|
||||||||
சிறுபறைப்பருவம் |
||||||||
918 விரைவீசு தாமரைப் பூவொத்த செங்கரம் விளங்குமொரு தமருகத்தை -
மேவத் திரித்துவடி வொடுநிறமு மொத்தலான் மேதினி யெலாம்பரந்து,
நுரைவீசு கங்கையொடு நட்புற் றுறும்பிறையை நோன்மையரு ளிற்றிரித்து -
நுவலுமிப் பறைகுணி லெனக்கொண் டுளாய்கொலென நோக்கியுல கேத்தெடுப்ப,
வரைவீசு வெள்ளொளிய வயிரமும் பாசொளிய மரகதமும் வாரிவாரி -
வண்குலைப் படுகரிடை மேயும்வளை கோட்டெருமை வாய்வெரீஇ யோட்டெடுப்பத்,
திரைவீசு பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -
சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.
(1)
919 அறிவிலே மிந்திரிய மாவேட்ட மாடுதற் கமைகுறிஞ் சிப்பறையுமா -
யடங்காத மனமென்னு மிமிலேறு கோடற் கடுத்தமுல் லைப்பறையுமாய்,
முறிவிலுடல் பொருளாவி கொள்ளைகோ டற்குற முழக்குபா லைப்பறையுமாய் -
மூதுணர் வெனும்புன லறாதுற வொழுக்கற்கு மொய்த்தமரு தப்பறையுமாய்,
மறிவிலெம ரொடுமாறு கொண்டபர சமயர்கோண் மாய்க்குநெய் தற்பறையுமாய்,
மாறாது பொலியவரை நின்றிழிந் தெஞ்ஞான்றும் வற்றுத லிலாதுவெப்பச்,
செறிவிலுயர் பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -
சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.
(2)
920 ஓங்குபல புவனத் திளைப்பாற்று முன்னி· தொலிப்பதெவ னென்றுகருதி -
யுணர்வுடைய ருண்மயங் கினுமயங் குகபின் புணர்ந்தி· தெனத்தெளிவரால்,
வீங்குபே ரறிவுடைப் பாணினியு முன்போல் வியாகரண வாஞ்சையுற்று -
மேவிடினு மவனுமி· திற்றெனத் தேர்குவன் விளங்குகுணில் கைப்பற்றியே,
வாங்குதிரை மால்யானை பற்பல வெடுத்துநால் வாயரற் றிடவெறிந்து
வரைபல வுருட்டிக் கடுத்துப் புகுந்துவரு மறிதிரைக் கடல்கலக்கித்,
தேங்குநீர்ப் பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -
சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.
(3)
921 இருளின்விழி போற்கேவ லத்திற் கிடந்தநுமை யின்னருளி னுடல்விளக்க -
மேய்ப்பவது வாய்வினை வயிற்படர்ந் தீர்பின்னு மெய்த்துமெய் யாதுநாளும்,
பொருளற முஞற்றப் புரிந்திரு தளைச்செறிவு பூணாது கீழ்ப்படுத்தப் -
புகறத்து வத்துருக் காட்சிசுத் தியுமுறப் பொலிதரு நுமைக்கண்டுநீர்,
மருளமை செருக்குறுதன் மாற்றவரு ணோக்கிவினை மற்றைந்தி னெழுதறவிர -
மன்னுமருண் முதலெனக் கண்டொன் றுறாதொன்ற வம்மினென் றறிவித்தல்போற்,
றெருள்விரவு பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -
சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.
(4)
922 மதிசெயுஞ் சித்தாந்த சைவவசு ணங்கட்கு வரியாழ் முழக்கமெனவும் -
வளமருவு சுத்தசை வப்பயிர் களுக்குநெடு மாமழை முழக்கமெனவும்,
விதிசெயுங் கிரியா குருக்களர வங்கட்கு விழைமயின் முழக்கமெனவும் -
வெய்யபர சமயப் பருத்திப் பொதிக்கழலும் வெவ்வழன் முழக்கமெனவு,
நிதிசெயு மணிக்குவை களுஞ்சந் தனக்குறடு நீளகிற் றுணியும்யானை -
நிகரில்வெண் கோடுகளும் வரைநின்று வாருபு நிலந்தொறு மெறிந்தியாரையுந்,
திதிசெயும் பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -
சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.
(5)
வேறு.
923 புத்தமு தோவென மெய்த்துதி பாடிப் புந்தி விரும்புநரும்
புகரற வோரறு காலமு மெண்ணிப் போற்றி வணங்கநரும்
சித்த மிருத்தி விடாம லருச்சனை செய்து மதிப்பவருஞ்
செங்கை குவித்தரு கெய்தி யடிப்பணி செய்யும் விருப்பினரும்
மத்த வருட்கண் வழங்கென நின்றெதி ராடி வழுத்துநரு
மாகிய பற்பல செந்தா மரைக ளலர்த்து மிளங்கதிரே
முத்தமிழ் தேர்துறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே
முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே.
(6)
924 மருவிய வாசைப் பேயை யொழித்திட மந்திர வாதியுமாய்
மாறாப் புண்ணிய மகவு வளர்த்திட வாய்ப்புறு மன்னையுமாய்ப்
பொருவி லிடும்பைச் சேறு புலர்த்தப் பொலிதரு பருதியுமாய்ப்
போர்த்திடு பரசம யக்களி றொழியப் போதரு சிங்கமுமாய்
வெருவரு வெய்ய வினைக்கா டொழிதர வெய்தெழு வன்னியுமாய்
விடாத பவக்கட் செவியொழி யப்புள் வேந்தனு மாய்ப்பொலிவாய்
முருகலர் நீர்த்துறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே
முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே.
(7)
925 மன்னிய நாமே பரசிவ மென்றும் வயங்கும் மடியாரை
வழிபடு மதுவே நம்மடி யடைதரு வழியென் றுங்கருணை
துன்னிய நந்திரு நாமம தேயரு டொகுமந் திரமென்றுந்
துயரம் வருத்து மவாமுத லடலே தோலா வலியென்றும்
பின்னிய நந்திரு வருளர னம்மொடு பெயரா தொன்றுதலே
பேரின் பென்று மெமக்கரு ளிப்பணி பேணிக் கொண்டருள்வோய்
முன்னிய வண்டுறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே
முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே.
(8)
926 பெய்வள மாரி யெழுங்குமி ழிக்கிணை பெற்ற வுடற்கணறாப்
பெட்பினர் வெய்ய சினக்கனல் பொங்கப் பெறுகொடு மனமுருடர்
பொய்வள நாடுபு செந்நில நீரிற் போர்த்த மயக்கமுளார்
பொல்லா ரிவர்தமை யாளுத லாலாம் புகழென வுட்கொண்டு
மெய்வள மார்கரு ணைத்திறம் யாரும் வெளிப்படை யாலுணர்வான்
வெய்யே மையுமினி தாண்டருள் குரவா மேலோர் பலர்சூழு
மொய்வள மார்துறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே
முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே.
(9)
927 வாரி யுடுத்த புலிக்கண் விபூதி வயக்குத லிலராயு
மன்னிய புண்ணிய மேய்க்குங் கண்மணி வாஞ்சை யுறாராயுஞ்
சீரிய வக்கர மைந்து நவிற்றுத றேறா தொழிவாருந்
திகழ்தரு நின்னடி யார்த மடிப்பணி செய்யா தகல்வாரு
மாரியர் கோவென நின்னடி சார்ந்துநி னருண்முக மேலாரு
மாகிய முருடர் கவுட்புடை யொப்ப வலங்குபொ னாலாய
மூரி மதிற்றுறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே
முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே.
(10)
918 விரைவீசு தாமரைப் பூவொத்த செங்கரம் விளங்குமொரு தமருகத்தை - மேவத் திரித்துவடி வொடுநிறமு மொத்தலான் மேதினி யெலாம்பரந்து, நுரைவீசு கங்கையொடு நட்புற் றுறும்பிறையை நோன்மையரு ளிற்றிரித்து - நுவலுமிப் பறைகுணி லெனக்கொண் டுளாய்கொலென நோக்கியுல கேத்தெடுப்ப, வரைவீசு வெள்ளொளிய வயிரமும் பாசொளிய மரகதமும் வாரிவாரி - வண்குலைப் படுகரிடை மேயும்வளை கோட்டெருமை வாய்வெரீஇ யோட்டெடுப்பத், திரைவீசு பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே - சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே. (1) 919 அறிவிலே மிந்திரிய மாவேட்ட மாடுதற் கமைகுறிஞ் சிப்பறையுமா - யடங்காத மனமென்னு மிமிலேறு கோடற் கடுத்தமுல் லைப்பறையுமாய், முறிவிலுடல் பொருளாவி கொள்ளைகோ டற்குற முழக்குபா லைப்பறையுமாய் - மூதுணர் வெனும்புன லறாதுற வொழுக்கற்கு மொய்த்தமரு தப்பறையுமாய், மறிவிலெம ரொடுமாறு கொண்டபர சமயர்கோண் மாய்க்குநெய் தற்பறையுமாய், மாறாது பொலியவரை நின்றிழிந் தெஞ்ஞான்றும் வற்றுத லிலாதுவெப்பச், செறிவிலுயர் பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே - சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே. (2) 920 ஓங்குபல புவனத் திளைப்பாற்று முன்னி· தொலிப்பதெவ னென்றுகருதி - யுணர்வுடைய ருண்மயங் கினுமயங் குகபின் புணர்ந்தி· தெனத்தெளிவரால், வீங்குபே ரறிவுடைப் பாணினியு முன்போல் வியாகரண வாஞ்சையுற்று - மேவிடினு மவனுமி· திற்றெனத் தேர்குவன் விளங்குகுணில் கைப்பற்றியே, வாங்குதிரை மால்யானை பற்பல வெடுத்துநால் வாயரற் றிடவெறிந்து வரைபல வுருட்டிக் கடுத்துப் புகுந்துவரு மறிதிரைக் கடல்கலக்கித், தேங்குநீர்ப் பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே - சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே. (3) 921 இருளின்விழி போற்கேவ லத்திற் கிடந்தநுமை யின்னருளி னுடல்விளக்க - மேய்ப்பவது வாய்வினை வயிற்படர்ந் தீர்பின்னு மெய்த்துமெய் யாதுநாளும், பொருளற முஞற்றப் புரிந்திரு தளைச்செறிவு பூணாது கீழ்ப்படுத்தப் - புகறத்து வத்துருக் காட்சிசுத் தியுமுறப் பொலிதரு நுமைக்கண்டுநீர், மருளமை செருக்குறுதன் மாற்றவரு ணோக்கிவினை மற்றைந்தி னெழுதறவிர - மன்னுமருண் முதலெனக் கண்டொன் றுறாதொன்ற வம்மினென் றறிவித்தல்போற், றெருள்விரவு பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே - சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே. (4) 922 மதிசெயுஞ் சித்தாந்த சைவவசு ணங்கட்கு வரியாழ் முழக்கமெனவும் - வளமருவு சுத்தசை வப்பயிர் களுக்குநெடு மாமழை முழக்கமெனவும், விதிசெயுங் கிரியா குருக்களர வங்கட்கு விழைமயின் முழக்கமெனவும் - வெய்யபர சமயப் பருத்திப் பொதிக்கழலும் வெவ்வழன் முழக்கமெனவு, நிதிசெயு மணிக்குவை களுஞ்சந் தனக்குறடு நீளகிற் றுணியும்யானை - நிகரில்வெண் கோடுகளும் வரைநின்று வாருபு நிலந்தொறு மெறிந்தியாரையுந், திதிசெயும் பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே - சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே. (5)
வேறு. 923 புத்தமு தோவென மெய்த்துதி பாடிப் புந்தி விரும்புநரும் புகரற வோரறு காலமு மெண்ணிப் போற்றி வணங்கநரும் சித்த மிருத்தி விடாம லருச்சனை செய்து மதிப்பவருஞ் செங்கை குவித்தரு கெய்தி யடிப்பணி செய்யும் விருப்பினரும் மத்த வருட்கண் வழங்கென நின்றெதி ராடி வழுத்துநரு மாகிய பற்பல செந்தா மரைக ளலர்த்து மிளங்கதிரே முத்தமிழ் தேர்துறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே. (6) 924 மருவிய வாசைப் பேயை யொழித்திட மந்திர வாதியுமாய் மாறாப் புண்ணிய மகவு வளர்த்திட வாய்ப்புறு மன்னையுமாய்ப் பொருவி லிடும்பைச் சேறு புலர்த்தப் பொலிதரு பருதியுமாய்ப் போர்த்திடு பரசம யக்களி றொழியப் போதரு சிங்கமுமாய் வெருவரு வெய்ய வினைக்கா டொழிதர வெய்தெழு வன்னியுமாய் விடாத பவக்கட் செவியொழி யப்புள் வேந்தனு மாய்ப்பொலிவாய் முருகலர் நீர்த்துறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே. (7) 925 மன்னிய நாமே பரசிவ மென்றும் வயங்கும் மடியாரை வழிபடு மதுவே நம்மடி யடைதரு வழியென் றுங்கருணை துன்னிய நந்திரு நாமம தேயரு டொகுமந் திரமென்றுந் துயரம் வருத்து மவாமுத லடலே தோலா வலியென்றும் பின்னிய நந்திரு வருளர னம்மொடு பெயரா தொன்றுதலே பேரின் பென்று மெமக்கரு ளிப்பணி பேணிக் கொண்டருள்வோய் முன்னிய வண்டுறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே. (8) 926 பெய்வள மாரி யெழுங்குமி ழிக்கிணை பெற்ற வுடற்கணறாப் பெட்பினர் வெய்ய சினக்கனல் பொங்கப் பெறுகொடு மனமுருடர் பொய்வள நாடுபு செந்நில நீரிற் போர்த்த மயக்கமுளார் பொல்லா ரிவர்தமை யாளுத லாலாம் புகழென வுட்கொண்டு மெய்வள மார்கரு ணைத்திறம் யாரும் வெளிப்படை யாலுணர்வான் வெய்யே மையுமினி தாண்டருள் குரவா மேலோர் பலர்சூழு மொய்வள மார்துறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே. (9) 927 வாரி யுடுத்த புலிக்கண் விபூதி வயக்குத லிலராயு மன்னிய புண்ணிய மேய்க்குங் கண்மணி வாஞ்சை யுறாராயுஞ் சீரிய வக்கர மைந்து நவிற்றுத றேறா தொழிவாருந் திகழ்தரு நின்னடி யார்த மடிப்பணி செய்யா தகல்வாரு மாரியர் கோவென நின்னடி சார்ந்துநி னருண்முக மேலாரு மாகிய முருடர் கவுட்புடை யொப்ப வலங்குபொ னாலாய மூரி மதிற்றுறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே. (10)
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|