|
||||||||
சிறுதேர்ப்பருவம் |
||||||||
928 பருந்துபல சூழப் புலால்கமழும் வெம்படைப் பருவலித் தகுவர்மூவர் -
பற்றியமர் சூக்கும வுடம்பனைய திரிபுரப் பாழிமுற் றுங்கெடுப்பான்,
பொருந்துவட மேருவில் வளைத்தரவு நாண்கொளீஇப் பொருகடல் சுவற்றுவாளிப் -
பொருகணை கரங்கொண்டு நான்மறைப் பரிமலர்ப் புத்தேள் கடாவிநிற்ப,
மருந்துபடு மதியமும் பருதியுஞ் சகடாய் வயங்கக் கொடிஞ்சிமுதலா -
மற்றுள வுறுப்புமற் றுளதேவ ராகநெடு வாழ்த்துமல் குறவிவர்ந்து,
திருந்துபுவி யாகிய பெருந்தே ருருட்டினோன் சிறுதே ருருட்டியருளே -
செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.
(1)
929 வெய்யவெங் கானந் திரிந்துழன் றுங்கரு விழிச்செய்ய வாய்த்
.... .... ..... ......
வையமிது வெள்ளனக் கட்டுண்டு முட்டுண்டு மத்தின்மொத் துண்டுவண்டு
வார்திரை யெடுத்தெறியு மார்களி னோடி வெளி வான நோக்காது வீழ்ந்தே,
யெய்யவவ ணின்றின்னு நீங்கா துறங்குமோ ரெருதேறி யதுவன்றியு -
மென்சொல்வ லதுவுண்ட மண்ணாய தேரேறி யென்னுமோர் சிறுமைதீரச்,
செய்யபொன் செய்துபல மணிவைத் திழைத்திட்ட சிறுதே ருருட்டியருளே -
செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.
(2)
930 உருகுமன முடையராய்ப் பல்லோர் நடாத்துவதி னுறுமழகு நோக்கநின்றா -
ருற்றவவர் கட்குமெங் கட்குமகிழ் பூப்பநீ யொள்ளிதி னடாத்தல்வேண்டும்,
பெருகுமெழி லோடிவர்ந் தினிநடத் தோமெனிற் பேசுபல் வடங்கழற்றிப் -
பெருந்தேர் நடாத்தியரு டிருமாளி கைத்தேவர் பேணுசந் நிதியடைந்தே,
யருகுசில விண்ணப்பம் யாங்கள்செய் வோமென்னி லவர்தா நடாத்துதற்கோ -
ரையமிலை யாமே நடத்தின மெனும்புக ழடைந்திடுவை சொற்றபடிகே,
டிருகுதவிர் பவருளத் தறிவுருவின் மேவுவோன் சிறுதே ருருட்டியருளே -
செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.
(3)
931 துணைவந்த குஞ்சரமு மழகிய வுவாவுந் துலங்குமிந் நகரிடத்துத் -
துண்ணெனமு னச்சிறுத் திட்டகளி றிலையது துணிந்திங்கு வருவதுமிலைப்,
பணைவந்த கைத்தலத் ததுவந்து மேவினும் பனிமல ரிறைத்தெண்முதலாப் -
பலவுற்ற சுவையமோ தகமாதி வீசிப் பணிந்துவச மாக்கிவிடுவோ,
மிணைவந்த பொருளென்று நீயுப சரிப்பதொன் றில்லாமல் யாமாதலா -
லிடையூறு வேறின்று சிறுவீ டியற்றுமத னினமாகு மாதர்விலகத்,
திணைவந்த வளமல்கு சோணாடளிப்பவன் சிறுதே ருருட்டியருளே -
செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.
(4)
932 வானாடு மேவும் புறத்தொண்டர் சொற்றபடி வையமு நடாத்தினாயிம் -
மண்ணாடு மேவிய வகத்தொண்ட ரேம்யாம் வகுத்தபடி கேளாமையென்,
கானாடு மதுசொற்ற படிநடத் தோமெனிற் கைகுவித் தெய்திநினது -
கண்மணியை யனையசுப் பிரமணிய தேவன்முன் கரைவோங் கரைந்தபொழுதே,
பானாடு மனையனின் பால்வந் துரைக்கினெப் படிமறுத் திடுவையனைய -
பக்கநீ தவிர்தே யிலையாத லால்யாம் பகர்ந்தபடி கேட்டல்வேண்டுந்,
தேனாடு பூம்பொழிற் சோணா டளிப்பவன் சிறுதே ருருட்டியருளே -
செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.
(5)
933 முதையாய வெங்கண்மன மாம்புலத் திற்காம முதலாய பெருமரங்கண் -
முழுதுமற வருளாய தழல்கொளுவி யைந்தென முழங்குமக் கரமனுவெனு,
மதையா யலப்படை யெனக்கொண் டுழச்செயா வன்பெனும் வித்துவித்தி -
யார்வநீர் பாய்த்தியன் னியசமய மாக்களட ராதுபொறை வேலிகோலிப்,
பதையாத தவமெனும் பைம்பயிர் வளர்ந்துபொய் படாதசிவ போகம்விளையாப் -
பண்பினுகர் காறும்விட யக்கரவர் கவருதல் படாதுகாத் தருள்சின்மயன்,
சிதையாத வளமல்கு சோணா டளிப்பவன் சிறுதே ருருட்டியருளே -
செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.
(6)
934 முந்தைமறை யாகம நவினறணு ணினிக்கியா முந்துபு நடத்தல் செய்யே -
முந்துபு நடப்பவர் நடந்திடுக விதுகாறு முந்துபு நடத்தாலாலே,
யந்தைபடு பிறவித் துயர்க்கட லழுந்தின மதாஅன்றுபுற முதன்மையேபோ -
லையவக முதன்மையு நினக்காக நல்குவா னடியே மமைந்துநின்றே,
நிந்தையறு மெங்கள்செய லிற்றாக லாற்பின்பு நேயத் தொடுந்தொடருவே -
நிறைகருணை பூத்தியா வருமன மகிழ்ச்சியுற நிகழ்காம மாதிதீர்ந்த,
சிந்தைகுடி கொண்டு சுடர் விட்டோங்கு சின்மயன் சிறுதே ருருட்டியருளே -
செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.
(7)
935 அணிகொண்ட முன்னா ணடாத்தியது பொன்னிற மமைந்ததிது முழுமையும்பொ -
னாழிநின் கைகா லடர்ப்புண்ட விதனின்மரு வாழியத் தகையவலவான்,
மணிகொண்ட வச்சுமுறி பட்டதது விதுவன்மை மாறாத தென்றுமத்தேர் -
வண்மையிற் றாகவு முளஞ்செருக் கிக்கடினம் வாய்ந்தன மெனப்பொலியுமாற்,
பணிகொண்ட வதனுட் செருக்ககலும் வழியெனப் பகருமதன் மார்புகீண்டு -
படரும்வெளி யாகவிது நோக்கிமகிழ் தருமெங்கள் பாழிமல மாயைகன்மத்,
திணிகொண்ட மும்மதிலு நீறெழச் சின்மயன் சிறுதே ருருட்டியருளே -
செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.
(8)
936 ஒருநாம மும்பெறுவ தில்லைநா மென்றுமு னுரைத்தனை யதற்குமாறா -
வுலவாப் பெருங்கருணை வெள்ளமலை யெறிதலா லுணர்விலெளி யேமுமுய்வான்,
றருநாம நந்தியங் குமரர்சத் தியஞான தரிசனி பரஞ்சோதியார் -
தழைதருமெய் கண்டவர்ந லருணந்தி மறைஞான சம்பந்தர் கொற்றவனெனும்,
பெருநாம நல்லூ ருமாபதி சிவன்கருணை பெருகரு ணமச்சிவாயர் -
பிரகாச ரைந்தெழுத் திறைமுனிரு பத்தைந்து பெயர்கொண்ட தன்றியின்னுந்,
திருநாம மெண்ணில புனைந்துவரு சின்மயன் சிறுதே ருருட்டியருளே -
செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.
(9)
937 ஆவாழ்க மாமறைக் குலம்வாழ்க நலமாரு மாகமத் திரள்கள்வாழ்க -
வருண்மல்கு சித்தாந்த சைவநலம் வாழ்கநினை யன்பிற் புகழ்ந்துபாடு,
நாவாழ்க நின்றிரு வடிப்பணி புரிந்திடு நன்மலர்க் கைகள்வாழ்க -
நண்புற விராப்பக னினைக்குமனம் வாழ்கவிறை நடவுசெங் கோலும்வாழ்க,
மாவாழ்க வெவ்விடனு மேவிமதி தோறுமும் மழைபொழிய மேகம்வாழ்க -
மன்னுபைங் கூழ்வாழ்க வெவ்வுயிரும் வாழ்கநின் வயங்கூர்தி யாயதருமச்,
சேவாழ்க சைலாதி சந்தானம் வாழ்கநீ சிறுதே ருருட்டியருளே -
செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.
(10)
928 பருந்துபல சூழப் புலால்கமழும் வெம்படைப் பருவலித் தகுவர்மூவர் - பற்றியமர் சூக்கும வுடம்பனைய திரிபுரப் பாழிமுற் றுங்கெடுப்பான், பொருந்துவட மேருவில் வளைத்தரவு நாண்கொளீஇப் பொருகடல் சுவற்றுவாளிப் - பொருகணை கரங்கொண்டு நான்மறைப் பரிமலர்ப் புத்தேள் கடாவிநிற்ப, மருந்துபடு மதியமும் பருதியுஞ் சகடாய் வயங்கக் கொடிஞ்சிமுதலா - மற்றுள வுறுப்புமற் றுளதேவ ராகநெடு வாழ்த்துமல் குறவிவர்ந்து, திருந்துபுவி யாகிய பெருந்தே ருருட்டினோன் சிறுதே ருருட்டியருளே - செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே. (1) 929 வெய்யவெங் கானந் திரிந்துழன் றுங்கரு விழிச்செய்ய வாய்த் .... .... ..... ...... வையமிது வெள்ளனக் கட்டுண்டு முட்டுண்டு மத்தின்மொத் துண்டுவண்டு வார்திரை யெடுத்தெறியு மார்களி னோடி வெளி வான நோக்காது வீழ்ந்தே, யெய்யவவ ணின்றின்னு நீங்கா துறங்குமோ ரெருதேறி யதுவன்றியு - மென்சொல்வ லதுவுண்ட மண்ணாய தேரேறி யென்னுமோர் சிறுமைதீரச், செய்யபொன் செய்துபல மணிவைத் திழைத்திட்ட சிறுதே ருருட்டியருளே - செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே. (2) 930 உருகுமன முடையராய்ப் பல்லோர் நடாத்துவதி னுறுமழகு நோக்கநின்றா - ருற்றவவர் கட்குமெங் கட்குமகிழ் பூப்பநீ யொள்ளிதி னடாத்தல்வேண்டும், பெருகுமெழி லோடிவர்ந் தினிநடத் தோமெனிற் பேசுபல் வடங்கழற்றிப் - பெருந்தேர் நடாத்தியரு டிருமாளி கைத்தேவர் பேணுசந் நிதியடைந்தே, யருகுசில விண்ணப்பம் யாங்கள்செய் வோமென்னி லவர்தா நடாத்துதற்கோ - ரையமிலை யாமே நடத்தின மெனும்புக ழடைந்திடுவை சொற்றபடிகே, டிருகுதவிர் பவருளத் தறிவுருவின் மேவுவோன் சிறுதே ருருட்டியருளே - செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே. (3) 931 துணைவந்த குஞ்சரமு மழகிய வுவாவுந் துலங்குமிந் நகரிடத்துத் - துண்ணெனமு னச்சிறுத் திட்டகளி றிலையது துணிந்திங்கு வருவதுமிலைப், பணைவந்த கைத்தலத் ததுவந்து மேவினும் பனிமல ரிறைத்தெண்முதலாப் - பலவுற்ற சுவையமோ தகமாதி வீசிப் பணிந்துவச மாக்கிவிடுவோ, மிணைவந்த பொருளென்று நீயுப சரிப்பதொன் றில்லாமல் யாமாதலா - லிடையூறு வேறின்று சிறுவீ டியற்றுமத னினமாகு மாதர்விலகத், திணைவந்த வளமல்கு சோணாடளிப்பவன் சிறுதே ருருட்டியருளே - செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே. (4) 932 வானாடு மேவும் புறத்தொண்டர் சொற்றபடி வையமு நடாத்தினாயிம் - மண்ணாடு மேவிய வகத்தொண்ட ரேம்யாம் வகுத்தபடி கேளாமையென், கானாடு மதுசொற்ற படிநடத் தோமெனிற் கைகுவித் தெய்திநினது - கண்மணியை யனையசுப் பிரமணிய தேவன்முன் கரைவோங் கரைந்தபொழுதே, பானாடு மனையனின் பால்வந் துரைக்கினெப் படிமறுத் திடுவையனைய - பக்கநீ தவிர்தே யிலையாத லால்யாம் பகர்ந்தபடி கேட்டல்வேண்டுந், தேனாடு பூம்பொழிற் சோணா டளிப்பவன் சிறுதே ருருட்டியருளே - செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே. (5) 933 முதையாய வெங்கண்மன மாம்புலத் திற்காம முதலாய பெருமரங்கண் - முழுதுமற வருளாய தழல்கொளுவி யைந்தென முழங்குமக் கரமனுவெனு, மதையா யலப்படை யெனக்கொண் டுழச்செயா வன்பெனும் வித்துவித்தி - யார்வநீர் பாய்த்தியன் னியசமய மாக்களட ராதுபொறை வேலிகோலிப், பதையாத தவமெனும் பைம்பயிர் வளர்ந்துபொய் படாதசிவ போகம்விளையாப் - பண்பினுகர் காறும்விட யக்கரவர் கவருதல் படாதுகாத் தருள்சின்மயன், சிதையாத வளமல்கு சோணா டளிப்பவன் சிறுதே ருருட்டியருளே - செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே. (6) 934 முந்தைமறை யாகம நவினறணு ணினிக்கியா முந்துபு நடத்தல் செய்யே - முந்துபு நடப்பவர் நடந்திடுக விதுகாறு முந்துபு நடத்தாலாலே, யந்தைபடு பிறவித் துயர்க்கட லழுந்தின மதாஅன்றுபுற முதன்மையேபோ - லையவக முதன்மையு நினக்காக நல்குவா னடியே மமைந்துநின்றே, நிந்தையறு மெங்கள்செய லிற்றாக லாற்பின்பு நேயத் தொடுந்தொடருவே - நிறைகருணை பூத்தியா வருமன மகிழ்ச்சியுற நிகழ்காம மாதிதீர்ந்த, சிந்தைகுடி கொண்டு சுடர் விட்டோங்கு சின்மயன் சிறுதே ருருட்டியருளே - செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே. (7) 935 அணிகொண்ட முன்னா ணடாத்தியது பொன்னிற மமைந்ததிது முழுமையும்பொ - னாழிநின் கைகா லடர்ப்புண்ட விதனின்மரு வாழியத் தகையவலவான், மணிகொண்ட வச்சுமுறி பட்டதது விதுவன்மை மாறாத தென்றுமத்தேர் - வண்மையிற் றாகவு முளஞ்செருக் கிக்கடினம் வாய்ந்தன மெனப்பொலியுமாற், பணிகொண்ட வதனுட் செருக்ககலும் வழியெனப் பகருமதன் மார்புகீண்டு - படரும்வெளி யாகவிது நோக்கிமகிழ் தருமெங்கள் பாழிமல மாயைகன்மத், திணிகொண்ட மும்மதிலு நீறெழச் சின்மயன் சிறுதே ருருட்டியருளே - செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே. (8) 936 ஒருநாம மும்பெறுவ தில்லைநா மென்றுமு னுரைத்தனை யதற்குமாறா - வுலவாப் பெருங்கருணை வெள்ளமலை யெறிதலா லுணர்விலெளி யேமுமுய்வான், றருநாம நந்தியங் குமரர்சத் தியஞான தரிசனி பரஞ்சோதியார் - தழைதருமெய் கண்டவர்ந லருணந்தி மறைஞான சம்பந்தர் கொற்றவனெனும், பெருநாம நல்லூ ருமாபதி சிவன்கருணை பெருகரு ணமச்சிவாயர் - பிரகாச ரைந்தெழுத் திறைமுனிரு பத்தைந்து பெயர்கொண்ட தன்றியின்னுந், திருநாம மெண்ணில புனைந்துவரு சின்மயன் சிறுதே ருருட்டியருளே - செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே. (9) 937 ஆவாழ்க மாமறைக் குலம்வாழ்க நலமாரு மாகமத் திரள்கள்வாழ்க - வருண்மல்கு சித்தாந்த சைவநலம் வாழ்கநினை யன்பிற் புகழ்ந்துபாடு, நாவாழ்க நின்றிரு வடிப்பணி புரிந்திடு நன்மலர்க் கைகள்வாழ்க - நண்புற விராப்பக னினைக்குமனம் வாழ்கவிறை நடவுசெங் கோலும்வாழ்க, மாவாழ்க வெவ்விடனு மேவிமதி தோறுமும் மழைபொழிய மேகம்வாழ்க - மன்னுபைங் கூழ்வாழ்க வெவ்வுயிரும் வாழ்கநின் வயங்கூர்தி யாயதருமச், சேவாழ்க சைலாதி சந்தானம் வாழ்கநீ சிறுதே ருருட்டியருளே - செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே. (10)
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|