளம் தொட்டு, காவு பதித்து, வழி சீத்து,
உளம் தொட்டு உழு வயல் ஆக்கி, வளம் தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்று இவை பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கம் இனிது. 64
போர்த்தும், உரிந்திட்டும், பூசியும், நீட்டியும்,
ஓர்த்து ஒரு பால் மறைத்து, உண்பான் மேய் ஓர்த்த
அறம்; அறமேல் சொல் பொறுக்க; அன்றேல், கலிக்கண்
துறவறம் பொய்; இல்லறம் மெய் ஆம். 65
தான் பிறந்த இல் நினைந்து, தன்னைக் கடைப்பிடித்து,
தான் பிறரால் கருதற்பாடு உணர்ந்து, தான் பிறரால்,
'சாவ' என வாழான், சான்றோரால், 'பல் யாண்டும்
வாழ்க!' என வாழ்தல் நன்று. 66
நெடுக்கல், குறுக்கல், துறை நீர் நீடு ஆடல்,
வடுத் தீர் பகல்வாய் உறையே, வடுத் தீரா
ஆகும் அந் நான்கு ஒழித்து, ஐந்து அடக்குவான் ஆகில்,
வே கும்பம் வேண்டான் விடும். 67
கொன்றான், கொலையை உடன் பட்டான், கோடாது
கொன்றதனைக் கொண்டான், கொழிக்குங்கால், கொன்றதனை
அட்டான், இட உண்டான், ஐவரினும் ஆகும் என,
கட்டு எறிந்த பாவம் கருது. 68
சிறைக் கிடந்தார், செத்தார்க்கு நோற்பார், பல நாள்
உறைக் கிடந்தார், ஒன்றுஇடையிட்டு உண்பார், பிறைக் கிடந்து
முற்றனைத்தும் உண்ணாத் தவர்க்கு, ஈந்தார், - மன்னராய்,
கற்று அனைத்தும் வாழ்வார், கலந்து. 69
ஈன்று எடுத்தல்; சூல் புறஞ்செய்தல்; குழவியை
ஏன்று எடுத்தல்; சூல் ஏற்ற கன்னியை, ஆன்ற
அழிந்தாளை, இல் வைத்தல்; - பேர் அறமா ஆற்ற
மொழிந்தார், முது நூலார், முன்பு. 70
வலி அழிந்தார், மூத்தார், வடக்கிருந்தார், நோயால்
நலிபு அழிந்தார், நாட்டு அறைபோய் நைந்தார், - மெலிவு ஒழிய,
இன்னவரால் என்னாராய், ஈந்த ஒரு துற்று
மன்னவராச் செய்யும் மதித்து. 71
கலங்காமைக் காத்தல், கருப்பம் சிதைந்தால்
இலங்காமைப் பேர்த்தரல், ஈற்றம் விலங்காமைக்
கோடல், குழவி மருந்து, வெருட்டாமை,-
நாடின், அறம் பெருமை நாட்டு. 72
சூலாமை, சூலின் படும் துன்பம், ஈன்றபின்
ஏலாமை, ஏற்ப வளர்ப்பு அருமை, சால்பவை
வல்லாமை, - வாய்ப்ப அறிபவர் உண்ணாமை,
கொல்லாமை, நன்றால், கொழித்து. 73
சிக்கர், சிதடர், சிதலைபோல் வாய் உடையார்,
துக்கர், துருநாமர், தூக்குங்கால், தொக்கு
வரு நோய்கள் முன் நாளில் தீர்த்தாரே - இந் நாள்
ஒரு நோயும் இன்றி, வாழ்வார். 74
பக்கம் படாமை, ஒருவற்குப் பாடு ஆற்றல்,
தக்கம் படாமை, தவம்; அல்லாத் தக்கார்,
இழிசினர்க்கேயானும் பசித்தார்க்கு ஊண் ஈத்தல்,
கழி சினம் காத்தல், கடன். 75
புண் பட்டார், போற்றுவார் இல்லாதார், போகு உயிரார்,
கண் கெட்டார், கால் இரண்டும் இல்லாதார், கண் கண்பட்டு
ஆழ்ந்து நெகிழ்ந்து அவர்க்கு ஈத்தார்,-கடை போக
வாழ்ந்து கழிவார், மகிழ்ந்து. 76
பஞ்சப் பொழுது பாத்து உண்பான்; கரவாதான்;
அஞ்சாது, உடை படையுள், போந்து எறிவான்; எஞ்சாதே
உண்பது முன் ஈவான்; குழவி பலி கொடுப்பான்;-
எண்பதின் மேலும் வாழ்வான். 77
வரைவு இல்லாப் பெண் வையார்; மண்ணைப் புற்று ஏறார்;
புரைவு இல்லார் நள்ளார்; போர் வேந்தன் வரைபோல்
கடுங் களிறு விட்டுழி, செல்லார்; வழங்கார்;
கொடும் புலி கொட்கும் வழி. 78
தக்கார் வழி கெடாதாகும்; தகாதவர்
உக்க வழியராய் ஒல்குவார்; தக்க
இனத்தினான் ஆகும், பழி, புகழ்; தம் தம்
மனத்தினான் ஆகும், மதி. 79
கழிந்தவை தான் இரங்கான், கைவாரா நச்சான்,
இகழ்ந்தவை இன்புறான், இல்லார் மொழிந்தவை
மென் மொழியால், உள் நெகிழ்ந்து, ஈவானேல், - விண்ணோரால்
இன் மொழியால் ஏத்தப்படும். 80
காடுபோல் கட்கு இனிய இல்லம், பிறர் பொருள்
ஓடுபோல், தாரம் பிறந்த தாய், ஊடு போய்க்
கோத்து இன்னா சொல்லானாய், கொல்லானேல், - பல்லவர்
ஓத்தினால் என்ன குறை? 81
தோற் கன்று காட்டிக் கறவார்; கறந்த பால்
பாற்பட்டார் உண்ணார்; பழி, பாவம், பாற்பட்டார்,
ஏற்று அயரா, இன்புற்று வாழ்வன, ஈடு அழியக்
கூற்று அயரச் செய்யார், கொணர்ந்து. 82
நகையொடு, மந்திரம், நட்டார்க்கு வாரம்,
பகையொடு, பாட்டு உரை, என்று ஐந்தும் தொகையொடு
மூத்தார் இருந்துழி வேண்டார், முது நூலுள்
யாத்தார், அறிவினர் ஆய்ந்து. 83
வைதான் ஒருவன் இனிது ஈய வாழ்த்தியது
எய்தா உரையை அறிவானேல், நொய்தா
அறிவு அறியா ஆள் ஆண்டு என உரைப்பர்; வாயுள்
தறி எறியார், தக்காரேதாம். 84
......................................................
......................................................
......................................................
...................................................... 85
......................................................
......................................................
......................................................
...................................................... 86
......................................................
......................................................
......................................................
...................................................... 87
......................................................
......................................................
......................................................
...................................................... 88
......................................................
......................................................
......................................................
...................................................... 89
[இரா-இருக்கை, ஏலாத வைகல், பனி மூழ்கல்,
குராக் கான் புகல்,] நெடிய மண், எறு உராய்த் தனது
எவ்வம் தணிப்பான், இவை என் ஆம்? பெற்றானைத்
தெய்வமாத் தேறுமால், தேர்ந்து. 90
சத்தம், மெய்ஞ் ஞானம், தருக்கம், சமையமே,
வித்தகர் கண்ட வீடு உள்ளிட்டு, ஆங்கு, அத் தகத்
தந்த இவ் ஜந்தும் அறிவான், தலையாய,
சிந்திப்பின் சிட்டன் சிறந்து. 91
கண்ணுங்கால் கண்ணும் கணிதமே, யாழினோடு,
எண்ணுங்கால் சாந்தே, எழுதல், இலை நறுக்கு,
இட்ட இவ் ஐந்தும் அறிவான்-இடையாய
சிட்டன் என்று எண்ணப்படும். 92
நாண் இலன் நாய்; நன்கு நள்ளாதான் நாய்; பெரியார்ப்
பேண் இலன் நாய்; பிறர் சேவகன் நாய்; ஏண் இல்
பொருந்திய பூண் முலையார் சேரி, கைத்து இல்லான்,
பருத்தி பகர்வுழி நாய். 93
நாண் எளிது, பெண்ணேல்; நகை எளிது, நட்டானேல்;
ஏண் எளிது, சேவகனேல்; பெரியார்ப் பேண் எளிது;-
கொம்பு மறைக்கும் இடாஅய்!-அவிழின்மீது
அம்பு பறத்தல் அரிது. 94
இன் சொல்லான் ஆகும், கிளைமை; இயல்பு இல்லா
வன் சொல்லான் ஆகும், பகைமை மன்; மென் சொல்லான்
ஆய்வு இல்லா ஆர் அருளாம்; அவ் அருள் நல் மனத்தான்;
வீவு இல்லா வீடு ஆய் விடும். 95
தக்கது, இளையான் தவம்; செல்வன் ஊண் மறுத்தல்
தக்கது; கற்புடையாள் வனப்புத் தக்கது;
அழல், தண்ணென் தோளாள் அறிவு இலள் ஆயின்,
நிழற்கண் முயிறு, ஆய்விடும். 96
'பொய்யான் சுவர்க்கம்; வாயான் நிரையம்; பொருள்தான்,
மை ஆர் மடந்தையர் இல் வாழ்வு இனிது'-மெய் அன்றால்;-
மைத் தக நீண்ட மலர்க் கண்ணாய்! - தீது அன்றே
எத் தவமானும் படல். 97
புல் அறத்தின் நன்று, மனை வாழ்க்கை; போற்று உடைத்தேல்,
நல்லறத்தாரோடும் நட்கலாம்; நல்லறத்தார்க்கு
அட்டு, இட்டு, உண்டு, ஆற்ற வாழ்ந்தார்களே, இம்மையில்
அட்டு, இட்டு, உண்டு, ஆற்ற வாழ்வார். 98
ஈவது நன்று; தீது, ஈயாமை; நல்லவர்
மேவது நன்று, மேவாதாரோடு; ஓவாது,
கேட்டுத் தலைநிற்க; கேடு இல் உயர் கதிக்கே
ஓட்டுத்தலை நிற்கும் ஊர்ந்து. 99
உண் இடத்தும், ஒன்னார் மெலிவு இடத்தும், மந்திரம் கொண்டு
எண் இடத்தும், செல்லாமைதான் தலையே; எண்ணி,
உரைப் பூசல் போற்றல், உறு தவமேல் கங்கைக்
கரைப் பூசை போறல், கடை. 100
பத்தினி, சேவகன், பாத்து இல் கடுந் தவசி,
பொத்து இல் பொருள்-திறத்துச் செவ்வியான், பொத்து இன்றி
வைத்தால் வழக்கு உரைக்கும் சான்றான், - இவர் செம்மை
செத்தால் அறிக, சிறந்து! 101
வழிப் படர், வாய்ப்ப வருந்தாமை, வாய் அல்
குழிப் படல், தீச் சொற்களோடு, மொழிப்பட்ட
காய்ந்து விடுதல், - களைந்து, உய்யக் கற்றவர்,
ஆய்ந்து விடுதல் அறம். 102
புறத்திரட்டில் கண்ட பாடல்கள்
அச்சமே, ஆயுங்கால் நன்மை, அறத்தொடு,
கச்சம் இல் கைம்மாறு, அருள், ஐந்தால் - மெச்சிய
தோகை மயில் அன்ன சாயலாய்! - தூற்றுங்கால்
ஈகை வகையின் இயல்பு. (206)
கைம்மாறும், அச்சமும், காணின் பயம் இன்மை,
பொய்ம் மாறு நன்மை, சிறு பயம், மெய்ம் மாறு
அருள் கூடி ஆர் அறத்தோடு, ஐந்து இயைந்து, ஈயின்,-
பொருள் கோடி எய்தல், புகன்று. (207)
இம்மை நலன் அழிக்கும்; எச்சம் குறைபடுக்கும்;
அம்மை அரு நரகத்து ஆழ்விக்கும்; மெய்ம்மை
அறம் தேயும்; பின்னும், அலர்மகளை நீக்கும்;-
மறத்தேயும் பொய் உரைக்கும் வாய். (311)
சிறப்புப் பாயிரம்
மல் இவர் தோள் மாக்காயன் மாணாக்கன், மா நிலத்துப்
பல்லவர் நோய் நீக்கும் பாங்கினால், கல்லா,
மறு பஞ்சம் தீர் மழைக்கை மாக் காரியாசான்,
சிறுபஞ்சமூலம் செய்தான். 1
ஒத்த ஒழுக்கம், கொலை, பொய், புலால், களவோடு.
ஒத்த இவை அல் ஒரு நால் இட்டு, ஒத்த
உறு பஞ்ச மூலம் தீர் மாரிபோல் கூறீர்-
சிறுபஞ்சமூலம் சிறந்து! 2
சிறுபஞ்சமூலம் முற்றிற்று.

கடவுள் வாழ்த்து

முழுது உணர்ந்து, மூன்று ஒழித்து, மூவாதான் பாதம்,பழுது இன்றி, ஆற்றப் பணிந்து, முழுது ஏத்தி,மண் பாய ஞாலத்து மாந்தர்க்கு உறுதியா,வெண்பா உரைப்பன், சில.
நூல்

பொருள் உடையான் கண்ணதே, போகம்; அறனும்,அருள் உடையான் கண்ணதே ஆகும்; அருள் உடையான்செய்யான் பழி; பாவம் சேரான்; புறமொழியும்உய்யான், பிறன் செவிக்கு உய்த்து. 1
கற்புடைய பெண் அமிர்து; கற்று அடங்கினான் அமிர்து;நற்பு உடைய நாடு அமிர்து; நாட்டுக்கு நற்பு உடையமேகமே சேர் கொடி வேந்து அமிர்து; சேவகனும்ஆகவே செய்யின், அமிர்து. 2
கல்லாதான் தான் காணும் நுட்பமும், காது இரண்டும்இல்லாதாள் ஏக்கழுத்தம் செய்தலும், இல்லாதான்ஒல்லாப் பொருள் இலார்க்கு ஈத்து அறியான் என்றலும்,நல்லார்கள் கேட்பின் நகை. 3
உடம்பு ஒழிய வேண்டின், உயர் தவம்; மற்று ஈண்டுஇடம் பொழிய வேண்டுமேல், ஈகை; மடம் பொழியவேண்டின், அறிமடம்; வேண்டேல், பிறர் மனை;ஈண்டின், இயையும் திரு. 4
படைதனக்கு யானை வனப்பு ஆகும்; பெண்ணின் இடை தனக்கு நுண்மை வனப்பு ஆம்; நடைதனக்குக்கோடா மொழி வனப்பு; கோற்கு அதுவே; சேவகற்குவாடாத வன்கண் வனப்பு. 5
பற்றினான், பற்று அற்றான் நூல், தவசி; எப் பொருளும்முற்றினான் ஆகும், முதல்வன்; நூல் பற்றினால்பாத்து உண்பான் பார்ப்பான்; பழி உணர்வான் சான்றவன்காத்து உண்பான் காணான், பிணி. 6
கண் வனப்புக் கண்ணோட்டம்; கால் வனப்புச் செல்லாமை;எண் வனப்பு, 'இத் துணை ஆம்' என்று உரைத்தல்; பண் வனப்புக்கேட்டார், நன்று என்றல்; கிளர் வேந்தன் தன் நாடுவாட்டான், நன்று என்றல் வனப்பு. 7
கொன்று உண்பான் நாச் சாம்; கொடுங் கரி போவான் நாச் சாம்;நன்று உணர்வார் முன் கல்லான் நாவும் சாம்; ஒன்றானைக்கண்டுழி, நாச் சாம்; கடவான் குடிப் பிறந்தான்உண்டுழி, நாச் சாம், உணர்ந்து. 8
சிலம்பிக்குத் தன் சினை கூற்றம்; நீள் கோடுவிலங்கிற்குக் கூற்றம்; மயிர்தான் வலம் படாமாவிற்குக் கூற்றம் ஆம்; ஞெண்டிற்குத் தன் பார்ப்பு;நாவிற்கு நன்று அல் வசை. 9
நாண் இலான் சால்பும், நடை இலான் நல் நோன்பும்,ஊண் இலான் செய்யும் உதாரமும், ஏண் இலான்சேவகமும், செந்தமிழ் தேற்றான் கவி செயலும்,-நாவகம் மேய் நாடின் நகை. 10
கோறலும் நஞ்சு; ஊனைத் துய்த்தல் கொடு நஞ்சு;வேறலும் நஞ்சு, மாறு அல்லானை; தேறினால்,நீடு ஆங்குச் செய்தலும் நஞ்சால்; இளங்கிளையைநாடாதே, தீதுஉரையும் நஞ்சு. 11
இடர் இன்னா, நட்டார்கண்; ஈயாமை இன்னா;தொடர் இன்னா, கள்ளர்கண்; தூயார்ப் படர்வு இன்னா;-கண்டல் அவிர் பூங் கதுப்பினாய்! - இன்னாதே,கொண்ட விரதம் குறைவு. 12
கொண்டான் வழி ஒழுகல் பெண்; மகன் தந்தைக்குத்தண்டான் வழி ஒழுகல்; தன் கிளை அஃது; அண்டாதே,வேல் வழி வெம் முனை வீழாது, மண் நாடு;கோல் வழி வாழ்தல் குணம். 13
பிழைத்த பொறுத்தல் பெருமை; சிறுமைஇழைத்த தீங்கு எண்ணி இருத்தல்; பிழைத்த,பகை, கெட வாழ்வதும், பல் பொருளால் பல்லார்நகை கெட வாழ்வதும், நன்று. 14
கதம் நன்று, சான்றாண்மை தீது, கழியமதம் நன்று, மாண்பு இலார் முன்னர்; விதம் நன்றால்,கோய் வாயின் கீழ் உயிர்க்கு ஈ துற்று, குரைத்து எழுந்தநாய் வாயுள் நல்ல தசை. 15
நட்டாரை ஆக்கி, பகை தணித்து, வை எயிற்றுப்பட்டு ஆர் அணி அல்குலார்ப் படிந்து ஒட்டி,துடங்கினார், இல்லகத்து, அன்பின் துறவாது; -உடம்பினான் ஆய பயன். 16
பொய்யாமை பொன் பெறினும், கள்ளாமை, மெல்லியார்வையாமை, வார் குழலார் நச்சினும் நையாமை,ஓர்த்து உடம்பு பேரும் என்று, ஊன் அவாய் உண்ணானேல்,-பேர்த்து உடம்பு கோடல் அரிது. 17
தேவரே, கற்றவர்; கல்லாதார் தேருங்கால்,பூதரே; முன் பொருள் செய்யாதார் ஆதரே;'துன்பம் இலேம், பண்டு, யாமே வனப்பு உடையேம்!'என்பர், இரு கால் எருது. 18
கள்ளான், சூது என்றும் கழுமான், கரியாரைநள்ளான், உயிர் அழுங்க நா ஆடான், எள்ளானாய்,ஊன் மறுத்துக் கொள்ளானேல், ஊன் உடம்பு எஞ் ஞான்றும்தான் மறுத்துக் கொள்ளான், தளர்ந்து. 19
பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்குஉரையாமைச் செல்லும் உணர்வு. 20
பூத்தாலும் காயா மரம் உள; நன்று அறியார்,மூத்தாலும் மூவார், நூல் தேற்றாதார்; பாத்திப்புதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்குஉரைத்தாலும் செல்லாது, உணர்வு. 21
வடிவு, இளமை, வாய்த்த வனப்பு, வணங்காக்குடி, குலம், என்ற ஐந்தும் குறித்த முடியத்துளங்கா நிலை காணார்; தொக்கு ஈர் பசுவால்,இளங் கால் துறவாதவர். 22
கள் உண்டல், காணின் கணவற் பிரிந்து உறைதல்,வெள்கிலளாய்ப் பிறர் இல் சேறல், உள்ளிப்பிறர் கருமம் ஆராய்தல், தீப் பெண் கிளைமை,-திறவது, தீப் பெண் தொழில். 23
பெருங் குணத்தார்ச் சேர்மின்; பிறன் பொருள் வவ்வன்மின்;கருங் குணத்தார் கேண்மை கழிமின்; ஒருங்கு உணர்ந்து,தீச் சொல்லே காமின்; வரும் காலன், திண்ணிதே;-வாய்ச் சொல்லே அன்று; வழக்கு. 24
வான் குரீஇக் கூடு, அரக்கு, வால் உலண்டு, நூல் புழுக்கோல்,தேன் புரிந்தது, யார்க்கும் செயல் ஆகா; - தாம் புரீஇ,வல்லவர் வாய்ப்பன என்னார்; ஓரோ ஒருவர்க்குஒல்காது, ஓரொன்று படும். 25
அறம் நட்டான் நல்-நெறிக்கண் நிற்க, அடங்காப்புறம் நட்டான் புல்-நெறி போகாது! - புறம் நட்டான்கண்டு எடுத்து கள், களவு, சூது, கருத்தினால்,பண்டு எடுத்துக் காட்டும், பயின்று. 26
ஆண் ஆக்கம் வேண்டாதான் ஆசான்; அவற்கு இயைந்தமாணாக்கன், அன்பான், வழிபடுவான்; மாணாக்கன்கற்பு அனைத்து மூன்றும் கடிந்தான்; கடியாதான்நிற்பு அனைத்தும், நெஞ்சிற்கு ஓர் நோய். 27
நெய்தல் முகிழ்த் துணை ஆம், குடுமி; நேர் மயிரும்உய்தல் ஒரு திங்கள் நாள் ஆகும்; செய்தல்,நுணங்கு நூல் ஓதுதல், கேட்டல், மாணாக்கர்,வணங்கல், வலம் கொண்டு வந்து. 28
ஒருவன் அறிவானும் எல்லாம், யாதொன்றும்ஒருவன் அறியாதவனும், ஒருவன்குணன் அடங்க, குற்றம் இலானும், ஒருவன்கணன் அடங்கக் கற்றானும், இல். 29
உயிர் நோய் செய்யாமை, உறு நோய் மறத்தல்,செயிர் நோய் பிறர்கண் செய்யாமை, செயிர் நோய்விழைவு, வெகுளி, இவை விடுவான் ஆயின்,-இழவு அன்று, இனிது தவம். 30
வேட்டவன் பார்ப்பன்; விளங்கிழைக்குக் கற்பு உடைமை;கேட்பவன் கேடு இல் பெரும் புலவன்; - பாட்டு, அவன்சிந்தையான் ஆகும், சிறத்தல்; உலகினுள்தந்தையான் ஆகும், குலம். 31
வைப்பானே வள்ளல்; வழங்குவான் வாணிகன்;உய்ப்பானே ஆசான், உயர் கதிக்கு; உய்ப்பான்,உடம்பின் ஆர் வேலி ஒருப்படுத்து, ஊண் ஆரத்தொடங்கானேல், சேறல் துணிவு. 32
வைததனான் ஆகும் வசை; வணக்கம், நன்று, ஆகச்செய்ததனான் ஆகும், செழுங் குலம்; முன் செய்தபொருளினான் ஆகும் ஆம், போகம்; நெகிழ்ந்தஅருளினான் ஆகும் அறம். 33
இல் இயலார் நல் அறமும், ஏனைத் துறவறமும்,நல் இயலான் நாடி உரைக்குங்கால், நல் இயல்தானத்தான் போகம்; தவத்தான் சுவர்க்கம் ஆம்;ஞானத்தான் வீடு ஆகும் நாட்டு! 34
மயிர் வனப்பும், கண் கவரும் மார்பின் வனப்பும்,உகிர் வனப்பும், காதின் வனப்பும், செயிர் தீர்ந்தபல்லின் வனப்பும், வனப்பு அல்ல; நூற்கு இயைந்தசொல்லின் வனப்பே, வனப்பு. 35
தொழீஇ அட, உண்ணார்; தோழர் இல் துஞ்சார்;வழீஇப் பிறர் பொருளை வவ்வார்; கெழீஇக்கலந்த பின் கீழ் காணார்; காணாய், மடவாய்!புலந்தபின், போற்றார், புலை. 36
பொய்யாமை நன்று; பொருள் நன்று; உயிர் நோவக்கொல்லாமை நன்று; கொழிக்குங்கால், பல்லார் முன்பேணாமை, பேணும் தகைய; சிறிய எனினும்,மாணாமை, மாண்டார் மனை. 37
பண்டாரம், பல் கணக்கு, கண்காணி, பாத்து, இல்லார்,உண்டு ஆர் அடிசிலே, தோழரின் கண்டாரா,யாக்கைக்குத் தக்க அறிவு இல்லார்க் காப்பு அடுப்பின்,-காக்கையைக் காப்பு அடுத்த சோறு. 38
உடை இட்டார், புல் மேய்ந்தார், ஓடு நீர்ப் புக்கார்,படை இட்டார், பற்றேனும் இன்றி நடை விட்டார்,-இவ் வகை ஐவரையும் என்றும் அணுகாரே,செவ் வகைச் சேவகர் சென்று. 39
பூவாதாள், பூப்புப் புறக்கொடுத்தாள், இலிங்கி,ஓவாதாள் கோலம் ஒரு பொழுதும் காவாதாள்,யார் யார் பிறர் மனையாள் உள்ளிட்டு, - இவ் ஐவரையும்சாரார், பகை போல் சலித்து. 40
வருவாய்க்குத் தக்க, வழக்கு, அறிந்து, சுற்றம்வெருவாமை, வீழ் விருந்து ஓம்பி, திரு ஆக்கும்தெய்வத்தை எஞ் ஞான்றும் தெற்ற வழிபாடுசெய்வதே-பெண்டிர் சிறப்பு. 41
நாள் கூட்டம், மூழ்த்தம், இவற்றொடு நன்று ஆயகோள் கூட்டம், யோகம், குணன், உணர்ந்து, - தோள் கூட்டல்உற்றானும் அல்லானும், - ஐந்தும் உணர்வான் நாள்பெற்றானேல், கொள்க, பெரிது! 42
பேண், அடக்கம், பேணாப் பெருந் தகைமை, பீடு உடைமை,நாண் ஒடுக்கம், என்று ஐந்தும் நண்ணின்றா, பூண் ஒடுக்கும்பொன் வரைக் கோங்கு ஏர் முலைப் பூந் திருவே ஆயினும்,தன் வரைத் தாழ்த்தல் அரிது. 43
வார் சான்ற கூந்தல்! வரம்பு உயர, வைகலும்நீர் சான்று உயரவே, நெல் உயரும்; சீர் சான்றதாவாக் குடி உயர, தாங்கு அருஞ் சீர்க் கோ உயர்தல்ஓவாது உரைக்கும் உலகு. 44
அழியாமை எத் தவமும், சார்ந்தாரை ஆக்கல்,பழியாமைப் பாத்தல் யார் மாட்டும் ஒழியாமை,கன்று சாவப் பால் கறவாமை, செய்யாமைமன்று சார்வு ஆக மனை. 45
நசை கொல்லார், நச்சியார்க்கு என்றும்; கிளைஞர்மிசை கொல்லார்; வேளாண்மை கொல்லார்; இசை கொல்லார்;பொன் பெறும் பூஞ் சுணங்கின் மென் முலையாய்! நன்கு உணர்ந்தார்என் பெறினும் கொல்லார், இயைந்து. 46
நீண்ட நீர், காடு, களர், நிவந்து விண் தோயும்மாண்ட மலை, மக்கள், உள்ளிட்டு, மாண்டவர்ஆய்ந்தன ஐந்தும், அரணா உடையானைவேந்தனா நாட்டல் விதி. 47
பொச்சாப்புக் கேடு; பொருட் செருக்குத்தான் கேடு;முற்றாமை கேடு; முரண் கேடு; தெற்றத்தொழில் மகன்தன்னொடு மாறுஆயின், என்றும்உழுமகற்குக் கேடு என்ற உரை. 48
கொல்லாமை நன்று; கொலை தீது; எழுத்தினைக்கல்லாமை தீது; கதம் தீது; நல்லார்மொழியாமை முன்னே, முழுதும் கிளைஞர்பழியாமை பல்லார் பதி. 49
உண்ணாமை நன்று, அவா நீக்கி; விருந்து கண்மாறுஎண்ணாமை நன்று; இகழின், தீது, எளியார்; எண்ணின்,அரியர் ஆவார் பிறர் இல் செல்லாரே; உண்ணார்,பெரியர் ஆவார், பிறர் கைத்து. 50
மக்கள் பெறுதல், மடன் உடைமை, மாது உடைமை,ஒக்க உடன் உறைதல், ஊண் அமைவு,-தொக்கஅலவலை அல்லாமை, பெண் மகளிர்க்கு - ஐந்தும்தலைமகனைத் தாழ்க்கும் மருந்து. 51
கொண்டான் கொழுநன், உடன்பிறந்தான், தன் மாமன்,வண்டு ஆர் பூந் தொங்கல் மகன், தந்தை,-வண் தாராய்! -யாப்பு ஆர் பூங் கோதை அணி இழையை, நற்கு இயையக்காப்பர், கருதும் இடத்து. 52
ஆம்-பல், வாய், கண், மனம், வார் புருவம், என்று ஜந்தும்,தாம் பல் வாய் ஓடி, நிறை காத்தல் ஓம்பார்,நெடுங் கழை நீள் மூங்கில் என இகழ்ந்தார், ஆட்டும்கொடுங் குழை போல, கொளின். 53
பொன் பெறும், கற்றான்; பொருள் பெறும், நற் கவி;என் பெறும் வாதி, இசை பெறும்; முன் பெறக்கல்லார், கற்றார் இனத்தர் அல்லார், பெறுபவே,நல்லார் இனத்து நகை. 54
நல்ல வெளிப்படுத்து, தீய மறந்து ஒழிந்து,ஒல்லை உயிர்க்கு ஊற்றங்கோல் ஆகி, ஒல்லுமேல்,மாயம் பிறர் பொருட்கண் மாற்றி, மா மானத்தான்ஆயின், அழிதல் அறிவு. 55
தன் நிலையும், தாழாத் தொழில் நிலையும், துப்பு எதிர்ந்தார்இன் நிலையும், ஈடு இல் இயல் நிலையும், துன்னி,அளந்து அறிந்து செய்வான் அரைசு; அமைச்சன் யாதும்பிளந்து அறியும் பேர் ஆற்றலான். 56
பொருள், போகம், அஞ்சாமை, பொன்றுங்கால் போர்த்தஅருள், போகா ஆர் அறம், என்று ஐந்தும் இருள் தீரக்கூறப்படும் குணத்தான், கூர் வேல் வல் வேந்தனால்தேறப்படும் குணத்தினான். 57
நன் புலத்து வை அடக்கி, நாளும் நாள் ஏர் போற்றி,புன் புலத்ததைச் செய்து, எருப் போற்றிய பின், நன் புலக்கண்பண் கலப்பை பாற்படுப்பான் உழவன் என்பவே -நுண் கலப்பை நூல் ஓதுவார். 58
ஏலாமை நன்று; ஈதல் தீது, பண்பு இல்லார்க்கு;சாலாமை நன்று, நூல்; சாயினும், 'சாலாமைநன்று; தவம் நனி செய்தல் தீது' என்பாரைஇன்றுகாறு யாம் கண்டிலம். 59
அரம் போல் கிளை. அடங்காப் பெண், அவியாத் தொண்டு,மரம் போல் மகன், மாறு ஆய் நின்று கரம் போலக்கள்ள நோய் காணும் அயல், ஐந்தும் ஆகுமேல்,உள்ளம் நோய் வேண்டா, உயிர்க்கு. 60
நீர் அறம் நன்று; நிழல் நன்று; தன் இல்லுள்பார் அறம் நன்று; பாத்து உண்பானேல், பேர் அறம்நன்று, தளி, சாலை, நாட்டல்; - பெரும் போகம்ஒன்றுமாம், சால உடன். 61
பிடிப் பிச்சை, பின் இறை, ஐயம், கூழ், கூற்றோடுஎடுத்து இரந்த உப்பு, இத் துணையோடு அடுத்தசிறு பயம் என்னார், சிதவலிப்பு ஈவார்பெறு பயன், பின் சாலப் பெரிது. 62
வெந் தீக் காண் வெண்ணெய், மெழுகு, நீர் சேர் மண், உப்பு,அம் தண் மகன் சார்ந்த தந்தை, என்று ஜந்தினுள்,ஒன்று போல் உள் நெகிழ்ந்து ஈயின், சிறிது எனினும்,குன்றுபோல் கூடும், பயன். 63
குளம் தொட்டு, காவு பதித்து, வழி சீத்து,உளம் தொட்டு உழு வயல் ஆக்கி, வளம் தொட்டுப்பாகுபடும் கிணற்றோடு என்று இவை பாற்படுத்தான்ஏகும் சுவர்க்கம் இனிது. 64
போர்த்தும், உரிந்திட்டும், பூசியும், நீட்டியும்,ஓர்த்து ஒரு பால் மறைத்து, உண்பான் மேய் ஓர்த்தஅறம்; அறமேல் சொல் பொறுக்க; அன்றேல், கலிக்கண்துறவறம் பொய்; இல்லறம் மெய் ஆம். 65
தான் பிறந்த இல் நினைந்து, தன்னைக் கடைப்பிடித்து,தான் பிறரால் கருதற்பாடு உணர்ந்து, தான் பிறரால்,'சாவ' என வாழான், சான்றோரால், 'பல் யாண்டும்வாழ்க!' என வாழ்தல் நன்று. 66
நெடுக்கல், குறுக்கல், துறை நீர் நீடு ஆடல்,வடுத் தீர் பகல்வாய் உறையே, வடுத் தீராஆகும் அந் நான்கு ஒழித்து, ஐந்து அடக்குவான் ஆகில்,வே கும்பம் வேண்டான் விடும். 67
கொன்றான், கொலையை உடன் பட்டான், கோடாதுகொன்றதனைக் கொண்டான், கொழிக்குங்கால், கொன்றதனைஅட்டான், இட உண்டான், ஐவரினும் ஆகும் என,கட்டு எறிந்த பாவம் கருது. 68
சிறைக் கிடந்தார், செத்தார்க்கு நோற்பார், பல நாள்உறைக் கிடந்தார், ஒன்றுஇடையிட்டு உண்பார், பிறைக் கிடந்துமுற்றனைத்தும் உண்ணாத் தவர்க்கு, ஈந்தார், - மன்னராய்,கற்று அனைத்தும் வாழ்வார், கலந்து. 69
ஈன்று எடுத்தல்; சூல் புறஞ்செய்தல்; குழவியைஏன்று எடுத்தல்; சூல் ஏற்ற கன்னியை, ஆன்றஅழிந்தாளை, இல் வைத்தல்; - பேர் அறமா ஆற்றமொழிந்தார், முது நூலார், முன்பு. 70
வலி அழிந்தார், மூத்தார், வடக்கிருந்தார், நோயால்நலிபு அழிந்தார், நாட்டு அறைபோய் நைந்தார், - மெலிவு ஒழிய,இன்னவரால் என்னாராய், ஈந்த ஒரு துற்றுமன்னவராச் செய்யும் மதித்து. 71
கலங்காமைக் காத்தல், கருப்பம் சிதைந்தால்இலங்காமைப் பேர்த்தரல், ஈற்றம் விலங்காமைக்கோடல், குழவி மருந்து, வெருட்டாமை,-நாடின், அறம் பெருமை நாட்டு. 72
சூலாமை, சூலின் படும் துன்பம், ஈன்றபின்ஏலாமை, ஏற்ப வளர்ப்பு அருமை, சால்பவைவல்லாமை, - வாய்ப்ப அறிபவர் உண்ணாமை,கொல்லாமை, நன்றால், கொழித்து. 73
சிக்கர், சிதடர், சிதலைபோல் வாய் உடையார்,துக்கர், துருநாமர், தூக்குங்கால், தொக்குவரு நோய்கள் முன் நாளில் தீர்த்தாரே - இந் நாள்ஒரு நோயும் இன்றி, வாழ்வார். 74
பக்கம் படாமை, ஒருவற்குப் பாடு ஆற்றல்,தக்கம் படாமை, தவம்; அல்லாத் தக்கார்,இழிசினர்க்கேயானும் பசித்தார்க்கு ஊண் ஈத்தல்,கழி சினம் காத்தல், கடன். 75
புண் பட்டார், போற்றுவார் இல்லாதார், போகு உயிரார்,கண் கெட்டார், கால் இரண்டும் இல்லாதார், கண் கண்பட்டுஆழ்ந்து நெகிழ்ந்து அவர்க்கு ஈத்தார்,-கடை போகவாழ்ந்து கழிவார், மகிழ்ந்து. 76
பஞ்சப் பொழுது பாத்து உண்பான்; கரவாதான்;அஞ்சாது, உடை படையுள், போந்து எறிவான்; எஞ்சாதேஉண்பது முன் ஈவான்; குழவி பலி கொடுப்பான்;-எண்பதின் மேலும் வாழ்வான். 77
வரைவு இல்லாப் பெண் வையார்; மண்ணைப் புற்று ஏறார்;புரைவு இல்லார் நள்ளார்; போர் வேந்தன் வரைபோல்கடுங் களிறு விட்டுழி, செல்லார்; வழங்கார்;கொடும் புலி கொட்கும் வழி. 78
தக்கார் வழி கெடாதாகும்; தகாதவர்உக்க வழியராய் ஒல்குவார்; தக்கஇனத்தினான் ஆகும், பழி, புகழ்; தம் தம்மனத்தினான் ஆகும், மதி. 79
கழிந்தவை தான் இரங்கான், கைவாரா நச்சான்,இகழ்ந்தவை இன்புறான், இல்லார் மொழிந்தவைமென் மொழியால், உள் நெகிழ்ந்து, ஈவானேல், - விண்ணோரால்இன் மொழியால் ஏத்தப்படும். 80
காடுபோல் கட்கு இனிய இல்லம், பிறர் பொருள்ஓடுபோல், தாரம் பிறந்த தாய், ஊடு போய்க்கோத்து இன்னா சொல்லானாய், கொல்லானேல், - பல்லவர்ஓத்தினால் என்ன குறை? 81
தோற் கன்று காட்டிக் கறவார்; கறந்த பால்பாற்பட்டார் உண்ணார்; பழி, பாவம், பாற்பட்டார்,ஏற்று அயரா, இன்புற்று வாழ்வன, ஈடு அழியக்கூற்று அயரச் செய்யார், கொணர்ந்து. 82
நகையொடு, மந்திரம், நட்டார்க்கு வாரம்,பகையொடு, பாட்டு உரை, என்று ஐந்தும் தொகையொடுமூத்தார் இருந்துழி வேண்டார், முது நூலுள்யாத்தார், அறிவினர் ஆய்ந்து. 83
வைதான் ஒருவன் இனிது ஈய வாழ்த்தியதுஎய்தா உரையை அறிவானேல், நொய்தாஅறிவு அறியா ஆள் ஆண்டு என உரைப்பர்; வாயுள்தறி எறியார், தக்காரேதாம். 84
........................................................................................................................................................................................................................ 85
........................................................................................................................................................................................................................ 86
........................................................................................................................................................................................................................ 87
........................................................................................................................................................................................................................ 88
........................................................................................................................................................................................................................ 89
[இரா-இருக்கை, ஏலாத வைகல், பனி மூழ்கல்,குராக் கான் புகல்,] நெடிய மண், எறு உராய்த் தனதுஎவ்வம் தணிப்பான், இவை என் ஆம்? பெற்றானைத்தெய்வமாத் தேறுமால், தேர்ந்து. 90
சத்தம், மெய்ஞ் ஞானம், தருக்கம், சமையமே,வித்தகர் கண்ட வீடு உள்ளிட்டு, ஆங்கு, அத் தகத்தந்த இவ் ஜந்தும் அறிவான், தலையாய,சிந்திப்பின் சிட்டன் சிறந்து. 91
கண்ணுங்கால் கண்ணும் கணிதமே, யாழினோடு,எண்ணுங்கால் சாந்தே, எழுதல், இலை நறுக்கு,இட்ட இவ் ஐந்தும் அறிவான்-இடையாயசிட்டன் என்று எண்ணப்படும். 92
நாண் இலன் நாய்; நன்கு நள்ளாதான் நாய்; பெரியார்ப்பேண் இலன் நாய்; பிறர் சேவகன் நாய்; ஏண் இல்பொருந்திய பூண் முலையார் சேரி, கைத்து இல்லான்,பருத்தி பகர்வுழி நாய். 93
நாண் எளிது, பெண்ணேல்; நகை எளிது, நட்டானேல்;ஏண் எளிது, சேவகனேல்; பெரியார்ப் பேண் எளிது;-கொம்பு மறைக்கும் இடாஅய்!-அவிழின்மீதுஅம்பு பறத்தல் அரிது. 94
இன் சொல்லான் ஆகும், கிளைமை; இயல்பு இல்லாவன் சொல்லான் ஆகும், பகைமை மன்; மென் சொல்லான்ஆய்வு இல்லா ஆர் அருளாம்; அவ் அருள் நல் மனத்தான்;வீவு இல்லா வீடு ஆய் விடும். 95
தக்கது, இளையான் தவம்; செல்வன் ஊண் மறுத்தல்தக்கது; கற்புடையாள் வனப்புத் தக்கது;அழல், தண்ணென் தோளாள் அறிவு இலள் ஆயின்,நிழற்கண் முயிறு, ஆய்விடும். 96
'பொய்யான் சுவர்க்கம்; வாயான் நிரையம்; பொருள்தான்,மை ஆர் மடந்தையர் இல் வாழ்வு இனிது'-மெய் அன்றால்;-மைத் தக நீண்ட மலர்க் கண்ணாய்! - தீது அன்றேஎத் தவமானும் படல். 97
புல் அறத்தின் நன்று, மனை வாழ்க்கை; போற்று உடைத்தேல்,நல்லறத்தாரோடும் நட்கலாம்; நல்லறத்தார்க்குஅட்டு, இட்டு, உண்டு, ஆற்ற வாழ்ந்தார்களே, இம்மையில்அட்டு, இட்டு, உண்டு, ஆற்ற வாழ்வார். 98
ஈவது நன்று; தீது, ஈயாமை; நல்லவர்மேவது நன்று, மேவாதாரோடு; ஓவாது,கேட்டுத் தலைநிற்க; கேடு இல் உயர் கதிக்கேஓட்டுத்தலை நிற்கும் ஊர்ந்து. 99
உண் இடத்தும், ஒன்னார் மெலிவு இடத்தும், மந்திரம் கொண்டுஎண் இடத்தும், செல்லாமைதான் தலையே; எண்ணி,உரைப் பூசல் போற்றல், உறு தவமேல் கங்கைக்கரைப் பூசை போறல், கடை. 100
பத்தினி, சேவகன், பாத்து இல் கடுந் தவசி,பொத்து இல் பொருள்-திறத்துச் செவ்வியான், பொத்து இன்றிவைத்தால் வழக்கு உரைக்கும் சான்றான், - இவர் செம்மைசெத்தால் அறிக, சிறந்து! 101
வழிப் படர், வாய்ப்ப வருந்தாமை, வாய் அல்குழிப் படல், தீச் சொற்களோடு, மொழிப்பட்டகாய்ந்து விடுதல், - களைந்து, உய்யக் கற்றவர்,ஆய்ந்து விடுதல் அறம். 102

புறத்திரட்டில் கண்ட பாடல்கள்

அச்சமே, ஆயுங்கால் நன்மை, அறத்தொடு,கச்சம் இல் கைம்மாறு, அருள், ஐந்தால் - மெச்சியதோகை மயில் அன்ன சாயலாய்! - தூற்றுங்கால்ஈகை வகையின் இயல்பு. (206)
கைம்மாறும், அச்சமும், காணின் பயம் இன்மை,பொய்ம் மாறு நன்மை, சிறு பயம், மெய்ம் மாறுஅருள் கூடி ஆர் அறத்தோடு, ஐந்து இயைந்து, ஈயின்,-பொருள் கோடி எய்தல், புகன்று. (207)
இம்மை நலன் அழிக்கும்; எச்சம் குறைபடுக்கும்;அம்மை அரு நரகத்து ஆழ்விக்கும்; மெய்ம்மைஅறம் தேயும்; பின்னும், அலர்மகளை நீக்கும்;-மறத்தேயும் பொய் உரைக்கும் வாய். (311)

சிறப்புப் பாயிரம்

மல் இவர் தோள் மாக்காயன் மாணாக்கன், மா நிலத்துப்பல்லவர் நோய் நீக்கும் பாங்கினால், கல்லா,மறு பஞ்சம் தீர் மழைக்கை மாக் காரியாசான்,சிறுபஞ்சமூலம் செய்தான். 1
ஒத்த ஒழுக்கம், கொலை, பொய், புலால், களவோடு.ஒத்த இவை அல் ஒரு நால் இட்டு, ஒத்தஉறு பஞ்ச மூலம் தீர் மாரிபோல் கூறீர்-சிறுபஞ்சமூலம் சிறந்து! 2

சிறுபஞ்சமூலம் முற்றிற்று.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.