LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

சித்திரைப் பாவையே வருக !

                                                          கவிதை

                                சித்திரைப் பாவையே வருக!

                    கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

 

 

இன்று

எட்டுத் திக்கிலும்

சித்திரைப் பாவையே உந்தன்

முத்திரை முகம் தோன்றுகிறதே !

 

இன்று

நோக்குமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

நேசக்கரம் நீட்டுகிறதே !

 

இன்று

கேட்குமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

மனிதநேயம் ஒலிக்கிறதே !

 

இன்று

தீண்டுமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

மலரின் மென்மை உணரப்படுகிறதே !

 

இன்று

பேசுமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

சீரும் சிறப்பும் பேசப்படுகிறதே !

 

இன்று

நுகருமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

நறுமணம் வீசுகிறதே!

 

இன்று

வணங்குமிடமெல்லாம்

சித்திரைப் பாவையே உந்தன்

தெய்வ அருள் கிட்டுகிறதே !

 

இன்று

காலைத் துயிலெழுந்து

நாட்காட்டியைப் பார்த்தால்

பங்குனித்திங்கள் பெற்ற

சித்திரைப்பாவையே உந்தன்

முத்திரை பதித்த

முகம் தெரிகிறதே !

 

சத்தியம் தர்மம் மனிதநேயம்

நித்தியம் உலகில் வளர

சித்திரைப் பாவையின்

சிரித்த முகம் பார்த்து

உள்ளம் மகிழ்ந்து

வணங்கி வரவேற்போம் !

 

                        பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்,

                              பள்ளிக்கரணை, சென்னை

 

 

by Subramanian   on 14 Apr 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.